Tuesday, December 21, 2010

யார் இந்த விருதகிரி - ஆங்கிலபடம் TAKENஇன் தமிழாக்கம்



படத்தில் கதை இயக்கம் என்று விச்சையகாந்தின் பெயரை காண்பிக்கிறார்கள். முதல் தயாரிப்பு அதுவும் நடப்பு செய்திகளை கொண்டு படமாகப்பட்டது என்ற புகழுரைகள் வேறு. இந்த முடியாத வயதிலும் தலைக்கு வண்ணமாக வண்ணங்களை மாற்றிக்கொண்டும், அயலக காவல் துறைகளோடு மோதுவதும். என்னமோ அவர்களுக்கு எல்லாம் அறிவே இல்லை என்றது போலும் ஆரம்ப காட்சிகள் அரங்கேற்றம்.



இந்த படம் ஆங்கிலபடம் இன் ஈ அடிச்சான் பிரதி. எந்த அளவிற்கு என்று கேட்டால் ஆங்கிலத்தில் அந்த கடத்தல் கும்பல் ஒரு கல் உடைக்கும் இடத்தில் வைத்து அந்த விபச்சார தொழில் நடத்துவார்கள். அந்த கல்லுடைக்கும் இடத்தில் இருந்து நாயகன் தப்பி ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு வண்டியில் தப்பிக்கும் போது அந்த வண்டி விரட்டல் அந்த கற்களின் குவியல்களுக்கு நடுவில் நடப்பதாக எடுத்து இருப்பார்கள் அந்த அளவிற்கு ஈ அடிச்சான் பிரதி இது.

மற்றபடி அந்த இரண்டு பெண்கள் ஆசுத்ரேலியா வந்து இறங்கி பின் கடைசியில் தப்பிக்கும் வரை அனைத்தும் காட்சிக்கு காட்சி வசனத்திற்கு வசனம் ஆங்கிலப்படமே.

இந்த இலட்சணத்தில் ஆசுத்ரேலிய அரசும் நாடும் இந்தியர்கள் வந்து அவர்களது நாட்டின் பொருளையும் செல்வங்களையும் கொள்ளயடிக்க வந்த கும்பலை நடத்துவது போலவும் காட்டியுள்ளார் இந்த படத்தில். உண்மையில் அங்கு படிக்க செல்லும் நம் மாணவமணிகள், கூட்டம் கூட்டமாக ஆட்களை அழைத்துக்கொண்டு தீபாவளி பொங்களுக்கு ஊர்வலம் நடத்திக்காட்டுவதும். 200, 300 வண்டிகளில் அணிவகுத்து ஊர்வலம் வருவதும், உள்ளூர் மக்களை பார்த்து நையாண்டி அடிப்பது தான் அந்த அடி தடிகளுக்கு உண்மையான காரணம்.

இவைகளுக்கு எல்லாம் மேலாக கிரிகெட்டு ஆட்டம் நடந்தால் அங்கே சென்று உட்கார்ந்து கொண்டு அவர்கள் ஆட்கள் வெளியேறும் போது தாரைதம்பட்டை என்று வாசித்துகாட்டினால் எப்படி இருக்கும். என்ன தான் எழுத்துரிமை பேச்சுரிமை என்று இருந்தாலும் எங்கே நம்ம ஆட்களை பெங்களூரூவில் சென்று அப்படி செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம். அடுத்த நாள் கையும் காலும் இல்லாமல் வந்து சேர்வார்கள். நமது நாட்டிலே நிலை இப்படி என்றால் அடுத்த நாட்டில் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ஏன் இந்த வீண்விளையாட்டுகள்.

இப்படி ஒரு நொண்டி சாக்கு இந்த படத்திற்கு தேவைபடுகிறது இல்லை என்றால் மூலப்படம் அப்படியே அல்லவா இருக்கிறது என்று சொல்வார்கள் என்று யோசனை கூறி இருப்பார்கள் போலும்.

விச்சைகாந்திற்கு இனி கவலையே இல்லை, என்ன என்ன காவலர்கள் படம் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறதோ அவைகள் அனைத்தையும் இனி இப்படி ஒரு தமிழக அம்மா அப்பா, நண்பரின் மகள் என்று தலையையும் காலையும் மட்டும் மாட்டிவிட்டு படம் எடுப்பார் போலும்.

இந்த திருட்டு சரக்கை வைத்துக்கொண்டு படம் முழுக்க அடுத்தவர்களை இவர் பகிடி போசும் வசங்கள் இருக்கிறது பாருங்கள் செயா தொலைக்காட்சி செய்திகள் போல் ஒரே அருவருப்பு.

ஒருவேளை இவரது கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்கால், படமே எடுக்கமுடியாமல் திணரும் இவர் எப்படி சொந்த ஆட்சியை கொடுப்பார். இன்னும் ஒரு மண்ணார்குடி கும்பலைபோல் வேலூரோ அல்லது ஆந்திரா கும்பலோ கதை வசனம் எழுதிகொடுக்க இவர் சட்டசபையில் நின்றுக்கொண்டு இவன் திருடன், அவன் அயோக்கியன், நான் மட்டும் தான் நல்லவன் என்று வசனம் சொல்வார் போலும்.

முதலில் அடுத்தவர் உழைப்பை திருடும் செயலை நிறுத்துங்கள், பிறகு நீதி செல்ல வாருங்கள். அடுத்த படமாவது திரைபட கல்லூரி மாணவர்களிடம் ஆலோசித்து இது தானா எழுதின கதையா அல்லது மண்டபத்தில எழுதி அதை தன் கதை என்று கொண்டு வந்து கொடுத்துள்ளார்களா என்று சரி பார்த்துகொள்ளவும்.

இன்னமும் கொஞ்சம் விட்டா இந்த படம் ஒரு தமிழன் எடுத்து இருக்கான் என்று தான் ஆசுகர் விருது கொடுக்கவில்லை இதுவே ஒரு வட நாட்டுகாரனாக இருந்து இருந்தா ஆசுகர் விருதுகள் கிடைத்து இருக்கும் என்று அவரது அடிபொடிகள் அவரை உசுப்பேத்தி விடாமல் இருத்தால் சரி.

Thursday, December 16, 2010

சித்திக்கின் ப்ரண்சு Friends படமும் - சைமன் பிரிக்கும் Simon Birch (1998)


விச்சையின் இந்த படம் பார்க்கும் போது ஆகா என்ன ஆழமாக கதையாக எழுதி இருக்கிறார்கள் என்று வியந்தேன். அருமையான கதைகளம் அதிலே நகைபாக வர வேண்டும் என்று அதிக கவனமாக சூர்யாவையும் விச்சையையும் கையாண்டு இருப்பார்கள் படத்தில்.

அந்த படத்தின் கதையில் இது தான் அடிப்படை, தண்ணீரில் விழுந்த தனது தங்கையை காப்பாற்றுவான் ஒருவன் யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் அவனுக்கும் அவனது தம்பிக்கும் இவன் நண்பனாக ஆவான்.

நன்றாக சென்றுக்கொண்டு இருக்கும் அவர்களது நாட்களில் எதிர்பாராத விதமாக சூர்யாவின் தம்பி இறப்பான். இந்த சிறுவன் காதுகேளா மற்றும் பேச்சற்றவனாக கதையில் சொன்னாலும் அதிக இடங்களில் இந்த பாத்திரத்தை மூடி மறைத்தே கதை நகரும்.

அந்த இறப்பிற்கு பிறகு இவர்களின் நட்பில் ஒரு பெரிய நெருக்கம் வரும் அந்த நட்பு ஏன் என்று பிறகு தனது மனைவியின் சந்தேகத்தை போக்க சொல்லும் வரையில் இது இரகசியமாக காக்கப்பட்டிருக்கும்.

விச்சையும் சூரியாவும் கல்லூரி காளையாக தனது நண்பர்களுடன் இல்தக்க சையா என அடுக்கும் லூட்டியும் மற்ற விடலை செய்கைகளும் இரசிக்கும் படியாக இருக்கும்.

சித்திக் லால் இருவரின் கைவண்ணங்களில் வந்த படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த குழுவின் படைப்புகள் முழு நீள நகைப்பு படமாக அமையும் வெற்றியும் காணும்.

இந்த படத்தை பார்க்கும் போது கதையையும் அரட்டைகளும் தமிழில் வருவது இல்லையே என்று வருந்தவும் செய்தேன்.

சைமன் ப்ரிக்கை பார்க்கும் வரையில் இந்த பிரமிப்பு இருந்தது. சைமன் ப்ரிக்கின் கதை இந்த இரண்டு இளைஞர்களை எடுத்து விட்டு இரண்டு 12 வயது சிறுவர்களாக மாற்றி எடுத்தால் எப்படி இருக்கும் அது தான் படம்.

கண்ணுக்கு அழகான பெண்ணாக தாயாக ஆசுலி சூடை காட்டி இருப்பார்கள், ப்ரண்டுசு படத்தில் இதே போல் தோற்றம் உடைகளுடன் தேவியாணி நடித்து இருப்பார்.

சைமன் ஒரு உடல் வளர்ச்சி குன்றிய பிள்ளை பாத்திரம், 12 வயதிலும் குழந்தை ஏசுவாகத்தான் நடிக்க வேண்டும் என்று வேண்டும் ஒரு உருவம் இந்த பாத்திரம்.

அவனது நண்பன் ஆசுலியின் மகன் தந்தை யார் என்று அம்மாவுக்கே தெரியாது என்று கதையில் சொல்வார்கள். சைமனோ குறையுன் பிறந்தால் பெற்றோர்களாலும் மற்ற அனைவருக்கும் எள்ளி நகையாடும் வகையில் அவனது வாழ்க்கை அமைந்தாலும். நண்பன் தான் அவனுக்கு எல்லாம், அவனது நட்பும் விளையாட்டும் என்று இருக்கும் இவன் வீட்டில் இருப்பதை விட நண்பனின் வீட்டில் தான் அதிக காலம் செலவிடுவான் என்று கதை நகரும்.

எதிர்பாராதவிதமாக சைமனின் பந்து விளையாட்டில் வாழ்க்கையிலே முதல் முதலாக அடிக்கும் பந்து ஆசுலி இறப்பதும் கதையில் ஒரு சோகம் தொற்றிக்கொள்ளும். அந்த நிகழ்விற்கு பிறகு தனியாக சென்று அந்த சிறுவன் அழுவதை பார்க்கும் போது மனது பிசைந்து எடுக்கும். அந்த நிகழ்வுக்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் தவிர்த்து வருவார்கள். பிறகு ஒரு நான் ஆசுலியின் சமாதியில் சைமன் உருகி அழுவதை பார்த்த நண்பனுக்கு சைமனை மன்னித்து நட்பை தொடர்வார்கள்.

அனாதையாக ஆக்கப்பட்ட சைமனின் நண்பன் வாழ்க்கையில் இனி தான் என்ன செய்ய போகிறோம் என்று யோசிக்க தனது தந்தை யார் என்று கண்டுபிடித்தால் என்ன என்ற முயற்சியில் இறங்க கடைசியில் சைமன் நண்பனின் தந்தை யார் என்று கண்டுபிடித்து விடுகிறான்.

நண்பனின் தந்தை யார் என்று கண்டுபிடித்ததை நண்பனிடன் சொல்லிவிட்டு திரும்பி வரும் வழியில் பள்ளி பிள்ளைகளை ஏற்றி கொண்டு வந்த வண்டி அந்த பனிகாலத்தில் நீண்ட நெடிய மலைசரிவில் சரிந்து ஆற்றில் விழுகிறது.

அந்த வண்டி 13 பிள்ளைகளோடு வேகமாக ஓடும் அந்த ஆற்றில் விழுந்ததும் ஓட்டுனர் அனைவரையும் விட்டு விட்டு தப்புவதும். அழைத்து வந்த ஏசு போதகர் தலையில் அடிபட்டு மயங்கிய நிலையில் திரையில் குழந்தைகளின் கூச்சல் ஒரு 20 வினாடிகள்.

ஐயோ என்ன நடக்குமோ என்று நாம் மர்மத்தில் ஆழும் போது சைமன் மூழ்கிக்கொண்டு இருக்கும் வண்டியின் முன்புரம் வந்து அனைவருக்கும் ஆனையிடுவதும், அனைவரையும் காப்பாற்றுவதும் மிகவும் அழகாக படமாக பட்டிருக்கும் இந்த படத்தில்.

படத்தில் சைமன் அடிக்கடி தான் ஒரு காரியத்திற்காக கடவுள் அதிசிய பிறவியாக படத்துள்ளார் என்று சொல்லிக்கொண்டே வருவான். அந்த கடைசிகாட்சியில் அப்படி ஒரு சின்ன உருவம் இல்லாமல் இருந்து இருந்தால் அந்த விபத்தில் இருந்து 13 குழந்தைகளை காப்பாற்றி இருக்கமுடியாது என்று அந்த வார்த்தைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக கதை முடியும்.

கதையின் ஓட்டம் அந்த நண்பன் சைமனை பற்றி சொல்ல சொல்ல கதை நகர்வது போல் எடுத்து இருப்பார்கள். தனது மகனுக்கு சைமன் என்று பெயரிட்டு இருப்பான் அந்த நண்பன்.

கதை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும், சித்திகின் கற்பனை அலாதியாக வந்துள்ளது தமிழில். அனைத்து சிறுவர்கள் சம்பவங்களுக்கும் பெரியவர்களை வைத்து கதையை அருமையாக அமைத்து இருப்பார் தமிழில். உதாரணத்திற்கு வடிவேலின் கேளிகைகள் எல்லாம் ஆங்கிலத்தில் சர்சில் இவர்கள் இருவரும் அடிக்கும் அரட்டையை அழகாக தமிழில் எழுதி இருப்பார் சித்திக்கு.

மலையாளிகள் படைபில் ஒரு தனித்துவமும் உயிரோட்டமும் இருக்கும். பாசில், சித்திக்கின் தமிழ்படங்களில் இவைகளை நாம் பார்க்கலாம். ஆனால் அவர்களும் ஆலிவுட்டின் படங்களை அடிப்படியாக கொண்டு தான் படம் எடுக்கிறார் என்று பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.

பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு How to lose a guy in 10 daysசின் தமிழ் பிரதி.

பார்க்கலாம் இன்ன எத்தனை கரடி வெளியே வருகிறது என்று.

Thursday, December 2, 2010

இனிது இனிது - திரைவிமர்சனம் - Revenge of the Nerds (1984) ஆங்கில படமும்



படம் துவங்கும் போதே நெர்டு படத்தின் பிரதிதான் என்று அழகாக தெரிகிறது. பார்க்க தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் திறமையில் சளைக்காதவர்கள் என்று காட்டும் படம் தான் அந்த ஆங்கிலப்படம். கிட்டத்தட்ட நமது இராசேந்தர் படம் போல தான் இருக்கும், என்ன கொள்ளையாக பணத்தை கொட்டி அரங்குகள் அமைத்து பாடல்கள் மட்டும் இல்லை என்று இருக்கும் ஆங்கிலத்தில்.

ஆங்கிலத்தில் ஒரு முட்டாள் முரட்டு குண்டு ஆள் ஒருவர் மாணவனாக வருவார், அவர் உட்பட அனைத்து கதா பாத்திரங்களும் அப்படியே தமிழில் எழுதி எடுத்து இருக்கிறார்கள்.

என்ன திறமையை காட்ட அவர்களுக்குள் பாட்டுப்போடு நடத்துவார்கள் இவர்கள் கிரிகட் ஆட்டம் நடத்தி காட்டியுள்ளார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.

அது என்ன மதுமிதா என்ற பெயர் வந்தால் உடனே இச்சீன்சு படத்தின் மகரிச இசையை அதுவும் அதே பியானோ இசையை கொண்டு தான் கொடுக்கனுமோ. இரகுமானின் பின்னணி அப்படியே ஆங்காங்கே வருகிறது.

நம்ம ஊர் கல்லூரி தானா என்று கேட்க்கும் அளவிற்கு கட்டமைபுகள் எல்லாம் அருமையாக இருக்கிறது அந்த கல்லூரியில்.

நல்ல காதல் கதையாக படமாக்கி இருக்கிறார்கள் அழகாக, நல்ல காதல் மோதல்கள். அதுவும் அந்த அப்பு பெண்மணி புடவையில் வருவது குச்சு குச்சு கோத்தாகை படத்தில் காசோல் நாகரீக உடையணிந்து வரும் காட்சியை கண்களுக்கு முன் கொண்டு வருகிறது.

நாயகி நல்ல தேர்வு, சின்ன பெண்ணாக இருக்கிறார். இல்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் தான் எல்லோருக்கும் நாயகி. என்ன சற்று குள்ளம் எடுபடுகிறாரா என்று பார்ப்போம்.

எங்கே மருந்தடிக்கும்/குடிக்கும் முன்னவர்களுக்கு பின்னவர்கள் சேவை செய்யுபடி காட்சிகள் வந்துவிடுமோ என்று பயந்தேன் நல்லவேளை காப்பாற்றிவிட்டார்கள்.

உடைசன் பாத்திரம் அருமை, எங்கே அவரது கூந்தலையும் வெட்டிவிடுவார்களோ என்று இருந்தது அப்படி எதுவும் நடக்கவில்லை.

படத்தில் திடீர் என்று ஏப்ரல் மாதத்தில் படத்தி வாசனை அப்படியே.

அடுத்த படத்தின் பாதிப்பை தனது படைபில் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது இயக்குனரின் கடன். நிறையவே கோட்டைவிட்டுள்ளார்.

படம் கடைசிவரை ஒரு கொலை, தற்கொலை, கத்தி குத்து என்று இல்லாமலும், தேர்தல் அடிதடி பின் குத்து பாட்டு என்று இல்லாமல் ஆங்கிலத்தில் உள்ளது போலவே தைரியமாக எடுத்துள்ளமைக்கு பாராட்டுகள்.

ஈ அடிச்சான் பிரதியாக இருந்தாலும் நிறைவான பிரதி, வாழ்த்துக்கள்.

Wednesday, December 1, 2010

நந்தலாலா - திரைவிமர்சனம் - ஜாக்கி சேகர்க்கு எனது கேள்விகள்.

படம் நன்றாக வந்து இருக்கிறது, என்ன இவ்வளவு மெதுவாக படம் நகர்ந்தால் தமிழ் இரசிகர்களுக்கு பிக்காது, இயக்குனருக்கு தெரியாதா என்ன.

நமக்கு எல்லாம் சப்பான் என்றால் பாயும் இரயிலும், மின்ணணு சாதணங்களாக மட்டும் தெரியும் நாட்டிலும் வாழ்பவர்கள் எல்லாம் மக்கள் தான். அவர்களிடமும் பாசம், ஏமாற்றம், அறிவின்மை என்றெல்லாம் உண்டு என்று சொல்வதோடு மட்டும் அல்லாது. சப்பானிய கிராமங்களை வழி நெடுக்க காட்டுவார்கள் சப்பான் படத்தில்.

ஏற்கனவே பல விமர்சனங்களில் சொன்னது போல் கதை அப்படியே அச்சு பிரதி எடுத்தால் கூட பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் மிகவும் கடினமான உழைபிலே ஒரு வெற்றி திரைகதையை உருவாக்கி வெற்றியும் கண்ட படத்தின் திரைகதையை அப்படியே இந்திய மை பெட்டியிலே நனைத்து கொடுப்பது தான் மிகவும் வருத்தமான செயல்.

அழுத்தமான கதையும், அதை அழகாக நடத்தி செல்லும் கம்பீரமான திரைகதையும் அமைந்துவிட்டால் வெற்றி நிச்சயம். நம்மவர்களுக்கு கதை எழுத வருகிறது, ஆனால் படமாக ஆக்க திரைகதையாக மாற்றும் போது தான் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

நந்தலாலாவில் எனக்கு எழுந்த கேள்விகள்.

1) ஏன் எல்லா கதா பாத்திரங்களும் தலைகுனிந்தே நடக்கிறார்கள். அதுவும் அப்படி தலைகுனிந்து நிற்கும் காட்சிகளை ஏன் மேல் இருந்தோ அல்லது கீழ் இருந்தோ அல்லது பின்னால் மட்டும் காட்ட வேண்டும். எல்லா படங்களிலும் காட்டுவது போல் பாத்திரங்களை நேரில் காண்பது போல் காட்டினால் என்ன. சப்பானிய படத்தில் இப்படிதான் காட்டுவார்களே அதனாலா அல்லது அவைகளுக்கு வேறு எதுவும் பொருள் உண்டா.

2) எந்த ஒரு காட்சிக்கும் ஒரு முன்னமைப்பை காட்டிவிட்டு தான் காட்சியை காட்டுவார்கள், அதாவது இது தான் களம் இனிமேல் என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று காட்டுவார்கள். மன நல காப்பகத்தில் மட்டும் அப்படி ஒரு காட்சி அமைப்பு இருந்தது, பிறகு எந்த காட்சிகளிலும் இல்லை, தாய்வாசல் காட்சியில் மட்டும் மற்றும் ஒரு முறை களத்தை காட்டியுள்ளார். சப்பானிய படத்தில் அனேகமாக எல்லா காட்சியிலும் இந்த அமைப்பு அருமையாக வந்துள்ளது. அதனால் தான் என்னவோ எந்த காட்சியும் மனதில் ஒட்டவில்லை அந்த கடைசி காட்சியை தவிர.

3) ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை சாலையை தவிர. முதலில் நடக்கும் காட்சிகளை காட்டிவிட்டு நேரே தாய்வாசலை காட்டினால் கூட யாராலும் காட்சிகள் கானாமல் போனதை கண்டுபிடிக்க முடியாது.

4) புதுமண தம்பதிகள் மேல் சாராயத்தை தெளித்த ஆட்களை அடித்து கேட்க்கும் இவர்களை எதற்காக இறக்கிவிட்டு விட்டு அவர்கள் ஓட வேண்டும்.

5) ஒன்றுமே புரியாத செய்ய தெரியா ஆள் அம்மாவை மன நலகாப்பகத்தில் சேர்க்கும் போது இவனை ஒருவரும் கண்டுக்கொள்ளாமல் விட்டது எப்படி.

6) இன்னமும் எத்தனை காலங்களுக்கு தான் பெண்களை இழிவுபடுத்தியே படமாக எடுப்பீர்கள். நான் கடவுள் படத்தில் பிச்சைகாரியாக வருபவள் கூட தனக்கு விருப்பம் இல்லா ஆணுடன் வலுக்கட்டாயமாக அனுப்புவதை பொருக்காமல் சாவதற்கும் துனிவதாக கதை அமைத்திருப்பார் பாலா அது போல் ஏதாவது ஒரு பாத்திரமாக படைத்து இருக்கலாம் அந்த விலைமாது பாத்திரத்தை.

இப்படி பல குறைகள் படத்தில் இருந்தாலும் படம் நன்றாக அமைந்துள்ளது.

இளையராசா வழக்கம் போல் படம் முழுவதும் ஆளுகிறார், எல்லா காட்சியிலும் அவரும் உடன் வருகிறார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அதே கம்பீரம் அவரின் குரலில். இரண்டு பாடல்கள் அருமை. தொலைகாட்சிகளில் உணர்ச்சிகளை அள்ளி கொட்டி மக்களின் மனதை மறுத்து போகும் அளவிற்கு செய்துவைத்திருக்கும் இந்த காலத்திலும், மனதை உலுக்கும் காட்சிகளாக அந்த கடைசிகாட்சிகள் அமைந்து இருப்பது அருமை.

சப்பானிய படத்திற்கும் இதற்கு ஆயிரம் ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த படம் வேறு அந்த படம் வேறாகத்தான் தெரிகிறது. என்ன உருசிய நாவலை தமிழில் படிக்கும் போது ஏற்படும் சங்கடங்கள் தானே தவிர தரமாக அமைந்து இருக்கிறது.

இதே போல் சப்பானிய படமான ஆடிசனையும் எடுத்தார் என்றால் இன்னமும் நன்றாக ஒரு திகில் படம் தமிழுக்கு கிடைக்கும். முயற்சிக்கிறாரா என்று பார்ப்போம்.

வாழ்த்துக்கள் மிசுகின்.

Tuesday, November 23, 2010

எப்படி இருந்த கட்சி இப்படி ஆச்சு பார்த்தீர்களா.......

Friday, November 5, 2010

எந்திரன் - கதை திரைகதை எங்கே இருந்து திருடப்பட்டது -விமர்சனம்



இந்த படம் ஆங்கில படம் மல்டிபிளிசிட்டி(1996) படத்தின் தமிழாக்கம். வழக்கம் போல வசனத்திற்கு வசனம், காட்சிக்கு காட்சி அப்படியே தமிழில் எழுதி இருக்கிறார்கள் அவ்வளவு தான்.



இதில் சுச்சாதாவை வேறு துணைக்கு அழைத்தும்கொண்டார்கள். இந்த கதையை அவர் 1996ல் வார இதழ்ழில் வெளியிட்டதற்கான ஆதாரங்களையும் மக்கள் வெளியிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.



சங்கர் வழக்கம் போல் ஒரு கல்லூரி அதிலே நாயகனின் நெருங்கிய நண்பருக்கு இடம் கிடைக்கவில்லை என்று கொள்ளை அடிப்பதும், இல்லை அரசியலில் இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதுமாக காட்டி நாயகனும் அவர்களைவிட ஒரு பெரிய கொள்ளைகாரனாக மாறுவது, இல்லை மிக பெரிய ஊழல்களை எல்லாம் விட்டு விட்டு ஒரு குண்டூசி தவறுக்கு தலையை எண்ணை சட்டியில் வறுத்து கபாப்பு போடும் படமாக எடுக்காமல் மிகவும் வித்தியாசமாக ஒரு கதையில் எடுக்கிறார் என்றால் என்ன பொருள்.



அது அவருடைய சொந்த சரக்கு இல்லை என்றது தான்.



சமீப காலமாக மிக பெரிய பொருட்செலவில் தமிழில் நிறைய திருடப்பட்ட படங்கள் வந்துக்கொண்டு இருக்கிறது. கமலகாசனில் இருந்து இரசினி வரை ஒருவரும் விதிவிலக்கு இல்லை.



கமலுக்கு சில் பேக்டர்(Chill Factor) தசாவதாரமாக வந்த போதே அப்போ இரசினிக்கு என்ன என்ற கேள்வி தோன்றியது. அது எந்திரன் என்று இப்போது தெளிவாத தெரிகின்றது.



மல்டிபிளிசிட்டியின் கதை இது தான். நாயகன் ஒரு கட்டிடம் கட்டித்தரும் ஒப்பந்தகாரன். அவனுக்கு மனைவி மக்கள் என்று வாழும் நடுத்தர குடும்பம். என்றைக்காவது சொந்தமாக தொழில் தொடங்கி முதளாலியாக வாழும் வரை கடினமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று அன்றாடம் கடுமையாக உழைக்கும் ஒரு உழைப்பாளி.



படத்தின் முதல் காட்சிகளில் இவைகளை விளக்கிவிட்டு அவனுக்கு மனைவியையோ அல்லது குழந்தைகளையோ கவனிக்க நேரம் இல்லாமல் தவிக்கும் காட்சியில் மனைவியிடம் வரும் வாக்கு வாதத்தில் அவர்களின் மணவாழ்க்கை முடிவை தேடி போகும் நிலைக்கு வரும் எந்திரனில் அதே காட்சிகளை புதிய மனிதாவில் தொடங்கி காதல் இரத்து என்று முடித்து இருப்பார்கள்.



அடுத்து இப்படி நேரம் இன்றிதவிக்கும் இவனுக்கு இவனை அப்படியே இவனது உருவத்தில் குளோனிங்கு முறையில் இன்னும் ஒருவனை உருவாக்கி வேலைக்கு குளோனிங்கு என்றும் மனைவிக்கு நாயகன், என்றும் கதை நகரத்தொடங்கும். இங்கே எந்திரனில், குளோனிங்கு வேலையில் செய்துகாட்டும் சுறு சுறுப்பும் நேர்த்தியையும், மனைவியிடம் நாயகன் வேலைகளை பகிர்ந்து கொள்ளும் காட்சிகளை இங்கே சிட்டி ஐசுவர்யாவின் மகிழ்வில்லத்தில் எல்லா வேலைகளையும் நொடியில் முடித்து அசத்துவதாக காட்சி அமைத்து இருப்பார்கள்.



ஒரு கால கட்டத்தில் ஒரு குளோனிங்கு பற்றவில்லை என்று துவங்கி பற்பல குளோனிங்குள் என்று ஆங்கிலத்தில் கதை நகர்ந்தாலும் அந்த எல்ல குளோனிங்குகளுக்கும் நாயகன் விதிக்கும் ஒரே விலக்கு தனது மனைவியிடம் ஒருவரும் நெருங்கக்கூடாது என்றது தான்.



அங்கே தான் கதையில் மெல்ல சிக்கல் துவங்கிறது. நாயகன் இல்லாத நேரத்தில் அவனவனும் உருவ ஒற்றுமையை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள் விளையாடு. இதை தமிழிலே எடுக்க முடியுமா அதனால் அதையே கதையின் முழு திருப்பமாக அமைகிறார்கள்.



ஆங்கிலத்தில் அந்த அளவிற்கு கதை செல்லும் போது நாயகனின் தவறான நேர திட்டமிடுதலில் வரும் தவறில் அவனுக்கு வேலை போகிறது. தமிழிலோ அவனது இயந்திரனை அறிவியல் கழகம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.



இவைகளுக்கு இடையில் நாயகி ஆங்கில கதையில் மறுபடியும் வேலைக்கு செல்வதும் அந்த வேளைகளில் நாயகன் குழந்தைகளையும் தொழிலையும் சமாளிக்கும் காட்சிகளை தான் ஐசுவர்யா பரிட்சை எழுதும் காட்சிகளாகவும், வில்லன்களை எதிர்கொள்ளும் காட்சிகளாகவும் காட்டியுள்ளார்கள்.



இந்த அளவிற்கு ஆங்கிலத்தில் கதை ஆபாசமாக வந்தபிறகு அந்த குளோனிங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார்கள். அது தனது அன்பின் மொத்த உருவமாக மதிக்கும் அந்த பெண்மணி விரும்பும் ஒரு கனவு வீட்டை வடிவமைத்து கட்டி அவளுக்கு பரிசாக கொடுக்குமாறு நாயகனிடம் சொல்லிவிட்டு விலகிக்கொண்டு இடெக்குசாசுல் ஒரு தொழில் தொடங்கி வாழத்துவங்கியதாக கதையை முடிப்பார்கள்.



ஆங்கில கதையில் ஆபாசமாக வந்தாலும் அன்பினை முன்னிறுத்தி மனைவிக்கு அன்பை காட்டும் விதத்தில் அருமையாக கதையை முடித்திருப்பார்கள்.



இது வரையில் தமிழில் திரைக்கதை எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் ஒரு தெளிவா ஒரு ஓட்டமாக ஓடும் எந்திரனில்.



ஏன் ஏற்கனவே இருக்கும் திரைக்கதையை அப்படிய ஈ அடிச்சான் பிரதி எடுத்து தமிழில் சொல்வது என்ன அவ்வளவு கடினமா என்ன.



இதற்கு மேல் கதை தீர்ந்துவிட்டது இன்னமும் ஒரு ஒன்னறை மணி நேரம் கதை போகவேண்டும் என்ன செய்ய என்று கையை பிசைந்து கொண்டு எந்த ஒரு கற்பனையும் இல்லாது இரமநாராயணன் பாணியில் பாம்பு, யானை, குரங்கு அம்மன் சிலைக்கு பால் குளியல், பூசை , கற்பூரம் காட்டுதல், என்று இரண்டாம் பாதில் காதில் காளிப்பூவை சொருகி இருக்கிறார் சங்கர்.



இந்த காளிப்பூ சொருகலுக்கு 170 கோடி உரூபாய்க்கள் சொலவு என்றும் இன்னமும் இரண்டு காளிப்பூகளை சொருகுகிறார் சங்கர்.



இந்த அழகில் சுச்சாதாவையும் சங்கரையும் ஐன்சுடைன் அளவுக்கு புகழ்வது மட்டும் அல்லாது கடவுளாக கோவில்கட்டி கும்பிடவேண்டும் என்ற அளவிற்கு பரப்புரை வேறு.



இரகுமானின் பாடல்கள் புது இரகமாக இருந்தாலும் சிவாச்சி பட பாடலில் வரும் வருத்தம் இந்த படத்தில் இருக்கிறது. இத்த பாடல்களை திரும்பபாடும் அளவிற்கு வார்த்தை வீச்சுகள் இல்லை. பேசாமல் இனிமேல் நல்ல கவிஞராக தேடினால் பாடல்களாவது தப்பும் இல்லை சங்கரின் படங்கள் நேராக குப்பைக்கு போவது உறுதி.



இந்த படத்தில் இரசினியும் ஐசுவர்யாவும் எதற்கு நடிக்க வேண்டும் பேசாமல் இரண்டு புதுமுக நடிகர்களையும், இடையே அர்சுனை அழைத்து கொஞ்சம் வசனமும் சண்டைகளும் வைத்து இருந்தலே போது அதை விடுத்து....இரசினிக்கும் ஐசுவர்யாவிற்கும் ஒரு படம் வீண்.



ஒன்று கமலும் இரவிக்குமாரும் சேர்ந்து நேர்த்தியாக பிரதி எடுப்பதை போல் எடுக்கவேண்டும். இல்லை சொந்த சரக்கை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இரசினி இல்லாமல் இனி சங்கர் படம் எடுத்தால் ஒருவரும் வாங்க மாட்டார்கள் அது உறுதி.



10 இலட்சம் முன்பணம் கொடுத்து படம் வெளியிட்ட திரையரங்குகள் எல்லாம் அந்த 10 இலட்சம் கூட இன்னமும் வந்தாக தெரியவில்லை. இதிலே இமாலய வெற்றி, வசூலை குவிக்கும் காவியம் என்ற ஏகவசனங்கள் வேறு.......



கடவுள் தான் காப்பாற்றனும் தமிழ் இரசிக பெருமக்களை.......






Tuesday, September 21, 2010

இசையும் இராசாவும் என்றும் இளமை, அது தான் இளையராசா

இளையராசாவின் இசைக்கு இந்த விருது, அதுவும் ஒருவரும் எனது பங்கு என்று உரிமை கோராத அளவிற்கு ஒரு விருது. அவர் எழுதிய இசைக்கு இந்த விருது என்று அளித்துள்ளாதார்கள் இந்த விருதை.

இராசாவிற்கு இது பெரிய செய்தியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு எல்லாம் இது பெரியது தான்.

ஒரு ஒரு தனி மனித சாதணை, நான்காவது முறையாக அவர் வாங்கும் விருது அதுவும் இத்தனை ஆண்டுகால உழைபிற்கு பிறகும் இத்தனை இசை அமைப்பாளர்கள் மத்தியில் தான் இன்னமும் அதே வேகத்தில் இசையை அளிக்க முடியும் என்று அனைவருக்கும் சொல்லும் செயல் அல்லவோ இது.

இராசாவின் வரலாறை புரட்டி பார்த்தால், அவர் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து அவருடன் வளர்ந்த கலைஞர்கள் எல்லாம் தங்களின் பங்களிப்பு போதும் என்று இருக்கும் இந்த கால கட்டத்திலும் என்னால் எப்பவும் அற்புதமான படைப்புகளை கொடுக்கமுடியும் என்ற அவரது ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் உலகுக்கு சொல்லும் விருது அல்லவா இது.

என்ன ஒரே ஒரு குறை அந்த விருது தமிழ் படத்திற்கு கிடைக்காமல் மலையாள படத்திற்கு கிடைத்து இருக்கிறதே என்ற குறை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

பழசிராசா படத்திற்கு விமர்சனம் எழுதும் போது எனது விமர்சனம் இது தான். படத்தில் எல்லா இடத்திலும் பழசிராசாவும் இளையராசாவும் தான் நிறைந்து இருக்கிறார்கள் என்றது தான்.

இளையராசாவே சொன்னது போல் பெரிய பெரிய செய்திகளாக எனக்கு செல்ல தெரியவில்லை என்றாலும். அந்த படத்தை இவர்கள் இருவரும் ஆக்கிரமித்து தான் இருந்தார்கள்.

செயமோகன் அவர்களின் வசனங்களிலும் சரி. பழசியின் நடவடிக்கைகளும் சரி சராசரி மனிதனின் திறனுக்கு அப்பாற்பட்டு எதுவும் படத்தில் செய்யவும் இல்லை, பேசவும் இல்லை.

ஆனால் இராசாவின் இசைவீச்சு படத்தின் பாடல்களில் இருந்து காட்சிக்கு காட்சி நம்மை நகர்த்திக்கொண்டே வந்தது நாம் அனைவரும் கவனிக்காமலே நடக்கும் செயலாக அல்லவா அமைந்து இருந்தது.

இந்த காலத்தில் இப்படி ஒரு வரலாற்று படம் எல்லாம் சாத்தியமா என்று இருந்த நிலைபோக, இப்படி என்ன இன்னமும் பழமை வாய்ந்த படங்களையும் கூட எங்களால் படைக்கமுடியும் என்று காட்டிய காவிமாக அல்லவா இந்த படம் அமைந்தது.

இராசாவை பாராட்ட வார்த்தைகளை இனிமேல் கவிஞர்கள் கொடுத்தால் தான் உண்டு, அத்தனை வார்த்தைகளையும் அவர் எப்பவோ வாங்கிக்கொண்டு விட்டார்.

ஆகவே அவரை பாராட்டுவோம் என்று சொல்வதைவிட அவரது தனியாத அந்த இசை அறிவை இன்னமும் அதிகமாக எங்களுக்காக கொடுக்கும் படி வேண்டிக்கொள்வோம்.

இசையும் இராசாவும் என்று இளமை, அவ்வளவு தான் வேறு என்ன சொல்ல.
















Saturday, August 28, 2010

வரும் சட்டசபையில் வெல்லப்போவது யார்.............

விசயகாந்து முதல் முன்னனி கட்சிகள் யாவும் வரும் சட்டசபையை பிடிக்க உத்திகளை வகுத்துக்கொண்டு வருகிறது. அதிமுக இந்தனை ஆண்டுகால கும்பகர்ண தூக்கத்திற்கு பிறகு மக்களையும் மக்களது நலங்களையும் காப்பதாகவும். அந்த நலங்களை என்னமோ திமுக மட்டுமே அழித்ததாகவும் அழித்துக்கொண்டு இருப்பதாகவும் கதைகளை கட்டி பாணா காத்தடியை பறக்கவிட்டு பல்டி அடித்துக்காட்டிக்கொண்டு இருக்கிறது.

இராமதாசும் வைகோவும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் தெரிவிக்கவும்.

இந்த தமிழக அரசியல் கட்சிக்கள் எல்லோரும் ஒரு மாம்பெரும் பொய்யை வேண்டும் என்றே சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவைகளில் ஒன்று, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் வழங்குவதும் நாங்கள் தான் என்றது.

இந்தியாவில் அயலக சேவை வேலைகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொண்டுவந்து கொட்டுவதை என்னமோ இவர்கள் தான் உருவாக்கியதாக சொல்வது அப்பட்டமான பொய்.

இப்போது அந்த பொய்யை விசயகாந்து முதல் அதிமுக வரை யாருக்கும் வேலையே இல்லை என்று புலம்புவதும் பார்ப்பதற்கும் கேட்பத்தற்குன் நகைப்பாக இருக்கிறது.

நகர்புரமாக இருந்த இந்த வேலை பெருக்கத்தையும் தாண்டி அயலக நிறுவணங்கள் உழவிலும் கால் பதிக்க தொடங்கியுள்ள இந்த வேளையில் அப்படி ஆகும் நிலைமைகளை தடுப்பதை விட்டு விட்டு அந்த வேலை வாய்ப்புகளையும் வழங்கியது நாங்கள் தான் என்று போட்ட போட்டிக்கொண்டு இவர்கள் விளிப்பதை என்ன என்று சொல்வது......

கொக்கோ கோல நிறுவணங்கள் முதல் பட்டி தொட்டியில் இருக்கும் சின்னஞ்சிறு நிறுவணங்கள் வரை நிலத்தடி நீரை உரிஞ்சி பாலித்தீன் பைகளில் அடைத்து விற்கிறார்கள். காற்றை தவிர மனிதனுக்கு இயற்கையில் கிடைக்கும் அனைத்திற்கும் ஒரு விலையை சொல்லி விற்கு நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டு நாங்கள் தான் சிறந்தவர்கள் என்றும் சொல்லும் இந்த அரசியல் வாதிகளை என்ன என்று சொல்ல.

அயலக வேலைகளுக்காக அருவி போல் கொட்டும் பணத்தை எப்படி நல்ல வழிகளை ஏற்படுத்த பயன் படுத்த வேண்டும் என்றோ, அல்லது பயன் படுத்தாமல் இருப்பதை பற்றியோ மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி எந்த பேச்சும் இல்லை.

எவனோ வருகிறான் என்னமோ செய்கிறான், நமக்கு பணம் வந்தால் சரி தான் என்று இருக்கும் இந்த தூங்கு மூச்சி கட்சிகள் தான் தமிழகத்தை காப்பாற்ற போகிறதா.....

அதிமுகவில் தொடங்கிய கோவில்களில் திண்ணை சோரு திட்டத்தில் இருந்து, (குடி)மக்களுக்கு முட்டையும் தண்ணீரும் இலவசம் என்று நாளுக்கு நாள் இலவசமாக அறிவிப்புகள் வந்துக்கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவணங்களில் அனைத்தும் தனியாருக்கு சொந்தம், போக்குவரத்தில் இரயில்வே நிறுவணம் தவிர மற்ற அனைத்தும் தனியாருக்கு கொடுத்தாகிவிட்டது.

நாட்டில் வரும் அத்துனை வகையான புதுவகை நுட்பங்களை அனைத்து அரசு நிறுவணமாக துவங்கி எல்லா வகையான சோதனைகளை தாண்டி பணம் கொழிக்கும் போது அதை அப்படியே தனியாருக்கு கொடுக்கும் போக்கு இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

அகில இந்திய வானொலி முதல் அலை பேசி வரை அப்படியே தனியாருக்கு விற்றாகி விட்டது. இன்னமும் கொஞ்சம் நஞ்சம் இருந்த மனித வளத்தையும் அயலக பணி நாட்டிற்கு விற்றாகி விட்டது. மொட்டை அடிக்க இனி ஒன்றும் இல்லை இந்த நிலையில் நடக்க இருக்கும் இந்த தேர்தலில் நாங்கள் வந்தால் என்று இவர்கள் சொல்லும் வசனங்களில் எந்த உயிரும் இல்லை இருந்தாலும், நான் அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்று இவர்கள் கதை கட்டுவதை பதிவர்கள் கூட கண்டிக்காமல் இருப்பது தான் வியப்பாக இருக்கிறது.............

வாழ்க மக்களாட்சி, வளர்க பாரதம்.....................

Thursday, August 12, 2010

இராவணன் - எப்படி இருந்த மணிரத்தினம் இப்படி ஆனார் பாவம்

இந்த படம் வந்ததும் ஆகா ஓகோ என்ற விமர்சனங்களுக்கு இடையே இந்த படத்தில் இப்படி சொல்லி இருக்கலாம் அப்படி சொல்லி இருக்கலாம் என்ற அறிவுரைகளுக்கு இடையேயும் நல்ல படம் அருமையாக வந்து இருக்கிறது என்ற விமர்சனங்களும் வர மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடம் இந்த படம்.

மணிரத்தினம் இப்போது எந்த படம் எடுத்தாலும் இந்தி தெலுகு மற்றும் தமிழில் வெளியாகும் விதமாகத்தான் எடுக்கிறார், ஆகவே அனைத்து தரப்பு இரசிகர்களையும் கவரும் விதமாக அந்த அந்த ஊரின் கலாச்சாரங்களையும் கொண்டவிதாமாக படம் அமைய வேண்டி இப்படி அப்படி என்ற சில சமரங்களை செய்துகொள்ளவும் செய்கிறார் என்றாலும் ஒரு அருமையான படைப்பாளியாத்தான் இந்தியா இவரை பார்த்தும் வருகிறது.

அப்படி பட்ட மணிரத்தினம் தான் பிரஞ்சு கதையான "Les Misérables (1998)" படத்தை தமிழில் இராவணன் என்று எடுத்தது மட்டும் இல்லாது இது இராவணனின் கதை இது அது என்று தனது தரப்பில் கதையை கட்டியுள்ளார்.

http://en.wikipedia.org/wiki/Les_Mis%C3%A9rables_(1998_film)

இது 1862கலில் வெளிவந்த Les Misérables நாவலின் கதை, ஆங்கிலத்தில் மட்டும் இந்த படம் குறைந்தது 5 அல்லது 6 முறை படமாக்கப்பட்ட படம். இந்த படத்தின் கருவை ஏற்கனவே ஞானஒளி என்ற படமாக தமிழில் தந்தும் இருக்கிறார்கள்.

மணிரத்தினம் அவர்களுக்கு காலத்தை வென்ற படங்களின் கதைகளை தமிழில் எடுக்கவேண்டும் என்ற தனியாத ஆசை இருக்கவேண்டும். அப்படி இருப்பதனால் தான் இதற்கு முன்னே தளபதி என்று ஒரு படம் எடுத்தார் அது வேறு ஒன்றும் இல்லை எல்லோரும் நன்றாக தெரிந்த ஆலிவர் டுவிசுடு(Oliver Twist) படம் தான்.

http://en.wikipedia.org/wiki/Oliver_Twist

கருப்பு வெள்ளையில் வந்த படத்தின் கதையையும் திரைகதையையும் அப்படியே அப்பட்டமாக தளபதி என்று படமாக எடுத்து இருப்பார். இரண்டு படத்திற்கு ஒரே ஒரு வித்தியாசம் தான், அது இளையராசாவின் அருமையான இசை தளபதியில் இருக்கும் ஆங்கிலத்தில் அந்த கால பாரம்பரிய இசை இருக்கும். மற்றபடி காட்சிக்கு காட்சி அப்படியே இருக்கும் அந்த படம்.

தளபதியில் நாயகனின் அம்மா உயிரோடு இருப்பதாக காட்டி இருப்பார், ஆனால் ஆங்கிலத்தில் அவள் பிரசவத்திலேயே அந்த அம்மா இறந்துவிடுவார். மற்றபடி கதையில் என்ற மாற்றமும் இருக்காது.

இத்த இரகசியம் வெளியே தெரியாமல் இருக்க மகாபாரத கதையை தான் தளபதி என்று எடுத்தோம் என்று துவக்கம் முதல் இதுவரையில் நமது கவனம் சிதராமல் பார்த்தும் கொண்டார் மணிரத்தினம்.

ஏதோ எப்போதோ ஒரு முறை என்று பார்த்தால் இப்போது அப்படியே Les Misérables படத்தை அப்படியே என்று அடிக்காமல் சில மாற்றங்கள் மட்டும் செய்து அதை இராவணின் கதையை தான் படமாக்கினோம் என்று சொல்லிக்கொண்டதோடு மட்டும் நில்லாத மூலக்கதையில் வரும் காவலர் தலைவன் பாத்திரத்தை கார்த்திக்கு கொடுத்து மரத்துக்கு மரம் தாவவைத்து அனுமன் என்று ஏமாற்றும் அளவிற்கு சென்று உள்ளார்.

இனி எப்படி எங்கே கதையை எடுத்து எப்படி மாற்றம் செய்துள்ளார் என்று பார்ப்போம்.

கதையின் நாயகன் ஒரு குற்றவாளி அவனை ஒரு பாதரியார் மன்னித்து அதன் மூலம் இனி பொய்க்கூட சொல்வதில்லை என்று மாற்றம் கொண்டு ஊரின் மேயராக உயருகிறார்.

தமிழில் அதை அவன் ஒரு ஏழை பங்காளன், ஏழைகளை அடித்தால் அவர்களை காக்கும் தெய்வமாக சொல்கிறார்கள், இது அந்த பாத்திரத்தின் ஒரு படி மேல் சென்று சொல்வது. இந்த பண்பிற்கும் இராவணின் பண்பிற்கும் ஒற்றுமைகள் கிடையாது.

நாயகன் இருக்கும் ஊருக்கு அந்த காவல் தலைவன் மாற்றமாகி வருகிறார், இங்கே தமிழிலும் திருநல்வேலிக்கு மாற்றமாகி வருகிறார். வந்து ஆங்கிலத்தில் காவலர் தலைவன் நாயகனிடம் சொல்லும் வசனங்களை அப்படியே காவலர் அணிவகுப்பில் சொல்வதாக தமிழில் வரும் வசனங்கள்.

ஆங்கிலத்தில் இரண்டு பெண் பாத்திரங்கள் ஒன்று தாயாக இன்னும் ஒன்று மகளாக. தமிழில் ஐசுவர்யா மற்றும் பிரியாமணி. அங்கே தாய் மகள் என்றால் இங்கே தங்கை மற்றும் அடுத்தவர் மனைவி என்று.

அங்கே காவலர் தலைவன் தாயின் கடிதத்தை காட்டி காடி நாயகன் செல்லும் திசைகளை தெரிந்து விரட்டுவான் இங்கே தமிழில் ஐசுவர்யாவின் படத்தை காட்டி நாயகன் செல்லும் திசைகளை தெரிந்து கொள்வார் கவலர் தலைவன்.

அங்கே தனது வேலைகளை முடிக்கும் மும்முரத்தத்தில் தாயை வேலையை விட்டு நீக்கு முடிவிற்கு கொஞ்சமும் சிந்திக்காமல் சம்மதிப்பான் நாயகன். இங்கே தமிழில் அந்த இடத்தில் தனது வேலைகளை முடிக்க ஐசுவர்யாவை கடத்துவான் நாயகன். இந்த இரண்டு கதைகளிலுமே அந்த செயலுக்காக நாயன் பின்னர் வருந்துவார்கள்.

அங்கே ஒரு பேராசைகாரனிடம் இருந்து தாயின் மகளை காப்பாற்றுவான் நாயகன். தமிழிலோ அதை தங்கையின் காதலனாக காட்டி அவனை கையை வெட்டி தண்டிப்பதாக காட்டி இருப்பார்கள்.

அவசரத்தில் எடுத்த முடிவுக்குகாக அந்த தாயின் குழந்தையை பொருப்பேற்பான் நாயகன் இங்கே இரண்டாம் தாரத்து மகளுக்கு திருமணம் செய்வதாக மாற்றம் செய்த்து இருப்பார்.

அந்த குழந்தையை காப்பாற்றும் போது ஒரு பெரிய மதில் சுவற்றில் ஏறி தப்பிப்பதாக ஆங்கிலத்தில் காட்டிய இடம் போல் ஒரு இடத்தில் பிரியாமணியின் திருமணம் நடக்கும் இடத்தை காட்டி படமாக்கி இருப்பார்கள்.

ஆங்கிலத்தில் பிரஞ்சு புரட்சி காலத்து கலக பின்னணியில் வரும் கதையில், ஒரு அமரர் ஊர்வலத்தில் தான் அரச படைக்கும் புரட்சி காரார்களுக்கும் நேரடி மோதல் வெடிக்கும். அது போல் தமிழில் வீராவின் தம்பியின் சாவுக்கு பிறகு தான் இவர்களும் நேரடியாக காவலர்களுடன் சண்டைக்கு செல்வார்கள்.

ஆங்கிலத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு உலகில் உல்லாசமான வாழ்க்கையை வாழ நினைக்கும் தனது வளர்ப்பு மகளின் காதலை தனது பாதுகாப்பு கருதி வேண்டாம் என தடுக்கும் நாயகனிடம் மிகவும் கடினமான வார்த்தைகளால் தொலைத்து எடுக்கும் மகளிடம் உண்மையை கூறும் தந்தையை புரிந்து கொண்டு காதல் இல்லை என்றாலும் தந்தைக்காக இனி தந்தையிடம் வாழ வேண்டும் என்று முடிவு எடுப்பாள் அந்த மகள். அதை தான் தமிழில் ஐசுவர்யா கடவுளிடம் பிரியாமணிக்கு நடந்த கொடுமைகளை கேட்டவுடன் அவர்களிடம் எனக்கு இரக்கம் வரமாமல் இருக்க தைரியம் கொடு என்று கேட்க்கும் வசனக்கள்.

வீரா ஐசுவர்யாவிடம் இங்கேயே இருப்பீங்களா என்று ஆபாசமாக கேட்க்கும் வசனங்கள் ஆங்கிலத்தில் தாய் நோய்வாய்பட்டு மறையும் தருணங்களில் நாயகன் கருணையாக பேசும் வசனங்கள் இங்கே சுகாசனி ஆபாசமாக மாற்றிக்கொடுத்துள்ளார். வரிக்கு வரி அந்த வசனங்கள் வருவதை கவனிக்கலாம்.

உச்சகட்ட காட்சியில் காவலர் தலைவன் ஐசுவர்யாவை பார்த்து அவளையும் அவளது நடத்தையை பற்றி சொல்லும் வசனங்கள் ஆங்கிலத்தில் மகளிடம் அவளது தாய் ஒரு விபச்சாரி என்று சொல்லும் வசனங்கள். அவைகளை ஐசுவர்யா வீராவிடம் கேட்க்கும் போது அவன் தரும் பதில்கள் மறனபடுக்கையில் தாயிடம் நாயகன் பேசும் கருணைமிக்க வசனங்கள். நெஞ்சை அள்ளும் விதமாக் அவைகள் ஆங்கிலத்தில் வந்திருப்பது போல் தமிழிலும் வந்து இருக்கும் ஒரே இடம் இது மட்டும் தான்.

பிரியாமணியை காவலர்கல் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதும் அதிலே வரும் வசனங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தாய் தனது வேலை பறிக்கப்பட்ட பிறகு தனது பழைய தொழிலான விபச்சாரத்திற்கு திரும்பிய போது தலைமை காவலனால் விபச்சாரிகள் எல்லாம் மனிதர்களே இல்லை என்று அவளை நடத்தும் நடவடிக்கைகளில் வரும் வசங்கள். அந்த நிகழ்விற்கு பிறகு தாய் இறந்து போவாள் பிரியாமணியும் அதற்கு பிறகு தற்கொலை செய்த்துகொள்வாள்.

ஆங்கிலத்தில் இவ்வளவு கொடுமைகளையும் செய்த்த காவலனை கொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தும் அவனை தப்பிக்க விடுவான் நாயகன், அதை தான் தூத்துகுடி என்று ஒரு காவலனை சிறைபிடித்து அம்மணமாக அனுப்பும் காட்சியாக தமிழில் தந்துள்ளார்கள்.

இவைகள் போக silence of the Lamb என்ற படத்தில் வருவது போல் ஒரு கிணற்றில் ஐசுவரியாவை சிறையில் வைப்பதும், எங்கே அங்கேயும் ஒரு நாய்குட்டியை ஐசுவர்யா கொன்று கதையி திருப்பம் வருமோ என்று நினைக்கையில் நாங்கள் இன்னமும் அந்த அளவிற்கு எல்லாம் கீழே இறங்கவில்லை என்று சொல்கிறார்கள் தமிழில்.

உச்ச கட்டத்தில் குங்கு பூ பான்டாவில் (kung fu ponda) வரும் அந்த பாலம் சண்டை காட்சியினை அப்படியே அசைவுக்கு அசைவு படமாக்கி இருக்கிறார்கள் தமிழில். இந்த காட்சிகள் அனைத்தும் கணினியின் துணையுடன் அரங்கில் உருவாக்கப்பட்ட காட்சிகள். என்ன தான் வண்ணம் பூசினாலும் அந்த கலவைகளின் நடுவில் அந்த பச்சை வண்ணம் நன்றாக தெரிகின்றது.

ஐசுவர்யா அருவிபில் குதிக்கும் காட்சிகள், மற்றும் அருவியில் அருகில் மலைகளில் ஏறிவரும் காட்கள் மற்றும் வீராவின் தம்பி அருவியில் விழும் காட்சிகளும் இது நுட்பத்தில் கணினியில் படத்துடம் பூசப்பட்ட சோடிப்பு காட்சிகள்.

அருவியில் ஐசுவர்யா விழும் காட்சிகளில் அவரது உடைகளோ அல்லது தலைமுடியோ மெல்ல தென்றலில் ஆடும் விதமாக் இருக்கும். அவ்வளவு ஆழத்தில் விழுவோரின் முடி எப்படி காற்றில் ஆடும் என்று கூடவா தமிழ் மக்களுக்கு தெரியாது என்று காதில் காளி பூவை பக்கத்திற்கு ஒன்றாக சுற்றியிள்ளார் மணியும் அவரது புகைபட நிபுணர்களும்.

உமா துருமேனின் சோகங்களை காட்டவும் அவரது ஆடை அமைப்பை அப்படியே காட்டவேண்டும் என்ற நோக்கில் ஐசுவர்யாவிற்கு தலைவிரி கோலமாக படம் முழுவதும், அகண்ட மார்புகளை காட்டும் விதமாக உடைகளையும் தேவையே இல்லாமம் கொடுத்து இரசித்து இருகிறார் மணி. இடையில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைவாரிக்கட்டி சரியான அளவிற்கு ஐசுவர்யாவிற்கு ஆடைகளை கொடுத்து இருப்பர் மணி.

ஆங்கிலப்படைப்புகளை தமிழி தருவது ஒரு நல்ல நடவடிக்கை தான். அதற்காக அதை இராமாயணம் மகா பாரதம் என்று எல்லாம் பூசி மொழுகி கொடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் ஒன்றும் இல்லை. இந்த கதையை தமிழில் தமிழுக்கு தகுந்தார் போல் எடுக்கின்றோம் என்று கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்று கொடுததை போல் தந்து விட்டு போவது தானே அதை விடுத்து இந்த திருட்டாடம் எல்லாம் தேவை தானா என்றதே கேள்விகள்.

11 ஆண்டுகளுக்கு முன்பு மணி உயிரே என்று ஒரு படம் எடுத்தார் அதிலே மனிசாவை அவளது வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்ததும் அவளது சகோதரர்கள் சாருக்கானை அடித்து துவைத்து எடுப்பார்கள். முகம் எல்லாம் இரத்தம் வடியும் அந்த நிலையில் சாருக்கான் அது தானே பார்த்தேன் எங்கே மணமான பெண்ணை பார்த்தா எனக்கு காதல் வந்தது என்று சொன்னே என்று சிரித்துக்கொண்டே அந்த அடிகளை வாங்க்கிக்கொள்வதாக கதையும் வசனமும் எழுதிய இந்தே மணிரத்தினம் தாம் இன்றைக்கு தனது கதை திரைகதை திருட்டை மறைக்க இப்படி ஒரு பண்பாட்டு சிதைவு வசங்களை எழுதும் நிலைக்கு தன்னை ஆளாக்கி கொண்டார் பாவம்.

எப்படி இருந்த மணிரத்தினம் இப்படி ஆனார் பாவம்................இது எல்லாம் உங்களுக்கு தேவையா அப்படி என்ன சாத்தீர்கள் இந்த செயலினால். பிரபு எதற்கு அந்த கதையில் வருகிறார் என்று இன்றைக்கும் மக்கள் குழம்பிக்கொண்டு தான் கேட்கிறார்கள், பிரஞ்சு புரட்சியில் அந்த இளம் நாயகனுக்கு துணையாக ஒரு அனுபவம் மிக்க கருப்பர் உடன் இருப்பார். அவர் அந்த இளம் நாயகனுக்கு வழங்கும் அறிவுரைகளை சொல்லும் பாத்திரம் தான் இது என்று அவர்களுக்கு சொல்லுங்கள் மணிரத்தினம், பாவம் மக்கள்........

இவ்வளவு இடர்களுக்கும் இடையில் தான் இருப்பதே தெரியாத அளவிற்கு இசையில் அப்படி ஒரு ஆளுமை இரகுமானிம் வழக்கம் போல் இல்லாமல் மிகவும் இயல்பான இசையில் அசத்தி இருக்கிறார் வாழ்த்துக்கள் இரகுமான்.

Friday, August 6, 2010

கொடுமையான முதலாளிகளின் உலகம் - இவ்வளவு மோசமாக

உலகில் எந்த நாடாக இருந்தாலும் அதில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று உழைப்பை உருவாக்கும் பிரிவு மற்றொன்று உழைப்பை கொடுக்கும் பிரிவு. இந்த இரண்டும் சேர்ந்தது தான் நாடாக இருக்கும்.

இந்த வகையில் தடையில்லாத வேலைகளை உருவாக்கிக்கொண்டே இருப்பது முதலாளிகளாகவும், தடையில்லா உழைப்பினை வழங்குவது உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

உழைப்பிற்கு ஏற்ற ஊழியம் உழைப்பாளியின் மகிழ்ச்சி, முதலுக்கு ஏற்ற இலாபம் முதலாளியின் மகிழ்ச்சி. இதில் எந்த இடத்தில் குறைவு வந்தாலும் மன உளைச்சளில் தான் முடியும்.

இலாபம் குறையும் போதெல்லாம் உழைப்பளிகளின் மேல் எரிந்து விழுவதை முதலாளிகளும், இலாபம் வந்தும் இலாப பங்கோ அல்லது சம்பள உயர்வோ தரமால் இருக்கும் நிலை வந்தால் உழைப்பாளிகள் முதலாளிகளின் மேல் வம்புக்கு பாய்வதும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இத்தனை ஆண்டு காலம் இப்படி தான் இருந்து வந்த இந்த உலகம் மெல்ல மெல்ல வென்னிசு நகர வியாபார தளமாக மாற்றம் கொண்டு வருகிறது சமீபமாக.

முதலாளிகள் இப்போது ஒரு கோட்பாடை கடைபிடிக்க வேண்டும் என்று அறியுறுத்த பட்டதாகவும். அப்படி இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவணங்களிலும் கடைபிடித்ததில் அதிக இலாபகரமாக தொழில்கள் நடப்பதாகவும் இப்போது அமெரிக்க முதலாளிகள் கதைகட்ட துவங்கியிள்ளார்கள்.

இடொயோடோ(TOYOTA) நிறுவணம் அனைவருக்கும் தெரிந்த சப்பானிய நிறுவணம். அவர்கள் தான் முதலில் இந்த சிக்கன கோட்பாடை கடைபிடிக்க துவங்கி உலகில் தன்னிறில்லா இலாபம் ஈட்டியதாக சொன்னார்கள் சென்ற ஆண்டு வரை.

அப்படி என்ன கோட்பாடுகளை அவர்கள் கடைபிடிக்கிறார்கள் என்று பார்ப்போம். அந்த கோட்பாடின் பெயர் இலீன்(LEAN).

அந்த கோட்பாட்டின் படி வேலைபார்க்கும் வேலையாட்கள் கொஞ்சம் நேரம் கூட வேலையில்லாமல் வேறு எதுவும் பார்க்கவிடாமல் வேலையில் மூழ்க வைக்கு ஒரு திட்டம்.

கிட்ட தட்ட மார்டன் இடைம்சு(Morden Times) என்று சார்லி சாப்லின் எடுத்த படத்தில் அவர் வேலை செய்யும் தொழிழகத்தில் அவர் படும் பாட்டை காட்டுவார்களே அது மாதிரி.

மேலோட்டமாக பார்த்தால் சும்மா இருக்கிற சமயத்தில் வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சனை இல்லாமல் உழைப்பதில் அப்படி என்ன சிரமம் என்று தான் கேட்டக தோன்றும்.

இங்கே தான் முதலாளிகளின் புத்திசாலித்தனம் ஒளிந்துக்கொண்டு இருக்கிறது.

முதலில் தகவல் தொடர்பு(IT) நிறுவணங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு விளக்கினால் நன்றாக புரியும் என்று நினைக்கின்றேன்.

ஒரு சேவையாற்றும் நிறுவணம் தான் பிரதினித்துவம் வகிக்கும் நிறுவணத்தின் வேலைகளை எல்லாம் முடிப்பதற்கு எத்தனை வேலையாட்கள் தேவைபடும் என்று கணக்கிட்டு அத்துனை ஆட்களுக்கு உண்டான பணத்தை இத்தனை தவனையில் தருவதாக ஒப்பந்தம் எழுதுவார்கள்.

அந்த திட்டத்தில் சொன்னது போல் அந்த அளவிற்கு ஆட்களை வேலையில் அமர்த்தி மின்னஞ்சல் முதல் அலைபேசிவரையில் கணக்கில் எழுதப்படும். இந்த அத்தனை இத்தியாதிக்கும் பணம் பற்றாகுறைக்கு அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய வரியிலும் செலவுக்கான கணக்காக காட்டவும்படும்.

இந்த சேவை நிறுவணங்கள் ஒப்புக்கொண்டதை போல் அமெரிக்க நிறுவணங்கள் 2 வருடங்கள் ஆகக்கூடிய வேலைகளை 6 மாத காலங்களிலே அருமையாக செய்துகொடுப்பதாக கதைகளை சொல்லி ஒப்பந்தகளை பெறுவார்கள்.

இதே வேளையில் மற்றும் ஒரு 5 அல்லது 6 நிறுவணங்களிடமும் இதே கால கட்டத்தில் அவர்களும் சேவைகளை செய்வதாக சொல்லி இதே போல் பணத்திற்கான ஒப்பந்தங்களை எழுதி வாங்கிக்கொள்வார்கள்.

இப்போது ஒரு முதலில் வந்த பணத்தைவிட அவர்களுக்கு 5 அல்லது 6 மடங்கு பணம் வருவதற்கான வழிகளை அவர்கள் செயல்படுத்தியாகிவிட்டது.

ஆனால் அந்த 5 அல்லது 6 மடங்கு வேலைகளை செய்ய ஆட்களை இவர்கள் நியமிப்பது இல்லை. பதிலாக வேலையாட்களின் வேலைகளுக்கு இடையே இருக்கும் சிறு சிறு நேரங்களை கூட வீண் ஆக்காமல் மற்ற நிறுவணங்களை வேலைகளை செய்யுமாறு வற்புறுத்துவார்கள்.

இதற்கு எப்படி இவ்வளவு வேலைகளை செய்ய முடியும் என்று கேட்டால், அந்த வேலைகளில் உள்ள இடைவெளியில் சும்மாத்தானே இருக்கிறாய் என்று சொல்ல எல்லா வகையான அறிக்கைகளை தயாரிக்கவும் வெளியிடவும் இந்த ஆலோசனை நிறுவணங்கள் கருவிகளையும் யுக்திகளையும் வழங்கிவருகிறது.

இந்த கணக்கு எப்படி என்றால், ஒரு கட்டு நாத்து நடுவதற்கு 10 நிமிடங்கள் என்றால், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை என்றால் 48 கட்டுக்கள் நட்டு இருக்க வேண்டுமே எப்படி 30 கட்டுக்கள் என்று கேட்க்கும் கேள்வியை போன்று.

இதை சொல்லும் ஆலோசனை நிறுவணங்களுக்கு நாத்து நடுவதில் அனுபவமோ அல்லது திறமையோ இல்லாமல் இருந்தாலும், (8*60)/10 என்ற கணக்கு மட்டுமே போட தெரிந்தால் போதும் என்று நினைப்பவர்களால் எழுதும் தீர்மானங்களில் என்ன ஞாயத்தை எதிர்பார்க்க முடியும்.

இன்னமும் அப்பட்டமாக சொல்வதென்றால், எதிராளி படையில் இருப்பவர் 1000 பேர் என்றால் நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் ஒரு அடியில் 100 பேரை தாக்கும் வல்லமை உண்டு என்றால் 1000 பேருக்கு எதிராக 10 பேர் போதுமே என்று சொல்லும் கணக்குகள் இவை.

இந்த 10 பேரில் ஒரு வரை கொன்றால் கூட 100 பேர் முன்னேறி மற்ற 9 பேரை கொல்வது மிக மிக எளிமை என்று படிக்காதவருக்கு கூட தெரியும் உண்மை. இந்த படித்த முதலாளிகளுக்கு புரியாமல் போனதன் மர்மம் என்ன.

740 மில்லியன் இடாலர்கள் இலாபம் சம்பாதித்த நிறுவணங்கள் தங்களின் இலாபம் 740*6 ஆக உயர வேண்டும் என்ற வேகம் இல்லை வெறி பிடித்து அலைகிறது.

இந்த வெறி என்னமோ ஒரு சில நிறுவணங்கள் என்று இல்லை அமெரிக்காவில் இருக்கும் அத்தனை சேவை நிறுவணங்களும் வந்துள்ளது தான் கொடுமை.

இந்த வெறிக்கு துணை போகக்கூடாது என்று உழைக்கும் கூட்டம் நினைத்தாலும் தேசிமக்களது ஆசிர்வதத்துடம் அப்பட்டமாக இன்றைக்கு அமோகமாக நிறைவேறிக்கொண்டு வருகிறது.

தொழிலாளர் சங்கங்கள் எப்போது எல்லாம் பலவீனம் அடைகிறதோ அப்போது எல்லாம் இப்படி பட்ட பகல் கொள்ளைகள் நடப்பது சாத்தியம்.

வேலையே இல்லை என்று இருக்கும் இந்த சூழலில் என்ன வேலை கிடத்தாலும் பரவாயில்லை சம்பளம் கிடைத்தால் போது என்று இருக்கும் மக்களின் உழைப்பை வேட்டையாக கிளம்பிவிட்டது இந்த முதளாலிகளின் உலகம்.

இந்த கொடுமைகள் இந்தியாவில் அரகேறிய பிறகே அமெரிக்காவில் அரங்கேறுகிறது என்றது தான் கொடுமையிலும் கொடுமை.......

Wednesday, June 30, 2010

தினமணியின் தெரிந்தா தெரியாமலா கட்டுரை சொல்வது என்ன?

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=263921&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3cfont+color%3d%22red%22%3e%u0ba4%u0bb2%u0bc8%u0baf%u0b99%u0bcd%u0b95%u0bae%u0bcd%3a%3c%2ffont%3e+%u0ba4%u0bc6%u0bb0%u0bbf%u0ba8%u0bcd%u0ba4%u0bbe...+%u0ba4%u0bc6%u0bb0%u0bbf%u0baf%u0bbe%u0bae%u0bb2%u0bbe...%3f

நடு தர மக்களின் மீது சுமையும் முதளாலிகளின் வீட்டில் பணத்தையும் ஏற்றுவது சரியா என்று அழகாக கேட்டுள்ளார்.

உண்மை தான், இந்த பணக்கார மக்களின் வியாபார தந்திரங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று பார்ப்போம்

தமிழக அரசு தனது வரவு செலவு திட்டத்தில் அரசு பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்த நாளில் இருந்து தக்காளியில் இருந்து கருவேப்பில்லை வரையிலான விலைகள் கிடு கிடுவென உயரும்.

அன்றைய தினத்தில் இருந்து மக்கள் அதிக பணம் கொடுத்து தான் காய்கறிகளை வாங்க வேண்டும். சம்பளத்தில் என்ன வித்தியாசம் வருகிறதோ அவ்வளையும் இந்த பொருட்களின் விலை ஏற்றத்தை சரி செய்யவே சரியாக போகும்.

பொருட்களை விளைவித்தவன் அதே விலைக்கு தான் விற்பான் அல்லது அவனது பொருட்கள் சந்தைக்கு போகாமல் மாட்டுக்கு தீனியாக போவதை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

அப்படி இருக்க இந்த விலை ஏற்றங்களில் விளையாடுபவர்கள் யார் என்று பார்த்தால், இந்த தரகு வியாபாரிகள் தான் இந்த விளையாட்டை அழகாக விளையாடுவார்கள்.

இந்த விலையேற்றம் இவர்களோடு நிற்கிறதா இல்லை, உணவகம் முதல் தொடங்கி கடைசியில் பயண சீட்டு வரையில் வந்து நிற்கும்.

பணம் படைத்தவர்களுக்கு 5 உரூபாய்களுக்கு வாங்குவதும் ஒன்று தான் 50 உரூபாய்களுக்கு வாங்குவதும் ஒன்று தான். ஆனால் நடுத்தர வர்கத்திற்கோ இது 10 மடங்கு. ஏழை மக்களுக்கோ இது எட்டாத கனியாக என்றும் இருப்பதான் அவர்கள் இதை பற்றி எல்லாம் கவலை கொள்வது இல்லை.

அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்துவதற்கு காரணம் விலை வாசி ஏற்றம் என்று முதல்வர் சட்ட சபையில் கூறுவார். ஆனால் அவர் சொல்லாமல் சொல்வது முதளாலிகன் இலாபம் உயர்த்தவே தான் இந்த ஏற்றம் என்று.

50 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் இந்த 5 ஆண்டுகளில் ஒரு மிக பெரிய பொருளாதார முன்னேற்றம் வந்தது. எங்கே நடுதர மக்கள் எல்லாம் முன்னேறி விடுவார்களோ என்று பழையபடி வீட்டு, வண்டிகள், பெட்ரோல் என்று எல்லா விதமான பொருட்கள் முதல் அனைத்து வாங்குபவைகளையும் சகட்டு மேனிக்கு விலையை ஏற்றி இலட்ச உரூபாய் சம்பளம் வாங்கினால் கூட சென்னையில் வீடு வாங்க முடியாத அளவிற்கு எல்லா பொருட்களும் விலையேறியதே யாரல் என்று நமக்கு தெரியுமா. அல்லது ஏன் ஏறியது என்று காரணம் தான் தெரியுமா........

இந்த வீட்டு மனைகளின் விலை ஏற்றம் யாருக்கு பலனை கொடுத்தது, வீட்டு வாடகையின் விலையேற்றமும் யாருக்கு பயனை கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும்.

சென்னை அருகில் உள்ள வீட்டு மனைகளை விலைக்கு விற்கும் போது வடக்கே உள்ள பணம் படைத்த முதலைகள் கொத்து கொத்தாக மனைகளை வாங்கி குவித்துவிட்டார்கள். பிறகு கேட்ப்பவர்களுக்கு ஒன்று இரண்டு என்று ஒன்றுக்கு பத்துவிலைகளில் விற்று வருகிறார்கள்.

மொத்தமாக வாங்கிய அந்த வடக்த்தியற்களுக்கு இருந்த ஒரே பலம் அவர்களிடம் அபரிவிதமாக பணம் இருந்தமை தான் அன்றி வேறு எதுவும் இல்லை.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து வீட்டு மனைகளின் பத்திரங்களில் இந்த முதலாளிகளின் பெயர்கள் இல்லாமல் இருப்பது அரிதாகாவே இருக்கும்.

இப்படி ஒன்றுக்கு பத்தாக விலையேற்றுவதால் அவர்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.

இந்தியாவை பொருத்த அளவில் இன்னமும் சாதியும் பாகுபாடுகளும் இருப்பதற்கு காரணம் இந்த பொருளாதார ஏற்ற தாழ்வுகள் தான் முக்கிய காரணம்.

இப்படி இருக்கும் ஏற்ற தாழ்வுகளால் அடி தட்டில் இருக்கும் மனிதற்களுக்கு அன்றாடம் வயிரை கழுவுவதே அரிதாக இருக்கும் பொருளாதாரத்தில் அவர்கள் எல்லாம் எங்கே குழந்தைகளை படிக்கவோ அல்லது நல்ல ஒரு தொழிற்கல்விக்கோ அனுப்ப முடியும். மாறாக கிடைகின்ற தினகூலியில் இன்னமும் ஒரு 50 உரூபாய்க்கள் கிடைக்கும் என்றால் அந்த வேலைக்கு பிள்ளைகளை அனுப்பும் நிலையில் தான் அடி தட்டு மக்கள் இருக்கிறார்கள்.

ஆனால் நடு தட்டு மக்களோ போன தலைமுறையினரது புண்ணியத்தால் தலை எடுத்த அளவில் தங்களது தலை முறையை அடுத்த நிலையின் நுனிக்காவது அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கும் ஒரு இனமாக இருக்கிறார்கள்.

இன்னமும் வெளிப்படையாக சொன்னால் பணக்காரர்களின் அளவுகோள்களில் ஒன்றான சொந்த வீடு என்ற அடிப்படையை காரணங்களில் துவக்கம் கொடுத்தால் அடுத்த அடுத்த தலைமுறையில் இவர்கள் எல்லாம் நல்ல முறையில் வந்துவிடமாட்டார்களா என்ற ஏக்கத்தில் தங்களது நலங்களையும் தொலைத்து தனது மக்களை முன்னேற்றுவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

எங்கே தங்கள் உயர் குடி தட்டினை எட்டி பிடித்து நாங்களும் உயர்குடியாக ஆகிவிட்டோம் என்று மார் தட்டுவார்களோ என்ற வயிற்றெரிச்சலில் அவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளி இடுவதே தொழிலாக இந்த பணம் படைத்தவர்கள் அலைவதும், தொழில் நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது இந்தியாவில்.

அமெரிக்கா போன்ற முன்னேற்றம் கண்ட நாடுகளில் 5 மாத சம்பள விகிதத்தில் மகிழ் உந்து என்று இருந்த கணக்கு போக இந்தியாவில் வாழ்க்கை இலட்சியமே ஒரு வண்டி வாங்குவது தான் என்று இருந்த நிலை போய். இந்தியாவிலும் 5 மாத சம்பளத்தில் ஒரு வண்டியை வாங்கிவிடலாம் என்ற நிலை வர. அப்படியே விட்டால் வீடு பங்களா என்று வருவீர்கள் போலும் என்று இப்படி செயற்கையாக விலையை எல்லாம் ஏற்றி மறுபடியும் நடு தட்டு மக்களை குடிசை வாசிகளாகவே( நகர்புர) வைக்கவேண்டும் என்று அவர்களுக்கு வேண்டுதல் போலும்.....................

நல்ல இருங்கையா நல்ல இருங்க உங்க புள்ளை குட்டிகள் மட்டும் நல்லா இருக்கட்டும். அடுத்தவர்கள் எப்படி போனால் உங்களுக்கு என்ன......................

Friday, June 18, 2010

தினமலர் அது என்ன பிளாட்பாரவாசிகள் விளக்குவீர்களா



வெளி நாட்டுமக்கள் இந்தியாவிற்கு வந்து எத்தனையோ நல்ல நல்ல வேலைகள் எல்லாம் செய்கிறார்கள். உதாரணத்திற்கு சேவை நிறுவணங்கள் தொட்டு ஆராய்ச்சி நிறுவணங்கள் வரை பணியாற்றுகிறார்கள்.

மதவாத பொய்களை எல்லாம் உண்மைகள் என்று நம்பியவர்களும் கூட கூட்டம் கூட்டமாக வந்து இங்கேயே தங்கி இந்தியர்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றி வாழும் இந்த காலத்தில்.

தினமலர் இப்படி ஒரு செய்த்தி வெளியிடுகிறது, ஏன் இந்தியாவிற்கு வரும் வெளி நாட்டு ஆண்கள் எல்லாம் மிகவும் ஒழுக்கமாகவும் பொறுப்பாகவும் இருக்கிறார்கள் போலும், பெண்கள் மட்டும் தான் இப்படி ஆகிவிட்டார்கள் போலும்.

வெளி நாடுகளுக்கு வந்து வாழ்ந்து பாருங்கள் தினமலர் மக்களே அப்போது தெரியும் எவ்வளவு அழகான வாழ்க்கையை இங்கே மக்கள் பொறுப்புடன் வாழ்கிறார்கள் என்று தெரியும்.

வெளி நாடுகளில் கழிப்பறைகளில் கூட இப்படி ஒரு வீச்சம் அடிக்காது அப்படி ஒரு வீச்சம் ஊர் முழுவதும் அடிக்கிறது அதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் இந்த பெண்கள் புகை பிடிப்பதையும் அதுவும் தெருவோரம் உட்கார்ந்து இருப்பதை பிளாட்பாரவாசி என்று விமர்சிக்க உங்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது.

பிளாட்பாரத்தில் மக்களை வசிக்கும் படி வைத்திருக்கும் நிலைக்கு இந்தியாவே தலைகுணிய வேண்டும். அதைவிடுத்து, வெளி நாடுகளிலும் இப்படி தான் இருப்பார்கள் என்று எழுதும் இந்த செய்த்திதாள் தான் உலக தரமாம்.

சொல்புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை............

தனது முதுகை முதலில் பார்க்கவும், அடுத்தவர்களை பிறகு பார்க்கலாம்.

Tuesday, May 18, 2010

New in Town - அமெரிக்காவில் தற்பொழுது வேலைவாய்ப்பு நிலையை சொல்லும் படம்

அதிக செலவு இல்லாமல், பெரிய பெரிய சாகசங்கள் எல்லாம் இல்லாமல் நாவல் படிப்பது போல் ஒரு கதை. அதை அருமையாக மனித நேயத்தோடும் வேலைகள் வெறும் வேலைகள் இல்லை அவைகள் சமூகத்தின் வாழ்க்கை என்று மீண்டும் ஒரு முறை சுய நல முதலாளிகளின் முகத்தில் அறைந்தார்போல் சொல்லும் படம்.

மையாமியில் இருக்கும் பெருநிறுவனத்தில் மின்னசோட்ட மாகானத்தில் இருக்கும் ஒரு சிறிய உணவு தயாரிக்குக் ஆலையை கவனிக்க நாயகியை அனுப்புகிறது நிர்வாகம்.

என்ன என்ன எல்லாம் செய்யமுடியுமோ அவைகளை எல்லம் செய்து அதிக இலாபம் ஈட்டி காட்டவேண்டும் என்ற கட்டளைகளோடு வருகிறாள் அந்த நாயகி.

அந்த ஆலை இருப்பதோ ஒரு சின்னஞ்சிறிய கிராமம், அந்த கிராமத்தில் இந்த ஆலையை தவிர சொல்லிக்கொள்ளும் படி வேறு எதுவும் கிடையாது. நீண்ட நாட்களாக அந்த ஊரில் இருக்கும் அந்த ஆலையை நம்பி பல குடும்பங்கள் வாழ்கிறது.

வந்த நாளில் இருந்து இவளுக்கு அங்கே எதிர்பு கிளம்புகிறது. வருகின்ற ஒவ்வொரு எதிர்புகளையும் தனது தனிப்பட்ட நடவடிக்கைகளில் சமாளிக்கிறாள். இவளால் இந்த ஆலை இழுத்து மூடப்படுவடு உறுதி என்ரு தெரிந்தும் அவளுடன் நல்ல உறவையே அனைவரும் கொள்கிறார்கள்.

முதல்கட்டமாக ஒரு இயந்திரத்தை நிறுவி கொஞ்ச ஆட்களை வேலையில் இருந்து தூக்கலாம் என்று நிர்வாகம் நினைக்கும் போது இவளாகவே அந்த நடவடிக்கைகளை தள்ளி போடுகிறாள். பின்னாளில் அந்த ஆலையை உடனடியாக மூடிவிடுவது என்று நிர்வாகம் தீர்மாணிக்க, அந்த நடவடிக்கைகளை நிறுத்தும் எண்ணத்துடன் மையாமி பறக்கிறாள்.

அங்கே நிர்வாகத்துடன் இவள் சண்டைக்கு நிற்கும்போது தலைமை செயலாக அதிகாரியாக உணக்கு இதில் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி அவளது வாயை அடைக்கிறார்கள். பிறகு மனதில் வரும் வேதணைகளை முழுங்கியவண்ணம் ஊர் திரும்பும் தருவாயில் அவளது செயலர் பெண்மணி, இவள் இல்லாத நேரத்தில் யாரை எல்லாம் வேலை நீக்கம் செய்ய போகிறார்கள் என்று பார்த்து அதிர்ந்து போய் இவளது வருகைக்கு காத்து இருந்து மனமார திட்டிவிட்டு போகிறாள்.

அப்போது கேட்ப்பாளே ஒரு கேள்வி, இந்த பயங்கர நடவடிக்கைகளை கையில் வைத்துக்கொண்டு உன்னால் எப்படி இவ்வளவுகாலம் பேசி சிறித்து பழகமுடிகிறது. உன்ன்னை எல்லாம் என்ன என்று சொல்ல்வது என்று சொல்லிவிட்டு இவளுக்காக இவள்விரும்பி சாப்பிடுவாளே என்று அவளுக்காக தாயாரித்த ஒரு தயிர் உணவை கொடுத்துவிட்டு போவாள்.

இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்று யோசனையில் இருக்கும் அவளுக்கு நட்டத்தை காரணம் காட்டும் இந்த ஆலைக்கு தான் உண்ணும் இந்த தயிர் உணவை தயாரித்து மக்களிடம் பிரபலபடுத்திவிட்டால் அதால் வரும் இலாபத்தை காட்டி இந்த ஆலையை மூடுவதில் இருந்து தடுக்கலாம் என்று அனைவரையும் அழைத்து பேச. முதலில் பட்டும் படாமலும் பேசும் தொழிலாளர்கள், கடைசியில் நமது வேலை போகாமல் இருக்க இவள் இவ்வளவு செய்கிறாள் நாம் என்ன செய்தோம் என்று ஈடுபட, ஆலையும் காப்பாற்றபடுகிறது அவர்களும் காப்பாற்ற படுகிறார்கள் என்று கதை பயணிக்கும்.

நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் வரும் பிணக்குகளை அழகாக காட்டியதுடன் நில்லாது, நல்ல நிர்வாகம் வேலைகளை வேலைகளாக மட்டும் பார்க்காமல் வேலையாட்களின் வாழ்க்கையாக பார்க்கவேண்டும் என்று அருமையாக சொல்லும் படம். என்ன சொல்லி என்ன அமெரிக்க முதலாளிகளுக்கு இப்போது காசு பைதியம் தலைக்கு ஏறிய போதையாக இருக்கிறது. பார்ப்போம் எப்படி எல்லாம் இன்னமும் சுரண்டுகிறார்கள் என்று......

மின்சார கனவு படம் 11 வருடம் கழித்து ஆங்கிலத்தில் My Best friend's Girl ஆக வந்துள்ளது

மின்சார கனவு, அனேகமாக அனைவரும் இந்த படத்தை பார்த்து இருப்பார்கள். பாடல்கள் காட்சி அமைப்புகள் என்று ஏராளமான தொழில் நுட்ப கூட்டணியில் உருவான படம் இது. 2009ல் வெளிவந்த ஆங்கிலபடம் My Best Friend's Girl இது போலவே அப்படியே அச்சு அசலாக வந்துள்ளது.

காதல் கத்திரிக்காய் கொத்தமல்லி என்று சுற்றாதவள் நாயகி. நாயகனோ ஒரு பெண்ணை பார்த்தால் பார்த்த பார்வையிலேயே இரவு கேளிக்கைகளுக்கு அழைக்கும் அளவிற்கு கவரகூடிய திறமை பெற்றவன்.

இந்த தகுதிகளுடன் இருக்கும் நாயகனுக்கு சாப்பாடிற்கு சம்பாதிக்க ஒரு தொழில் இருந்தாலும், தனது முழு திறமைகளையும் காட்டும் விதாமாக இளம் பெண்கள் ஆண்களிடம் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகிய பிறகும் காதலிக் மறுக்கும் பெண்களை 10 இரவுக்குள் அவளது ஆண்களிடம் நீதாண்டா மனிதன் இவன் எல்லாம் மனிதனா என்று சொல்லி சொன்ன கையோடு திருமணத்திற்கும் ஏற்பாடாகும்.

இத்த தொழிலில் காதலர்கள் இவனை வேலைக்கு அமர்த்தி அவரவர் காதலிகளின் மனதில் காதல் வரும் படி செய்ய பணிப்பார்கள். அப்படி வரும் அனைவரது காதலையும் உத்திரவாதத்துடன் முடித்துகொடும் இவனுக்கு ஒரு உற்ற நண்பன் வீட்டில் ஒன்றாத தங்கி இருப்பான்.

இவனுக்கு காதல் கத்திரிக்காய் கொத்தமல்லி என்று இருப்பவள்மேல் கொள்ளை ஆசை ஆனால் அவளோ இவனோடு சுற்றுவதும் எங்கே சென்றாலும் தனக்கு பாதுகாப்பாகவும் செலவு செய்பவனாகவும் அவனை பயன்படுத்திக்கொண்டு அலைகழிப்பாள்.

இவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் இடையில் ஒரு தெரு அளவிற்கு இடைவெளியில் மாடியில் அலுவக அறை வைத்திருப்பார்கள்.

பொருத்து பொருத்து பார்த்து, கடைசியில் அந்த பொறுக்கி நாயகனிடம் போய் என்னுடைய ஆளுக்கு என்மேல் காதல் வரும்படி செய் என்று பணிப்பான். இவனும் தனது வேலைகளை துவங்குவான். இப்படி மெல்ல துவங்கும் இவனது செயல்களில் 4 இரவுகளில் இவன் அந்த பெண்ணின் காதலில் விழுவான்.

10 நாட்களில் சுத்தமாக வேலையை முடிப்பவனாச்சே நீ இப்ப மட்டும் என்ன இவ்வளவு நாள் ஆகியும் ஒன்னும் ஆகல என்று நண்பனுக்கு ஒரே தவிப்பு. அப்படி இப்படி என்று நண்பனுக்கு தெரியவர இருவரும் காய்விட்டுக்கொண்டு வெளியேறி விடுகிறார்கள்.

நண்பனின் காதலியை அபகரித்துவிட்டோமே என்று அவளை துறக்கும் முடிவுக்கு வருகிறான் அந்த பொறுக்கி நாயகன். அப்படி பிரியும் போது அந்த கூட்டத்திலேயே யார் யார் எல்லாம் தன்னிடம் பணம் கொடுத்து காதலிகளை அனுப்பினார்கள் என்று பட்டியலிட்டு காட்டி நாயகியை
பிரிகிறான்.

பிறகு நடந்தவைகளை கேள்விபட்ட நண்பன் இந்த பொறுக்கி நண்பரின் காதலுக்கு பச்சைகொடி காட்டுகிறான், அவர்களும் சேர்கிறார்கள்.

எதுவும் நாவலை வைத்து எடுத்தார்களா என்று தெரியவில்லை, அப்படியே மின்சார கனவின் கதை. பிரபு தேவா பொறுக்கி நாயகன், அரவிட்ந்த சாமி அவனது நணபனாக, கசோல் பாத்திரத்தில் அந்த காதல் கத்திரிகாய் கொத்தமல்லி நாயகி. எப்போதும் பொறுக்கி நாயகன் ஒரு பாட்டைகொண்டு தான் தனது லீலைகள் துவங்குவான் தமிழில் அப்பப்போ பாடல் வருவது போல்............

அங்காடிதெரு - The perfect Crimeம்

அங்காடிதெரு படத்தை பார்க்க ஆரம்பிக்கும் போதே இந்த படத்தை போல் எதோ பார்த்த நினைவாகவே இருந்தது. இசுபானிசு(Spanish) மொழியில் The Perfect Crime என்று நினைவுக்கு வந்தது.

இந்த படத்தை வசந்த பாலன் அப்படியே ஒன்றும் ஈ அடிச்சான் பிரத்தி எல்லாம் எடுக்கவில்லை. கதைகளம், மற்றும் மூன்றாம் தர நாடுகளில் வாழும் அடிமட்ட தெழிலாளிகள் எல்லா எந்த அளவிற்கு முதலாளிகளால் அடிமை படுத்தப்பட்டு அலைகழிக்கப்படுகிறார்கள் என்ற கருவை மட்டும் வைத்துக்கொண்டார்.

இன்னமும் துள்ளியமாக சொல்லவேண்டும் என்றால், துணிக்கடை, அதிலே ஒரு கொலை, கொலைக்கு பிறகு மன உளைச்சளால் பைத்தியமாக பிதற்றி திரியுதல், துணிக்கடைக்குள் உல்லாசமாக ஆடைகளை உடுத்திக்கொண்டு பாடல் பாடுதல், மற்றும் அதே அங்காடிதெருவில் ஒரு சிறு வியாபாரம் துவங்குதல் என்ற அடிப்படை கருவை மட்டும் வைத்துக்கொண்டார்.

இந்த சம்பவங்களை கதையில் வைத்துக்கொண்டு தமிழகத்து பாத்திரங்களும் இடங்களையும் புகுத்தி திரைக்கதை அமைத்துள்ளார். நாயகியின் தங்கை பாத்திரங்கள் வரை எதையுமே விட்டு வைக்கவில்லை. நல்ல கற்பனை மனிதருக்கு.

முதல் காட்சியில் அங்கே 25 ஆயிரம் அமெரிக்கன் டாலருக்கு விற்று காட்டுவான் நாயகன், தமிழில் 12 ஆயிரம் உரூபாய்க்கு விற்றுக்கொடுப்பான்.

தமிழில் காட்சிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு குள்ள உருவ பிச்சைகாரர் பாத்திரத்தை வைத்திருப்பார் பாலன். அது இந்த படத்தில் நாயகனை மிரட்டும் பெண்ணின் உருவ அமைப்பையும் விட்டு விடக்கூடாது என்று வைத்துக்கொண்டார் போலும்.

நாயகியின் தந்தை ஒன்றுக்கும் உதவாதவர் என்று மூல படத்தில் காட்டியதை போலே காட்டியும் உள்ளார். மூல படத்தில் நாயகியின் தந்தையை நாயகன் விளையாட்டு மைதானம் அழைத்து சென்றாலும் அங்கேயும் நடப்பது அறியா தூக்கம் தூங்குவார்.

நாயகியின் தங்கை நாயகனை பார்க்கும்போது 13 வயதான அவள் தான் கர்பமாக இருப்பதாக சொல்லும் வசனங்களுக்கு இங்கே பூப்பெய்தியதாக சொல்லியுள்ளார் பாலன்.

விற்பனையிலும் மட்டும் அல்ல பெண்களை கவரும் செயலும் தான் ஒரு வல்லவன் என்று நிரூபிக்கிம் நாயகன் கடையில் தான் அகப்பட்ட பெண்ணிடம் இருந்து தப்பிக்க படும் பாடுகளை பார்க்கும் போது மிகவும் பாவமாக இருக்கும். அந்த மூல படம் ஒரு நகைச்சுவை படம். ஆனால் தமிழிலோ உணர்கள் கொட்டும் படமாக ஆக்கியுள்ளார் வசந்த பாலன்.

இப்படி எத்தனையோ ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு படங்கள். அருமையாக அவரது கற்பனையை புகுத்தி உள்ளார்.

The Perfect Crimeமும் நல்ல படம் தான் ஆனால் வயத்து வந்தோருக்கான படம், நல்ல நகச்சுவை அந்த படத்தில். பார்த்து கருத்து சொல்லுங்கள்.

Tuesday, April 27, 2010

வேலைநிறுத்தப் போராட்டம்: மக்களுக்கு ஜெயலலிதா நன்றி -- ஆடு நனையுதேன்னு ஒரு ஓனாய் தேம்பி தேம்பி அழுததாம்.....

http://www.dinamani.com/edition/story.aspx?Title=வேலைநிறுத்தப்+போராட்டம்:+மக்களுக்கு+ஜெயலலிதா+நன்றி&artid=233618&SectionID=178&MainSectionID=178&SEO=&SectionName=Tamils

ஒரு முறை திமுக விட்ட வேலை நிறுத்த அழைப்பை முறியடிக்க உச்ச நீதிமன்றம் வரையில் சென்று அதுவும் இரவோடு இரவாக ஞாயிற்று கிழமையில் நீதிபதியின் வீட்டிற்கே சென்று வாங்கி வந்து பெருமை பேசியவர் தான் இன்றைக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

அந்த போராட்டம் எதற்கு என்ன என்ற விபரங்களுக்குள் எல்லாம் செல்வது தேவை இல்லாதது.

அந்த போராட்டம் நிறுத்துவதற்கு சொன்ன காரணங்கள் என்ன என்ன

1) வயதான நோயாளிகள் மருத்துவம் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
2) தின கூலிகள் சம்பாத்தியம் பாதிக்கப்படுகிறது.
3) பள்ளி மாணவ மாணவியரின் படிப்பு பாத்திப்புக்கு உள்ளாகிறது.
4) அத்தியா அவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.

இப்படி என்ன பிற காரணங்கள் எல்லாம் சொல்லலாமோ அத்தனையையும் கண்ணீரும் கம்பலையுமாக அன்று சொல்லிவிட்டு. இன்றைக்கு வெற்றி வெற்றி என்று அறிக்கை விடுகிறாரே இந்த போராட்டத்தில் இந்த அவதிகள் எல்லாம் இல்லாமல் நடந்ததா அம்மையாரே சொல்லுங்கள்.

எப்படி இந்த அவதிகள் எல்லாம் இல்லாமல் இந்த அறப்போராட்டத்தை நடத்தினீர்கள் என்று சொன்னால் நாளை அறப்போராட்டம் நடத்தும் அனைவரும் அந்த முறையை கையாள வசதியாக இருக்கும். நீங்களும் தேவை இல்லாமல் நீதிபதிகளின் வீடு தேடி தெல்லிக்கும் ஐதராபாத்துக்கும் அலைய வேண்டாம் பாருங்கள். அதுவும் சனி ஞாயிறுகளில்.

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், ஆடு நனையுதேன்னு ஒரு ஓனாய் தேம்பித்தேம்பி அழுததாம். என்ன கருணை உள்ளம் அந்த ஓனாய் என்று பார்த்தவர்கள் சொன்னார்களாம்.........

நடத்துங்க நடத்துங்க மக்களுக்கு மறதி இருக்கிற வரையில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் பேசலாம்..................அனேகமா அந்த முதியவர் இந்த தன்னலம் அற்ற தீயாக காரியத்திற்கு பாராட்டு தெரிவித்து உலகத்தில எவன் எவனோ போராட்டம் நடத்துறான் இந்த மாதிரி எல்லாம் ஞாயமா தர்மமா நீதியா அறபோராட்டம் நடத்தமுடியுமான்னு பதிவர் பட்டிமன்றம் நடத்துவார்............

Tuesday, April 20, 2010

இந்தியா இனி பாக்கிட்த்தானுடன் எப்பவும் பேசவும் பேசக்கூடாது - எந்த பாக்கிட்த்தானியரும் இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது.

ஈழத்து பெண்மணி பார்வதி அம்மாளுக்கு இந்தியா வருவத்தற்கு அனுமதி இல்லை. அது தான் சரி என்று உண்மை தமிழர்களும் உண்மை இந்தியர்களும் வாதிடுகிறார்கள்.

என்ன காரணம் அவர் புலி தலைவரின் தாயார், வந்தால் கண்ணீர் பேட்டி எல்லாம் கொடுப்பார். நல்ல வேளை புலி தலைவரின் உடல் கிடைக்கவில்லை, இல்லை என்றால் மணிமண்டபம் எல்லாம் கட்டுவார்கள் என்றும் எல்லார் எழுதுகிறார்கள்.

இவர்களது இந்த கருத்து உண்மையாக இருந்தால், இது வரை 3 சமர்களில் எத்தனை ஆயிரம் இந்தியர்களை கொன்று குவித்து இருக்கிறது பாக்கிட்த்தானம்.

அதோடு நின்றதா, இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்து ஆட்சியாளர்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப அல்லவா பார்த்தது.

எந்த நீதியின் அடிப்படையில் பாக்கிட்த்தானியர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள்.

எந்த நீதியின் அடிப்படையில் இந்தியா இன்னமும் பாக்கிட்த்தானத்திடம் கொஞ்சு குலாவுகிறது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று எல்லோரும் தன்னை அழைக்கவேண்டும் என்று நினைக்கும் அத்துவானி எந்த நடத்தையின் அடிப்படையில் பாக்கிட்த்தானம் சென்று முகமது அலி சின்னா நல்லவரு வல்லவரு என்று பேசி வந்தார்.

எந்த அடிப்படையில் இந்தியா இன்னமும் பாக்கிட்த்தானத்தோடு கிரிகெட்டு விளையாடுகிறது.

எந்த அடிப்படையில் இந்தியா மும்பை குண்டு வெடிப்பில் மாட்டிக்கொண்டவர்களை பற்றிய தகவல் வேண்டும் என்று பாக்கிட்த்தானத்திடம் கெஞ்சி நிற்கின்றது.

இந்தியாவின் உண்மை தமிழர்களும் உண்மை இந்தியர்களும் எந்த அடிப்படையில் இந்த செயல்களை எல்லாம் கேள்வி கேட்க்காமலும் விமர்சனம் செய்யாமலும் இருக்கிறார்கள்.

அப்போ உண்மை தமிழர்களும் உண்மை இந்தியர்களும் சொல்வது என்ன நாடு நாசமாக போனாலும் எங்களுக்கு கவலை இல்லை, ஆனால் தமிழர்கள் மரியாதையாகவோ பெருமையாகவோ இருந்துவிடக்கூடாது என்று சொல்கிறார்களா.

நாட்டில் மடிந்த இத்தனை ஆயிரம் மக்களின் மேல் வராத இறக்கம் அதுவும் காங்கிரசு தலைவரின் மேல் (பசக தான் உயிர், மோடி ஒருவர் தான் தலைவன்.......) வருகிறது என்றால் என்ன பொருள். தமிழர்களுக்கு எதிரி வேறு எங்கும் இல்லை, இன்றைக்கு தமிழகத்தில் வாழும் அரசியல்வாதிகளும் உண்மை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த உண்மை தமிழ்ர்களும் தான்.

இது எல்லாம் ஒரு நாடு அதில் வாழ்பவர்கள் எல்லாம் மக்கள். என்ன கொடுமை சரவணா......

நயவஞ்சகம் என்ற வார்த்தைக்கு மொத்த பொருளும் இந்த உண்மை தமிழர்கள் தான் போலும். எப்படி எல்லாம் வசதிக்கு தகுந்தார்போல் அவர்களுக்கு நாக்கு பிறழ்கிறது பாருங்கள். நேரத்திற்கு ஒரு பேச்சு, நிமிடத்திற்கு ஒரு கொள்கை.

காந்தி, புத்தர் பிறந்த நாட்டின் நிலைமை இது. இதிலே உலகத்தை பார்த்து நீங்கள் எல்லாம் எப்படி வாழ வேண்டும் தெரியுமா என்று மொட்டை அடித்துக்கொண்டு அமெரிக்கா ஆப்ரிக்கா என்று சென்று கண்ணா கோபாலா, குருவாயுருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள் என்று பாடியும் ஆடியும் பாடம் நடத்துகிறார்கள்.

நாங்கள் எல்லாம் இந்தியர்கள் என்று இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெருமையாக இந்தியர்கள் வெளி நாடுகளில் வசிக்க போகிறார்கள். நாங்கள் எல்லாம் இந்தியர்கள் எங்கள் ஊரில் நாங்கள் எல்லாம் இப்படி அப்படி என்று எல்லாம் இனி எப்படி பேச போகிறார்கள் என்று பார்ப்போம்.

ஆயிரமாயிரம் இந்தியார்களை கொன்று குவித்த மக்களையும் நாட்டையும் மன்னிக்கும் எண்ணம் கொண்ட நாட்டிற்கு இந்த மூதாட்டியினர் மீது கருணை பிறக்கவில்லை என்றால் அந்த நாட்டில் வேறு என்ன நம்பிக்கை தான் மக்கள் கொள்ளமுடியும்..................

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுப்பு - மீண்டும் உண்மை தமிழர்களின் போலி நாட்டுபற்று

பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே என்று உலக்குச் சொன்ன தமிழனின் நிலையை பார்த்தீர்களா.

இதிலே நல்லவேளை திருப்பி அனுப்பினார்கள் என்று ஒரு வயது முதியவர் எழுதுகிறார். நாட்டுக்கு இது தான் நல்லதாம் எந்த நாட்டுக்கு என்று தான் தெரியவில்லை.

தனக்கு கொடுக்கப்பட்ட 7 நிமிடங்களில் உலகின் பார்வையை இந்தியா மீதும் இந்து மதத்தின் மீதும் திருப்பினார் விவேகானந்தர்.

இனி வருட கணக்கில் பேசினால் கூட இந்தியாவையும் இந்து மதத்தையும் உலகில் ஒருவரும் திரும்பி பார்க்கப்போவது இல்லை.

இந்த இதயமில்லா நாட்டின் வஞ்சக வார்த்தைகளில் வெறும் அலங்காரமும் பகட்டும் தான் இருக்கிறது என்று உலகம் நன்கு அறிந்துள்ளது. அமெரிக்க பெண்மணிக்கு தெரிந்து இருக்கிறது ஈழத்தில் நடப்பது நடந்தது என்ன என்று. ஆனால் அங்கேயே அருக்கில் ஒரு 200 மைல் தொலைவில் வசிக்கும் உண்மை தமிழர்களுக்கு தெரியவில்லை பாவம்.

கீழே விழும் இலையை பார்த்து இன்றைக்கு வந்த இலை பார்த்து சிரித்ததாம். அது போல் இருக்கிறது இந்த முதியவரின் பேச்சு. நாளைக்கு உங்கள் காலம் வரும் போது இதே போல் இரு காரணம் சொல்வார்கள் பார்க்கலாம் அன்றைக்கு என்ன என்ன எல்லாம் சொல்கிறீர்கள் நீங்களும் உங்கள் கூட்டமும்.

இந்த வெட்கம் கெட்ட செயலுக்கு பாராட்டு பத்திரம் வேற. இந்து மதம் கற்றுக்கொடுத்த பாடம் போலும்.

நாளைக்கு உங்களது பிள்ளைகள் உங்களது கண்முன்னே இப்படி போகும் போது பார்த்து ஆனந்த படுங்கள் இதே போல் இறக்கம் அற்ற மனிதனே.

Wednesday, April 14, 2010

வசந்தத்தின் வரவேற்பு













Tuesday, April 13, 2010

அவள் பெயர் தமிழரசி - திரைவிமர்சனம். (லேவ் டால்சுடாயின் புத்துயிர்ப்பு)

இந்த படத்தின் காட்சி பிம்பங்களை பார்த்ததும் படம் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். படத்தை பார்க்க துவங்கியதும், வாழ வழியில்லா கூத்துகாரர்களையும் அந்த பணக்கார சிறுவனையும் இணைத்துக்காட்டும் போதே படம் விவகாரமாகத்தான் இருக்கும் என்று விளங்கியது.

கதை சிறுபருவம் முதல் காளையர் பருவம் வரையில் வரும் வரையில் புத்துயிர்ப்பின் சாயல் இல்லை. ஏதோ ஒரு கிராமத்து கதை என்று தான் இருந்தேன். பிறகு அந்த நிகழ்வுக்கு பிறகு கதையில் அடிக்கும் புயலும். அந்த புயலில் நாயகியின் வளர்ந்து வந்த வாழ்க்கை தொலந்து போவதும். நல்ல நெறி, நல்ல வாழ்க்கை என்று இருந்தவளை வலுக்கட்டாயமாக புழுதியில் தூக்கி எறிவதாக டால்சுடாய் சொன்ன அந்த புத்துயிர்ப்பின் சாயல் இங்கு இருந்து தான் வெளிப்படுகிறது.

புத்துயிர்ப்பின் கதை இது தான், ஒரு பெரும் பணக்காரன் தனது வீட்டில் வேலை செய்யும் சிறுமியுடன் வித்தியாசம் பார்க்காமல் பழகுவான். இங்கே இந்த சிறுவன் அந்த கூத்தாடிகளுடன் பழகுவது போல். பிறகு பால்ய பருவம் கடந்து காளையானதும் பணக்கார திமிரிலே அத்தனை நாட்கள் பழகிய தோழியை வன்புணர்வான். அதற்கு அவனது வயது ஒரு காரணம் என்று சொல்லிக்கொள்வான்.

இங்கே தமிழரசி பிரிந்து சென்றுவிடக்கூடாது என்று படிக்க செல்லவிருக்கும் அவளை வன்புண்ருகிறான் நாயகன்.

புத்துயிர்ப்பில் அவனது பிள்ளையை கையில் தூக்கிக்கொண்டு இரயில் நிலையத்தில் இராணுவ வண்டியில் வந்திருக்கும் நாயகனின் முகம் பார்த்து அவனது குழந்தை இது என்று காட்டிவிட வேண்டும் என்று அவள் படும் பாட்டையும், அந்த வண்டி நகரும் வரை அவன் இவளை கவனிக்காமலே இருந்தும். கூட்டத்தில் பார்க்காமல் இருந்திருப்பான் என்று வண்டி நடை மேடையை விட்டு நகரத்துடங்கியதும் வண்டியுன் ஓடி கால்களில் செறுப்பு கூட இல்லாமல் அந்த குளிரில் அந்த இளம் தளிரை அள்ளிக்கொண்டு ஓடியதை படிக்கும் போது மனதை அப்படி ஒரு பிசை பிசைந்து எடுக்கும் பாருங்கள். அந்த காட்சி எல்லாம் வர போகிறது என்று பார்த்தால். குழந்தையை கலைத்துவிட்டேன் என்று முடித்து விட்டார்.

பிறகு புத்துயிர்பில் தனது 40 வயதுகளில் அவளை தேடி அவளது வாழ்க்கையை அழித்தற்கு எப்படியாவது பிராயசித்தம் தேடவேண்டும் என்று கடந்து அலைவான். அவளையும் தேடி கண்டு பிடிப்பான். கடைசி வரையில் இவனது பிராயசித்திற்கு அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள். எப்படி பட்ட சமயத்தில் தெரியுமா, தனக்கு மரண தண்டனை கிடைக்க போகின்ற தருவாயில். அவளை அவனின் செல்வாக்கை கொண்டு காப்பாற்றி விடுகிறேன். அதோடு மட்டும் அல்லாது உன்னோடு சேர்ந்து வாழ்கிறேன் என்று சொன்ன பிறகும் முடியாது என்பாள். காரணம், இப்போது கூட எனது வாழ்க்கை நன்றாக இருக்கனும் என்று நினைக்காமல் உனது பாவத்திற்கு பிராயசித்தம் என்று நீ தேடுவதால் என்று மறுப்பாள்.

டால்சுடாய், அந்த பெண் பாத்திரத்தின் மூலம் பெண்களுக்கு முதலில் மரியாதை அதற்கு பிறகு தான் வாழ்க்கை செல்வம் என்று ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து கதை சொன்னார்.

அதே கருவை கொண்டு வந்த இந்த படத்தில், தனது கௌரவத்தை எல்லாம் தொலைத்து வன்புணர்ந்தவன் வாழ்க்கை தந்தாள் பிடிச்சுக்கோ. இதை விட்டால் உனக்கு வேறு கதி எல்லாம் இல்லை என்று மிகவும் சந்தர்ப்பவாத இனமாக பெண்களின் வாழ்க்கையை கீதா காட்டியுள்ளார். அதும் ஒரு பெண் இயக்குனராக இருந்துக்கொண்டு.

தமிழ் எழுத்தாளர் இலட்சுமியின் இரசிகை போல இருக்கு. அவர் தான் ஆண்களுக்கு அப்படி ஒரு சப்பைகட்டு கட்டுவார் பாருங்கள் அப்படி ஒரு கட்டு.

படத்தின் ஆருதல் விசை ஆண்டனியின் இசை. எப்படிம் குத்து பாட்டும் ஆட்டமுமாக இருக்கும் அந்த கலைஞருக்குள் இவ்வளவு கிராமிய இசையா. பாடல்களைவிட பின்னனி இசை மிகவும் அருமை.

அவள் பெயர் தமிழரசி அழுக்கு பட வரிசையில் அடுத்த படம் அவ்வளவு தான் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

Wednesday, March 31, 2010

பென்னாகரம் தேர்தல் முடிவுகள் -- அதிமுக அரசியல் அனாதையாக ஆக்கப்பட்டத்தின் அடையாளமா

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7064

அதிமுக மக்களிடம் இருந்து விலகி மெல்ல மெல்ல செல்லரித்த கட்சிகளின் பட்டியலில் இணைகிறது போலும்.

திருமங்கலம் இடைத்தேர்தலில் பேசிய வீர வசனங்கள் எங்கே, இப்போது இப்படி சதி செய்துவிட்டார்கள் என்று புலம்பும் நிலை எங்கே. என்ன ஆனது அதிமுகவிற்கு.

தேர்தல் வந்தால் கையில் கசப்பு மருந்துடன் ஐதிரபாத்திலிருந்தோ, கொடைக்கானலில் இருந்தோ, அல்லது அப்போது எங்கே ஓய்வில் இருக்கிறாரோ அந்த ஊரில் இருந்து வண்டியில் வந்து எங்கேயும் நிற்காமலும் மக்களை சந்திக்காமலும். ஓடும் இரயிலில் இருந்து கை காட்டிக்கொண்டு செல்வது போல் வந்து போவது எல்லாம் மக்களுக்கு பிடிக்கவில்லை போலும்.

இரண்டாவது முறை ஆட்சியில் 4 ஆண்டுகள் வண்டி வண்டியாக தமிழக மக்களுக்கு கசப்பு மருந்து கொடுத்ததையும். கசப்பு மருந்து மக்களுக்கு தான் தங்களுக்கோ எப்பவும் விருந்தும் கூத்தும் என்று பகட்டாய் இருட்ந்தவைகள் எல்லாம் மக்களுக்கு பிடிக்கவில்லை தான் போலும்.

இது எல்லாம் போக தினமலரில் சொல்லி இருப்பதை போல் தான் என்ன சொன்னாலும் மக்கள் மதிப்பார்கள் நம்புவார்கள் என்று நம்பி அளவில்லாமல் விட்ட கதைகளில் மக்களே வெறுத்து தான் இந்த படு தோல்வியை கொடுத்துள்ளார்கள் போலும்.

இதிலே இந்த முறை வாக்கு சேகரிப்பில் மோடி வித்தைகாரன் பேசுவது போல் எல்லா இடங்களிலும் ஒரே பேச்சு தான் பேசினாராம். இம்மியளவும் மாற்றம் இல்லாமல் பேசினாராம்.

நல்லவேளையாக இத்தமுறையும் மின்னியல் இந்திரத்தின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் பழி சுமத்தாமல் ஆளும் கட்சியின் மேலும் அதிமுக கட்சியினர் மீதும் பழியை போட்டுள்ளார்.

போகின்ற போக்கை பார்த்தால் அடுத்த பொது தேர்தலில் அதிமுகாவை பாசக கூட கூட்டு சேர்த்துக்க மாட்டாங்க போல் தெரிகின்றது. பொருத்து இருந்து பார்ப்போம் மண்ணார்குடியிலிருந்து என்ன கணைகள் வருகின்றது என்று பார்ப்போம்.

Wednesday, March 24, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - The Girl Next Door தமிழாக்கம்




விதாவ வந்ததில் இருந்து வெளியான விமர்சனங்களில் எல்லாம் படத்தை ஆகா ஓகோ என்று வந்தது படத்தின் மேல் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகமாக்கியது. சரி படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று பார்த்தால் படம் 2004ல் வெளிவந்த The Girl Next Door இந்த ஆங்கிலப்படம் தான் தமிழில் விதாவயாக கௌதம் எடுத்துள்ளார்.

இதில் கௌதமின் எழுத்தையும், திரைகதையையும், காதலை படமாக்கும் விதத்தையும் மக்கள் ஓகோ என்று விவரித்தி எழுதியிருப்பதை பார்த்தால் நகைப்பாக தான் இருக்கிறது.

விதாவவில் வரும் இளமை குரும்புகளும், காதலும் ஆங்கிலத்தில் மிகவும் அழகாக எடுத்திருப்பார்கள்.

ஆங்கிலத்தில் கதை இது தான், பள்ளிப்படிப்பு முடிக்கும் நிலையில் இருக்கும் இளைஞனின் வீட்டிற்கு பக்கத்துவீட்டிற்கு ஒரு யுவதி வருகிறாள்.

வந்த முதல் நாளே, இரவில் அவளை வீட்டு வாசலில் நாயகன் பார்க்கிறான். பார்த்த முதல் பார்வையிலேயே பார்த்ததும் விடலையின் மனதில் அவளின் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது. அவளை அடுத்து எப்போது எப்படி காண்போம் என்று அவனது மனதில் ஒரு பதற்றம் வர, வீட்டின் மாடியில் பார்க்க கூடாத கோலதில் அவளை பார்க்கிறான் அந்த விடலை.

அந்த மோதலுக்கு பிறகு அவளுக்கும் இவனுக்கும் நட்பு பிறக்கிறது, மிக விரைவில் அந்த நட்பு விடலையின் ஆசையை தூண்டி அவனது துடிப்பை இரசிக்கும் விதமாக உருவெடுக்கவும் துவங்க. அந்த பெண் யார் என்ன என்று அவனது நண்பர்கள் கண்டு பிடிக்கிறார்கள்.

அவளை பற்றி தெரிந்ததும் அவளை தனியறைக்கு அழைக்க அந்த அழகு பதுமை அந்த விடலையின் அப்பாவி தனத்தை இரசித்ததும், அந்த மாதிரி அவளை யாரும் விரும்ப மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருந்த வேளையில் இவனை கண்டதையும், அந்த நாட்களை வாழ்க்கையில் அவளது பொன்னான நாட்களாக நினைத்ததையும் சொல்லி கோபப்பட, விடலையின் மனதில் காதல் வலுக்கிறது.

அது வரையில் எளிமையாக இருந்த அவள் அவனுக்கு திடீர் என புரியாத புதிராக மாற்றம் கொள்கிறாள். என்ன ஏது என்று தெரிந்து கொள்ளும் வேளையில் அவளது வீட்டில் இருந்து பாபு ஆன்டனியின் உருவத்தில் ஒருவன் அவளது விட்டில் இருக்கிறான். அவனுக்கும் அவளுக்கும் அதிக நாள் தொடர்பு அப்படி இப்படி என்று காட்சிகள் நகர.

திடீர் என்று ஒரு வாரத்திற்கு அவள் வேகாசுக்கு செல்கிறாள். அவளை பார்க்காமல் இருக்க முடியாமல் தனது நண்பர்களுடன் இரவோடு இரவாக வேகாசு போகிறார்கள். அங்கே எங்கே என்று தெரியாமல் அங்கே இங்கே என்று தேடி ஒரு வழியாக கண்டு பிடிக்கிறார்கள். அங்கே அவளோ அவனை பார்க்காமலும், பேசாமலும் விட்டது மட்டும் இல்லாது. அவளை மறந்து விடும் படியும் அவள் சொல்ல, அந்த உயரமான மனிதன் விடலையை பார்த்து இனிமேல் அவளை பாத்த அப்படி இப்படி என்று மிரட்ட. அங்கு இருந்து கிளம்புகிறான் விடலை.

இனிமேல் விடலையின் ஊருக்கு அவள் வருவது இல்லை என்று இருந்தவள் திடீர் என்று வருகிறாள். வந்தவள் அவனுக்காகவும் அவளின் காதலுக்காவும் தான் வந்தாக சொல்கிறாள்.

அந்த வேளையில் அந்த உயர்ந்த மனிதன் அடைந்த பண இழப்பை விடலை தான் ஈடுகட்ட வேண்டும் என்று மிரட்ட. விடலையும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கிறார்கள். அந்த படம் ஓகோ என்று விற்று பெரும் பொருளை விடலைக்கு பெற்றுக்கொடுக்கிறது.

படத்தின் துவக்கத்தில் விடலை ஆசைபடுவது போல் சியார்சி நகர் பல்கலைகழத்தில் அரசியல் படிக்க தனது சொந்த செலவில் சேர்கிறான். விரையில் அமெரிக்காவின் அதிபராக வருவது தான் அவனது கனவு, அது விரைவில் நடக்கும் என்று முடிக்கும் வேளையில் அவளும் அவனுடன் தான் இருக்கிறார்ள் என்று அழகாக முடித்து இருப்பார்கள் ஆங்கிலத்தில்.

ஆங்கிலப்பத்திற்கும் விதாவவிற்கும் வித்தியாசங்கள் இவ்வளவு தான்

1) ஆங்கிலத்தில் அந்த அழகு பெண் 5 அல்லது 6 வயது பெரியவள். தமிழில் 1 வருடம் பெரியவள்.

2) ஆங்கிலத்தில் அவள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவள், தமிழிலோ MCA வரை படித்து இருக்கிறாள்.

3) ஆங்கிலத்தில் விடலை பள்ளிப்படிப்பை முடிக்கிறான், தமிழில் பட்டப்படிப்பை முடித்து வேலை தேடுகிறான்.

4) ஆங்கிலத்தில் அவள் ஒரு வாரத்திற்கு வேகசு செல்கிறாள், தமிழில் கேரளம் செல்கிறாள். கேரளத்தில் அவளது சொந்தக்காரர்களை எல்லாம் பார்க்கிறான் விடலை. ஆங்கிலத்தில் அவளது தொழிலை சேர்ந்தவர்களையும் அவளது தொழிலையும் நேரில் பார்க்கிறான் அந்த விடலை.

5) ஆங்கிலத்திலும் தமிழிலும் இருவரும் படம் எடுகிறார்கள், என்ன ஆங்கிலத்தில் விடலை தயாரிப்பாளன், தமிழில் இயக்குனர்.

6) ஆங்கிலத்திலும் தமிழிலும் அவளுக்குள் இயல்பாக வரும் காதலை சொல்ல தயக்கம் கொள்கிறார்கள், ஆங்கிலத்தில் அவளது தொழில் அப்படி, அதை அவளால் சொல்லவே முடியாது. ஆனால் தமிழில் மதம் என்ற பாகுபாடும் அதை வைத்துக்கொண்டு என்னதான் அவர்கள் சப்பைகட்டு கட்டினாலும் மனிதில் ஒட்டவில்லை.

7) ஆங்கிலத்தில் விடலைக்கு அமெரிக்க அதிபராகுவது கனவு, தமிழில் திரைபட இயக்குனர் ஆவது கனவு. இரண்டிலும் இருவரும் அவரவரது கனவு கைகூடுகிறது. இருவரும் படம் எடுக்கிறார்கள்.

இப்படி ஆங்கில திரைப்படத்தின் திரைக்கதையை எப்படி எல்லாம் தமிழில் மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் ஆங்கிலத்தில் வரும் காதல் வசனங்களையும் கூடவா அப்படியே அடிப்பது. அதிலும் அரசியலில் வந்தாலும் வரலாம் ஆனால் படம் எடுப்பது எல்லாம் அவ்வளவு எளிதில் முடியாது என்ற வசனம் வேறு.

ஆங்கிலத்தில் வரும் அந்த இயக்குனரின் வேடத்தில் இரவிக்குமார் தமிழில். அவன் சொல்லும் பளீர் வசனங்கள் தமிழில் இல்லை.

ஆங்கிலத்தில் நவனாகரீக ஊடையில் வருகிறாள் அவள், தமிழில் திரிசாவிற்கு புடவை அதுவும் கிருத்துவர்கள் புடவை கட்டிக்கொண்டு அதுவும் இந்த காலத்தில் இப்படி என்று காட்டுவது நல்ல நகைச்சுவை. நல்ல காலத்திலேயே திரிசாவிற்கு புடைவைக்கும் தொடர்பே இருக்காது வித்தியாசம் காட்டியே ஆகவேண்டும் என்று புடவையை கொடுத்துள்ளார்கள் போலும்.

ஆங்கிலத்தில் படம் 1 1/2 மணி நேரம் மட்டும் தான். மிச்சம் இருக்கும் 1 1/2 மணி நேரத்திற்கு பாட்டு சண்டை படபிடிப்பு என்று வந்தாலும் திரைக்கதையில் தோய்வு இருக்கிறது. அது அசல் படத்தின் திரைக்கதை முடிந்து இவரது சொந்த கற்பனைகள் சேர்க்கும் இடத்தில் இது தெரிகிறது.

கிளிக்கு(CLICK) படத்திற்கு(வாரணமாயிரம்) பிறகு இவர் அடித்தி இருக்கும் ஆலிவுட்டு படம் தி கிர்ள்ளு நெக்சுட்டுடோர்(The Girl Next Door) விதாவயாக. எனது கணிப்பு சரியாக இருந்தால் கௌதம் அடுத்து எடுக்கும் படம் Forgetting Sarah Marshall ஆக இருக்கும். அந்த படம் கொஞ்சம் வக்கிரமாக எடுத்து இருந்தாலும் நல்ல கதையம்சம் வாய்ந்தது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளிவந்ததிருந்தாலும், ஆலிவுட் பாணில் கமல் போன்று வயதான வரை வைத்து படமாக எடுப்பார் என்று எதிர்பார்ப்போம்.

Wednesday, March 17, 2010

தினமலரில் இன்றைக்கு வந்திருக்கும் ஆபாசபடம்


தினமலரின் மனித நேயம், நீதி எல்லாம் அடுத்த மத்திற்கும், இனத்திற்கும் மக்களுக்கும் தான் போலும். தான் எது செய்தாலும் சரி போலும். இசுலாமியர்கள் உடலை கீறி காயப்படுத்தி வேண்டுதல்கள் நிறைவேற்றும் போது நக்கலடிக்கும் தினமலர். இந்து சிறார்கள் அதே போல் தங்களது உடலை கத்தியால் காயப்படுத்தி செய்யும் வேண்டுவதை இப்படியா வீரமான காட்சியாக வெளியிடுவது. இது எல்லாம் மாணவர்களையும், வளரும் சிறார்கள் இதை ஒரு சாதணை என்று விபரம் அறியாமல் ஆபத்துகளில் ஈடு படமாட்டார்களா.... ஏன் இந்த பொறுபற்ற செயல். வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று, நிறுத்து இதுபோல் சிறார்களை கெடுக்கும் செயல்களை இனிமேலும் செய்யாதே..........

Friday, March 5, 2010

நித்தியானந்தரும் காஞ்சி சங்கரும் என்ன வித்தியாசம் சொல்வாரா இவர்

சமீபத்தில் இப்படி ஒரு பதிவு, பெரியாரும் நித்தியாவும் என்று, அதற்கு அண்ணாதுறை வேறு துணைக்கு.

என்ன மனிதன் பந்தை தன் பக்கத்திலேயே உருட்டுகிறார் என்று பார்த்தால் தான் தெரிந்தது மனிதன் உருண்டையை உருட்டுகிறார் என்று. சிறுவர்களுக்கு அம்மா உணவு ஊட்டும் போது என்ன ஊட்டுகிறோம் என்று தெரியாமல் இருக்க ஒரு சுவரசியமான கதையை சொல்வார். அப்படி சொல்லும் போது உருட்டும் உருண்டையில் என்ன இருக்கிறது என்ற கவனமே இல்லாது குழந்தைகளை சாப்பிட வைப்பாள். இவரும் இப்படி ஒரு உத்தியை தான் கையாளுகிறார்.

இவர் ஒப்பிடுவதை இப்படி வைத்துக்கொள்ளலாம், சச்சின் 200 ஓட்டங்கள் பெற்றதும், சச்சினையும் உடாசுமார்க்கில் 200 அடித்துவிட்டு மயங்கி கிடக்கும் குடி காரரையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதினால் எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது இவரது ஒப்பீடு.

நித்தியா தனக்கு பிடித்த பெண்ணுடன் காஞ்சி சங்கரன் உல்லாசமாக பல பெண்களுடன் இருந்தத்தை போல் இருந்தார். தன்னிடம் பக்திக்காகவும், வருமையின் வாடலிலும் வந்த வறியவர்களை இன்னமும் தெளிவாக சொன்னால் நாதியற்றவர்களை காஞ்சி சங்கரன் மயக்கியும் பயமுறுத்தியும் தனது ஆசைகளை தீர்த்துக்கொண்டார் என்று ஒப்பிட்டால் கூட பரவாயில்லையே சரியாகத்தான் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் என்று எடுதுக்கொள்ளாம்.

ஆனால் பெரியாரின் திருமணம் செய்துகொள்வதும் காஞ்சி சங்கரன் சாமியார் என்று சொல்லிக்கொண்டு பக்தைகளை மயக்கி பயமுறுத்தி வாழ்கையை சீர் அழித்ததும் ஒன்று என்று சொன்னால் உங்களை என்ன என்று நினைப்பது.

இதிலே ஒரு சாமியார் சொன்னார், நான் சொல்வது உனக்கு பிடித்து இருந்தால் அதை மட்டும் பார் என்னை ஏன் பார்கிறார் என்று கேட்டாராம் அதுவும் சரிதான் என்று இவர் சொல்கிறார்.

அது தான் வருடத்திற்கு 100 படங்கள் வருகிறதே அவர்கள் சொல்லாததையா இந்த சாமியார்கள் எல்லாம் சொல்லிவிடப்போகிறார்கள். பிறகு எதற்கு இவர்கள் எல்லாம் எடைக்கு எடை தங்கம் வெள்ளி என்றும் பெறுகிறார்கள். அந்த நடிகர்களுக்கும் இந்த நடிகர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல வந்தீர்கள் போலும்.

இந்த மாதிரி இடை தரகர்களைவிட அந்த சாமியிடமே கேட்டுவிடலாம் அதுவே சாலச்சிறந்தது என்ற சப்பைகட்டுவேறு. உண்மையிலே அந்த சாமியும் சக்தியும் இருக்கிறது என்றால் சங்கர் இராமன் கொலை கோவிலில் நடந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னமும் காஞ்சி சங்கரன் நன்றாகத்தானே இருக்கிறார். 61 நாட்கள் சிறையில் இப்போது வெளியில் இருக்கும் பிணைகைதி அவர். இது எல்லாம் நடப்பதால் என்ன அவருக்கு இருக்கும் மதிப்பு மறைந்து விட்டதா என்ன.

சச்சின் அடித்த 200ம் உடாசுமார்க்கில் குடி மகன் அடித்த 200ம் ஒன்று என்று சொல்கிறீர்கள். இந்த வகை ஒப்பீட்டை இதுவரையில் பார்த்தது இல்லை. அனேகமாக ஒருவரும் பார்த்து இருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.

வம்படியாக எழுதினாலும் கூட இப்படி எல்லாம் யாராவது எழுதுவர்களா. அதிலே திராவிட இயக்க தலைவர்களின் இரண்டாவது மனைவி துணைவி பற்றி எல்லாம் புள்ளியில் விபரங்கள் வேறு. கொஞ்சம் விட்டால் இந்திரன் எந்த எந்த முனிவர்கள் வீட்டில் இல்லாத சமயம் சென்று எப்படி எல்லாம் உல்லாசமாகவும் நயவஞ்சகமாகவும் தேவ உலகத்தில் இருந்தான் என்ற கணக்குகள் எல்லாம் கொடுப்பீர்கள் போலும் 200க்கு 200.

இன்னமும் இது போல் ஆனாவுக்கு ஆனா, கானாவுக்க கானா என்று வரிசைபடுத்தி எழுதவும் ஆவலுடன் எதிர்பார்கிறோம், உங்களின் 200க்கு 200 அறிவு எப்படி எல்லாம் நீளுகிறது என்று பார்ப்போம்.

சக்குபாய் - சரத்துகுமார் இது எல்லாம் சரியா, இதுல உபதேசம் வேற

இந்த பொங்கலுக்கு வந்த படங்களிலே மிகாவும் மோசமாக தோல்வியை தழுவிய படம் இது. இந்த படத்தின் பிரதிகளை இணையத்தில் வெளியிட்டதினால் தான் இந்த படம் தோல்வியை தழுவியதாகவும். அப்படி கதை மட்டும் யாருக்கும் தெரியாமல் இருந்தால் மற்ற படங்களைவிட இந்த படம் அதிக வசூலை குவித்து இருக்கும் என்ற பரப்பு உரை வேறு.




உண்மையில் யார் இந்த சக்குபாய், எப்படி இந்த கதை உருவானது என்று பார்ப்போம்.

தற்பொழுது தமிழ் பட தயாறிப்பில் ஊடுறுவி இருக்கும் இந்த கதை மற்றும் திரைக்கதை திருட்டு இந்த படத்திலும் நடந்து இருப்பது ஒரு சோகமான உண்மை.




இயக்குனர் இரவிக்குமார் அப்படி இப்படி என்று முழு நேர ஆங்கில உறுவல் பட இயக்குனராகவே மாறிவிடார் என்று தான் சொல்ல வேண்டும். இனிமேல் இரவிக்குமார் ஒரு படம் எடுக்கிறார் என்றால் அது எந்த படத்தின் தழுவல்/மொழிபெயர்ப்பு என்று தாராளமக எதிர்பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் " Man on Fire" என்று ஒரு படம் வந்தது. அந்த படத்தில் உடென்டல் வாசிங்டன் தான் தலைவன். தனது வாழ்க்கையை தொலைத்தவனாக குடிக்கு அடிமையாகி, பார்த்த வேலையும் இல்லாது, குடும்பமும் இல்லாது தனி மரமாக காலம் தள்ளுபவன் மெக்ச்சிகோ நாட்டிற்கு தனது பழைய நண்பரை பார்க்க வருகிறார்.
அங்கே அந்த காலகட்டத்தில் பணக்கார குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கூட்டத்தின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால், பணக்கார குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்ப முடியாமல் பெற்றோர்கள் தவிக்கிறார்கள்.
அந்த காலத்தில் அங்கே வந்த உடென்சல் வாசிங்டனும் ஒரு பணக்கார மகளுக்கு பாதுகாவலனாக பெறுப்பேற்கிறார்.
சரத்து தண்ணி அடிச்சிட்டு அடிவாங்கும் காட்சியாக அமைவது இந்த மது அடிமையாக இரவு முழுதும் குடிப்பதும், நன்றாக குடித்து ஒரு கட்டத்தில் தலையில் சுட்டுக்கொள்ள நினைக்கும் போது தோட்டா வெடிக்காமல் போகும் காட்சிகளை தமிழில் சரத்து குடித்துவிட்டு அடி வாங்கு காட்சியாக நமக்கு.
அழகான அன்பான அமெரிக்க மனைவி, அருமையன குழந்தை என்று இருக்கும் அந்த குடும்பத்தில் புயல் வீச துவங்குகிறது. உடென்சிலை சுட்டுவிட்டு குழந்தையை கடத்துகிறது அந்த கடத்தல் கும்பல்.
வேலைக்கு செர்த்துக்கொள்ளலாமா என கணவன் கேட்க்கும் பொழுது, நீ ஒரு அமெரிக்கர் என்ற ஒரு காரணம் போதும் என்று சொல்கிறாள் அந்த பணக்காரனின் அமெரிக்க மனைவி. அந்த நம்பிக்கையை வீனடிக்க விரும்பாத இவனும் குழந்தையை கடத்திய கும்பலை தேடி செல்கிறார். அவர்களை பிடித்தானா, குழந்தை என்ன ஆனது யார் கடத்தினாகள் என்று பிறகு கதை பயணிக்கும்.
ஆங்கில படத்தில் வரும் வசனங்களும் சரி, அந்த சிறுமியும், உடென்சிலும் காட்டும் பாச காட்சிகளுக்கு இணையாக சக்குபாயில் ஒன்றுமே இல்லை.
ஆங்கில படத்தில் வரும் நீச்சல் காட்சிகளுக்கு இணையாக தமிழில் அழகு போட்டியை வைத்து இருப்பார்கள். நீச்சலில் எப்படி முதலில் வருவது என்று பயிற்சி கொடுக்கும் போது தான் உடென்சிலை அந்த சிறுமிக்கு மிகவும் பிடித்து போகும், தமிழில் திடீர் என அழகு போட்டிக்கு தயாராகுவதாக காட்சிகள் வரும் பிறகு ஏனோ போட்டி முடிந்து முதல் பரிசும் வாங்கியாச்சி நண்பர்களுக்கு விருந்து என்று கதை அறுந்து தொங்கும்.
ஆங்கிலத்தில் சிறுமி காட்டும் அனுபவம் வாய்ந்த நடிப்பில் 100 ஒரு பங்கு கூட சிரேயா காட்டாமல் கொஞ்சிக்கொஞ்சி பேசுவது பார்க்கும் போது இரவிக்குமாரின் இயலாமை நன்றாத தெரிகின்றது.
இப்படி யாரோ 2004ல் எழுதி "Man on Fire" கவிதைக்கு சரத்தும் இரவிக்குமாராரும் அப்பாவாக பார்த்து தோற்று போயிருக்கிறார்கள்.
இதிலே இணையத்தில் வெளியிட்ட மக்களை திட்டிய திட்டுகள் இருகிறதே அப்பப்பா என்ன கோபம் வார்த்தைகள்.........இதிலே இரசினியையும் விடமல் கூட்டிக்கொண்டு வந்து இவருக்கு தோதாக பேசவைத்து மனிதன் அப்படியே என்ன அழகாக நீலிக்கண்ணீர் வடித்துவிட்டர்.
யாரோ எழுதிய கதையை என்ன காசு கொடுத்தா வாங்கினீர்கள் சரத்துகுமார், சும்மா அத்துல போற தண்ணியில் ஆளுக்கு ஒரு கை என்று வைத்தீர்கள். அது உங்களுகே விணையாக வந்து முடிந்தது.
இரவிக்குமார் சரத்திற்காக ஆங்கிலத்தில் இருந்து திருடும் இரண்டாவது மோசமான தோல்வி படம் இது. இதற்கு முன் "Bounce" என்ற அருமையான படத்தை பாறை என்ற ஒரு டப்பா படமாக இதே இரவிக்குமார் சரத்துகுமாரை வைத்து எடுத்து உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

Friday, February 26, 2010

கவிஞர் சல்மாவின் நிகழ்ச்சி 02-28-2010 வாசிங்டன் தமிழ்ச் சங்கம்


Sunday, February 21, 2010

தீராத விளையாட்டு பிள்ளை - திரைவிமர்சனம்(Wedding Crashers )


விசாலுக்கு அடுத்தபடியாக என்ன செய்வது என்று தெரியவில்லை போலும் இப்படி ஒரு கதையில் நடிக்க அவர் எப்படி தான் ஒத்துக்கொண்டர் என்று தெரியவில்லை. படத்தில் விசாலுடைய வேடம், உடலமைப்பும் அப்படியே சிவா மனசுல சக்தியில் வரும் சீவாவை பார்ப்பது போலே இருக்கிறது.

அது மட்டும் இல்லாது, இந்த படத்தில் பெண்களை கண்டபடி ஏசியும் பேசியும் பேசுவதில் அளவுக்கு மிஞ்சி வசவுகளை வீசியுள்ளார். இது விசாலின் மேல் இனி மேல் இரசிகைகளுக்கு அலுப்பு தட்டும்.

தீராத விளையாட்டு பிள்ளையாக காட்டும் காட்சிகள் அனைத்திலும் சிம்புவை நடிப்பில் கொண்டு வந்து காட்டுகிறார். என்ன விரல் வித்தை மட்டும் தான் இல்லை.

எதற்காக இப்படி பெண் தேடுகிறார் என்று கேட்டால், சின்ன வயதில் இருந்து என்று துணை கதை வேறு சகிக்கவில்லை.

பெண் பார்ப்பதையும், சட்டை, காய்கறி வாங்குவதும் ஒன்று என்று பேசும் அளவிற்கு இவர்களது நாகரீகம் வளர்ந்துள்ளது நல்ல பரிணாம வளர்ச்சி.

சரி கதையிலும் வசனங்களிலும் ஏன் இப்படி ஏக குழப்பம். கதை பாத்திரங்கள் முன்னுக்கு பின் முறனாக நடப்பது பேசுவதுமாக இருக்கிறார்களே என்று படம் பார்ப்பவர்கள் குழம்பித்தான் போவர்கள்.

அப்படி என்ன தான் கதையாக எழுதி இப்படி குழப்பிக்கொண்டார்கள் என்றெல்லாம் யாரும் குழம்ப வேண்டாம். இந்த படம் ஆங்கிலப்படம் (Wedding Crashers ) தமிழாக்கம்.



ஆங்கிலத்தில் கதை இது தான், இரண்டு நண்பர்கள். நீண்ட நாள் நட்பு, தனது திருமணத்தோழனாக நீ தான் எனக்கு என்று அழைக்கும் அளவிற்கு. அந்த நண்பர்களின் பொழுது போக்கு, அக்கம் பக்கம் நடக்கும் பெரிய திருமணங்களுக்கு செல்வதும். அந்த திருமணங்களில் மாட்டும் அழகான பெண்களை மயக்கும் மாதிரி பொய்களையும் நடிப்புகளையும் நடத்தி தங்களது ஆசையை தீர்த்துக்கொள்வதும் தான் அவர்களது பொழுது போக்கு.

இந்த செயலுக்கு அவர்கள் அள்ளிவிடும் பொய்களையும் நடிப்புகளையும் பார்த்தால் அடக்க முடியாத நகைப்பாக இருக்கும். உதாரணம் என்று துவக்க காட்சிகளில் மத வித்தியாசம் பாராமல் எத்தனை வகையான திருமணமாக இருந்தாலும் செல்வதும். அவர்களது பழக்க வழக்கங்களுக்கு தகுந்தார் போல் பேசுவதும், அந்த பெண்களுக்கு தகுந்தார் போல் பேசுவதும் படத்தில் நல்ல கல கலப்பாக இருக்கும் ஆங்கிலத்தில்.

இப்படியே ஒரு நாள் ஒரு பெரிய அரசியல்வதியின் திருமணத்திற்கு செல்வார்கள். அங்கே நண்பர்களில் ஒருவனுக்கு ஒரு பெண் கிடைக்க மற்றவன் வலையை விரித்து வைத்து அலைவான். கடைசியில் அந்த பெண்ணும் இவனோடு பழகும் எண்ணத்தில் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்வர்கள்.

அந்த பெண்ணின் அழகில் மயங்கிய அவன் அவளிடம் காதல் கொள்வான். ஏற்கனவே திருமணம் அவளுக்கு நிச்சயக்க பட்டிருக்கும் நிலையில், அவளும் இவன் மீது காதல் கொள்வாள். எல்லாம் அமையும் போது இவர்கள் யார் என்ன எப்படி என்று அவளை கட்டிக்கொள்ள போகிறவன் கண்டு பிடித்து இவர்கள் இருவரையும் விரட்டி அடிப்பார்கள்.

காதலன் காதலியை அடைகிறானா பிறகு என்ன நடந்தது என்று எல்லாம் மிகவும் சுவாரசியமாக படமாக்கி இருப்பார்கள் ஆங்கிலத்தில்.

இந்த படத்தை தான் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை என்று எடுக்க பார்த்திருக்கிறார்கள் இவர்கள்.


அந்த பெரிய அரசியல்வாதியாக தமிழி பிரகாசுராசு, ஆண்களையே பிடிக்காத பாத்திரம், அந்த ஆங்கிலபடத்தில் வரும் ஓரினசேர்க்கை மகன். ஏற்கனவே காதலில் ஏமாந்த பெண்ணாக வரும் பாத்திரம், ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்ட தலைவி, நாயகி பாத்திரமும் அவளே. மிகவும் ஆழமான நண்பன் இந்த 3 நகைப்பர்கள் என்று பாத்திரங்களை உருவாக்கி கொண்டு விட்டார்கள்.

கடற்கரையில், வீட்டில் என்றும் பார்க்கும் இடங்களில் எல்லாம் பெண்களை கூடுவதும், தலைவியின் அம்மா நண்பனை உறவுக்கு அழைப்பதையும் தமிழ் காட்டமுடியாமல் அதை வசனங்களில் வக்கிரமாக சேர்த்துள்ளார்கள் தமிழில்.



அது தான் தீராத விளையாட்டு பிள்ளையை பார்க்க சகிக்கவில்லை. திமுக குடும்பத்தினர்கள் சமீப காலமாக இப்படி ஆங்கிலப்படங்களை தமிழில் உருவி எடுக்கும் வேலைகளை கடமையாகவே கொண்டு செய்து வருகிறார்கள். இது எங்கே சென்று நிற்கிறது என்று பார்ப்போம்.

Tuesday, February 2, 2010

வைரமுத்துவிடம் சில கேள்விகள்......

எனக்கும் வைரமுத்துவிடம் சில கேள்விகள் உண்டு. ஆனால் கட்டாயம் இராசாவை சார்ந்த கேள்வி அல்ல. இராசாவை கங்கை அமரன் திட்டாத திட்டா நீங்கள் திட்டி விட போகிறீர்கள். அல்லது அவர் தூற்றாத தூற்றா நீங்கள் தூற்றி விட போகிறீர்கள்.

கமலகாசனின் படத்தை இயக்கும் வாய்ப்பை தடுத்தார் இராசா என்றும்

யாரு மெட்டை பிரதி(copy) எடுப்பது இல்லை என்று அனுவுடன் சேர்ந்துக்கொண்டு பாலுவின் முன்னாலே இராசாவின் மானத்தை வாங்கியதைவிடவா அல்பமாக வாங்கிவிட்டார் இவர்.

ஒரு காலத்தில் அமெரிக்காவில் தங்கி ஓய்வாக இருக்க வேண்டி திரைபடத்தின் வாசம் கூட அறியாத ஒரு தமிழரின் வீட்டில் தங்கி இருந்தாரம் இராசா. ஊருக்கு திரும்பும் போது அதிக விலைக்கு ஒரு கைகடிகாரத்தை வாங்கியதை பார்த்த அந்த தமிழர் கேட்டாராம் இதைவிட மிக குறைவான விலையிலே மிக தரமான கைகடிகாரம் கிடைக்குமே இத்தனை விலை எதற்கு கொடுப்பான் ஏன் என்று கேட்க. இது எனது தம்பிக்கு வாங்குகிறேன் என்று மட்டுமே சொன்னார் என்றும் சொல்வார்கள்.

அந்த தம்பி பேசும் பேச்சா இது, கைங்கை அமரனாவது பரவாயில்லை. அவர்களது பிள்ளை செய்த காரியம் இருக்கிறதே. அவர்களுக்கு பாடல்கள் என்றால் அது பாடல்களின் வரிகளை வைத்துதான் பிடிக்குமாம். இசையை வைத்து எல்லாம் இல்லை என்று பேட்டி கொடுக்கும் அளவிற்கு சென்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவர்கள் சொன்ன புகார்களை எல்லாம் விட வைரமுத்து சொன்னவைகள் மிகக்குறைவே.

2009 ஆண்டுக்கான் பெட்னாவில் கலந்துகொள்ள சென்று இருந்தோம். வைரமுத்து 4 நாட்களுக்கு முன்னால் வந்தவர். ஆனால் விழா மேடைக்கு இரண்டாம் நாள் இறுதியில் தான் வந்தார். அவர் விழாவிற்கு வரும் முன் தான் ஒரு கவி அரங்கம் நடந்தது. அந்த கவியரங்கத்தில் கவிஞர் செயபாசுகரன் தவிர மற்றவர்களது கவிதைகள் மிக சுமாராகத்தான் இருந்தது. அங்கே வந்து ஒரு நல்ல கவிதையை வழங்காமல் சென்றது ஏன்.

செயபாசுகரனோ தனக்கு இது தான் முதல் வாய்ப்பு என்றாலும் எத்தனை அழகான கவித்தைகள், நாங்கள் அவரது கவித்தைகளுக்கு மகிழ்ந்தோம் அத்தனை மகிழ்ந்தோம். அவ்வளவு நகைச்சுவை அவரது கவித்தைகள். அது போல் இல்லை என்றாலும் ஒரு சிறு கவித்தையை தூவிவிட்டு சென்று இருக்கலாமே ஏன் அப்படி ஏதும் செய்யவில்லை.

மேலும் கடைசி நாளில் நடந்த இலக்கிய கூட்டத்தில், இலக்கியத்தை அலசு அலசு என்று அலசினார்களே எங்கே போனீர்கள் என்று. அந்த பக்கம் கூட தலைவைத்து கூட படுக்கவில்லை. ஏன் ஏன் ஏன்........

நல்ல தமிழில் பேச கூட முடியவில்லை என்றாலும்(கனிகாவும், செயசிறியை தவிர, இவர்கள் இருவருக்கும் இவ்வளவு அழகாக தமிழ் வரும் என்று எங்களுக்கு கனவிலும் தெரியாது. எத்தனை அழகான உச்சரிப்பு, எத்தனை அழகான வார்த்தைகள். அதிலும் தமிழ் வார்த்தைகளை கேட்டு அவர்கள் அடித்த நக்கல், அமெரிக்க தமிழ்கர்களின் தமிழ் புலமையை வெளிச்சம் போட்டு காட்டியது.) விழாவிற்கு வந்த திரைபட கலைஞர்கள் அனைவரும் எத்தனை அழகாக இரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்கள். தன்னை கேலி செய்த்தவர்களை அனுராத என்ன அழகாக கையாண்டார் அன்றைய இரவு. நீங்கள் ஏன் எதிலும் கலந்துகொள்ளாமல் வெளியேறினீர்கள்.

இராசாவை திட்டுவதாலோ அல்லது புகழ்வதாலோ அவரது புகழ் குறையப்போவதும் இல்லை. உங்களை பற்றி பத்தி பத்தியாக புகார் எழுதுவதாலோ உங்களது புலமை பழுது படப்போவதும் இல்லை. ஆனால் எனது கேள்விகளுக்கு எனக்கு பதில் வேண்டும். எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நாங்கள் இருந்தோம். மைல்சாமி அவர்களுக்கு கொடுக்காத பாதுகாப்பை வழங்கி எல்லாம் உங்களை மேடைக்கு தாங்கி கூட்டி கொண்டு வந்தார்களே ஏன் கவிதை சொல்லாமல் சென்றீர்கள் கவிஞரே, ஏன், எதற்கு.........

Wednesday, January 27, 2010

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - இறுதி பாகம்

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 4
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 3
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 2
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1

இன்றைய அமெரிக்க முதலாளியின் தேவைகள் எல்லாம் பணம், பணம், மற்றும் புகழ். பணத்திற்கு பிறகு புகழ் என்று இருந்தலும் பணமா புகழா என்று வந்தால் புகழ் போனாலும் பரவாயில்லை பணம் போகக்கூடாது என்று விழையும் முதலாளிகள் இவர்கள்.

அப்படி அமெரிக்காவில் இவர்களுக்கு எல்லாம் என்ன நெருக்கடி வந்தது என்று பார்த்தோமானால் ஒன்றும் இல்லை. அதே அளவிற்கு மக்களின் அலைபேசியின் பயன்பாடும் மற்ற செலவீனங்களும் உள்ளது. அப்படி இருக்கையில் பிறகு என்ன தான் வந்தது இப்படி கஞ்சதனம் செய்ய.

சிந்தித்து பார்த்ததில் ஒன்று தெளிவாகியது, அது இவர்களது செயல்களுக்கு விளக்கம், எரிகின்ற வீட்டில் பிடுங்கும் வரையில் இலாபம் என்ற செய்கை தான் அது.

அதாவது, இன்னமும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த வருமானம் எல்லாம் வரும் என்று தெரியவில்லை. ஆகவே இப்போதே எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டுவோம் பிறகு இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் போலும்.

இரண்டு மூன்று ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கா, இத்தனை ஆண்டு காலத்தில் இந்த கால கட்டத்தில் விடிவு பெறும் என்று யாராலுமே உறுதியாக சொல்ல முடியவில்லை.

ஒபாமா ஆட்சிக்கு வரும் போது இனிமேல் ஒரு 2 ஆண்டு காலத்தில் மூச்சாவது விட முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் ஓராண்டு முடிந்த தருவாயில், இன்னமும் 2 அல்லது 3 ஆண்டுகளாவது தேவைப்படும் என்ற பேச்சு அடிகொள்ள ஆரம்பித்துள்ளது.

மேலும் அதோடு நில்லாமல், எங்கே எல்லாம் ஒபாமா கட்சி வெற்றி பெற்றதோ அங்கே எல்லாம் மறுபடியும் எதிர்கட்சியினர் இடத்தை பிடிக்க துவங்கியுள்ளார்கள். எதிர்கட்சியினர்கள் வருவதை பற்றி ஒரே ஒரு வருத்தம் தான். ஒபாமா கட்சியினர், மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு எண்ணமாவது இருக்கிறது, எதிர்கட்சியினரின் ஒரே நோக்கம், பணத்தை முதலில் கொள்ளை அடிக்க வேண்டும், அதற்கு பிறகு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று 8 ஆண்டுகாலம் இருந்தது போல் இன்னமும் ஒரு 8 ஆண்டு காலம் நீடித்தால். அமெரிக்காவின் அத்தனை பணக்காரர்களும் இந்தியாவில் தங்கிக்கொண்டு தங்களது தொழிலை சீனாவில் நடத்துவார்கள்.

அமெரிக்க இன்றைய இங்கிலாந்து எப்படி அந்த கால கதையை பேசிக்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள திணறிக்கொண்டு இருக்கிறதோ அந்த நிலைக்கு அமெரிக்கவும் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இதில் வேடிக்கை என்ன என்றால், அமெரிக்க நன்றாக இருக்கும் போதும் நன்றாக இருப்பவர்களும் இந்த பணக்காரர்கள் தான், அமெரிக்கா நொடிந்து போன நிலையில் நன்றாக இருப்பவர்கள் இந்த பணக்காரர்கள் தான். நாடோடு சேர்ந்து துன்பம் அனுபவிப்பது நடுத்தர மற்றும் கீழ் நிலை மக்கள் தான்...... இந்தியாவை போல.......

இனி கடவுள் தான் காப்பாற்றனும் அமெரிக்கவையும் சரி உலகத்தையும் சரி.............