Friday, August 28, 2015

ஷீனா போரா கொலை வழக்கு - Flowers in the Attic (2014) திரைபடமும்

ஷீனா போரா கொலை வழக்கு

பொதுவாக ஆங்கிலப்படத்தை பார்த்து தமிழில் எடுத்துள்ளார்கள் என்று விமர்சனம் செய்வது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டு பார்த்த இந்த ஆங்கிலப்படத்தில் காட்டியது போல் ஒரு உண்மை நிகழ்வு இந்த கொலை வழக்கு.

என்ன கொலை மட்டும் தான் ஆங்கில படத்தில் இல்லை மற்ற அனைத்தும் அந்த படத்தில் உள்ளது. ஆங்கிலப்படத்தை பார்க்க துவங்கியதும் இப்படி ஒரு கொடூரமான படமா என்று இருந்தது.

ஒரு பணக்கார பெண்ணுக்கு தகாத காதல் (தனது சகோதர முறை ஆணை காதலித்து மணம் செய்வது), அதை தொடர்ந்து வீட்டை விட்டு விரட்டப்பட்டவளாக ஆகிறாள். அந்த பந்ததில் 4 குழந்தைகளுக்கு தாயாகிறாள். பின்னர் நிகழும் ஒரு விபத்தில் அவளது கணவம் இறக்கிறான்.

4 பிள்ளைகளை வைத்துக்கொண்டு வீட்டு வாடகைக்கூட கொடுக்க முடியாத நிலையில் தனது பெற்றோரை உதவிக்கு தொடர்புகொள்கிறாள். அவளது அம்மா மிகவும் இரகசியமாக இவளுக்கு உதவ முன் வருகிறாள் அதற்கு விலையாக இவளுக்கு நடந்த திருமணமோ அதில் பிறந்த 4 பிள்ளைகளை பற்றி வெளியே சொல்வே கூடாது என்று நிபந்தனைகளை விதிக்கிறாள்.

பிறகு பெற்றோருடன் ஒரு பெரிய பண்ணை வீட்டில் தங்குகிறார்கள், பிறகு தான் தொடங்குகிறது கொடுமைகள். வீட்டில் பாழடைந்த பொருட்களை அடுக்கி வைக்கும் ஆங்கிலத்தில் சொல்லும் அட்டிக்கு அந்த 4 குழந்தைகளை இருக்க சொல்லிவிட்டு இவள் மட்டும் வெளியில் சென்று வருவாள்.

வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் என் குழந்தைகள், உங்களை தவிர எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை, கொஞ்ச நாள் பொருங்கள் உங்களின் தாத்தா எனது பெயருக்கு சொத்துகளை எழுதும் வரை தான் நமது கவலைகள் எல்லாம். பிறகு நமக்கு என்று ஒரு வீடு என்று வசதியாக வாழ்வோம் என்று சொல்லி குழந்தைகளை அந்த பூட்டிய அறையில் விட்டு விட்டு செல்வாள்.

பிறகு சிறை அறைக்கே உணவுகளை கொண்டு வந்து கொடுப்பது போல் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வார்த்தை வார்த்தை ஐ லவ் யூ என்று சொல்லி செல்வாள்.

இப்படியே சில மாதங்கள் கழிய பிள்ளைகளும் வெளி உலகை கானாமல் எத்தனை காலம் இருப்பது என்று ஒருவருக்கும் பெரியாமல் கள்ள சாவி தயாரித்து இரகசியமாக வெளியே சென்று வருவார்கள். அப்படி ஒரு நாள் சென்று பிடிபட, பாட்டி பிடி பிடி என பிடித்துவிடுவார் அந்த பிள்ளைகளை.....

இப்படியே சில வருடங்களும் தொடரும் இந்த கொடுமைகள், ஒரு கட்டத்தில் அந்த இளம் தாய்க்கு மறுமணம் செய்ய தீர்மானிக்க, தொல்லையாக இருக்கும் குழந்தைகளை கொன்றுவிடுவது என்று உணவில் நச்சு கலந்து கொண்டு வந்து கொடுத்து செல்வார் மீண்டும் வார்த்தைக்கு வார்த்தை ஐ லவ் யூ என்று.

ஒரு கட்டத்தில் அன்னை செய்த அதே தவறை பிள்ளையும் செய்யும் கொடுமையும் இந்த படத்தில் உண்டு.......என்டா கதை இது என்று பார்த்தால் இன்றைக்கு உண்மை நிகழ்வு என்று இந்த செய்தி. தல சுத்துதப்பா.................

0 comments: