Thursday, July 23, 2015

இராகுலை பற்றி உளவாளி சுசாமி சொல்வது நம்ப தகுந்த தகவல் தானா - அமெரிக்கா என்ன குசராத்து என்று நினைத்து இருப்பார் போலும்.....


இராகுல் நல்லவரா கெட்டவரா என்ற ஆராய்சி அல்ல இந்த கட்டுரை. மாறாக இந்த உளவாளி சுப்பிரமணி சாமி எப்படி அளந்துவிடுகிறார் என்று சொல்லவே....  

ஆகவே இராகுல பத்தி இதுவா சொல்ர என்று கழுவி ஊற்றும் எண்ணத்தோடு வரும் பதிவர்கள் அடுத்த பதிவர்களை பார்ப்பது நல்லது.

அமெரிக்காவின் சிவில் வழக்குகளில் அமெரிக்க நீதிமன்றம் இந்திய நீதிமன்றங்களுக்கு இணையாகவும் இன்னமும் சொல்லப்போனால் ஒரு தலைபட்சமாகவும் நடந்துக்கொள்ளும் என்றதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம். இதற்கு நேற்று நடந்த வழக்குகள் வரை உதாரணம் காட்டமுடியும்.

ஆனால் அதுவே கிரிமினல் குற்றம் என்று வந்தால் அது ஒபாமாவாகவே இருந்தாலும் குற்றம் குற்றமே என்று நடந்துக்கொள்ளும் நீதிமன்றங்கள் அமெரிக்க நீதிமன்றங்கள்.

சென்ற அமெரிக்க ஆட்சியில் புச்சு அதிபராக இருக்கும் வேளையிலே அவரது மகள்கள் குடித்துவிட்டு வண்டிய ஓட்டியதற்காக தண்டிக்கபட்ட செய்தி உலகம் அறிந்தது இந்த தொடர்பில் சென்று பார்க்கவும்.

இது மட்டும் இல்லை சமீபத்தில் காவலர்கள் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்டார்கள் என்று அவர்களை பிடித்துவைத்து இருக்கிறது நீதிமன்றம். அதுமட்டும் இல்லை அவர்கள் வெளியில் வரும் பிணை தொகை செலுத்தமுடியாத அளவுக்கு உயர்த்தபட்டும் இருக்கிறது.

சமீபத்தில் நடந்த பிடல்பியா கலவரங்களில் அந்த கைதியை கொன்ற காவலர்கள் 5வரும் மரண தண்டனையை எதிர் நேக்கி இருக்கிறார்கள். கொல்லப்பட்ட அந்த கைதி ஒன்றும் தியாகி இல்லை. கொலைகாரன் கொள்ளைகாரனான அவனை கொன்றதிற்கு இந்த நிலைமை.

இன்னமும் இது மாதிரி ஆயிரம் ஆயிரம் உதாரணங்களை காட்டமுடியும் கிரிமினல் குற்றங்களை அடிப்படையாக கொண்ட வழக்குகளில் அமெரிக்க நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை.

லலித் மோடி வைத்து இருந்த கட்டுப்படுத்தபட்ட/தடை செய்யப்பட்ட மருந்துக்கோ வைத்து இருந்த அளவுக்கு தகுந்தார் போல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதாக வந்த செய்திகள் என்னவோ அமெரிக்காவில் நடந்தது போல் தான் இருக்கிறது. தனது உபயோகத்திற்கு என்று வைத்து இருக்கும் மருந்தின் அளவை பொருத்து தண்டனை மாறும்.

ஆனால் சுசா சொல்வது போல் 1.6 லட்சம் அமெரிக்க டாலரும் போதை பொருள் வைத்து இருந்தாக FBI மக்கள் பிடித்தாக சொல்கிறார்.

இந்த FBI நிறுவனம் எந்த மாநில அரசுக்கும் கட்டுப்பட்டது அல்ல, அதே சமயம் அவர்கள் ஒரு வழக்கை தொடுத்தால் அழிப்பது கிட்டத்தட்ட முடியாத செயல்கள் அவைகள்.

என்னவோ வாச்சுபை மோடி மகிந்த பட்சேவை மீனவர் பிரச்சனையில் கூப்பிடது போல் அமெரிக்க அதிபருக்கு கூப்பிட்டு சொன்னதும் எல்ல தடையங்களையும் அழித்துவிட்டு போய்யிட்டு அடுத்த விடுமறைக்கு வா என்று அனுப்பிவிட்டது போல் ஒரு பொய் தகவலை வெளியிடுகிறார் சுசா.

ஒரு வேளை சுசா பார்த்த உளவு செயல்களில் வேண்டு என்றால் அப்படி எல்லாம் நடந்து இருக்கலாம் ஆனால் உளவாளிகள் தவிர மற்றவர்களுக்கு கிடையாது என்று இத்தனை ஆண்டுகளாக உளவாளியாக இருக்கும் சுசாவிற்கு தெரியாதா என்ன..........

பாசக ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் சுசா கொஞ்சம் நஞ்சம் வைத்து இருக்கும் மானம் மரியாதையும் இழக்க நிலையில் தள்ளபடுவீர் MR உளவாளி.....

2 comments:

')) said...

உளவளிகளுக்கு மானம் மரியாதை எல்லாம் இருக்கிறதா.....????

')) said...

அவரு நீதிக்காக போராடுகிற சமூக போராளின்னு இன்னமும் சில பேர் நம்பிக்கிட்டு இருக்காங்களே அவர்களிடம் உள்ள மதிப்பை சொன்னேன்.....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.