Thursday, October 1, 2015

பெண்ணின் சுதந்திரம் இவ்வளவு தானா

தனது வீட்டு பெண்கள் என்ன செய்தாலும் சரி ஆனால் அடுத்தவர் வீட்டு பெண்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்று அடுக்குவதேனோ.......

உங்கள் வீட்டு பெண்களை பார்த்து உங்களுக்கு இந்த மாதிரியான எண்ணங்கள் எல்லாம் வருகின்றதா என்று கேட்டால் அனைத்து ஆண்களும் இல்லை என்று தான் சொல்வார்கள், பிறகு அடுத்தவர் வீட்டு பெண்கள் என்றால் மட்டும் உங்களுக்கு எல்லாம் இவ்வளவு இளக்காரமா

இந்த எண்ணம் மாறும் வரையில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடையாது.

நல்ல வேளை குமுதம் இதழ் பொது இடங்களில் பாலூட்டும் அன்னையின் படத்தை மறைந்து இருந்து எடுத்து எல்லை மீறும் பெண்கள் என்று கட்டுரையிடாமல் போனார்களே என்று பெருமை பட்டுகொள்வோம்.

அந்த அன்னையின் செய்கையை எந்த வக்கிரமும் இல்லாமல் தவிர்த்துவிட்டு செல்லும் இதே பொதுமக்கள் இளம்வயது பெண்களை ஈயாக மொய்பது ஏனோ........

ஆண்களின் கண்ணியம் அவனது நடத்தையில் இருக்க வேண்டுமே தவிர பெண்ணின் தோற்றதில் வைக்ககூடாது. அவனுக்கு தான் ஆண் என்று பெயர் இல்லை என்றால் விலங்கு என்று தான் பொருள்.

போய் வேறு எதாவது வேலை இருந்தால் போய் பாருங்கள் அதைவிடுத்து இல்லாத பிரச்சனைகளை எல்லாம் எடுத்து ஆராய்வதைவிடுத்து.....

சுஜாத்த துவங்கி வைத்த இந்த குமுதம் மஞ்சள் பத்திரிகை தண்மையை மாற்றிக்கொள்ள வேண்டும். நேர்மையாக எழுதியே பிரபலபடுத்தலாமே இந்த கேவலமான வேலைகள் எல்லாம் தேவை தானா......குமுதம் குழுவினர் சிந்திப்பார்களா.....

1 comments:

Anonymous said...

குமுதத்தை மஞ்சப் பத்திரிக்கையாக ஆக்கியது சுஜாதவேதான்!