Tuesday, December 8, 2015

பதிவர்கள் களப்பணியாற்றுவோரை புகழ்வதையும் இகழ்வதையும் நிறுத்தினால் நன்றாக இருக்கும்

நிலைமை இன்னனும் சீராகவில்லை, தவிக்கும் மக்களுக்கு உதவும் அத்தனை மக்களின் உதவியும் மக்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. இந்த நேரத்தில் அவர்களை புகழ்வதையும் இகழ்வதையும் நிறுத்தி வைப்பது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதை.

அவசியமானவைகளை ஆவனப்படுத்துங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் களப்பணியாற்றும் அந்த முகம் தெரியாத மனிதர்களை புகழ்வதாக நினைத்துக்கொண்டு அடுத்தவர்களை இகழாதீர்கள். அவைகள் முட்டுக்கடையாத்தான் அமையும்.

களப்பணியாற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று சொன்னால் அது மிகவும் சிறிதாக தான் இருக்கும். இருப்பினும் நன்றி கூட சொல்லவில்லை என்று ஆகாமல் இருக்க சொல்வோம் நன்றி. ஊர் கூடி இழுத்தா தான் தேர் என்ற வழக்கை உலகுக்கே மறுபடியும் நினைவுறுத்தும் சாதனையை செய்கிறீர்கள் நீங்கள் தொடரட்டும் உங்களது விலைமதிப்பில்லா பணி.

0 comments: