Thursday, October 15, 2015

இனிமேல் பாசக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பயங்கரவாதம் வெடிக்கும் - பாக்கிட்தான் போல் பாசக

மதவாதிகள் யார் என்றும் அதில் பாசகவின் பங்கு என்ன என்றும் உலகிற்கே தெரியும்.

நாட்டில் நடக்கும் மத வன்முறைகளுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதாடுகிறது பாசக.

இது எப்படி இருக்கிறது தெரியுமா, இந்தியாவில் பயங்கரவாதத்தை நிகழ்த்த ஆட்களை தயார் செய்து அனுப்பிவிட்டு. அவர்கள் மும்பையில் மாட்டியது போல் மாட்டிக்கொண்டால் பயங்கரவாதிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாக்கிட்தானம் சொல்வது போல் இருக்கிறது பாசக சொல்லும் பதில்கள்.

பாக்கிட்தானத்தின் இந்த கருத்தை பாசகவோ ஐநா சபை வரை சென்று இல்லை என்று வாதிடுபவர்கள் தான் இந்த பாசக. ஆனால் பாசக மேல் இந்த குற்றம் வைக்கும் போது பாக்கிட்தானம் சொல்வதை போல் சகிப்புத்தன்மைக்கும் இந்தியாவின் பன்முக தன்மைக்கும் மொத்த குத்தகையை பாசக எடுத்து இருப்பது போல் பாசாங்கு செய்திகளை வெறும் வார்த்தைகளாக விற்று வருகின்றது.

எழுத்தாளர்கள் புரட்சி செய்தால் அந்த எழுத்தாளர்கள் பாசகவின் கொலை மற்றும் வெறுப்பு கொள்கைகளை பரப்பாதவர்கள். அதனால் அவர்கள் செய்யும் புரட்சி எல்லாம் எங்களுக்கு புரட்டு தான் என்கிறது.

ஆக மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் பாசக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இனி இது போல் நூறு ஆயிரம் கலவரங்கள் பாசகவினரால் நிகழ்த்தபடும் என்று மறைமுகமாக அறிவித்து இருக்கிறது பாசக அரசு.

அப்படி நடக்கும் கலவரங்களுக்கு மாநில ஆட்சியில் இருக்கும் பாசக இல்லாதாரே பொறுப்பு என்று அடுத்த கொலைக்கு தயாராகிவிடும் பாசக பாக்கிட்தானம் போல்.

பாசக தான் வேண்டும் என்று வேண்டிய மக்களே அனுபவிங்கள்..........

1 comments:

Anonymous said...

காங்கிரஸின் கேடு கெட்ட இத்தாலிக்காரியின் ஆட்சிக்கு பாஜக ஆட்சி நன்றாகவே உள்ளது. பாஜக தேசபக்தி உள்ள கட்சி. நீங்கள் பாஜக மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு கூறுகிறீர்கள்.