Tuesday, July 3, 2018

70 ஆண்டுகளில் இல்லாத சாதனை பாசக வெறும் 2 ஆண்டுகளில் சாதித்து இருக்கிறது

2016ஆம் ஆண்டிற்கு பிறகு சுட்சர்லாந்தின் வங்கியில் இந்தியர்களால் சேமிக்கப்படும் நல்லப்பணம் 70 ஆண்டுகளில் சேர்த்த தொகையைவிட இரண்டே ஆண்டுகளில் 50% கூடியதாக சுட்சர்லாந்து வங்கி நிறுவனம் பாசக அரசை வாழ்த்தி இருக்கிறது.

அது மட்டும் அல்லாது சுட்சர்லாந்து வங்கிக்கு வரும் பணம் எல்லாம் கள்ளப்பணம் என்று உலகமே பரிகாசிக்கும் நிலையில், இந்தியர்கள் சுட்சர்லாந்து வங்கிக்கு கொண்டுவந்து கொட்டும் பணம்  எல்லாம் நல்லப்பணம் என்று இந்திய அரசு சாண்றிதழ்களோடு கொடுப்பதில் சுட்சர்லாந்து வங்கி மகிழ்ச்சியையும் நன்றியையும் வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிசிட்டல் பண பரிவர்த்தனைகள் கூடி இருப்பதாக பாசக அரசு செய்திகள் குறிப்பிடுவதும் இந்த சுட்சர்லாந்து பண பரிவர்த்தனைகளை தான் சொல்கிறார்கள்.

பாராட்டுக்கள் மோடி இன்னும் இது போல் நிறைய நடவடிக்கைகளை எடுத்து நாட்டில் இருக்கும் கள்ள பணத்தை எல்லாம் நல்லபணமாக மாற்றி கொடுங்கள்.......

0 comments: