Tuesday, December 1, 2015

மீண்டும் தனது நாட்டுப்பற்று சிறகை விரிக்கும் பாசக கழுகு - நரேந்திர மோடியின் வீட்டில் வான்வழி தாக்குதல்

நரேந்திர மோடியின் வீட்டில் வான்வழி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் என்ற சேதியை அனைவரும் படித்து இருப்பார்கள்.

முதலில் இந்த தாக்குதலுக்கு ஆளாகும் அளவிற்கு நரேந்திர மோடி இது வரை என்ன செய்துவிட்டார் என்று அவரது வீட்டை தாக்க திட்டம் போட்டு இருப்பதாக தகவல் கசியவிட்டவர்கள் சொல்வார்களா.

ஏதோ அவர் உண்டு அவருக்கு ஏவிய வேலை உண்டு என்று அவர்களது முதலாளிகளுக்கு உண்டியல் உலுக்கும் வேலையே கதி என்று இருக்கும் அவரை எதற்காக வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும்.

இப்படி முட்டாள் தனமாக தங்களது வான் தாக்குதல் வல்லமையை ஏழை இந்தியாவில் நடத்தி காண்பித்தால் அவர்கள் என்ன என்ன முறையில் தாக்குவார்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களை எல்லையிலே பிடித்து அமுக்குவார்கள் என்று அந்த தீவிரவாத கூட்டதிற்கு தெரியாதா என்ன, அவ்வளவு முட்டாள்களா அவர்கள்.

தீவிரவாதிகளின் உலகில் அவர்களது திட்டமும்,ஆள் மற்றும் ஆயுத பலமும் அரசாங்கத்திற்கு தெரியாமல் இருக்கும் வரையில் தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்றது ஊர் அறிந்த இரகசியம். இருப்பினும் இப்படி ஒரு தகவல் வந்தாக செய்தி கசியவிடுவது நாட்டில் நடக்கும் மகிந்த இராசபட்சே செயல்கள் அதிக பேசு பொறுளாக மாறிவிட்டதை மட்டுப்படுத்தும் செயல் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

இல்லை நரேந்திர மோடி என்ன ஏழையா இல்லை சிறுபான்மை இனத்தை சேர்ந்தவரா அடித்து கொன்றால் கேட்க்க ஆள் இல்லாத ஆளா, இந்த கதை எல்லாம் வேறு எங்காவது சென்று சொல்லுங்கள் பாசகவினரே.

சொந்த ஆட்களை பலியிடுவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமான வேலைகளை பாருங்கள் பாசக......போங்கபா உங்க நகைசுவைக்கு அளவே இல்லையா........

0 comments: