Wednesday, August 26, 2015

அடடா குசராத்தில் பாலாறும் தேனாறும் அல்லவா ஓடுவதாக நமக்கு சொன்னார்கள் - ஐயோ பாவம் இந்தியா


குசராத்து மாதிரியில் இந்தியாவை கட்டமைபோம் என்று பாசக மக்கள் சொல்லிவருவது இதை தானா. பெரும் வர்த்தகர்கள், நாட்டின் பொருளாதாரத்தையே வடிவமைப்பவர்கள். குசராத்து நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளதவி கொடுக்கும் போது வேண்டாம் என்று சொன்னவர்கள். தங்களது துயரை தாங்களே துடைத்துக்கொள்கின்றோம் என்று வெளி நாட்டுவாழ் இந்தியர்களின் பங்களிப்பால் விரைவில் மீண்டவர்கள் என்று எல்லாம் நமக்கு சொன்னார்கள்.

இப்போது பார்த்தால் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகள் படிக்க வழியில்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் வன்முறையாம்.

 நாமும் தெரியாமல் தான் கேட்போம், பள்ளியில் இடம் கிடைக்காதா, இல்லை கல்லூரியில் இடம் கிடைக்காதா. எங்கே இடம் கிடைக்காது என்று நினைத்துக்கொண்டு போராடுகிறார்கள் என்று சொன்னால் மக்களுக்கும் விளங்கும் .....சொல்வார்களா


நேற்று தான் அமித்து சா மோடியின் ஆட்சியில் எங்குமே வன்முறையோ ஊழலோ இல்லை என்று திருவாய் மலர்ந்தார்.........எங்கேயோ இடிக்கிறது போல தெரியுதே........அத்வானி தமிழகம் வந்து போன போது எல்லாம் குண்டுகள் வெடித்தது போல..........

0 comments: