Wednesday, September 2, 2015

அன்புமணி போடப்போகும் முதல் கையெழுத்து இதில் தான் - மோடிக்கே சவால் விடப்போகிறார்

அன்புமணிக்கு இப்பவே முதல்வர் ஆகி என்ன என்ன எல்லாம் செய்யவேண்டும் என்று கை துருதுருவென இருக்கும் போல் இருக்கிறது.

பாவம் அவரும் கற்பனையிலே எத்தனை நாளைக்கு தான் காலம் தள்ளுவார். அதனால் அவர் ஆசைபடி முதல்வர் ஆனதும் என்ன என்ன செய்யலாம் என்று அவருக்கு நாம் மாதிரிகளை இப்பவே கொடுத்து பரிச்சையில் நிச்சயம் 90% மதிபெண்கள் எடுப்பார் என்று சொல்வோம்.

மதுவில் துவங்கிய அவரது பிரச்சாரம் அனேகமாக அனைத்துகட்சிகளும் அந்த மதுவிளக்கு உத்தரவை இப்பவே கையெழுத்து இட்டு தேதிமட்டும் இடாமல் கோட்டைக்கு போன உடனே தேதி போட்டு கொடுத்துவிடலாம் என்று அலைய வைத்த பெருமைக்கு உரிய நண்பர் அன்புமணி அடுத்த நடவடிக்கை என்ன என்று நாமே சொல்வோம்.

ஒரு வேளை அன்புமணி முதல்வர் ஆனதும் தமிழகத்து பட்டேல்கள் நாங்கள் பிரம்மாவின் புணித பாகத்தில் இருந்து பிறந்து வந்தவர்கள் எல்லாம் இல்லை சாதாரண மக்கள் போல் தாமும் என்று நேற்றைய கனவில் தான் எங்களுக்கு தெய்வம் வந்து சொன்னது அதனால் எங்களை அந்த சாதாரண மக்கள் பட்டியலில் சேர்த்து எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் இல்லை என்றால் ஆட்சியை விட்டு போங்கள் என்று சொல்வார்கள்.

அப்படி எதிர்காலத்தில் தமிழகத்தில் சாதி சண்டைகள் தலையெடுக்காமல் இருக்க என்ன திட்டம் அன்புமணி வைத்துள்ளார் என்று சொல்லி அந்த உத்தரவில் கையெழுத்து போடட்டுமே யார் வேண்டாம் என்று சொன்னது.

குசராத்து பாணியில் பாரதம் என்று முழங்கும் மோடிக்கே தமிழக பாணியில் பாரதம் என்று சவால்விடலாமே, அதை விடுத்து செத்த பாம்பையே மீண்டும் அடிப்பான் ஏன் அன்புமணி...........

0 comments: