Tuesday, December 15, 2015

மோடி தமிழகத்திற்கு நிவாரணம் தர தாமதப்படுத்துவது ஏன்

மோடி அரசு தமிழகத்தை பாரா முகமாக கவனிப்பதும், இது வரையில் நிவாரணங்களை பெரிய அளவில் அறிவிக்காமல் இருப்பதற்கு இவைகள் தான் காரணமாக இருக்கும்.

பெரிய அளவில் நிவாரணம் வழங்கினால் அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணி தமிழக அரசுடையது.

அப்படி செலவிடப்படும் பொருளையும் அதன் விளைவாக வரும் நல்லெண்ணத்தை தமிழகம் மறுபடியும் அதிமுகவிற்கே காட்டுவார்கள் என்ற கணிப்பாக இருக்கலாம்.

இல்லை என்றால் பாசகவை முற்றிலுமாக நிராகரித்து வாக்களித்த மக்களுக்கு சுசாமி சொன்னது போல் எதற்கு மைய அரசு நிதி கொடுக்கவேண்டும் என்றும் இருக்கலாம்.

ஒரு வேளை நிவாரணங்களை மைய அரசே கொடுக்கும் என்றால் இன்னேரம் அதாணி குழுமத்திடம் அந்த பணிக்கான 14,000 கோடி பணம் பட்டுவடா ஆகி இருக்கும். மோடியை குத்துவிளக்கு ஏற்ற வைத்து பணிகள் போர்கால அடிப்படையில் நடந்து இருக்கும்.

அல்லது வெள்ள நிவாரண பணிகளை மைய அரசே கொடுக்கும் வகையில் ஒரு அவசர சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதாணியிடம் அந்த பணத்தை கொடுக்க காத்துக்கொண்டு இருக்கலாம்.

2016ல் தமிழகத்தில் தேர்தல் மட்டும் இல்லாமல் இருந்தால், இன்னேரம் மோடி அரசு பெரிய அளவில் கையில் துடப்பத்துடன் வந்து கழுவு கழுவு என்று கழுவி விட்டு இருப்பார்கள். அதாணிக்கு வடை போச்சு, நமக்கு நிவாரணம் போச்சு....... நம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.................

2 comments:

')) said...

ம்ம் இருக்கும் இருக்கும்,

')) said...

அன்புமணி இதே 14,000 கோடி வேண்டும் என்று மிக சமீபத்தில் கேட்டதாக இரு சேதி வந்தது இந்த வதந்தியை உறுதி செய்கிறது. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.