Tuesday, October 13, 2015

தொடரும் பாசக இந்துத்துவா கொலைகள் -- காந்தி முதல் தாத்ரி வரை

விகடனில் வெளியாகி இருக்கும் மகேசு சர்மாவின் பேச்சு

மகேசு சர்மா - இவரை ஏன் இந்தியாவின் பிரதிநிதியாக அமெரிக்கா மற்றும் ஐநாவிற்கும் அனுப்பக்கூடாது

இனி மோடி தனது வெளி நாட்டு பயணங்களுக்கு இவரை உடன் அழைத்துக்கொண்டு சென்று முதலீடுகளை கொடுக்கும் முதலாளிகளிடமும் அந்த நாட்டு அரசியல்வாதிகளுடனும் பேசச்சொல்லாம்.

உண்மையில் பாரதிய சனதா கட்சியின் நிறம் என்ன என்று அழகாக வெளிச்சம் போட்டுகாட்டிடுவார் இந்த மனிதர்.

இரண்டாம் வகுப்பு மாணவர் சக நண்பர்களுடன் நடக்கும் குழந்தை விளையாட்டில் பேசிக்கொள்வது போல் அல்லவா பேசிக்கொண்டு இருக்கிறார் மனிதர்.

பாவம் இந்த குழந்தை எல்லாம் கட்சியில் சேர்த்துகொண்டு ஆட்சி நடத்துகிறது பாசக. மோடி பேசுவது போல் அந்த பக்கம் கூட்டத்தை அனுப்பி மக்களை கொலை செய்ய அனுப்பிவிட்டு இந்த பக்கம் தொலைகாட்சியில் அழுதுகாட்டும் மோடியின் நடிப்பு எல்லாம் இவருக்கு கற்றுக்கொடுக்கவில்லை போலும்.......

பாசக தான் வேண்டும் என்று வேண்டி விரும்பிய மக்களின் மகன் மகள்களுக்கு இந்த அனியாயம் நடக்கும் வரை இதன் கொடுமைகள் அவர்களுக்கு புரிய போவது இல்லை.

நல்ல வேளை பெரியார் உயிருடன் இல்லை அப்படி இருந்து இருந்தால் பாசக காந்திக்கு அடுத்து பெரியாரையும் கொலை செய்து இருக்கும்..................

0 comments: