Monday, October 30, 2017

GST போல் PIT வருமா - மாத சம்பளம் வாங்குபர்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா

பொருட்களை தயாரிப்பவரும் விற்பவரும், சேவை வழங்குபவர்களும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு உள்ள வரியை கட்டமாட்டார்களாம். அதற்கு பதில் அதை வாங்கி பயனடையும் பயனீட்டாளர்கள் 28% முதல் 40% வரை வரியை அவர்களுக்காக கட்ட வேண்டுமாம் அதுவும் எப்படி. சம்பாதித்த பணத்தில் 30% வரை வருமான வரியாக கட்டிய பின்பு கிடைக்கும் வருமானத்தில் தினமும் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் 28% முதல் 40% வரை வரியாக கட்டவேண்டி மாதம் எத்தனை ஆயிரம் கோடி வரி வசூலாகியுள்ளது என்று அருண் செட்லி மாதம் தோரும் தரவுகளை வேறு வெளியிடுகிறார்.

இதே முறையில் மாத சம்பளம் வாங்கும் மனிதர்களுக்கு பிடிக்க வேண்டிய வரியை எல்லாம் நீக்கிவிட்டு பேசப்பட்ட முழு சம்பளத்தையும் மக்களுக்கு கொடுத்துவிட்டு. அந்த பணத்தில் அவர்கள் யார் யாரிடம் செலவு செய்கிறார்களோ அந்த வணிக முதலாளிகளிடம் இவ்வளவு வியாபாரம் செய்து இருக்கிறீர்கள். அந்த தொகைக்கு மக்கள் இவ்வளவு வருமான வரி கட்டி இருக்க வேண்டும். நடப்பு நடைமுறையால் அவர்கள் கட்டவில்லை. ஆகையால் உங்களின் பரிவர்த்தனையில் வந்த இந்த இந்த வியாபாரங்களுக்கு 30% வரை மக்களின் வருமான வரியாக PIT(Personal income tax) என்ற பெயரில் நீங்கள் எல்லாம் கட்டவேண்டும் என்று அரசு உத்தரவிடவேண்டும்.

இதனால் கோடி கணக்கான மக்கள் வருமான வரி கணக்கை செலுத்த வேண்டிய தேவையும் அது சார்ந்த பணிக்கு இலட்ச கணக்காக அரசு ஊழியர்களும் தேவை இல்லை. அரசும் தனியார் நிறுவனங்களும் மக்களின் பணத்தை பிடித்து வைத்துக்கொண்டு பிறகு மக்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த பிறகு சரி பார்த்து திருப்பி கொடுக்கும் வேலைகள் எல்லாம் அரவே ஒழிக்கப்பட்டு சீரான நடைமுறையாக இருக்கும்.

இப்படி செய்வதால் மாத சம்பளம் வாங்காத மக்களின் வருமான வரிப்பணமும் அரசுக்கு சரியாக வந்து சேரும். ஆலோசிப்பார்களா ஆட்சியர்கள்.

உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்டினியா............. PIT கொண்டு வர வேண்டுகோள் வைக்கவேண்டும்.

Thursday, October 26, 2017

எச்ச சர்மா என்னும் எச்சி ராசா இனி எப்படி எல்லாம் வாழ்வார்

Image result for flintstones cartoon
இந்த எச்ச சர்மா என்ற மனிதருக்கு அவருடைய இந்துக்கள் உருவாக்கிய பொருட்களை தவிர மற்றவைகளும் மற்றவர்களும் அவருக்கு வேண்டாம் என்று உறுதியாக நம்புவது மட்டும் இல்லை எல்லோரும் அவரை பின்பற்றுங்கள் என்று சொல்லும் கோமாளியும் கூட.

அந்த கோமாளி இனி இப்படி தான் வாழ்வார், ஏன் என்றால் இது வரையில் இந்தியாவில் இவர்களின் இந்துகள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் எல்லாம் பசு சானியும் அதன் சார்ந்த பொருளை மட்டும் தான் கண்டுபிடித்து உலகுக்கு கொடுத்து இருக்கிறார்கள். ஆக அந்த கற்கால வாழ்கையை தான் இவரும் இவரது அடி பொடிகளும் வாழ்ப்போகிறார்கள்.

ஆனால் ஒன்று இவர் சுவாசிக்க போகும் காற்று மட்டும் அனைத்து மத்தத்தினரும் பயன்படுத்தும் காற்று அதை எப்படி தடுத்துக்கொண்டு வாழப்போகிறார் என்று தெரியவில்லை.

ஐயப்பன் என்ற சாமியின் பெயரை கூட சொல்லமாட்டார் ஏன் என்றால் ஐயப்பன் என்றவுடன் நினைவில் வருவது ஏசுதாசு பாடிய பாடல்கள் அல்லவா. வானொலியில் பாடல்கள் கேட்கமாட்டார் அது பசுக்கறி சாப்பிடும் மார்கோணியால் கண்டுபிடிக்கப்பட்டவை. தொலைக்கட்சியை பார்க்கவோ அல்லது அவர்களுக்கு பேட்டியோ கொடுக்கமாட்டார் ஏன் என்றால் அது பசுக்கறி சாப்பிடுபவரால் கண்டுபிடிக்கபட்டவை. இது போல் மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் விவசாய பொருட்கள் தவிர்த்து அனைத்தும் பசுக்கறி சாப்பிடும் மனிதர்களின் கண்டுபிடிப்பும் வடிவமைப்புமாகத்தான் இருக்கும்.

பாசக அரசு இருக்கும் வரையில் இனி எல்லையில் இராணுவம் பசுக்கறி சாப்பிடும் மனிதர்கள் கண்டுபிடித்த இராணுவ தளபாடங்களை தவிர்த்து இராமர் பயன்படுத்திய வில் அம்பு, வால், தண்டாயுதம் என்று தான் இனி அண்டை நாட்டு படைகளுடன் சண்டையிட்டு பாசகவினரை காப்பாற்ற போகிறார்கள்.

Tuesday, October 24, 2017

மோடி பெற்றெடுத்த புதிய வெள்ளைப்பண இந்தியாவிலும் கந்து வட்டி கொடுமை

2016ல் நவம்பர் 8ல் கையில் இருக்கும் 1000 500 ரூபாய் தாள்கள் எல்லாம் செல்லாது, ஏன் என்றால் அவைகள் எல்லாம் கருப்பு பணம். ஆகையால் அந்த பணத்தை எல்லாம் வங்கிகளில் கொடுத்துவிட்டு நல்ல பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள், அடுத்த 50 நாட்களில் கள்ளப்பணமே இல்லாத இந்தியாவை உங்களுக்கு தருகின்றேன். அப்படி நான் சொல்வது நடக்காவிட்டால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள் என்று மக்களை பார்த்து சூளுரைத்தார் இந்தியாவின் பிரதமரான மோடி.

இன்னும் 3 வார காலத்தில் ஓராண்டு நிறை பெற போகின்றது அந்த பண மதிபிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு.

இதோ நேற்று அக்டோபர் 23 இந்த கொடூரம், கந்து வட்டி.

வாங்கிய பணத்தை போல் 2 மடங்கு பணம் செலுத்திய பின்னும் இன்னும் முதலே வந்து சேரவில்லை என்று மிரட்ட என்ன செய்வது என்றே தெரியாமல் குடும்பத்தோடு தற்கொலை. என்ன ஒரு கொடூரம், அரக்க தனம்.....

இப்படி கந்து வட்டிகாரர்களிடம் பணம் வாங்கும் மக்கள் எல்லா யார் யார், அன்றைய வியாபார தினத்தின் முதலுக்காக தண்டலில் பணம் வாங்குபவர்கள் முதல் அவசர மருத்துவ தேவை என வித விதமாக பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

கைக்கும் வாயிற்கும் சரியாக இருக்க மிச்சம் மீதி எதுவும் இல்லாமல் அன்றாடம் வாழ்கையை இப்படி அடகு வைத்து வாழும் ஏழை வியாபாரிகள் ஏறாளம்.

அன்றைக்கு ஏழைமக்கள் எல்லாம் வங்கிகளின் வாசலின் நின்று அவதியுறும் போதும், பிரதமர் மோடியும் அவரது கட்சியின் அடிபொடிகளும் இலட்டு கொடுத்து மக்களுக்கு உச்சாகம் அளித்ததின் திடம் இவ்வளவு தானா.........

இந்த தண்டல்கார்களும் கந்துவட்டிக்காரர்கள் எந்த வியாபார அடிப்படையில் நிதிவியாபாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு பணம் எப்படி வருகின்றது எப்படி கை மாறுகின்றது.

வெறும் 300 ரூபாய்க்கு தொலைபேசி சிம் வாங்க வேண்டும் என்றாலும் ஆதார் அட்டையும் கை ரேகையும் இல்லாமல் இல்லை என்று சொல்ல வைத்த அரசு இந்த கந்து வட்டி கொடுமைகளையும் தண்டல் கொடுமைகளையும் இன்னமும் உலவ விட்டு இருப்பது எப்படி.

சரி இப்படி அவசர தேவைக்கு அவர்கள் கந்து வட்டி வாங்கியது தவறு என்று சொல்லும் பட்சத்தில் அப்படி அவர்களிடம் வாங்காமல் வேறு எங்கே வாங்குவார்கள்.

அரசாங்க அலுவலங்கள்/அரசு வங்கிகள் என்று வைத்துக்கொண்டால், கந்துவட்டி காரனிடம் வெறும் வட்டி மட்டும் தான் கொடூரமாக இருக்கும். ஆனால் இந்த அரசு துறைகளில் நிதியை பெறுவது என்று இருந்தால் அந்த நிதி கையில் கிடைக்கும் போது வழி முழுக்க ஒழுகி கடைசியில் 10% பணம் அவர்களின் கைகளில் கிடைக்க குறைந்தது 3 முதல் 6 மாதமாகவாது ஆகும்.

இதை சரி செய்ய சொன்னால் அதை செய்யாமல் பெயருக்கு ஒரு திட்டமாக அறிவித்துவிட்டு, சம்பவம் நடந்து 2 நாட்கள் முடிகின்றது இருந்தும் இது வரையில் ஒரு பாசக கட்சியினர் கூட அதை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நீட்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ அல்லது அந்த வகையில் இது ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூட சொல்லாமல் மெர்சல் பட பிரச்சனையிலும், நடிகர் விச்சை கிருத்துவரா, இசுலாமியரா இல்லை ஆதியில் அவர்கள் இந்துக்களா என்ற ஆராச்சியில் மூழ்கி முத்து எடுத்துக்கொண்டு இருக்கிறது..........

மோடி பெற்று எடுத்த எத்தனையோ இந்தியாவில் வெள்ளைப்பண இந்தியாவும் ஒன்று அந்த வெள்ளைபண இந்தியா வெறும் காகித இந்தியா என்றும் இந்த நிகழ்வுகள் தெளிவாக காட்டுகின்றது. மேலும் மோடியும் பாசகவும் வெறும் அம்புலிமாமா கதைகளில் வரும் காகித கதா பாத்திரங்கள் மட்டுமே. உண்மையில் வெறும் வெற்று மனிதர்கள் என்று தான் பறை சாற்றுகின்றது................

Friday, October 20, 2017

அன்னை ஸ்ரீவித்யாவின் நினைவாக - 11 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி








எங்கே இருந்து நீ வாழ்த்தினால் என்ன
இருக்கும் அந்த இடத்திலாவது நிம்மதியாய் இரு
உன்னை வந்து சேரும் வரை உனது நினைவுகளுடன்........

Wednesday, October 18, 2017

பாசகவின் அடுத்த மதவா முன்னெடுப்புகள் இப்படி தான் இருக்கும் - Silence (2016) திரைவிமர்சனம்

படத்தின் செய்திகளுக்கு

மாற்று சிந்தனை, மதம், நம்பிக்கை என்று இருப்பவர்களை எப்படி எல்லாம் எதேச்சதிகாரம் கொண்டவர்கள் எப்படி படுத்துவார்கள் என்றதிற்கு இந்த படம் ஒரு விளக்க உரை.

சப்பானை பொறுத்த அளவில் அவர்கள் மேல் அந்த அணுகுண்டை வீசியது தவறு என்று வாதாடக்கூட மக்கள் தயங்குவார்கள். அந்த அளவிற்கு அவர்களின் அரசர்கள் மிகவும் மோசமாகவும் கீழ்த்தரமான சிந்தனையும் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள்.

கடைசியாக அந்த அணுகுண்டை வீசும் வரை உலகின் எல்லா திக்குகளிலும் சர்வதிகாரிகளுடன் சேர்ந்துக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டே தான் இருந்தார்கள்.

இந்த ஆட்டத்தின் ஒரு பகுதியாக கிருத்துவத்தை பரப்ப வந்தவர்களை என்ன என்ன பாடு படுத்தினார்கள் என்று இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

எந்த ஒரு நாடும் தன் நாட்டின் இறைமையை காக்க வேண்டிய கட்டாயத்திலும் கடமையும் கொண்டு இருக்கிறது. அந்த அந்த நாட்டின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை தான்.

ஆனால் அப்படி பட்ட நாடுகளில் கழித்து கட்டிய மக்கள் என்று ஒரு பிரிவினர்கள் எப்போதும் உண்டு. இப்போது மியான்மரில் இருந்து விரட்டியடிக்க பட்ட மக்களை போல், ஈழத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களை போல், சோர்டான் மக்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

அப்படி வாழவே தகுதி இல்லாதவர்கள் என்று முடிவுகட்டி ஊரை விட்டு வெளியே வாழும் மக்களுக்கு ஒன்றும் இல்லை என்றாலும் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர கடவுள் நமக்கு வழிக்காட்டுவார் என்ற ஒற்றை நம்பிக்கையில் மட்டும் வாழும் அன்றாடம் காட்சி மக்களை சந்தித்து கிருத்துவை நம்புங்கள் உங்கள் வாழ்கையில் ஒளி கிடைக்கும் என்று நம்பிக்கையை கொடுத்து இருக்கும் மிச்ச மீதி நாட்களை வெறும் கையில் வெற்று நம்பிக்கையுடன் கடக்க உதவிய கிருத்துவ மத போதகர்கள் எந்த கதிக்கு ஆளாக்கினார்கள் என்ற விளக்கப்படம்.

இந்தியாவை பஞ்சம் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிய காலத்தில் உலகத்து நாடுகள் கப்பல் துறைமுகங்களில் பால் பொடிகளையும் உணவு தானியங்களையும் கொண்டு வந்து அடுக்கிவிட்டு சென்று விட்டது. பஞ்சமும் நேயும் பிடித்து ஆட்டிய அந்த நாட்களில் கையில் உணவுடனும் மருந்துகளுடனும் இந்தியாவிற்கு வந்த கிருத்துவ திருசபையை சேர்ந்தவர்கள், அந்த நோய் தாக்கி தான் இறந்தாலும் அதுவும் இறைபணி என்று இந்தியாவின் ஏழை மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று தொன்டாற்றியதை போல் இந்த படத்திலும் செல்கிறார்கள்.

அந்த பாதிரிகளின் கண்ணில் காட்டப்படும் மக்கள் மிகவும் நலிவுற்று இரப்புக்கும் நிகழ்வுக்கும் அதிக தூரமோ வித்தியாசமோ இல்லை என்று வாழும் ஏழை விவசாய பண்ணையடிமை கூலிகள்.

தொலைந்து போன பாதரியை தேடியலையும் அந்த இருவரும் நிமிடத்திற்கு நிமிடம் எப்போது மாட்டுவோம் எப்போது கொல்லப்படுவோம் என்று மறைந்து வாழ்வதும். இரவின் இருட்டில் மட்டும் மக்களை சந்திப்பதும் என்று ஒரு திருட்டு வாழ்க்கையை போல் கழிக்கிறார்கள்.

கிருத்துவை நம்பும் மக்களை அந்த கிருத்துவின் உருவம் பொருத்திய தகட்டில் காலால் மிதிக்க சொல்வதும் அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை கடற்கரையில் கட்டிவைத்து அலையில் அலைகழித்து சாக்கடிப்பதும் உயிருடன் தீயில் இட்டு கொளுத்துவதும் என்று கொடூரமாக கதை நகர்கிறது.

ஒரு கட்டத்தில் பாதிரியை தேடி வந்த இருவரில் ஒருவனுக்கு நல்ல உடைகளை அணிவித்து தூரத்தில் மற்ற ஒருவனை நிப்பாட்டி அங்கே பார் அவன் கிருத்துவை தூக்கி எரிந்துவிட்டான் எப்படி சொகுசாக வாழ்கிறான் பார் ஆனால் நீயோ சாகப்போகிறாய் என்று ஏய்கும் கேவலமான செயல்களை எல்லாம் செய்து கொடுமைபடுத்துகிறார்கள்.

அந்த இளம் பாதிரிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவன் கண்முன்னே தோன்றும் அந்த கிருத்துவின் முகமும் அவர் இவன் கொண்டு இருக்கும் அதிதீர நம்பிக்கையும் மட்டும் தான்.

அந்த இளம் பாதிரியின் கண் முன்னே ஒவ்வொரு இரவும் உடன் இருந்த கிருத்துவை நம்பும் மக்களையும் பலியிடுகிறார்கள், கழுத்தில் ஒரு சிறு கீறல் கீறி சொட்டு சொட்டாக இரத்தம் வழியும் படி தலை கீழே தொங்கவிடவும் செய்கிறார்கள். பார்க்க பொறுக்காக அந்த இளம் பாதிரி கடைசியாக தானும் கிருத்துவின் படத்தை காலால் மிதித்து அவமதித்து சப்பான் இனமாக மாறுகிறான்.

பின்னர் அந்த இளம் பாதிரியும் அவன் தேடி வந்த பாதிரியும் இருவரும் சேர்ந்து சப்பானுக்குள் வரும் கிருத்துவம் சார்ந்த பொருட்களை அடையாளம் காட்டி முற்று முழுதாகவும் அழிக்கவும் உறு துணையாக இருக்கிறார்கள்.

அப்படி வாழ்ந்த அந்த இளம் பாதிரிக்கு மகனுடன் இருக்கும் ஒரு குடும்பத்தையும் அந்த குடும்ப பெயரையும் கொடுத்து சப்பானிலே சப்பானியராக வாழ வைப்பதோடு கிருத்துவை இகழ்ந்தும் பரிகாசித்தும் நூல் எழுத வைக்கிறார்கள்.

அத்தனை இன்னல்களுடன் வாழ்ந்த அவனிடம் மிஞ்சி இருந்த ஒரு சின்ன சிலுவை மட்டுமே என்று கதையை முடிக்கின்றார்கள்.

மோடி இந்த சனவரியில் ஒரு புதிய அறிவிப்பை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார், அனேகமாக இப்படி ஒரு அறிவிப்பாத்தான் இருக்கும்.

நல்ல ஆட்சி நல்ல தேசம் என்று சொன்ன இவர்களால் வெறும் இன்னல்களையும் கசப்பு மருந்துகளையும் தான் நல்லா இருந்த மக்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்த தேர்தலுக்கு நாட்டையே இன்னும் ஒரு கோத்ராவாக ஆக்கினால் மட்டுமே இவர்களால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். ஆக நாட்டை பிளவுபடுத்த கிருட்ணசாமியை வைத்து அனிதாவுக்கு எதிராக பேச வைத்தது போல் நிகழ்வுகள் வன்முறையுடன் நிறைவேற்றுவார்கள் போலும். கற்பனையில் யோசிக்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறது.

Tuesday, October 3, 2017

என்ன சாதித்துவிட்டா காந்தி என்று இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

சங்கபரிவாரம் தனது ஆளைவிட்டு காந்தியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற போது இந்தியா தூய்மை அடைந்துவிட்டது என்று பரைசாற்றும் விதமாக தூய்மை இந்திய தினமாக காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் மாற்றப்பட்டு இருக்கின்றது இந்த சங்கபரிவார அரசால்.

அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்த காந்தி இவ்வளவு கொண்டாட....

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய போராட்டம் இந்தியாவில் தொடர சுதந்தர வேட்கையில் தவித்த மக்கள் கட்டுக்கு மீறி தனது பேச்சையும் கேட்க்காமல் வன்முறையில் இறங்க அதோடு தனது போராட்டங்களை நிறுத்துவதாக காந்தி அறிவித்தார்.

அதாவது நிலைமை கையை மீறி சென்றதும் இனி இப்படியே விட்டால் போராட்டம் அமைதியாகவும் அகிம்சையாகவும் இல்லாமல் போராகவும் உள் நாட்டு கலவரமாகவும் மாறிவிடும் என்று நிறுத்தினார்.

என்ன மனிதர் இந்த காந்தி அதுதான் சமயம் என்று தனக்கு பிடிக்காத தனது சிந்தாந்தங்களை ஏற்காத மக்களை அந்த கலவரம் கொண்டு கொன்று குவித்துவிட்டு, நாட்டு மக்களின் முன்னிலையில் கலவரத்தில் நடந்ததுக்கு நான் எப்படி பொருப்பாக முடியும் என்று நீலிக்கண்ணீர் வடிக்க தெரியாத மனிதர் இவருக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்.

ஒரு முறை அல்ல இரு முறை அல்ல 4 முறை இந்திய சுதந்திர போராட்டத்தை இதே போல் கைவிட்டு விட்டு பிறகு மக்கள் எல்லாம் திரண்டு நாங்கள் இனி ஒரு போதும் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என்று உறுதி கொடுத்த பின்பு கடைசியாக நடந்த போராட்டத்தில் தான் சுதந்திரம் கிடைத்தது.

இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமான காந்தி நாட்டின் மிக உயர்ந்த பதவியான பிரதமர் பதவியில் உட்கார்ந்துக்கொண்டு உலகம் பூராவும் சுற்றி வந்து தான் எப்படி இந்தியாவின் விடுதலைக்காக போராடினேன் என்றும் நான் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடாமல் போய்யிருந்தால் இன்னேரன் இந்தியா பாவ பூமியாக இருந்து இருக்கும் என்று நாடு நாடாக சென்று பேசி இருக்க வேண்டாமா. அதுவும் பாரீசுடர் பட்டம் பெற்றவர் என்ற பெருமை வேறு இந்தியில் இல்லை ஆங்கிலத்திலேயே அழகாகவும் சாமார்த்தியமாகவும் பேசி இருக்கலாம். செய்தாரா இந்த மனிதர்...... ஒரு 35 இலட்சம் பெருமானம் கொண்ட ஆடையை அணிவதற்கு பதில் பரதேசி கோலமாக இலண்டனுக்கு சென்ற துப்பு கெட்ட மனிதருக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்.

வங்காலத்தில் இந்து இசுலாமியர் மோதல்கள் வெடித்த போது அந்த நிகழ்வை காரணமாக காட்டி அங்கே இருக்கும் அத்தனை இசுலாமியர்களையும் அழித்து இருக்க வேண்டாமா அதை விடுத்து அவர்கள் கலவரத்தை விடும் வரை செத்தாலும் சரி என்று உண்ணா விரதம் இருந்து நிறுத்தியது எந்த வகையில் ஞாயமாகும். இந்த மனிதருக்கா இத்தனை கொண்டாட்டம்....

இப்படி பல நூறு காரணங்களை அடுக்கலாம் காந்தியின் பெயரையும் புகழையும் படத்தையும் அழிக்க சொல்லி மாளாதே என்று இதோடு நிறுத்திக்கொள்கின்றேன்.

போய் எல்லோரும் மாகாத்துமாவை அழித்து தூய்மை படுத்தபட்ட இந்தியாவின் தினமாக தூய்மை பாரதம் என்று கொண்டாடுங்கள் இல்லை என்றால் நீங்கள் எல்லாம் தேசதுரோகிகள். வந்தே மாதரம்.....

பிகு: இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் எல்லையில் இருக்கும் இராணுவ வீரரிடம் கேட்கவும்.