Tuesday, July 21, 2015

மாரி - என்ன ஒரு இலக்கியம், அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய படைப்பு

தனுசின் சமீபத்திய படங்கள் அதிகமாக பரிகாசிக்கபடுவது பார்க்கும் போது ஏன் இப்படி கலாய்கிறார்கள் என்று வருத்தமாக இருக்கும். அந்த வருத்தத்தை எல்லாம் தவிடு பொடி ஆக்கும்படி செய்துவிட்டது மாரி.

என்ன ஒரு கதை அமைப்பு, எத்தனை திருப்பங்கள் படத்தில் அப்பா தாங்கமுடியல....

படம் எப்ப தொடங்கிச்சு எப்போ முடிஞ்சது என்றே தெரியாமல் பிச்சுகிட்டு ஓடுது.....

படத்தில் வரும் அந்த புறாவித்தை அப்பா என்ன அழகு அந்த காட்சிகள் இன்னமும் அதிகமா என்ன தான் அது என்று காட்டினால் ஊருக்கு ஊர் இப்படி ஒரு போட்டி நடத்த வசதியாக இருந்து இருக்கும்.......ஏனோ படகுழுவினர் தவிர்த்து விட்டார்கள்.

படத்தின் நாயகியின் பாத்திரமும் நடிப்பும் அவ்வளவு அழகு. என்ன அவர் எதுக்கு படத்திற்கு என்று மட்டும் தான் புரிய மாட்டேங்குது...........

அந்த காவலர் ஏட்டின் தியாகமும் அதற்கான விளக்கமும் என்ன ஒரு இலக்கிய தரம் அடடா என்ன ஒரு இலக்கிய சுவை.......

அமாம் படத்தில அப்ப அப்ப தனுச எதுக்கு காட்டுகிறார்கள் என்றும் அப்படியே சொல்லிட்டாங்கன்னாலும் கூட கொஞ்சம் இந்த இலக்கியத்த புரிஞ்சுக்க வசதியா இருக்கும். அவர் பாட்டுக்கு ஏதோ அந்த பக்கதுல தம் அடிக்க வரும் போது எல்லாம் ஏதோ அவருக்கே தெரியா படம்புடிச்சு இந்த படத்தோட சேர்த்து தனுசு நடிச்ச படம்னு வித்துட்டாங்க போலும்....

படத்தின் கதை என்ன என்று பதிவில் தேடுபவர்களுக்கு ஒரு சேதி, கதை என்ன என்று மாரி - 2 அடுத்த மாதம் வருது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்............

இன்னும் இது மாதிரி சூரி, சுருட்டை என்று இரண்டு படங்களுக்கான கதை விவாதத்தை இந்த படத்தின் இயக்குனர் மும்முரமாக படமாக முனைந்து இருப்பதாக நமக்கு எல்லாம் ஒரு இனிப்பு செய்தி ஒரு கொசுரு...............

1 comments:

Anonymous said...

இப்படி இருந்தால் தான் கோடி கொட்டும்..
சாதாரண தோற்றம் உள்ள இவர் வெற்றி பெறட்டுமே..
எப்போதுமே பார்பான் மட்டுமே வர வேண்டுமா...