Thursday, April 18, 2019

பாசகவிற்கு பசு ஏன் அவ்வளவு முக்கியமானது

பாசக சங்கபரிவாரத்தின் அரசியல் முகம். வெளியில் அழகாக சிரித்து பேசினாலும் அந்த அழகிற்குள் பொதிந்து இருக்கும் நச்சு அதே பழைய ஆலகால நச்சு தான்.

இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளின் பலவீனம் இந்த மாதிரியான நச்சு அரசியல் சக்திகளை சகித்துக்கொண்டு இருப்பது. சரி செய்திக்குள் வருவோம்

இந்த முறை பாசக 2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பசுவை மனிதர்களின் தாயாக பெருமையாக சொல்லிக்கொள்ளும் கூட்டம் பெருகி இருக்கிறது. அப்படி சொல்லிக்கொள்வதில் பெருமை படுவதில் முன்ண்ணியில் இருப்பது இளைஞ்சர்கள் என்றது தான் சோகமே.

பசு ஒரு விலங்கு, அந்த விலங்கை தனது தாய் என்று ஏன் அந்த இளைஞர்களை சொல்ல வைக்க வேண்டும். அப்படி சொல்வது அவர்களை சதையும் இரத்தமுமாக பெற்று எடுத்து பாலூட்டி வளர்க்கும் அன்னையை இழிவுபடுத்தும் செயல் என்று அவர்களின் புத்திக்கு வராமல் மூளை சலைவை செய்தது எப்படி.

உலகில் இறைவனை நம்பும் மனிதர்கள், அந்த இறை நம்பிக்கையின் பேரில் தனது தந்தையை சேவல் என்றோ, தனது தாத்தாவை எலி என்றோ தனது பாட்டியை பாம்பு என்றோ சொல்வதே இல்லை.

ஆனால் இந்த சமீபத்திய பாசக இளைஞர்கள் தனது தாய் பசு என்று ஏன் சொல்லவேண்டும் என்ற ஆவலோடு அவர்களோடு விவாதிக்கும் போது கடைசியாக அவர்கள் சொல்வது பசு தான் மனித இனத்தையே பாதுகாத்த முதல் விலங்கினம். அந்த பசு மட்டும் இல்லாமல் போய் இருந்தால் இன்றைக்கு இந்த மனித இனமே இருந்து இருக்காது என்றும் அதனால் தான் அந்த பசுவை காமதேனு என்று அழைப்பதாகவும். அப்படி மனித மொத்த குலத்தின் தாயாக பசு இருந்ததினால் பசு தான் தனக்கு தாய் என்றும் ஒரு அசத்தலான பதிலாக வந்தது.

புராணங்களிலும் சரி இதிகாசகங்களிலும் சரி இது வரையில் இப்படி பசு மனிதனின் தாய் என்று ஒருபோதும் விளித்ததும் இல்லை. நாக கன்னி, மோகினி, கன்னி பேய், இரத்த காட்டேரி, இப்படி என்ன என்ன வடிவங்களில் அசாதாரணமான கற்பனை பாத்திரங்களை கொண்ட புராண இதிகாசகங்களிலில்  கூட ஒரு பசு ஒரு மனிதனை பெற்று எடுத்து வளர்த்தாகவோ அல்லது ஒரு மனிதனை தனது மகனாக தத்து எடுத்து வளர்த்தாகவோ எங்கேயும் கூறப்பட்டதாக கதைகளிலோ கட்டுரையிலோ அல்லது திரைபடங்களிலோ வந்து இல்லை.

இப்படி எந்த தொடர்புகளும் இல்லாமல் திடீர் என்று பசு தாயாக பரிணாமித்தது ஏன் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. அதுவும் பாசக ஆட்சி 2014ல் அமைந்த பிறகு மிகவும் தீவிரமாக அவர்களுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் இருக்கும் பசு ஏன் இவ்வளவு முக்கயத்துவம் பெறவேண்டும் என்றும் யோசித்து பார்க்க வேண்டியும் உள்ளது.

உலகில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் புதை பொருட்கள் அனைத்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் மிஞ்சி போனால் டைனோசர்களின் எலும்பு கூடுகள் தவிர அடுத்த கிரகத்து மனிதர்களின் கூடுகளோ அல்லது மிகவும் வித்தியாசமான ஒன்றோ இது வரை கிடைத்தாக இல்லை.

இந்தியாவை பொருத்த அளவில் இது வரை வெளி வந்து இருக்கும் புதை பொருள் ஆராய்ச்சிகள் அசோகர்காலத்தவைகளே பழமையானவைகள். அதற்கு பழமையானவைகள் இன்னும் ஆராய்சிக்குட்படுத்தபடாமல் மூடி வைக்கப்பட்டு இருக்கிறது.

அப்படி மூடி வைக்கப்பட்ட இடங்கள் தமிழர்களின் அடையாளங்களாக கருதப்படும் பூம்புகார் நகரம், தற்பொழுதைய பூம்புகார் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் கடலிலும், ஆதிச்ச நல்லூர், கீழடி போன்ற இடங்கள். இந்த இடங்களில் கிடைப்பெற்ற பொருட்கள் அசோகர் காலத்திலும் மிக பழமையானவைகள்.

அதாவது இது வரை ஆதியாக கொண்டு எழுதப்பட்டு வந்த இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கவல்ல ஆராய்ச்சிகளாக அது அமையக்கூடும் என்றதும் அந்த ஆராய்சிகளை தள்ளிப்போட்டு பிறகு மண்ணை அள்ளி போட்டு மூடும் வேலையும் நடந்து வந்தது.

ஒரு காலகட்டத்தில் அந்த புதை பொருள் ஆராய்ச்சிகளை இனியும் காரணங்கள் சொல்லி புதைத்தாலும் பின்னொரு காலத்தில் வெளிவந்தே ஆகும் என்ற கூற்றுகளையும் அறிகுறிகளையும் வெளிக்காட்ட இந்த பரிவாரங்கள் என்ன செய்வது என்று கையை பிசந்துகொண்டு ஒரு குறுக்கு வழியை கண்டு பிடித்தார்கள்.

அந்த குறுக்கு வழிதான் இது வரை சிந்துவெளி நாகரீகம் வரை கடைசியாக கிடைத்த கீழடி ஆய்வுகள் வரை கிடைத்த மாடு தோற்றங்களை குதிரை தோற்றம் என்று நிறுவுவது என்று துவங்கி இந்திய ஆராய்சியாளர்கள் மற்றும் வெளி நாட்டு ஆராய்சியாளர்களையும் சம்மதிக்க வைக்க போலியான ஆதாரங்களை கொண்டு நம்ப வைக்கப்பார்த்த போது ஞாயமாக இருக்கும் ஆராய்சியாளர்கள் ஒப்புகொள்ளவில்லை என்றதோடும் மட்டும் நில்லாது இப்படி ஒரு முயற்சி உள் நாட்டிலும்  நடப்பதாகவும் உலகுக்கு தெரிவித்தார்கள்.

அப்படி இப்படி என்று எவ்வளவோ முயன்று மாட்டிடம் அவர்களது குதிரைகள் தோற்று போனது.

இந்தியாவின் ஆதி நாகரீகம் இந்து நாகரீகம் தான் அந்த நாகரீகத்தின் சான்றாக இனி எப்பவும் எதுவும் காட்டமுடியாது என்று முடிவாக ஆனது. ஓலை சுவடி, கல்வெட்டுகள், அல்லது புதை பொருள் என்று இது வரையில் அவர்களது வாதத்திற்கு வலு சேர்க்கும் எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இது வரை கிடைக்கவில்லை. அந்த ஆதிரத்திலும் ஆற்றாமையிலும் தமிழர்களின் அடையாளமான மாட்டை ஆரிய சின்னமாக மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார்கள்.

அதன் முதல் முயற்சி சல்லிக்கட்டை தடைவிதித்தோடு நில்லாமல் இனி எப்பவும் நடத்தவே முடியாத வண்ணம் அமுக்கியது. வேண்டும் என்று கேட்கையில் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துவிட்டது என்று சப்பை கட்டு கட்டியதோடு மட்டும் நில்லாது, இந்தியா முழுவதும் எந்த எந்த மாடு சம்பந்தமாக இருக்கும் அத்தனை கலாச்சாரத்தையும் பீட்டாவின் துணைக்கொண்டு நிறுத்தினார்கள்.

பிறகு மெல்ல பசுவிற்கு புணித பிம்பத்தை பூசி பிறகு மனிதர்களின் தாய் என்று சொல்ல வைத்தார்கள். மக்களையும் சட்டத்தையும் விட பசு முக்கியம் என்று இந்திய பாராளுமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பேச வைத்தார்கள். இன்னும் சிறிது காலத்தில் எங்கே எல்லாம் பசுக்களின் சின்னங்கள் கிடைக்கின்றதோ அவைகளை காட்டி இது இந்து மத அடையாளங்கள் என்றும் தமிழர்கள் எல்லாம் கைபர் போலன் கனவாய் வழியாக தென் ஆப்ரிக்கவில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியது மட்டும் இல்லை இப்போது இந்தியாவை சொந்தம் கொண்டாடுகிறார்கள் ஆகவே தமிழர்களை ஆப்ரிக்காவுக்கு விரட்டுங்கள் என்று சொல்வார்கள்.

இது தான் பசுவிற்கு பாசகவின் பாசத்திற்கு உள்ள தொடர்பு. கிருத்துவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், இசுலாமியர் பாக் செல்ல வேண்டும், தமிழர்கள் ஆப்ரிக்கா செல்ல வேண்டும் என்றதே பாசகவின் திட்டம்.........

Wednesday, April 17, 2019

பாசகவை கழுவி கழுவி ஊற்றும் தேர்தல் ஆணையம்

கடந்த ஒரு மாத காலமாக வேலூர், தூத்துகுடி, கரூர் என்று வரிசையாக கட்டு கட்டாக புதிய ரூபாய் கட்டுகளை தொகவில் காட்டப்படுகிறது.

இந்தியர்களின் பழைய ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று சொல்லிய பணமதிபிழப்பு நடவடிக்கையில் இந்தியர்களின் பணம் எல்லாம் யார் யாரிடம் எவ்வளவு பணம் இருந்தது, மற்றும் நாள் தோறும் வந்து சேர்ந்துக்கொண்டு இருக்கிறது என்று கண்டுபிடிக்க எல்லா பணபரிவத்தனைகள் எல்லாம் வங்கிகளின் வழியாக மட்டும் தான் நடத்த வேண்டும் என்று சட்ட திருத்தங்கள் முதல் தனி நபர் அடையாளங்கள் இல்லாமல் அவரவர் வங்கி கணக்கில் கூட பணத்தை எடுக்க முடியாது என்று மாற்றி அமைத்து முடித்துவிட்டோம் கள்ளப்பணம் கருப்புபணம் எல்லாம் இனி இல்லவே இல்லை என்று முழங்கியது பாசக.

ஒன்று இந்த கட்டு கட்டாக காட்டப்படும் பணம் யார் யார் வங்கி கணக்கில் இருந்து எட்டுத்தவை என்றும் சேர்த்து வெளியிட வேண்டியதுதானே. அதை எல்லா வெளியிடாமல், யார் யார் வீட்டில் எடுத்தோம் என்று மட்டும் சொல்வதை நீதிமன்றமும் கூட கேள்வி கேட்காமல் இருப்பதும் தான் பரிதாபமாக இருக்கிறது.

மோடி சொல்லட்டும் இந்த பணம் எல்லாம் எங்கு இருந்து வந்தது என்று. அப்படி சொல்ல முடியவில்லை என்றால் பொது மக்கள் பணம் எடுக்க இருக்கும் கட்டுப்பாட்டை அப்படியே நீக்க வேண்டும்.

Friday, April 5, 2019

மோடியின் சாதணை பட்டியல்

1) இராணுவத் துறையில் இருக்கும் இரபேல் ஒப்பந்தம் காணாமல் போனதாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது

2) மல்லையாவில் துவங்கி மோடிகள் வரை 52 பெட்டிகள் முதல் 150 பெட்டிகளில் பணம் நகை தங்கம் மற்றும் சேமிப்பு பத்திரங்கள் என்று எந்த விமான நிலையத்தில் சாமானியன் சென்ட்டு பாட்டி கூட கொண்டு போக முடியாது என்று துணை இராணுவத்தினரை வைத்து விரட்டியடிப்பார்களோ அதே துணை இராணுவத்தின் உதவியுடன் அத்தனை பணம் செல்வங்களை அழகாக வழியனுப்பி வைத்தது.

3) ஆட்சியில் இருந்த 5 வருடமும் ஆண்டுக்கு 7.5 இலட்சம் கோடி ரூபாய் என 35.25 இலட்சம் கோடி ரூபாய்க்களை கார்பரேட்டு நிறுவனங்களின் கள்ளப்பணமாக மாற்றி கொடுத்து சாதணை புரிந்தது.

4) மேலே செலவழித்த ரூபாய்க்களை கணக்கு காட்ட ஏழைபாழைகளின் சில நூறு ரூபாய்கள் கூட வங்கியில் வந்து விழவேண்டும் இல்லை என்றால் சிறை பணம் பறிப்பு என்று எல்லாம் பயமுறுத்தி. கடைசியில் வங்கியில் உள்ள பணத்தில் குறைந்த அளவு பண வைத்திருப்பு அளவுக்கு இல்லை என்று ஏழைபாழைகளின் சொற்ப்பணத்தை சுரண்டி அந்த பணக்கார கார்பரேட்டுகளுக்கு கள்ள பணமாக 35.25 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளார் மோடி.

5) மோடி முதல்வராக இருந்த வரையில் கொள்ளை அடித்த பணம் மற்றும் பிரதமாராக அம்பாணிக்கும் அதாணிக்கும் வேலை பார்த்தற்கான கூலியை வெற்றிகரமாக மல்லையா மோடிகளின் வழியாக வெளி நாட்டில் பதுக்கியது. அதனால் தான் அவர்களை பற்றிய எந்த ஒரு கேள்விக்கும் இந்திய வெளியுரவு துறை இது வரையில் எந்த பதிலும் கொடுக்கவில்லை இங்கிலாந்திற்கு

6) சீனாவின் கட்டளைக்கு இணங்க அடி பணிய இந்த இராணுவ படைக்கு வாங்க இருந்த 126 போர் விமானங்களை வெறும் 36 ஆக குறைத்தது.

7) வெளி நாடுகளுக்கு இந்தியாவின் பெட்ரோல் ரூ 32க்கு ஏற்றுமதி செய்துவிட்டு இந்தியர்களுக்கு ரூ 80 என்று இந்த 5 ஆண்டுகளாக விற்று சந்தையில் இருக்கிற சாதாரண மக்களின் விலை பொருட்களை பலமடங்கு விலைக்கு வாங்க வைத்து மறைமுகமாக கார்பரேட்டு நிறுவனங்களை சட்ட ரீதியாக கொள்ளையடிக்க வைத்தது.

8) பாசக உருப்பிணர்கள் தவிர மற்ற அனைவரும் ஒரு பதட்டத்திலேயே இருக்கும் படி பார்த்துக்கொண்டுதது.

9) பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு தனதும் தனது சகாக்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி கொடுத்தது. சமீபத்தில் பாசகவின் கூட்டணி கட்சியான அதிமுக தன்னிடம் வைத்து இருந்த கருப்பு பணத்தில் 3.5 இலட்சம் கோடிக்கு வைரம் வாங்கி வைத்து விட்டு இப்போது விற்று பணமாக மாற்றி இருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

10) வட மாநிலங்களில் ஒருவரும் இரயிலில் பயண சீட்டு எடுப்பது இல்லை எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும். வட மாநிலங்களுக்கு இரயிலில் பயணித்தவர்களுக்கு தெரியும். அப்படி வட மாநிலங்களுக்கும் சேர்த்து தான் தென் மாநிலங்களில் கட்டணம் மற்றும் தண்ட தொகைகள் பயன்படுத்தபடுகிறது. அதே போல் இப்போது தென் மாநிலங்களின் கல்வி நிறுவனங்களையும் சட்ட ரீதியா கைப்பற்றியது நீட் தேர்வை வைத்து.

11)  நிதி ஆயோக் என்ற பெயரில் மாநிலங்களுக்கு வருடா வருடம் வழங்கப்படும் நிதியை நிறுத்தி செலவு செய்த பணத்தின் கணக்கை கொடுத்தால் மட்டும் பணம் என்று பொய் சொல்லி பாசக ஆளாத மா நிலங்களுக்கு கொடுக்கும் பணத்தை ஏமாற்றியது மட்டும் இல்லை. தான் என்ன என்ன திட்டம் எல்லாம் சொல்கிறேனோ அவைகளுக்கு மட்டும் தான் பணம் மற்றவைகளுக்கு இல்லை என்று மிரட்டியது. இதனால் தான் பழனிசாமி 8 வழி சாலையை போட்டே ஆவேன் என்று நின்றதும் , ஒக்கி மற்றும் கசா புயலுக்கு மோடி அரசு பணம் கொடுக்கவில்லை என்று சொன்னதும்.

12) GST என்ற பெயரில் மாநிலங்களின் வரிப்பணத்தை நேரே பெற்று மாநிலங்களை மோடியிடம் நிதி ஆயோக்கிடம் கையேந்த வைத்தது.

13) வருடத்திற்கு 2 கோடி புதிய வேலை வாய்புகளை உருவாக்குவேன் என்று 2014 தேர்தல் அறிக்கையில் சொன்னது மட்டும் இல்லாமல் அப்படி செய்யாத காங்கிரசை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று முழங்கிவிட்டு, இந்த 5 ஆண்டுகளில் நீங்கள் உருவாக்கிய புதிய வேலை வாய்புகள் எங்கே என்று கேட்க போய் பக்கோடா போட்டு விற்பது, மாடு வளர்த்து பால் விற்பது என்று செய்யுங்கள் என்று மிகவும் திமிராகவும் நக்கலாகவும் படித்தவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பார்த்து பரிகாசித்தது.

14) சாமானியன் ஒரு வாரத்தில் 2000 ரூபாய்க்கு மேல் தனது கணக்கில் இருந்து எடுக்க முடியாது என்று விரட்டி அடிக்கப்பட்டு அதே நேரம் தமிழக்த்தில் இராதாகிருட்ணன் நகர் தேர்தலில் கொடுக்க ரூ 90 கோடி புதிய 2000 ரூபாய் தாட்கள் பிடிக்கப்பட்டதாகவும் அதனால் தேர்தலை நிறுத்துவதாகவும் தேர்தல் அணையம் மூலம் வாக்குமூலம் கொடுத்தது.

15) பன்னீர் செல்வத்தின் பினாமி வீட்டில் 210 கிலோ தங்கள் 200 கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றியது அதே நாட்களில் நடந்தவைகள்.

16) கோவா, கர்னாடகா என்று ஆளுனர்களின் துணையுடன் புறவாசலின் வழியில் ஆட்சியை அமைத்தது. இதே போல் வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததும். ஏன் இப்படி கொஞ்சம் கூட நேர்மை இல்லாமல் நடக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் தர்மத்தின் படி நடக்கிறோம் என்று நக்கலாக பதில் சொன்னது.

17) கடலை மிட்டாய்க்கு 20% GST வரி என்றும் வெளி நாட்டு நிறுவனங்களின் பீட்சாவுக்கு 4% GST வரி என்று நக்கலாக நடுத்தர மற்றும் ஏழை மக்களை பார்த்து பரிகாசமாக நடத்தி காட்டிக்கொண்டு இருப்பதும். ஏன் இப்படி மனசாட்சியே இல்லாமல் என்றால் அப்படி தான் செய்வோம் உங்களால் முடிந்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்று நிர்மலாவை வைத்து சொல்ல சொன்னது.

18) இது வரை மோடி சென்ற நாடுகளில் இருந்து ஒரே ஒரு முதலீடைக்கூட இந்தியாவுக்கு கொண்டு வராமல் கடைசியில் மேக் இன் இந்தியா என்று புழுகிவிட்டு பட்டேல் சிலையை செய்ய சொல்லி சீனாவிற்கு 3000 கோடி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தது.

19) உலகம் முழுவதும் மற்று எரி சக்திக்கு மாற வேண்டும் என்று தீவிரமாக உழைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியாவில் மட்டும் இன்றளவும் வெறும் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடும் வண்டிகளை மட்டும் வைத்து இயக்குவதும் மேலும் அந்த நடவடிக்கை பற்றி எந்த ஒரு வார்த்தையும் இது வரையில் பேசாமல் இருப்பது மட்டும் அல்ல வேறு யாரும் பேசாதது போல் பார்த்துக்கொண்டதும்.

20) மோடி செய்த இரபேல் ஒப்பந்தத்தை பார்த்து உலகமே சிரிக்கும் படியாக மாற்றி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றியது.

21)  HAL நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று மைய அரசு கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுக்கவும் என்று கேட்க வைத்த பெருமையும், இந்த நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை இன்னும் ஒரு செங்கல் கூட தரையில் பதிக்காத சியோ நிறுவனத்திற்கு பிடுங்கி கொடுத்த பெருமையும் மோடியையே சாரும்.

22)  BSNL நிறுவனம் வரலாறிலே முதல் முறையாக சம்பளம் போடாமல் தள்ளிப்போட்டது இந்த ஆண்டு தான் மோடியின் ஆட்சியில் தான் நடந்தது.

23) 2014 முதல் 2019 வரை தனியார் வேலைகள் குறைக்கப்பட்டு ஆட்குறைப்பு நீண்டு கொண்டே போனது ஒழிய புதிய வேலை வாய்ப்புக்கள் வரவே இல்லை.

24) கிரிச்சா வைதியனாதனையும் பழனிசாமி மற்றும் பன்வாரிலாலையும் வைத்துக்கொண்டு தமிழக அரசு வேலைகளில் 90% மக்களை பீகார் மற்றும் இந்தி மட்டுமே பேசும் மக்களை தமிழில் பரீச்சை எழுத வைத்து 100க்கு 360 மதிப்பெண்கள் வாங்க வைத்து சென்னையிலும் தென்னக இரயில்வேயிலும் வேலையில் அமர்த்தியது.

25) பான் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அட்டை, ரேசன் அட்டை என்று பல அட்டைகளை எதற்கு எடுத்தாலும் கொண்டு வந்து காட்டனும் இல்லை என்றால் இல்லை என்று சாக்கு போக்குகள் காட்டியது ம். பின்னாளில் ஆதார் அட்டையுடன் இதை இணை அதை இணை என்று மக்களை வதைத்ததும். அரசு செய்ய வேண்டிய இந்த காரியத்தை படிப்பறிவு இல்லாத மக்களை அலையவிட்டு பணம் செலவழிக்க வைத்த அறிவாளி இவர்.

26)  நாட்டில் நல்லது எது நடந்தாலும் அதற்கு காரணம் நான் தான் என்று கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம் சொன்ன அற்ப மனிதர் இவர். எந்த கெட்டவை நடந்தால் மட்டும் அதற்கு காரணம் காங்கிரசு என்றும் சொன்ன முதல் அற்பர் இவராவார்.

27) மோடி செல்லும் வெளிநாடுகளில் எப்படி எல்லாம் அற்பமாக பேச முடியுமோ அப்படி எல்லாம் அற்பமாக பேசிய அற்ப மனிதர் இந்த மோடி. இதே இந்துத்துவா வழிகளில் வந்த விவேகாணந்தர் தான் அமெரிக்காவில் சென்று சகோதர சகோதரிகளே என்ற வரலாற்று உரை நிகழ்த்திய இயக்கத்தின் அற்ப மனிதராம் இவர் வெளிநாடுகளில் சென்று தான் பதவிக்கு வந்த பிறகு தான் இந்தியர்கள் உடையணியவே கற்றுகொண்டார்கள் என்ற அளவிற்கு துடுக்கு தனமாகவும் பொறுப்பற்ற விதமாகவும் பேசிய சாதணையாளர்.

 28) 2016ல் வெறும் 50 நாட்கள் தான் கேட்கிறேன் அப்படி 50 நாட்களில் எல்லாம் சரியாகா விட்டால் என்னை உயிருடன் எரியுங்கள் என்று சொல்லிவிட்டு, இன்றும் சரி செய்ய முடியாத பொருளாதார வீழ்சியாக மாறிய பின்ப்பும் எந்த வித கூச்சமும் இல்லாமல் மக்களிடம் ஓட்டு கேட்க அரிதாரம் பூசி அடவுகட்டி ஆடுகிறார் மேடைகளில்.

29) மோடி ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு தான் படிக்கிறார் அதையே தமிழில் எச்ச இராசா மொழி பெயர்த்து எழுதி வைத்துக்கொண்டு தான் படிக்கிறார். பேசாமல் இந்த இரண்டையும் செய்தி தாளுக்கு கொடுத்துவிட்டால் வேண்டியவர்கள் படித்துகொள்வார்கள். அதை விடுத்து என்னவோ மோடி அவரது பேச்சுகளை முழுதும் மனப்பாடமாக பேசுவது போல் prompter களை வைத்துகொண்டு நடிப்பான் ஏன்

30) மோடியின் வரலாற்று குறிப்புகள் எதுவாக இருந்தாலும் தப்பும் தவறுமாகவே பேசி சாதணை படைத்த ஒரே மனிதர்

Wednesday, April 3, 2019

மோடிக்கு மேடைகளில் பேச ஒரு செய்தி கிடைத்தது - ஐயோ பாவம்

காங்கிரசு தேர்தல் அறிக்கையை வெளியிட்டாலும் வெளியிட்டாங்க, நேற்றில் இருந்து மோடி காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய் புரட்டு புழுகு மூட்டை என்று வாய்க்கு வந்த படி எல்லாம் உளர ஆரம்பித்துள்ளார்.

தேர்தல் அறிவித்த இத்தனை நாளும் என்ன சொல்வது மேடைகளில் என்றி விக்கி தவித்தவருக்கு இப்போ இப்படி ஒரு கேவலமான உத்தி கிடைச்சு இருக்கு பாவம்.

முதன் முறையா நாட்டை ஆண்ட மனிதர் எப்படி பிச்சைகாரதனமா ஓட்டு கேட்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் பாவம்.

தான் அதை செய்தே இதை செய்தேன் இனி இவைகளை செய்வேன் என்று சொல்லி வாக்கு கேட்க வக்கில்லாமல் அவன் பொய் சொல்கிறான் அதனால் எனக்கு ஓட்டு போடு என்று கேட்க்கும் கேவலமான நிலைக்கு வந்துவிட்டது பாசகவும் அதன் மோடியும்.

எனக்கு தெரிந்து பாசகவின் தேர்தல் அறிக்கையும் அதன் சாதணை அறிவிப்புகளும் தான் டுபாகூராக தெரிகின்றது. எங்கே தன்னை சொல்லிவிடுவார்களோ என்று முந்திக்கொண்டு சொல்கிறார்கள் போலும்.

தொகா விவாதங்களில் மக்கள் சற்று நக்கலாகவே கேட்கிறார்கள் உங்களின் வாக்குறுதிகளும் அதிக் என்ன நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று. அதற்கு கொஞ்சம் கூட கூச்சப்படாமல் எல்லாவற்றையும் நிறைவேற்றியாச்சு என்று புழுகுகிறார்கள். உடனே காசுமீரத்தில் ஆயுத படையின் சிறப்பு அதிகாரம் பறிக்கப்படும் என்று 2014ல் சொன்னீங்களே அதை நிறை வேற்றுவதா காங்கிரசு இப்போ தேர்தல் அறிக்கை விட்டு இருக்கேன்னு கேட்க்க அந்த பாசக நபரின் முகம் போன போக்கை பார்கனுமே.....