Wednesday, August 12, 2015

அன்புமணி இராமதாசு உடனடியாக கட்டப்போகும் இலவச மருந்து ஆலைகள்

கடந்த சில மாதங்களாக தமிழகத்தை தூக்கி நிறுத்த தன்னால் மட்டும் தான் முடியும் என்றும், தன்னை தவிர வேறு ஒருவராலும் இதை செய்யமுடியாது என்றும் சொல்லிக்கொண்டு வரும் அன்புமணி அதன் தொடர்ச்சியாக இந்த செயலை செய்துவிட்டு ஓட்டு கேட்க்க வர இருக்கிறார்.

தான் வகித்த மருத்துவ நல துறையில் இந்தியாவின் தேவைகளையும் அத்தியாவசியங்களையும் பூர்த்தி செய்வதற்காகத்தான் அரசு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை மூடியதாகவும் அப்படி மூடிய மருந்து ஆலைகளுக்கு பதிலாக வேறு ஒரு ஆலையை சென்னையில் கட்ட முற்பட்டதாகவும். ஆனால அந்த ஆலை முடிக்கப்பட இல்லாத நிலையில்.

தான் இனி மைய அரசு அமைச்சராக விருப்பம் இல்லாமல் இருப்பதால் ஆலையும் வேண்டும் மக்களும் பயனடைய வேண்டும் ஆகையால் இலவச மருந்த ஆலைகள் 5 அல்லது 6 ஆலைகளை தமிழகத்தில் துவங்கி இலவசமாக மருத்துகளை தயாரித்து மக்களுக்கு கொடுக்க இருக்கிறார்.

ஏன் இப்படி இலவசமாக மருந்து தயாரிக்கும் ஆலையை நிறுவ இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்க்க நினைக்கும் மக்களுக்கு அன்புமணியும் அவரது கட்சியினரும் சொல்லும் செய்தி இதுதான்.

அரசை அது செய் இது செய் என்று எத்தனை காலத்திற்கு தான் மக்கள் சார்பாக நாங்கள் வேண்டி நிற்பது. எப்படியும் எங்களது பணத்தை வாரி இறைத்து ஆட்சியை பிடித்து பிறகு அரசு செலவில் இந்த ஆலைகளை கட்டி அதற்கு பிறகு தயாரிப்பில் வரும் மருந்துகளை மக்களுக்கு கொடுக்க எப்படியும் வெகுகாலம் பிடிக்கும். ஆகையால் தேர்தலுக்கு நாங்கள் வாரி இறைக்க இருக்கும் பணத்தை மக்களுக்காக இப்பவே இன்னமும் 2 மாதங்களுகுள் மருந்தை தயாரித்து கொடுத்துவிட்டு தான் ஓட்டே கேட்க போகின்றோம்.

அப்படி வரும் அந்த ஆலைகளில் நானோ எனது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கோ எந்த பதவியும் எடுத்துக்கொள்ள போவது இல்லை என்ற உறுதிமொழியை என்னால் கட்டாயம் கொடுக்கமுடியும் என்றும் சொல்லி இருக்கிறார். அது மட்டும் அல்ல இந்த மருந்து ஆலைகளுக்கும் பாமாகவுக்கும், வன்னியர் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற உறுதிமொழியையும் கூடவே தெரிவித்து இருக்கிறார்.

இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டதற்கு, மருத்துவ துறையில் அமைச்சராக இருக்கும் போது மக்களின் மருந்து தேவை எவ்வளது என்று தனது துறை கணக்கிட்டு அளித்த அறிகையின் அளவு மிகவும் பெரியது என்றும் அதிலே தமிழகத்தில் உடனடி மருந்து தேவைகள் எத்தனை கோடி எனவும் தெளிவாக தெரியவர இந்த முடிவு எடுத்தாக தெரிவிக்கின்றார்.

இங்கே நாம் ஒரு செய்தியை உற்று நோக்க வேண்டும் அதிமுகவும் திமுகவும் மதுவை தயாரித்து தமிழகத்தை அழித்துவந்த நிலையில் தமிழகத்தை மட்டும் அல்ல உலகையே தனது மருந்து தயாரிப்பால் காப்பாற்றுவது மட்டும் அல்ல இலட்ச கணக்கில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் உத்திரவாதத்தையும் அன்புமணி உறுதிபடுத்துகிறார்.

உங்களுக்கு இது சம்பந்தமாக சந்தேகம் இருந்தால் அவரை நேரிலோ அல்லது எந்த விதத்தில் தொடர்பு கொண்டாலோ அவராகவே விளக்கம் அளிக்க ஆவலாக உள்ளார்.

3 comments:

Anonymous said...

Hi

Pl provide his contact phone no. OR EMAIL ID

SESHAN

')) said...

ANBUMANI RAMADOSS
Address: OLD NO:13,New No:10,Thilak Street,T.Nagar,Chennai-600 017
Email:draramadoss@gmail.com
Contact Number: 044-28346464

வாழ்த்துக்கள் நண்பரே, தொடர்பு கொண்டு அவருடைய சேவைக்கு உதவுங்கள்.

Anonymous said...

Thanks boss.

every day mail and sms service starting to him from today!.

Seshan