Sunday, September 28, 2008

இராமன் தேடிய சீதை – திரைவிமர்சனம்

படம் துவங்கியது முதல் இறுதிவரை ஒருவித இருக்கம் படம் முழுவதும் இருப்பது திரைக்கதைக்கும் இயக்குனருக்கும் கிடைத்த வெற்றி. இந்த மாதிரியான கதை பின்னனியில் படங்கள் வந்து வெகுகாலம் ஆனகாலத்தால் படம் அனேக மக்களை கவருவதில் வெற்றியை ஈட்டும்.

திருமணத்திற்கு முன்னே உண்மைகள் தெரிந்தாக வேண்டும் என்று நாயகன் சொல்லும் இடங்களிலும் சரி அதற்கு அந்த பெண்கள் சொல்லும் இடங்களிலும் சரி உண்மை வாழ்க்கை கசப்பு என்று வெளிப்படையாக அழக்காக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மனதளவில் பாதிப்புக்குள்ளானவன் என்ற குறை இருந்தாலும், அதற்கு பிறகு வந்து இறங்கும் அத்தனை இடிகளிலும் கலங்கிப்போகாமல் இருக்கிறான் என்று காட்டியதற்கு இயக்குனருக்கு பாராட்டு. எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ என்ற குரல் கேட்டுவிடுமோ என்று கடைசிவரையில் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.

ஒவ்வொரு முறையும் தன்னை வேண்டாம் என்று சொன்ன நபர்களை வாழ்க்கையில் திரும்ப பார்க்கும் போதெல்லாம் எழும் வெறுப்பை மாற்றி கல்லூரி காதலர்கள் நடந்துகொள்வது போல் ஒரு அறியாத்தனமாக காட்டும் காட்சிகள் அருமை.

அதிலும் அந்த நாகர்கோவில் காட்சிக்கள் அருமையிலும் அருமை. திரைக்கதையின் விளையாட்டும் இயக்குனரின் கை வண்ணமும் அங்கே தெரிகிறது.

படத்தில் குறைகள் என்று எடுத்து சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும்

1) பசுபதியை பார்க்கும் போது பார்த்திபனின் குரலும் நக்கலும் இல்லையே என்று மனம் நம்மையும் அறியாம்ல் தேடுகிறது (சபாசு படத்தின் பாதிப்பு போலும்)

2) படம் முழுக்க பாக்கியராசின் காட்சிகளாகவே வருகிறதே அவரது குரலோ நகைச்சுவையோ இல்லையே என்று தோன்றுகிறது.

3) இத்தணை நாளாய் போன வித்தியாசாகரின் இசையை கேட்க்க முடிந்தாலும் பாடல்களில் அந்த அழுத்தங்கள் குறையாகவே இருக்கிறது. உங்களிடம் இருந்து இன்னமும் எவ்வளவோ எதிர்பார்க்கிறோம் வித்தியாசாகர் குறிப்பாக அதிகமாக பாடல்களை.....

4) நெடுமாறனின் சண்டைக்காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். சண்டை போட்டால் தான் வீரன் என்ற இலக்கணத்தை இவரும் விடாமல் பிடித்துக்கொண்டு இருப்பது, இவ்வளவு நல்ல கதையில், பால் திரிந்து போகும் விதமாக பட்ட புளிப்பு போல் ஆனது.

இவைகளை தவிர படம் நன்றாக வந்து இருக்கிறது. பாக்கியராசை போல் இவரும் நிறைய கதைகள் கொண்ட படமாக கொடுப்பார் என்று எதிர்பார்ப்போமாக... வாழ்த்துகள் செகன்நாதன்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் மெக்கைன்னு மற்றும் ஒபாமாவின் முதல் விவாத மேடை

ஒவ்வொரு முறை அதிபர் தேர்தல் வரும் போதெல்லாம் இப்படி ஒரு விவாதத்தை நடத்தி மக்களுக்கு ஒரு எண்ண ஆக்கம் நிகழ்த்துவது சிஎன் என் தொலைகாட்சியின் வழமை. அப்படி ஒரு விவாதத்தை நேற்று நடத்திகொடுத்தது.

விவாதத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் இதோ இங்கே உள்ள தொடுப்பை சொடுக்கவும், அவர்களை இணையத்தில் முழு விவாதத்தையும் பார்க்கலாம். மூன்று பாகங்களாக பிரித்து கொடுத்துள்ளார்கள் பார்க்கவும்.

http://www.cnn.com/video/#/video/politics/2008/09/26/sot.debate.obama.mccain.military.strategy.cnn?iref=mpvideosview

விவாதத்தின் முக்கிய பொருட்களும் இருவரது பேச்சும்

முதலில் விவாதம் முடியும் வரை ஒபாமாவையை ஒரு முறைகூட பார்க்காமல் தவிர்த்தது ஏன் என்று மெக்கைன்னு விளக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஒபாமாவை பார்ப்பதற்கு அவருக்கு இவ்வளவு பயமாக இருந்திருக்கலாம் அல்லது இவனை எல்லாம் என்ன பார்த்து பதில் சொல்வது என்ற திமிராகக்கூட இருக்கலாம்.

உலகமே எதிர்பார்த்து இருக்கும் ஒரு பொது மேடையிலே இப்படி ஒரு சின்னத்தனமாக நடந்துகொள்ளும் விதம் மெக்கைன்னின் தடுமாற்றத்தின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. இப்படி எல்லாம் நடந்துக்கொண்டால் தான் நல்லது என்று எடுத்து சொல்ல அவ்வளவு மக்கள் இருந்தும் ஏன் இந்த இருமாப்பு என்று தெரியவில்லை.

சரி இந்த கர்வம் அவரது விவாதத்தில் தெரிந்ததா என்றால், தமிழ்மணத்தில் மக்கள் பொழுது போக்குகாக போடும் மொக்கை பதிவுகளை விடக் கேவலமாக இருந்தது அவரது பேச்சு.

முதல் கேள்வியாக சரிந்து உரு தெரியாமல் சென்று கொண்டு இருக்கும் பொருளாதாரத்தை எப்படி சரி செய்ய போகிறீர்கள் என்று கேட்டால், அதற்கு மெக்கைன்னு சொல்கிறார் இப்படி.

வேலை தரும் நிறுவனங்களுக்கு 35% இருக்கும் வரிவிதிப்பை 11%மாக குறைப்போம். அப்படி செய்வதால் அவர்கள் இன்னமும் அதிக வியாபாரத்தில் முதலீடு செய்வார்கள். அதன் மூலம் பெருகும் வேலை வாய்ப்பால் இந்த பொருளாதாரமே அப்படியே வானுக்கே போகப்போகிறது பாருங்கள் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள்......

அமெரிக்காவில் நடக்கும் வேலைகளை எல்லாம் உலகம் முழுதும் உள்ள நாடுகளிடம் கொடுத்து செய்ய சொல்லவேண்டுய அவசியம் என்ன வந்தது. குறைந்த முதலீட்டில் இமாலய இலாபம் என்று வருவதால் மட்டுமே. இது பொருளாதாரமோ வியாபாரமோ இன்னமும் என்ன என்ன படிப்புகள் எல்லாம் இருக்கிறதோ அதன் அரிச்சுவடி கூட தெரியாதவனுக்கே தெரியுமே. அவர்களது இலாபத்தில் 35% சதவிகிதம் விதித்துள்ள வரியை இவர் 11%மாக் குறைப்பாராம்.

இதனால் என்ன நன்மை சம்பளம் வாங்கும் மக்களுக்கு நிகழப்போகிறது என்று கேட்டால் ஒன்றும் இல்லை. அந்த 35% விகித வரியிலும், எப்படி எல்லாம் கள்ள கணக்குளை காட்டவேண்டும் என்று அம்பானிகளுகே கத்து தரும் அமெரிக்காவுக்கு இனிமேல் வரியே இல்லை என்று சொல்கிறார் இந்த மனிதன் மெக்கைன்னு.

எந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாட்டின் அரசாங்கம் நாட்டில் வரும் வரிப்பணத்தில் தான் தனது வளர்ச்சி திட்டங்களையும் வேலைகளையும் செய்யும். அதன் கொள்கைகளையும், செயல்களையும் நடத்திக்கொடுக்கும் நிறுவணங்களுக்கு இவர்களது வேலைகளை செய்து தரும் பணியை ஒப்படைப்பது தான் இத்தணைகாலமாக நடந்துவரும் வழமை. அதை விடுத்து அரசாங்கத்தை போண்டியாக ஒரு திட்டத்தை கையில் வைத்துக்கொண்டு இருகிறேன் என்று உளருவார் என்று எதிர்பார்க்கவில்லை.

ஒபாமா என்ன சொன்னார், நாட்டில் இருக்கும் வேலைகளை திரும்பவும் நாட்டுக்கே கொண்டு வருவது தான் எங்களது முதல் வேலை. நாட்டில் வேலை வாய்ப்புகளை பெருக்கி அடிமட்டத்தில் இருக்கும் மனிதனும் 8 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு இருந்த வாங்கும் திறனுக்கு அழைத்து செல்வது தான் சரியான பாதையாக இருக்க முடியும். அதை விடுத்து பணம் குவிந்தவர்களிடம் இன்னமும் பணத்தை குவிக்கும் வேலை எல்லாம் வாதத்திற்கு கூட சரி இல்லை என்று அல்லவா சொன்னார்......

இரண்டாவதாக ஈராக்கின் பிரச்சணையை பற்றி உங்களது கருத்து என்ன என்று கேட்டதற்கு மெக்கைன்னு இப்படி பதிலுரைகிறார்.

நாங்கள் ஈராக்கில் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறேம் இன்னமும் வெற்றி பெற்றுகொண்டே இருப்போம், வெற்றி பெற்றுக்கொண்டு தான் இருப்போம் என்றார்.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவம் போலும், இத்தணை முறை சொல்கிறார் போலும். அதுவும் அங்கே போராடும் தளபதியின் பணி மகத்தான பணி என்றும் அவரது வீர தீரங்களையும் வீரர்களது வீரத்தையும் புகழ்ந்து தள்ளினார் பார்க்கணும்.......

இங்கே மெக்கைன்னுக்கு ஒரு கேள்வி, பின்ன என்ன ஐயா சொத்தையான ஒரு தளபதியையா கொண்டு இருக்கும் உங்கள் இராணுவம், அல்லது அல்பைகளாக கொண்ட ஒரு அணியையா அயல் நாட்டு சண்டைக்கு ஒரு நாடு அனுப்பும். எந்த நாடாக இருந்தாலும் தனது மிகச் சிறந்த ஒரு தளபதியையும் அவரது கருத்துக்களை அப்படியே அச்சு பிசக்காமல் செயலாக்கும் ஒரு மிக சிறந்த ஒரு அணியும் தான் நாடு அனுப்புமே தவிற பாக்கிட்த்தான் நடத்தும் கபட நாடகம்போல பேருக்கு ஒரு குழுவை அனுப்பிவிட்டு ஒரே இரவில் ஆப்கானித்தானில் இருந்த ஒன்னரை இலட்சம் பேரும் காணாமல் போனார்கள் என்று கள்ள கணக்கை காட்டும் அணியையா அனுப்பும் அமெரிக்கா......

ஏன் இந்த புகழ்ச்சி, தனது முதுகை தானே சொறிந்துகொள்ளும் வேலை, கேள்வி என்ன ஈராக்க் நடவடிக்கை பற்றிய கருத்து. அதுக்கு எங்களது இராணுவம் அது இது என்றால் அப்போ ஒபாமா என்ன இந்தியாவின் அதிபர் தேர்தலுக்க நிற்கிறார் மெக்கன்னு, அவரும் அதே பெருமை மிகு முப்படைக்கு தலைவனாகத்தான் போடியிடுகிறார் நினைவில் கொள்ளவும்.

ஒபாமா இப்படி பதிலுரைகிறார், 9/11 தாக்குதலக்கு திட்டமிட்டவன் ஒசாமா பின் லேடன், அவன் பதுங்கி இருப்பது ஆப்கானிதானிலோ அல்லது அதன் அண்டை நாடானா பாக்கிட்தானிலோ அவனை இன்னமும் பிடித்து தண்டித்த பாடாக தெரியவில்லை. அல்லது எப்போது பிடிப்போம் என்றோ தெரியவில்லை. அந்த முக்கியமான வேலையை விட்டு விட்டு ஈராக்கில் சென்று அமெரிக்க இராணுவத்தை பலிகொடுத்துக்கொண்டு இருப்பது யாருக்காக என்று கேட்டிகிறார். 4000 வீரர்கள் இது வரையில் மடிந்திருக்கிறார்கள் 30,000 வீரர்கள் இது வரையில் ஊனமாகி வந்திருக்கிறார்கள். இவ்வளவு விலையை கொடுத்தும் ஈராக்கில் அமெரிக்க இரணுவ கட்டுப்பாட்டில் நாடு வந்துவிட்டதா என்றால் இல்லை.

பிறகு வெற்றி கொண்டோம் என்றால் எதை வெற்றி என்று சொல்கிறார் மெக்கைன்னு என்றால் இப்படி விவாதத்தை திசை மாற்றும் செயலாக கைக்காப்பை காட்டி ஒரு அன்னை இப்படி சொன்னார் என்று குரல் நடுங்க ஒரு உருக்கமான கதை வேறு. இப்படி ஒரு சப்பைக்கட்டு கட்டத்தான் பலியாடாக உங்களை உங்களது கட்சி அங்கே அனுப்பியதா மெக்கைன்னு வெட்க்கம்.

இது வரையில் மில்லியன் கணக்கை எல்லாம் தாண்டி இட்டிர்லியன் கணக்கில் அங்கே பணத்தை கொட்டியது யாருக்கா, எதற்காக, அங்கே அணு ஆயுத தயாரிப்பு நடக்கிறது என்று சென்ற இராணுவத்தால் ஒரு ஆதாரத்தை கூட ஈட்டமுடியாத நிலையில், அங்கே மக்களாட்சியை ஈட்டுத்தருவோம் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு பணத்தை கொட்டவேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார் ஒபாமா. இந்த பொருளற்ற நடவடிக்கையை விட்டு விட்டு ஒசாமாவை பிடித்து தருவதாக சும்ம ஒரு பொய்யை சொல்லிவிட்டு தனது இராணுவத்தை காட்டிக்கொடுத்த முசாரப்பை இன்னமும் நம்பிக்கொண்டு 10 பில்லியன் இடாலர் வரை கொட்டிக்கொடுத்ததை எல்லம் நிறுத்துவது மட்டும், இல்லாது.

அமெரிக்க படையே நேரடி தேடுதலில் இறங்க வேண்டும் என்று அல்லவா பதிலுரைத்தார். இந்த 6 ஆண்டுகளில் நல்ல பொருட்க்களை தேடி வைத்துக்கொண்டு இன்றைக்கு அங்கே ஆப்கானில் இருக்கும் அமெரிக்கை படையை நோக்கி அல்குவைதா இராணுவ தாக்குதலை தொடுக்கிறது. அதை எதிர்கொள்ள அமெரிக்க இராணுவம் திணருகிறது. உடன் இருந்து காக்கவேண்டிய பாக்கிட்த்தான் இராணுவமோ எதிரிகளுக்கு அமெரிக்க இராணுவ இரகசியங்களை காட்டிக்கொடுத்து எங்கே எப்போது தாக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து மறைமுகமாகவே நண்பன் என்று சொல்லி முதுகில் குத்தும் பாக்கிட்த்தானின் போக்கிரித்தணத்திற்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என்று பொருப்புடனும், தள அறிவுடனும், கடமையாக கருதும் ஒபாமா சொன்ன செய்தியை, என்ன அழகாக திரித்து விடுகிறீர்ரே மெக்கன்னு, நீர் என்ன உண்மையில் ஒரு மக்கைன்னு தானோ......

உலகில் பெருகிவரும் சக்திவள குறைபாட்டை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு மெக்கைன்னு இப்படி சொல்கிறார். 42 அணு உலைகளை தளமமைத்து அதில் வரும் சக்தியை கொண்டு சமாளிக்க போவதாக சொல்கிறார். இன்றைக்கு உலகம் முழுக்க எதிர்கொள்ளும் எரிஎண்ணை தட்டுபாடு தான் அந்த கேள்வியின் முக்கிய பொருள். ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு அணு உலைகளை அமைப்பதால் நிறைய வேலைகளை பெருக்க முடியும் என்று சொல்கிறார். கல்லையும் மண்னையும் சுமக்கின்ற வேலைதான் அமெரிக்கர்களுக்கு சரி என்று முடிவு கட்டிவிட்டீர்கள் போலும் மெக்கைன்னு.

மாற்று எரிசக்த்தி என்ற ஒரு பதம் கூட இல்லை என்றது போல் காட்டிக்கொள்ளும் இந்த மனிதனை தேர்ந்தெடுத்தால் அமெரிக்க மக்கள் எல்லாம் தங்களது வண்டிகளை எல்லாம் இனி குடி இருப்புக்களாக்க மாற்றிக்கொண்டு நாடோடிகளாக அலைய வேண்டியது தான். இந்த கொள்கையை ஒன்றையாவது ஒபாமா கட்சியிடம் கற்றுக்கொள்ள முயற்சியாவது செய்யுங்கள் மெக்கைன்னு.

மெக்கைனின் அரசியல் பேச்சுக்களை கேட்டதும் இல்லை படித்ததும் இல்லை. ஆனால் ஒன்றும் மட்டும் அவரை பற்றி கேள்வி பட்டிருந்தேன். தான் ஒரு முறை தனது படையுடன் எதிரியின் கைகளில் மாட்டிக்கொண்ட போது, மெக்கைன்னை மட்டும் தப்பிக்க வைக்கும் திட்டத்தை முன்வைத்த போது, தனது அணியினர் இல்லாமல் நான் மட்டும் என்றால் அவர்களுடன் இறக்க நானும் தயார் தான் என்று சொன்னவர் என்ற செய்தியை மட்டும் கேள்வி பட்டு இருக்கிறேன்.

ஒபாமாவை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது என்றாலும் நன்றாக பேசவும் அரசியல்கள் செயல்பாடுகளும் அறிந்தவர் என்று கேட்டதுண்டு.

இந்த அடிப்படையில் இந்த விவாதத்தை பார்த்ததில் மெக்கைன்னு ஒரு மெகப்பெரிய ஏமாற்றம். ஒபாமா நன்றாக விவாதித்தார்.

வருகின்ற அக்தோபர் 3ஆம் தேதி துணையதிபர் போட்டியாளர்கள் விவாதம் வருகிறது பார்ப்போம்.

Wednesday, September 24, 2008

100 வருடங்களுக்கு முன்னால் ஒரு கேனைபயல் (அண்ணா) பிறந்தான் என்றதுக்கு எல்லாம் கைதிகளை விடுவிப்பது எந்த வகையிலும் நீதி இல்லை.

இப்படி ஒரு பின்னூட்டம் படித்தேன் இன்று. இந்த அயோக்கிய தனமான பின்னூட்டத்தை பார்த்ததும் கோபமும் எரிச்சலும் வந்தது. அப்போதே அந்த பதிவிலே பின்னூடம் இட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அவரது வழியில் இன்னமும் எத்தணை கேனப்பயல்களது செயலுக்குகாக நாம் பணத்தையும் மனித வளத்தையும் அள்ளி விரயம் செய்துக்கொண்டு இருக்கிறோம் என்று பட்டியலிடுவோம் என்று தோன்றியதால் விட்டு விட்டு இங்கே கொடுக்கிறேன்.

1) அயோத்தியில் ஒரு கேனபயல் பிறந்தானாம் அதனால் பாபர் மசூதியை இடித்து தரைமட்டம் ஆக்குவார்களாம் இந்த கேனயர்கள்.

2) அதே கேனபயல் இங்கே இலங்கை போக வத்ததாக் ஒரு கேனைபயல் எழுதிவச்சானாம் அதை படிச்சுட்டு இந்த கேன பயல்கள் எல்லாம் தமிழகத்தில் எந்த மேம்பாட்டு திட்டங்கள் எதையும் செய்யக்கூடது என்று சொல்வார்களாம்.

3) அதே கேனப்பயல் அயோத்திக்கு திரும்பி போனனாம் அதனால் இந்த கேனைபயல்கள் எல்லாம் அதை தீபாவளின்னு சொல்லி காசை அள்ளி கொளுத்துவானாம் அதனால இவனுக்கு அதுக்கு விடுமுறையும் விட்டு ஆப்பி திவாலின்னு ஆங்கிலத்துல வாழ்த்து வேற சொல்லனுமாம்.

4) ஒரு பொம்பளை குளிக்கும் போது அதுக்கு காவலா இருக்க தனது உடம்பில் இருக்கும் அழிக்கை திரட்டி உருட்டி ஒரு உருவம் செய்து வைத்ததால் ஒரு கேனைபய பிறந்தான்னு ஒரு கேனைபயல் எழுதினனாம் அதனால இந்த கேனைபயல்கள் எல்லாம் மலையளவுக்கு ஒரு உருவம் செய்து அதை ஊர்வலமா எடுத்துபோவானாம் அதுக்கு நமது வரிப்பணத்தில் பாதுகாப்பும் விளம்பரமும் வேணுமாம்.

5) இந்த அழுக்குருணி பயலை இதுவரைக்கும் வடக்கில் தான் கடல்ல வீசினாங்களாம். இப்போ இந்த கேனைபயல்கள் எல்லாம் சேர்ந்துக்கொண்டு இங்கேயும் அதே மாதிரி கடலில் வீசனும் என்று நீதிமன்றம் உட்பட அனைவரது வேலையையும் கெடுத்து வைப்பானாம்.

6) யாரோ ஒரு கேனையலுக்கு திருமணம் நடந்ததாம் அதனால இந்த கேனை பயல் தினமும் திருக்கல்யாணம் செய்வானாம் அதுக்கு மக்களுடைய வரிப்பணமும் நேரமும் விரயம். அந்த திருமணத்தோரு நிறுத்தினால் பரவாயில்லை. தினமும் முதலிரவு வரை நடத்திக்காட்டுவானாம் இந்த கேனைபயல். அதுக்கு இரவில் 10 மணிக்கும் மேல் பெண்களையும் வயது பெண்களையும் கொண்டு பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு முதலிரவுக்கு அனுப்புவானாம் இந்த கேனைபயல்.

7) கோவிலில் ஆண்பிள்ளைகளின் உருவமும் பெண்பிள்ளைகளின் இருவங்களையும் வைத்துக்கொண்டு தினமும் பாலையும் தேனையும் ஊத்தி குளிப்பாட்டினால் நல்லது ( அது என்ன நல்லதோ ) என்று ஒரு கேனைபயல் எழுதி வச்சானாம் அதனால. ஊரில் இருக்கும் மக்களிடம் எல்லாம் இந்த கேனைபயல் சென்று கதை கதையா சுருள் விட்டு நிறைய பணமா வாங்கி ஒரே பணக்குளியலா இவன் குளிப்பானாம். அதுக்கு மக்களது உழைப்பில் வந்த பணத்தை வாங்கி அலுக்காமல் வாழ்க்கை நடத்துவானாம்.

8) இப்படி இவன் சொல்லும் அத்தணை கேனைதனமான கதை எல்லாம் வடக்கில் நடந்த கதைகள் தான். அந்த வடக்கத்து கேனையர்கள் எல்லாம் எப்படி எங்களுக்கு கடவுளாக முடியும் கேனையா, அவைகளை வடக்கத்தியர்களே கொண்டாடட்டும். நமக்கு ஏன் அவர்கள்.

9) மொழியிலே சிறந்ததுன்னு இந்த கேனையர்கள் சொல்வது வடக்கது மொழியை. கடவுள் கதைகள் அதுவும் வடகத்து கேனைதனமான கதைகள். தலைவர்கள்ன்னு இந்த கேனைபயல் சொல்பவர்கள் எல்லாம் வடக்கத்தியர்கள். அப்படியானல் வடக்கிலே சென்று வாழ வேண்டியது தானே கேனையனே உனக்கு இங்கே தமிழகத்தில் என்ன வேலை.

10) இறுதியாக இந்த கேனைபயல் உட்ட கதையை நம்பின ஒரு பதிவர் பாவம் நாங்கள் எல்லாம் இந்து பந்து சந்து என்று பாவம் மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதி பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அந்த கேனைபயல்களது கேனைத்தனம் போதும் நண்பரே நீங்களும் அந்த கேனைகளோடு சேரலாமா. நீங்களும் வடக்கத்தியர், நீங்கள் தமிழகத்தோர் இல்லையா......

Monday, September 22, 2008

Traitor --துரோகி -- குருதிபுனல் திரைவிமர்சனம்



தற்பொழுது வெளியாகி ஓடிக்குகொண்டிருகும் அங்கிலப்படம் இந்த துரோகி திரைப்படம். இந்த படத்தின் கதையும் திரைகதை அமைப்பும் அப்படியே குருதிபுனலின் வடிவாக இருக்கும். அப்படி ஒரு ஒற்றுமை இந்த படத்திற்கும் குருதிபுனலுக்கும்.
என்ன ஒற்றுமைகள் என்று பார்ப்போம்.
1) குருதிபுனலில் தீவிரவாதிகை பிடிப்பதற்காக ஒரு சிறப்புபடையின் கதையை மூலமாக கொண்ட ஒரு கதை. இந்த ஆங்கிலப்படத்திலும் அதுவே தான் கதை.

2) குருதிபுனலில் கமலிம் பாத்திரமும் சரி, அர்சுனனின் பாத்திரமும் சரி, ஒரு நேர்மை தவறாத பாத்திரமாக அமையும். இங்கேயும் அதே நேர்மை தவறாத ஒரு மனிதனின் கதைதான் படமாகக பட்டு இருக்கிறது.

3) குருதிபுனலில் காவலர்களுக்கிடையே இருக்கும் கருப்பாடுகள் இந்த நாயகர்களை அதிகம் சங்கட்த்துக்கு உள்ளாக்குவார்கள். இந்த கதியிலும் அதுபோல நிறைய கருப்பு ஆடுகளை அதுவும் அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவில் ஊடுருவி இருப்பதாக காட்டப்படும்.

4) குருதிபுனலில், அரசே சில தீவிரவாத செயல்களை தனது சொந்த அலுவலர்களை கொண்டு நிகழ்த்தும். அதும் ஆள் சேதம் இல்லாமல் இருக்கும் வண்ணம் வடிவமைத்து இருக்கும். இந்த கதையிலும் அப்படிதான். தவறி 8 உயிர்கள் போனதில் நாயகன் மிகவும் துடித்து தான் போவான்.

5) குருதிபுனலில் இருப்பது போல் இந்த கதையிலும் இரட்டை நாயகன்கள் இருப்பார்கள். இருவரும் சேர்ந்து தான் எல்லா விசாரணையும் நடத்துவார்கள். என்ன குடும்பம், அது இது என்று தமிழில் வந்தது போல் இல்லை.

இப்படி படத்தில் உள்ள எல்லா செய்திகளையும் ஒப்பிட்டு அலசிவிட முடியும். ஆனால் இந்த ஆங்கில படத்தின் பின்னனி இசையும் திரைக்கதையும் அசாத்தியாக இருக்கும். கடைசிவரையில் என்ன நடக்கும் என்று இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் வண்ணம் படம் இருக்கும். அதனால் விமர்சனத்தை இதோடு விட்டு வைகிறேன். நண்பர்கள் படத்தை வார்த்துவிட்டு கருத்து கூறவும்.
தசாவதாரம் CHILL FACTOR படத்தின் தமிழாக்கம் என்று சொன்னதற்கு பழிதீர்க்கும் வண்ணமாக நாம் இந்த படத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் குருதிபுனலோ ARLINGTON ROAD படத்தின் தமிழாக்கமாயிற்றே என்ன செய்ய........

செயலலிதா போக்கில் மாற்றம்; பொதுகுழு காட்டும் உண்மை; தினமலரின் சிறப்பு நிருபர்.-- தினமலரில் இலைகாரர்

http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=504&cls=

தமிழகத்தின் தலைவிதியை பார்த்தீர்களா மக்களே. இந்த அம்மா போக்கில் மாற்றம் வந்ததாம். அதாவது எப்படி என்று அந்த சிறப்பு நிருபர் குறிப்பிடவில்லை. ஆனால் மாற்றம் வந்துள்ளது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். எப்படி அதோ போகிறானே அவன் மிகவும் மோசமானவன் எனக்கு நன்றாக தெரிந்த ஒருவர் சொன்னார். அவர் சொன்ன சரியாகத்தான் இருக்கும் என்று தனக்கு பிடிக்காதவர்கள் மீது தூற்றுவார்களே அந்த கையால் ஆகாதவர்கள். அவர்களை போல் இந்த சிறப்பு நிருபரும் சொல்கிறார் மாற்றம் வந்துள்ளது என்று.

சரி அப்படி என்ன தான் மாற்றம் வந்துள்ளது என்று செய்தியை படிப்போம் என்று பார்த்தால். இந்த அம்மா செய்தி இதழ்களை எல்லாம் படிப்பதே இல்லையாம், அதை அவரே பெருமையாக பலமுறை சொல்லி இருக்கிறார்களாம். அப்படி பட்டவரின் அன்றைய பேச்சு அன்றாட கட்சியின் நிகழ்ச்சிகளையும் நாட்டு நடப்பையும் செய்தி இதழ்களை மேற்கோல் காட்டி பேசினார் என்று.

அட மூட சிறப்பு நிருபா, அப்படி அந்த அம்மா இது வரையில் படிப்பதோ தெரிந்துகொள்ள விருப்பம் என்று சொல்கிறாயே, நீர் என்ன புகழ்கிறீரா அல்லது இலைக்காரனை போல் வஞ்ச புகழ்ச்சியில் இகழ்கிறீரா. பார்த்து இருங்கள், பின்னாளில் எழுத முடியாத வண்ணம் ஆகிவிடப்போகிறது.

தனது சொந்த விருப்பம் உள்ள செய்திகளாக மட்டுமே இருந்தால் மட்டுமே பார்த்து வந்துள்ளார் இது வரை. எப்படி 2 முறை முதல்வராக இருந்த ஒருவர், தனது சொந்த ஆதயத்துக்காக மட்டுமே செய்திகளையோ, கோப்புகளையோ, அலுவல்களை பார்த்துவந்துள்ளார் என்று எந்த தைரியத்தில் முதல் பத்தியில் எழுதியுள்ளீர் சிறப்பு நிருபரே. உயிர் மேல் ஆசை சிறிதும் இல்லை போலும்.

அதிமுகவில் இருந்து மூத்த உறுப்பினர்கள் எத்தணை மக்கள் திமுகவுக்கு ஓடினார்கள் என்று இப்படியா பட்டியல் இட்டு காட்டிக்கொடுப்பது சிறப்பு நிருபா (இலைகரன்). அதுவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு அந்த அம்மாவோ தனது உடற்பயிற்சிகாக கொடா நாட்டை விட்டு சிறிது உடல் பயிற்சி மேற்கொள்ளும் விதமாக சென்னைக்கு வந்தால், இப்படி அந்த அம்மாவை வஞ்சகமாக வஞ்ச புகழ்சி அணியில் திட்டி தீர்ப்பது இலைகாரனே.

இதிலே ஒரு பத்திமுழுவதும் தினமலரை திட்டினார், சாடினார், குறைபட்டு கொண்டார் என்று வரிசையான பட்டியல் வேறு. தினமலரை புகழவேண்டும் என்றால் புகழ்ந்துவிட்டு போகவேண்டியது தானே பாவும் அதுக்கு எதுக்கையா அந்த அம்மாவை இப்படி பொதுமக்களின் முன் மானத்தை வாங்கவேண்டும்.

இலைக்கார நிருபருக்குத்தான் அறிவில்லை ஆசிரியருக்கும் கூடவா இல்லை. ஒரு வேளை ஆசிரியர்கள் எல்லாம் திமுக ஆட்கள் என்று 6 ஆண்டுகளுக்கு முன் அந்த அம்மா சொன்னதுக்கு பழிவாங்னாரோ என்னவோ. உயர் நீதிமன்றத்தில் வழக்கில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில் தினமலருக்கு இப்படி ஒரு வஞ்ச புகழ்ச்சி அணியை சோதனை செய்து பார்க்கத்தான் வேண்டுமா.........இலைகாரரே

Tuesday, September 16, 2008

வெள்ளிதிரை – BOWFINGER படத்தின் கம்பனாக்கம் (தமிழாக்கம்)



இந்த படத்தை பார்க்க துவங்கியதும் இப்படிதான் மாயக்க கண்ணாடியும் ஆரம்பித்தார்கள். பிறகு அவ்வளவு வனப்பாக படம் இல்லையே என்ற எண்ணம் மனதில் தோன்றியதை தவிர்க முடியவில்லை. பிறகு படம் கதையில் பயணிக்கும் போது அந்த கவலை மனதை விட்டு மறைந்தது.
மிகவும் அருமையான தொரு கதையாக்கம், அதை விட அருமையான ஒரு பாத்திரமாக்கமாக அந்த 3 வரும் படத்தில் சொலிக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.
கடவுளே வந்து சொல்லி இருந்தாலும் நீ நம்பி இருக்கக்கூடாது என்ற வசனம் முகத்தில் குத்தியது போல் இருந்தது.
வஞனைகள் செய்வாரோடு இனங்க வேண்டாம், பிரகாசுராச்சு அருமையாக களவாடுவதும். பிறகு நிலைமைக்கு மீறிய பேச்சுகளும் அருமையாக இருந்தது. பாசுகரின் வசனங்களும் நக்கலும் அருமை.
படத்தின் இறுதி வரை இது ஏதோ ஒரு படத்தின் கம்பனாக்கமோ அல்லது மொழியாக்கமாகவோ இருக்காது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் BOWFINRER படத்தை பார்த்து அதே போல் எடுத்தால் என்ன என்று தோன்றி இருக்க வேண்டும்.
வெள்ளித்திரையில் வரும் அந்த கடைசி 15 நிமிட கதையமைப்புதான் BOWFINGERரின் முழுக்கதையும். அந்த படம் நகைப்பு வகையாக எடுத்ததால் சும்ம விட்டு விளையாண்டு இருப்பார்கள் ஆங்கிலத்தில்.
பிரபலமான நடிகன் எடி மர்பி, அவனை கொண்டு ஒரு படம் எடுக்கவேண்டும் என்று இந்த இயக்குனருக்கு ஆசை. ஆனால் இயக்குனரிடமோ பணமோ பதவியோ ஏதும் இல்லை. இருந்தாலும் படம் எடுக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியாமலே அவனை வைத்து முழு நீள படத்தையும் எடுக்கிறான். பிறகு உச்சகட்டம் எடுக்கும் போது இயக்குனரின் குட்டு வெளிபடுகிறது. படம் அதோடு நிற்க, இயக்குனர் எப்படி உச்சகட்டத்தை எடுத்து வெற்றி பெறுகிறார் அது மீதி கதை.
வெள்ளித்திரை ஒரு நல்ல கம்பனாக்கம். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

Monday, September 15, 2008

வேகம் -- நாயகன் -- CELLULARரும் -- நடிகை சங்கீதாவும்

நடிகை சங்கீதாவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தனம் என்று ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் அம்முவாகிய நான் படத்தை அப்படியே மறுபடியும் கேவலமாக எடுத்திருக்கிறார்கள். இதை தெரிவித்த பிறகு நாயகன் என்ற படத்தை பார்த்தேன்.

அது மேலும் ஒரு அதிர்ச்சியை தந்தது. கெஞ்சம் நாளைக்கு முன் வேகம் என்ற ஒரு படம் வந்தது. அந்த படம் ஒரு ஆங்கிலப்படம் CELLULAR ரின் கம்பனாக்கம்(தமிழாக்கம்). ஆங்கிலப்படத்தின் திரைக்கதையை அப்படியே கொண்டு தமிழ் மசாலா தூவி செய்திருப்பார்கள். அதிலும் அந்த சேகரின் மகன் விடும் கொட்டத்தை தாங்காமல் படத்தை ஓடவிட்டு ஓடவிட்டு ஒரு வழியாக பார்த்தேன்.

அதே நேரத்தில் இந்த படம் தெலுகுவிலும் தயாரித்து இருப்பார்கள் போலும். தெலுகுவில் நன்றாக போனதால் அதை அப்படியே மறுபடியும் கம்பனாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

இப்படி தமிழில் வந்த படத்தையே மீள் பதுவு செய்வது என்ன தற்போதய புதிய பழக்கமா என்ன. இல்லை காசு கொட்டி கிடக்கிறதா என்ன.

நடிகை சங்கீதா இனிமேலாவது கதையை கேட்பதோடு மட்டும் அல்லாது மீள் பதிவா என்று பார்த்து நடிக்கவும். பின்னாளில் மீள் பதிவு நடிகை என்று பெயர் வைத்துவிட போகிறார்கள்.

நாயகனில் ஒரு நல்ல செய்தி வேகம் உவேக்காக இருந்தது போல் இல்லாமல் திரைக்கதையை அருமையாக கம்பனாக்கம் செய்துள்ளார்கள். பாராட்டுக்கள்.

Sunday, September 14, 2008

மோடியா!!!! அத்வானியா!!!-- இருவரில் யாரை பிரதமர் ஆக்குவது பாசகா வின் கவலை

குசராத்து கூட்டு கொலைக்கு முன்னாள் வரையில் பாசாகவின் இரும்பு மனிதர் என்று பேசப்பட்டவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான அத்வானி தான் கட்சியின் தலைவர் மற்றும் அடுத்த பிரதமர் என்று அனைவராலும் ஆரூடம் சொல்லப்பட்டவர்.

ஒரே ஒரு கூட்டு கொலை குசராத்தில் அதுவும் எழுந்து ஓடக்கூட முடியாத தனது இனத்தையே சார்ந்த வயது முதிர்ந்த மக்களை அவரகளது அதிகாலை தூக்கத்தில் வண்டி வண்டியாக எண்ணையை ஊற்றி கொளுத்திய செய்க்கைக்கு பின் அதை மற்ற ஒரு இனத்து மக்களின் மேல் பழி போட்டு. அடித்து, துவைத்து ஊருக்கு வெளியில் காயப்போட்ட பிறகு, பத்திரிக்கைகளுக்கு சொன்னார் "இவன்க எல்லாம் இங்கேயும் இந்த இடத்திலேயும் வந்து நல்லா இனபெருக்கம் செய்யுரான்னுக என்று".

இந்த கூட்டு கொலைக்கு பிறகு அத்வானியாவது புத்வானியாவது. இனி குசராத்தின் நிரந்தர முதல்வர் மோடி, ஏன் இந்தியாவின் பிரதமரும் மோடி தான். இவ்வளவு ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்கு கூட தகுதியான ஒரே தலைவர் மோடி தான்.

இதை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் அந்த கட்சியின் நிர்வாகிகளும் சரி. மற்றவர்களும் சரி இன்னமும் மெக்கைனு ஒபாமா என்று ஆரூடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதை இதை சொல்லி அவரை இந்தியாவிலேயே கட்டி போடாதீங்க ஐயா. உலக்குக்கும் கொஞ்சம் கர சேவை செய்யட்டும் மகிழ்ச்சிய வழியனுப்பி வையுங்கள்.

இந்திய பாராளுமன்ற வரலாற்றிலே கூட்டு கூட்டத்தை கூட்டி புதுமையா வாக்கு எடுத்ததை போல் ஏதாவது ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்து குசராத்து, இந்தியா, மற்றும் அமெரிக்காவின் அதிபர் பதவியை ஒரே நேரத்தில் வகிக்க குசராத்தில் ஒரு அவசர சட்டம் இயற்ற சொல்லுங்கள்.

பிறகு துக்ளக் சோவையும் ஞானியையும் கொண்டு அமெரிக்க அதிபர் ஆவதற்கு ஒரு சிரிப்பு வேண்டும் அந்த சிரிப்பை உலகிலேயே மோடியால் மட்டும் தான் முடியும் என்று எழுத சொல்லுவோம்.

பிறகு பாருங்கள் வால் மார்டிலும். சேம்சு கிளப்பிலும் மொத்தமாகவும் சில்லைரையாகவும் கோமைய வியாபாரம் அபாரம பாசாக கட்சி முத்திரையுடன் விற்கலாம். என்ன அருகிலேயே மட்டுகறியும், பன்றிகறியும் இருக்கும். என்ன இருந்த நமக்கு என்ன, நாம கண்டது எல்லாம் பதவியும் பணமும் தானே......

Saturday, September 13, 2008

அம்முவாகிய நான் -- தனம் -- திரைவிமர்சனம்.

தனம் இப்போது வந்த படம், அம்முவாகிய நான் கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்த படம். இரண்டுமே ஒரே கதைதான். கதையை விற்றவர் அங்கே இங்கே மாறுதல்கள் செய்து விற்றாரா அல்லது இவர்களே இப்படி மாற்றி கொண்டார்களா தெரியவில்லை.

இரண்டு கதையிலும் கதையின் நாயகனைவிட நாயக்கிக்கு தான் அதிக பகுதிகள். படமே அவளை சுற்றி தான் வரும். இரண்டு கதையிலும் நாயகி ஒரு விபச்சாரியாக வருவர்.

அங்கே கணவனது கனவு நிறைவே வில்லன் இவளுக்கு காம வலை வீசுவான், இங்கே காம வலை வீச வசதியாக இருக்கவே ஊருக்கு கொண்டு வருவான்.

அந்த படத்தில் முன்னாள் வாடிக்கையாளன் கணவனிடமே அவளை இப்போது வருவாயா என்று கேட்டு விட்டு பிறகு மணமானது தெரிந்ததும் மண்ணிப்பு கேட்ப்பார். இங்கே ஒரு காவலரை வைத்து அதே காட்சி.
அன்கேயும் எதிகாலத்தை அழித்தவன் கொலை, இங்கேயும் குடும்பத்துடன் கொலை.

அங்கே எழுத்தாளன் கொண்ட புரட்சிகளை எல்லாம் இங்கே மூடப்பழக்கங்களாக மாற்றி மாற்றம் மட்டுமே செய்துவிட்டு பாவம் சங்கீதாவை இப்படி பாழாக்கி இருக்கிறார்கள். அவரும் ஏதோ விருதுகள் கிடைக்கும் என்று ஒத்துக்கொண்டு நடித்தார் போலும்.

உங்க அட்டகாசத்திற்கு அளவே இல்லையா மக்களே...... உங்களுகே வெளிச்சம்.......

உன்னால் முடியுமா இந்தியா உன்னால் முடியுமா



http://www.rediff.com/news/2003/jan/02ashok.htm

" What were the other reasons for India not going to war?

The US figures high on this list. The presence of US soldiers and airmen in Pakistani air bases and its naval armada in the Arabian Sea, fighting the war in Afghanistan. The Indian Navy had to be limited in its deployment up to 72 degrees longitude to ensure separation of forces. It is no secret that Indian diplomacy failed to get the US to make Musharraf act on his pledge and in the words of US Secretary of State Colin Powell to end cross border terrorism permanently, irreversibly, visibly and to the satisfaction of India. In fact, George Bush said that India has the riht to defend itself against terrorism.

But the paramount reason for India's 'restraint' was the knowledge that any military action would not achieve the political objective of stopping cross border terrorism. It would inflict punishment but not extract total compliance within the threshold of limited war, the gains from which were estimated to be of doubtful utility. The cardinal principle of war (which is the failure of diplomacy) is that you don't start it unless you are sure you can end it by being better off. "

எப்பொழுதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தை வல்லரசு இந்தியா. இந்தியாவை வல்லரசாக கொண்டு வருவதே எங்களின் நோக்கமும் பணியாகவும் இருக்கும் என்று சொல்வதை நம்மால் காணமுடியும்.



வல்லரசு நாடு என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை என்றாலும், தெற்காசியாவின் துணைகண்டம் என்று நாம் நம்மை சொல்லிக்கொள்வது வழக்கம்.




அருகில் இருக்கும் சிறு சிறு நாடுகளுக்கு மனிதாப உதவிகள் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கும் நாடாகவும் இந்தியா திகழ்வதால் துணைக்கண்டம், பிராந்திய வல்லரசு என்று எல்லாம் சொல்லிகொள்வதில் பொருள் இல்லாமல் இல்லை.




முசாரபை பேச்சு வார்த்தைக்கு ஆக்ராவுக்கு இந்தியா அழைத்து இருந்தது. அந்த கூட்டத்தின் அரசாங்க செய்தி தொடர்பாளரான பெண்மணி அவ்வப்போது பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்களை பகிர்ந்துகொண்டு வந்தார்.

மூன்று மணி நேரமாக பெரிதாக எந்த ஒரு முன்னேறமும் இல்லாத போது, அப்போது எட்டிய நிலையை விளக்கிவிட்டு எழுந்து செல்ல முற்பட்ட அந்த பெண்மணியை அவரது ஆடைகளை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு இப்படி எதுவும் சொல்லாமல் சென்றால் என்ன பொருள் என்று கேட்டார்கள் பாருங்கள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்த பாக்கிட்த்தனிய நிருபர்கள் சிலர்......




அங்கேயே அந்த பொறுக்கி நிருபர்களை நமது சக நிருபர்கள் அடித்து துவைத்து எடுத்திருக்க வேண்டாம். அட அவர்கள் தான் பயந்தார்கள். அங்கே இருந்த காவல் பணியில் இருந்த காவலர்களாவது செய்தார்களா என்றாலும் இல்லை. இராணுவமோ அணிவகுப்பு கொடுப்பதிலும், உயரமான படையாளை கொண்டு முசாரப்புக்கு கைகுலக்க ஏற்பாடுகளைத்தான் பார்த்தார்களே தவிர இந்த செயலை கண்டிகவும் நினைக்கவில்லை தண்டிக்கவும் நினைக்கவில்லை.




http://www.rediff.com/news/2001/jul/18inpak5.htm




அந்த பெண்மணி பின்னாளில் ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் சொன்னார், ஆக்ராவில் இருகிறோமா அல்லது பாக்கிட்தானால் கைப்பற்றபட்ட இடத்தில் இருக்கிறோமா என்று தெரியாத வண்ணமாக அவர்களது செயல் இருந்தது. அவர்களது செயலைவிட, நம்மவர்களின் செயல் தான் இனன்மும் கேவலமாக இருந்தது என்று சொன்னார் அவர்.





http://www.thinnai.com/?module=displaystory&story_id=20107223&edition_id=20010722&format=html







" அடுத்தது, பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்கள், இந்திய அதிகாரி நிருபமா ராவ் அவர்களின் மீது கையை வைத்து இழுத்து, அவரை ஓட ஓட துரத்தி இருக்கிறார்கள், போலீஸ் வந்து அவரைக் காப்பாற்றி இருக்கிறது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் ஒரு இந்திய அதிகாரியை துரத்துகிறார்கள். இந்தியப் பத்திரிக்கையாளர்கள் ஒரு மனிதாபிமானத்துக்காகவாவது அவரைக் காப்பாற்ற வேண்டாமா ? சூராதி சூரர்களான இந்தியப் பத்திரிக்கையாளர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். தனியாக ஈஸிச்சேரில் உட்கார்ந்து வாஜ்பாயியையும் அத்வானியையும் லாரல் ஹார்டி என்று கேலி செய்து எழுத நேரம் வேண்டாமா ? வெட்கம்."





தெரு சண்டையாவோ அல்லது பள்ளி மாணவர்களுக்குள் சண்டை என்றாலோ கூட, மேலே கையை வைக்கும் வரைதான் வாய் பேச்சாக இருக்கும். ஒரு முறை கையை வைத்துவிட்டால் போதும், அதற்கு பிறகு அங்கு நடக்கும் பாருங்கள் ஒரு பிரளயம். அவ்வளவு எளிதில் அதை கட்டுபடுத்த முடியாத அடிதடியாக இருக்கும்.





http://www.dnaindia.com/report.asp?NewsID=1039595




“During my post-Kargil misadventure meeting with American President Clinton, I was told by the American leader that nuclear warheads had been shifted from one station to another during the Kargil war. I was taken aback by this revelation because I knew nothing about it. The American president further told me that the nuclear war heads have been moved so that these could be used against India. I was asked by Clinton why I was unaware of these developments, despite being the elected Chief Executive and the Prime Minister of the country. It was a very irresponsible thing to do on General Musharraf’s part.”





கார்கில் பிரதேசத்தில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் தனது துருப்புகளை வைத்துக்கொண்டிருந்தது மட்டும் இல்லாமல். தனது இராணுவத்தின் கட்டுப்பாடில் அண்டை நாட்டு மனித வெடிகுண்டுகளை அமைத்துக்கொண்டு இந்தியாவின் எல்லைகளுக்குள் ஊடுருவி சரியாக ஒரு இராணுவ தாக்குதை நடத்திக்கொண்டு இருந்தது.





அந்த போக்கிரி செயலுக்கு ஒரு சரியான பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், அவர்களது எல்லையின்னுள் உள்ள அனைத்து முன்னனி நிலைகளின் மீதும் ஒரு அடையாளம் தெரியாத கப்பலை கொண்டோ, அல்லது அடையாளம் தெரியாத ஒரு விமானத்தை கொண்டோ, அல்லது வேண்டாம் ஒரு அடையாளம் தெரியாத ஒரு படையணியை கொண்டோ ஒரு எதிர் தாக்குதை அவர்களு முக்கியமான ஒரு முன்னனியில் தொடுத்திருக்க வேண்டாமா.





இந்த கபட நாடகம் நடந்து கொண்டு இருக்கையில் நமது முன்னனி படையணி ஒன்று முன்னனி தக்குதலில் மிகவும் சிறந்த அணி அது. பதில் தாக்குதல் ஒன்றை துவக்கினார்கள். அந்த தாக்குதல் இந்த போக்கிரிகளுக்கு பின்னில் இருந்து ஒரு சுட்டாதரவை வழங்கியதற்கு துவங்கிய எதிர் தாக்குதல்.





உடனே அமெரிகாவுக்கு செய்தி பறக்கிறது. உடனே கிளின்டன் ஒரு செய்தியை இந்திய அரசுக்கு தெரிவிக்கிறார். அந்த துள்ளியமான பதில் தாக்குதல் நடத்திய படையணியின் தலைவனை கட்டாய விடுப்பில் இந்த சண்டைகள் முடியும் வரை அனுப்பவேண்டும். அப்படி அனுப்பினால் தான் இந்த சண்டையில் தலையிட்டு உதவுதாக தெரிவிக்கிறார்.





பின்னாளில் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பட்ட பின்னும் இரண்டு ஆண்டுகள் இந்த தலைவலி நீடித்தது எதை காட்டுகிறது. நமது மண்னில் வந்த நமது எதிரியை தாக்கும் வல்லமையும் நமக்கு இல்லை, உரிமையும் நமக்கு இல்லை என்று.





அப்படி என்ன அவர்களால் நம்மை என்ன செய்துவிடமுடியும். என்ன கண்ட இடங்களில் அணுகுண்டுகளை வீசி இருப்பார்கள். இரசியாவுடன் ஏற்பாடுகளை கவனித்துவிட்டு ஒரு அடி அடித்து இருக்கலாம். அப்படி அடித்து இருந்தால், ஒரு வேளை சீனாவின் தலையீடு வரும் பட்சத்தில் அமெரிக்க உதவ வந்திருக்கும். சீனாவின் மற்றும் பாக்கிட்தானின் கொட்டங்களை ஒருங்கே நசுக்கி இருக்கலாம்.





ஆனால் நாம் என்ன செய்தோம் அந்த அண்டை நாட்டோடு கெஞ்சிக்கொண்டு இருந்தோம். இதிலே அணு வல்லரசு, பிராந்திய வல்லரசு என்றெல்லாம் பெயர் வேறு நமக்கு.





வல்லரசு என்றால் எப்படி நாம் நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா "பாக் அனுமதியின்றி அவர்களது மண்னில் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடந்தது: புசு" என்று இன்றைய தலைப்பு செய்தியாக வந்திருக்கிறதோ அதைபோல அல்லவா அவர்களோடு நடந்திருக்க வேண்டும்.





பாக்கிட்த்தான் தான் அணுகுண்டு வீசுவான், நமக்கு பயம். இலங்கை என்ன செய்துவிட முடியும் நம்மை. தமிழர்களை அழிப்பதற்கு அவன் பாக்கிட்த்தானை கூப்பிடுவானாம், சீனாவை கூப்பிடுவனாம். அன்று பாக்கிட்த்தான் ஆடிய அதே கபட நாடகத்தை இன்றைக்கு இவன் நடத்தி காட்டுகிறான்.



என்ன செய்திருக்க வேண்டும் இந்தியா, இன படுகொலையை நிறுத்து. இல்லை எங்களது இராணுவம் வரும் அவர்களை பாதுகாக்க என்று சொல்லி இருக்க வேண்டாமா.





கொரியா, தைவான், ஆங்காங்கு, திபெத்து என்று சீனா தனது அதிகாரங்களுக்குள் அந்த நாடுகளை இந்த நாட்களில் கூட கையக படுத்திக்கொண்டு தான் வருகிறது.




இலங்கையை இந்தியா அடித்து பிடித்தால் எந்த நாடு வர போகிறது. அப்படி அங்கு வந்து நிற்க எந்த நாட்டிற்கும் அங்கு ஒரு அவசியம் இல்லை. அப்படி ஒரு அவசியம் இருந்திருந்தால் எப்பவோ அமெரிக்கா அதை செய்திருக்கும்.



நாளைக்கு இதை எல்லாம் கணக்கில் கொண்டு நாளைய அமையும் பாக்கிட்த்தான் அரசு நாளை இந்தியாவை அடிக்கவும் தயங்காது. நாம் தான் எல்லாவற்றிக்கும் அமெரிக்காவையும்(ஐ நா) இரசியாவையும் கேட்டு கேட்டு முடிவெடுப்போமே.





சொந்த மண்ணையும் காக்க முடியவில்லை, அண்டை நாட்டின் மேல் ஆளுமையை செலுத்த முடியவில்லை. இதில் என்ன வல்லரசு பட்டம் அதும் அணு வல்லரசு.




தேசமே என்றைக்கு உன்னை வல்லமை பொருந்திய நாடாக பார்ப்போமோ.......................சுப்பிரமணி சாமியை கேட்டால் சரியாக சொல்வாரோ......

இதுதான் மொழிப்பற்றா தினமணியின் தலையங்கம்.

இந்த தலையங்கத்தில் கட்டுரையாளர் மும்பையில் நடந்த செயா பச்சனின் "நான் இந்தியில் தான் பேசுவேன்" என்று சொன்ன விவகாரத்தின் அடிப்படையில் எழுதியுள்ளார்.

மொழிப்பற்றுக்கும் மொழி வெறிக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக சொல்லியுள்ளார். எனது மொழி எவ்வளவு நல்ல மொழி அதில் உள்ள நூல்களை படித்து பாருங்கள் என்று எடுத்துசொல்லவும், நமது மொழியின் வளங்களை அடுத்த மொழியான் தெரிந்துகொள்ளும் பொருட்டு மொழிபெயர்ப்புகளை கொடுத்தும் தான் மொழியை வளர்க்க முடியும். மாறாக எனது மொழியை தவிர மற்ற மொழிகளை கேட்க்கவோ பேசவோ பழகவோ கூடாது என்று சொல்வதால் மொழி வளரப்போவது இல்லை என்றும் சொல்கிறார்.

மராட்டியத்தில் மராத்தி என்ற ஒரு மொழி உண்டு. அது தான் அந்த மாநிலத்தின் மொழியும் கூட. இந்தியவின் பொருளாதார தலைநகரமாம் மும்பையின் வழக்கு மொழியாகவும், அரசு மொழியாகவும் மராட்டியம் இல்லை. அதுவும் அந்த மாநிலத்தின் தலைநகரில். அரசாளவும், வழக்கிலும் மராட்டியம் இல்லாத ஒரு மாநிலம் அந்த மராட்டியம்.

காட்டாக தமிழகத்தை எடுத்துக்கொள்வோம், தமிழக அரசின் ஆட்சி மொழி தமிழ். தலை நகரில் வடக்கத்தியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று சென்னையில் இனிமேல் அரசு உட்பட எல்லோரும் இந்தி தான் பேசவும் எழுதவும் வேண்டும் என்ற ஒரு நிலை வருகிறது என்று வைத்துக்கொள்வோம். மொழிப்பற்றாளனாக வேண்டாம். தமிழகத்தின் ஒரு சாதாரண மனிதனாக நாம் என்ன நினைப்போம் என்று கட்டுரையாளர் கேட்க மறந்த கதையாக விட்டு விட்டார்.

இணையத்தில் மராட்டியத்தை காப்பாற்றுங்கள் என்று ஆங்கிலத்தில் தேடினால் அவர்களது கண்ணீர் கதைகளை நிறைய காணலாம். உச்ச நீதிமன்றத்தில் சென்று மராட்டியத்தை கட்டாய பாடமாக அக்குவது மூலமாகவாது மும்பையின் இந்த மொழி சமத்துவத்தை நிலை நிறுத்தலாம் என்று திட்டம் தீட்டி இப்போது நிறைவேறுகிறார்கள்.

இதை விட இன்னமும் கேவலாமன இரு செய்தி உண்டு. இன்றைக்கு மராட்டியத்தை தாய்மொழியாக கொண்ட இருவர் சந்தித்துக்கொண்டால், அவர்கள் உரையாடுவது இந்தியில் மராட்டியத்தில் அல்ல. இதை எனது அலுவலகத்தில் மராட்டியர்களை கேட்டு இருக்கிறேன். அதற்கு அவர்களும் வருத்தப்பட்டார்கள், ஆனால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இவர்கள் மட்டும் இல்லை, இந்தியாவின் மொழிகளிலே அதிக மொழிபற்று கொண்ட மாநிலமான மேற்கு வங்கமும் சரி, கர்னாடகமானாலும் சரி அவர்கள்குள் பேசிக்கொள்ளும் மொழி இந்தி தான். அவர்களுடைய மொழி இல்லை.

வெளி நாடுகளில் இந்தியர்கள் ஒன்றாக கூடும் இடங்களில், இந்தி தெரிந்த தமிழர்கள் என்னவோ நாட்டின் ஆட்டி கட்டிலில் படுத்துக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ்சங்களுக்கோ தமிழ் திரைபடங்களுக்கோ வருவது இல்லை மாறாக அப்பச்சி இந்தியன் வந்தால் மாறோ மாறோ சல்சாகோ தேகா மாறோ என்று சொல்லிக்கொண்டு போவான். அவனுக்கு இந்தி மேல் இருக்கும் இந்த இந்தியின் மோகம் மொழிப்பற்றா கட்டுரையாளரே விளக்கிவீர்களா. அந்த விளக்கத்தின் அடிப்படையில் இந்த மொழிப்பற்றை மறு ஆய்வு செய்வோம்.

Friday, September 12, 2008

தாம் தூம், செயம் கொண்டான், சரோசா பட விமர்சனங்களும் லக்கியாரும்!!!!!

இந்த மூன்று படங்களும் வந்த வேகத்தில் லக்கியாரின் விமர்சனங்களும் வந்தது. இந்த மூன்று படங்களையும் நானும் பார்த்தேன். எனது பார்வையில் லக்கியாருக்கு எனது கேள்விகள் இங்கே.

தாம் தூம் படத்தை விமர்சிக்கையில் லக்கிக்யார் சொல்கிறார், அந்த படம் 1990இல் வந்த ரோசா படத்தை தான் தாம் தூமாக எடுத்து இருக்கிறார்கள் என்று.

இயக்குனரும், ஒளிபதிவாரும், மற்றும் நடிகனாகவும் இருந்த இசீவா இன்று நம்மோடு இல்லை, அமராகிவிட்டார். அவர் நாயகனாக நடித்துக்கொண்டு வந்த படம் தான் இந்த தாம் தூம் படம், இரசியாவில் படப்பிடிப்பில் இருக்கும் போது மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

படத்தில் எந்த ஒரு இடத்திலும் இசீவாவின் நிழல் கூட இல்லை, அப்படி என்றால் இசீவா எடுத்து வைத்திருந்த பகுதிகளை முற்று முழுதாக அழித்துவிட்டு முதலில் இருந்து மறுபடியும் படமாக்கி இருக்கிறார்கள் என்று தான் பொருள். அதிலும் கூட இசீவாவின் படைப்பை தேவைக்கு ஏற்றார் போல் மாற்றியும் தான் படமாக்கி இருப்பதாக தெரிகிறது. காரணம், இரவி கதை முழுக்க அனைவரும் அலைகழிக்கும் ஒரு பாத்திரமாக வந்திருப்பதை வைத்து சொல்லலாம். அப்படி அலைகழிக்கப்படும் பாத்திரமாகவே படைக்கப்படும் பாத்திரத்தின் மேல் பார்ப்பவர்களுக்கு மனதை வருடும் பாத்திரமாக தான் படைக்கவேண்டும் என்றது இலக்கணம். காட்டாக சொல்ல மறந்த கதை, அழகி, வறுமையின் நிறம் சிகப்பு இப்படி அலைகழிப்பு நாயகன்களை கொண்ட படங்களை காட்டலாம்.

எந்த ஒரு படத்தையும் துவக்கும் முன்னர் முற்று முதலாக திரைகதையாங்கள் முடியும் முன்னர் யாரும் படத்தை துவக்குவது இல்லை. அதுவும் இப்போதும் இருக்கும் விலைவாசியில் ஒரு முழுமை பெறாத ஒரு திரைகதையாக்கத்துடன் பட பிடிப்புக்கு அதுவும் வெளி நாட்டு பட்பிடிப்புக்கெல்லாம் செல்வது நடக்கவே நடக்காத ஒன்று.
சரி அப்படி என்றால் இசீவாவின் கதையும் திரைக்கதையும் என்னவாகத்தான் இருந்திருக்க முடியும் என்றால் என்னுடைய கணிப்பில், THE SAINT என்ற ஒரு ஆங்கில படம் அந்த படத்தை தான் தமிழில் எடுக்க அவர் முனைந்திருக்க வேண்டும்.

அந்த படத்தின் கதை இது தான், ஒரு அனாதை சிறுவன், சுட்டிப்பையனான அவன் அடிக்கும் கொட்டங்களின் முடிவில் உடன் வசிக்கும் ஒரு சிறுமி (இவனுக்கு மிகவும் பிடித்தவள்) இறக்கிறாள். அன்றைக்கு விடுதியை விட்டு ஓடிய அவன் பின் நாளில் ஒரு மிக பெரிய திருடனாக வளர்கிறான்.
அவனிடம் இரசியாவின் ஒரு போக்கிரி பணக்காரன் ஒரு பெரும் தொகையை கொடுத்து அப்போது தான் வெளியான குறைந்த செலவிலும் மிக சிறிய இடத்திலும் அணு இனைப்பை உருவாக்கவும், அதன் மூலம் மின்சாரத்தை மிக சொர்ப்ப செலவில் பெறலாம் என்ற ஆராய்ச்சி இரகசியங்களை திருடிக்கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று பணிக்கிறார்.

ஆராய்சியின் இரகசியங்களை அந்த அழகு பதுமையான எலிசபத்து சூவிடம் இருந்து கைப்பற்ற நாயகன் பல கில்லாடி வேலைகளை செய்ய பற்பல மாறு வேடங்களை கொண்டு அடைகிறான்.

அந்த அழகு பதுமையை காதல் வசப்படுத்தும் முனைப்புகளில் அவனது பரிவிலும் வேடங்களிலும் தன்னை பரிகொடுக்கும் அவள் இரகசியங்களை பரிகொடுத்த பிறகு அவனிடம் சொல்வாள் என்னிடம் கேட்டிருந்தலே கொடுத்தே இருப்பேனே திருட வேண்டிய அவசியமே இருந்திருக்காதே என்ற வசனத்தில் வீழ்வான் நாயகன்.

அது வரை அக்கிரமங்களுக்கே துணையாக போனவன், அவள் இழந்ததை மீட்டுத்தரும் முயற்சியில் பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் அனாயசமாக எதிர்கொண்டும் சமாளிப்பது மிகவும் அழகாவும் அருமையாகவும் படமாக்கி இருப்பார்கள்.

தாம் தூம்மின் கதை என்ன, இதய அருவை சிகிச்சைக்கு ஒரு முற்றிலும் புதுமையான முறையை கொண்டு சாதனை நிகழ்திய நாயகன் இரசியா செல்கிறான் தனது ஆராச்சியை உலகறிய செய்யும் பொருட்டு. அப்போது சவால்களை மேற்கொள்ளும் பாத்திரமாக இசீவா இரசிய தெருக்கலில் அலையும் அதே கதையில் ஆக்கத்தில் வரும் திரைகதை சம்பவங்களின் பின்னனியில் எழுதி இயக்கி இருக்கவேண்டும். அந்த பாத்திரத்தின் சாகசங்களை விட திரைகதையின் வீச்சு மிகவும் அதிகமாக இருக்கும். அதற்கு என்ற நட்சத்திர முத்திரை பெற்ற நடிகன் எல்லாம் ஒன்றும் தேவை இல்லை என்று இசீவாவே நடிப்பதாக முடிவாகி இருக்க வேண்டும். மேலும் அசல் கதையின் நாயகன் திருடனாக வருவதால், அந்த திருடனாக நடிக்க எசு சே சூரியாக் கூட ஒத்துக்கொண்டு இருக்க மாட்டார்.

ஆக இசீவாவே நடிப்பதாக உருவாகி இருக்க வேண்டும் அந்த படம். படத்தில் இரவி இரசிய நகரின் நதியில் மூழ்கி தப்பிக்கும் காட்சி அசலில் ஒரு தியாக செயலாக வரும் ஒரு அருமையாக காட்சியை இங்கே சொதப்பலாக உப்பு சப்பு இல்லாமல் படமாக்கி இருப்பதை பார்க்கும் போது லக்கியார் போல் எனக்கும் எரிச்சலாகத்தான் இருக்கிறது.

அசல் படத்டின் இறுதியில் மற்றும் ஒரு இரசிய புரட்சி நடக்கும், அதை நாயகன் தலையிட்டு அதிபருக்கு சாதகமாக மாற்றி அந்த போக்கிரி பணக்காரனை மக்களுக்கு அடையாளம் காட்டுவாத அமையும். ஒரு வேளை இசீவா உயிருடன் இருந்திருந்தால், அந்த படத்தை அருமையாக தமிழில் கொடுத்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஆமாம் இதிலே லக்கியாருக்கு என்ன கேள்வி என்றால், இது இப்படி இருக்க இரோசா படம் தான் இது என்று எதை வைத்து முடிவு கட்டினீர் லக்கியாரே.
உங்கள் கூற்று உண்மை என்றால் அப்போ செயம் கொண்டான் படம் என்ன அரங்கேற்ற வேளையின் கதையின் பகுதியும், சரோசா அந்த தொழிலதிபரின் பெண்ணை கடத்தும் படமாக வந்தது என்று சொல்வீர்கள் போலும். குண்டு ஒன்னு வச்சிருக்கேன் வரும் இடத்தில் இங்கேயும் ஒரு நகச்சுவை பாட்டு வருதை கவனிக்கவும், பதில் சொல்லவும் லக்கியாரே, பதில் சொல்லவும்....

Wednesday, September 3, 2008

சத்யம் – திரைவிமர்சனம்


ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் வாழ்க்கை பற்றிய படம் இது. துவக்கம் முதல் இறுதிவரை காட்சிக்கு காட்சி தடால் அடியாக படம் நகர்கிறது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தனே தண்டனைகளை கொடுப்பது தான் இனிமேல் தீர்வு என்று சாமி படத்தில் சொன்னதை தவறு என்று சொல்லும் விதமாக படம் அமைக்கப்பட்டு இருக்கிறது.


இந்த வகையில் வரும் அனைத்து படங்களிலும் நாயகன் நீதியை காப்பாற்ற தனது மகனையோ(தங்க பதக்கம்) அல்லது தம்பியையோ (வால்டர் வெற்றிவேல்) ,தகப்பனையோ (சாமி), நண்பனையோ(குருதி புணல், சட்டம், அஞ்சாதே), காதலியையோ ( காக்க காக்க , அனேக படங்கள்) இழந்து ஒரு எதிர்மறையான தாக்கத்தை கொடுப்பர். இந்த வகை படங்களில் நாயகன் தன்னுடைய இழப்பு எதுவும் இல்லாமல் சாத்தித்தாக காட்டும் படங்கள் அரிது (உன்னால் முடியும் தம்பி ஒரு சிறந்த உதாரணம், அதிலேயும் தனது இளமை காதலை இடை நிறுத்தியதாக வரும் என்றாலும் கடைசியில் கைகூடும், மொத்தத்தில் இழப்பு இல்லை).

இந்த விதி தமிழ் படங்களில் மட்டும் இல்லை, அனேக உலக மொழி படங்களிலும் சாதாரணமாக தோன்றும் ஒரு கதை அமைப்பு தான்.

இந்த படம் சட்டத்தை மீறாமல், சட்டத்தை காக்கமுடியும் என்று தீர்மானமாக சொன்னாலும். நீதியை காக்க மனிதன் எல்லாவற்றையும் இழக்க வேண்டும் என்ற வழமையான கதையமைப்பு கொண்டமைக்காக இயக்குனரை கோவித்துகொள்ளாமல் விடமுடியவில்லை.

தயவு செய்து அடுத்த படைப்புகளில் இதிலும் கவனம் கொள்ளவும்.

ஊடகங்களில் ஊதி ஊதி சொக்கப்பானையாக சொல்வதை போல் படத்தில் நீள நீளமான வசனங்கள் ஏதும் இல்லை. சட்டத்தின் மேல் காவலர்களுகே நம்பிக்கை இல்லை என்ற நிலை படத்தில் வரும் இடங்களில் நாயகன் திருப்பி கேள்விகளை கேட்கிறான். அந்த இடங்களை தான் ஊடகம் ஊது ஊது என்று ஊதி இருக்கிறது. உண்மையில் படத்தில் ஒன்றும் அப்படி இல்லை.


நாயகனின் தோற்றமும் சரி, படத்தில் நாயகனின் சாகச செயல்களாக வரும் இடங்களாக இருந்தாலும் சரி விசால் அழகாக தோன்றுகிறார். முன்னே சொன்ன அத்தனை படங்களிலும் வரும் காவலர்களாக வரும் கதா பாத்திரங்களின் மேல் வரும் மதிப்பு இந்த பாத்திரத்தின் மீதும் வருகிறது. இந்த வகையில் நாயகன் விசாலுக்கும், இயக்குனருக்கும் வெற்றி.