Saturday, July 18, 2015

தினமணி ஆசிரியர் என்ன சொல்கிறார் -சேவையும் தேவையும்... -- இது சரியா முறையா

சேவையும் தேவையும்...  என்ற தலைப்பில் தினமணியில் இன்று வந்த தலையங்கம்.

மொத்தத்தில் அவர் என்ன சொல்கிறார் என்றதை நாம் இப்படி பார்த்தால் தான் அவர் சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது என்று தெரியும்.

அந்த காலத்தில் நவீண வசதிகள் இல்லாத காலத்தில் அமெரிக்காவில் உள்ள ஒருவரிடம் பேசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 20 வசூலித்தார்கள். ஆனால் இன்றைக்கு வந்து இருக்கும் நவீண கண்டுபிடிப்புகளின் உதவியில் அதே அமெரிக்காவிற்கு அதே ஆளிடம் பேச ஒரு நிமிடத்திற்கு 4 பைசா தான் ஆகுகிறது.

அன்றைக்கு ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாய் தந்தது போல் இப்போதும் கொடுக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் எந்த கண்டுபிடிப்புகள் உதவுதோ அவைகளை நீக்கி அதே பழைய கட்டணத்தை வாங்குவது தான் சரி என்று மனதார சொல்கிறார் ஆசிரியர்.

ஒரு காலத்தில் உள்ளூர், வெளியூர், வெளிமா நிலம் என்று இருந்த தொலை/அலை பேசிக்கட்டணம் இன்றைக்கு எங்கே பேசினாலும் நிமிடத்திற்கு இவ்வளவு தான் என்று வந்தது காலத்தின் கட்டாயமும் தேவையும் கூட. அதை விடுத்து இந்தியர்கள் சொரணை கெட்டவர்கள் என்ன செய்தாலும் கேட்கும் காசை கொடுத்துவிட்டு போவார்கள் என்று நினைப்பது சரியான சிந்தனை இல்லை.......

0 comments: