Thursday, August 13, 2015

அப்போ சுசுமா சுவராச்சு லலித்மோடிக்கிட்ட பணம் வாங்கிக்கொண்டு மனிதாபினாம உதவி உதவியது உண்மை

 நேற்றைக்கு நாடாளுமன்ற விவாதத்தில் லலித்மோடியிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு மறுக்காமல் சோனியா குத்ரோச்சிகிட்ட வாங்கின பணம் எவ்வளவுன்னு சொன்னதின் மூலம் உதவியை வியாபாரமாக சுசுமா செய்து பணம் பார்த்து இருக்கிறார் என்று ஒத்துக்கொண்டு விட்டார். இனிமேல் கேட்டால் நான் எப்போது அப்படி சொன்னேன் என்று நீதிமன்றதில் பிறழ் சாட்சிகள் பிறழ்வது போல் பேசுவார்.

இதிலே லலித்மோடி ஒன்றும் ஓடி ஒளிந்துக்கொள்ளவில்லை என்ற சான்றிதழ் வேறு.

அது சரி காந்தியை கொலை செய்த கட்சியினர் இடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்....

மனிதாபிமான உதவி என்ற என்ன அழகான அலங்கார வார்த்தைகள் இந்த உதவி வியாபாரத்திற்கு. ஆக பணமும் பதவியும் பட்டமும் சாதியும் இருந்தால் பாசக ஆட்சியில் எது வேண்டும் என்றாலும் விலைக்கு வாங்கலாம்.

இப்படி தான் பாசக ஆட்சி இருக்கும் என்று அன்றைக்கு நாங்கள் சொல்லும் போது இல்லை இல்லை இல்லவே இல்லை என்று சொன்னவர்கள் எல்லாம் ஏன் மௌனித்து இருக்கிறார்கள் இன்று, ஏமாந்து போனோம் என்ற ஏமாற்றம் இல்லாமல் வேறு என்னவாக இருக்கும்.

0 comments: