Monday, April 16, 2018

40 ஆண்டுகள் சிறை கிடைக்க பிரதமர் மற்றும் பாசக கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்

சமீபமாக பாசகவும் அதன் தமிழக தலைவர்களும் சென்னைக்கு வந்த மோடியை கொல்ல சதி நடந்ததாக செய்தியை ஊடகங்களில் வெளிப்படுத்தி வருவதை பார்த்து இருப்பார்கள்.

சுப்பிரமணி சாமி மறுபடியும் ஒரு இந்திய பிரதமரை படு கொலை செய்யும் திட்டத்தில் இறங்கியதாகத்தான் அந்த செய்திகளை பார்க்க முடியும்.

ஆகவே இனிமேல் பாசக கூட்டும் கூட்டதிற்கோ அல்லது பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டதிற்கோ தங்கள் பிள்ளைகளை தயவு கூர்ந்து பெற்றோர்கள் அனுப்ப வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.

2019ல் பாசக முழுவதும் ஊத்திக்கொள்ளும் என்ற ஆரூடம் சொன்னதுமே எப்படி வெல்வோம் என்று திட்டம் தீட்டி செயல்படுகின்றது பாசக.

விசுவ இந்து பரிசித்து இயக்கத்தின் பிரவீன் தொகாடியா தனது பொருப்பில் இருந்து விலகி இருப்பதும் இதற்காகத்தான். எங்கே தங்களது மீது பழி விழுந்து விடுமோ என்று ஒதுங்குகிறார்கள்.

வயர் வாங்கி கொடுத்தான், பேட்டரி வாங்கி கொடுத்தான் என்று சுப்பிரமணி சாமியின் வாதங்களை வைத்து 40 ஆண்டுகள் முதல் உயிர் போகும் வரை சிறையில் அடைத்து தனது கைகளின் கறைகளை கழுவிக்கொள்வார் சுப்பிரமணி சாமி.

கோத்ராவில் தங்களது உறவினர்களையே தாங்களே கொளுத்திவிட்டு மாற்று மதத்தினர் தான் கொளுத்தினார்கள் என்று சொல்லி வன்முறை செய்தவர்களுக்கு இது எல்லாம் சாதாரணம். சிந்திப்பீர் தவிர்ப்பீர்.

0 comments: