Thursday, May 24, 2018

இனி யாராவது போராட்டம் செய்வீங்க

எதுக்கு எடுத்தாலும் போராட்டம் எப்பவும் போராட்டம் என்றால் எப்படி. நடக்கிறது நடக்கட்டும் என்று இருந்துவிட்டு போகவேண்டியது தானே....

யாரோ சொன்னாங்கன்னு கொடிய தூக்கிகிட்டு வெற்றி வேல் வீர வேல்லுன்னு போய் கடைசியில 13 போர் பலி. யாரோ பெற்ற அந்த பிள்ளைகளை எதற்காக பலி கொடுக்க வேண்டும்....

தமிழ் நாட்டின் வளங்களை எல்லாம் கொள்ளை அடித்து வடநாட்டு முதலாளிகளுக்கும் வெளிநாட்டு மக்களுக்கும் இந்திய அரசு விற்றால் உங்களுக்கு என்ன என்று இருக்க வேண்டியது தானே.

தமிழகத்தில் இருக்கும் கனிம வளங்கள் மட்டும் இல்லை கல்வி வளங்களை கூட எடுத்து விற்றுவிட்டு தான் போகட்டுமே உனக்கு ஏன் இத்தனை கோபம்.

விட்டு விடுங்கள் போராட்டங்களை, விட்டு கொடுங்கள் தமிழகத்தை. பாரத மாதாகி சே, வாழ்க பாரதம்.

0 comments: