Tuesday, August 18, 2015

சீனா உண்மையில் ஒரு பொதுவுடமை நாடு தானா - இந்தியா உண்மையில் ஒரு ஏழை நாடா

மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது தாயாரையும் பார்க்க நேர்ந்தது. எங்கே இவ்வளவு தூரம் என்று விசாரித்ததில் அந்த பெண்ணிற்கு அமெரிக்க பல்கலையில் படிக்க இடம் கிடைத்து இருப்பதாகவும், அந்த பெண்ணின் தாயார் அவளுடன் தங்கி எல்லாம் செய்துகொடுத்துவிட்டு பிறகு ஊர் திரும்ப இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பெருமைக்கு உரிய செய்தி என்றாலும் ஆச்சரியத்திற்கும் உரிய செய்தியாக இருந்தது. ஒருவரை ஊருக்கு விமானம் ஏற்றி அனுப்பவே திணறிய காலம் போய் இப்போது அமெரிக்க வரை வந்து வீடுபிடித்து கொடுத்துவிட்டு செல்லும் ஆற்றல் பெற்ற பெற்றோராக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது.

பெண்களை படிக்க வைக்கவேண்டுமா என்ற காலம் எல்லாம் போய் என்ன என்ன படிக்க முடியுமோ அவ்வளவும் படி என்று அவளை கொண்டாடிய இந்த தாய் தந்தையரை வாழ்த்துவோம்.

இதே பாணியில் ஒரு சீன குடும்பத்தையும் பார்க்க நேர்ந்தது. இந்தியாவில் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அல்லது தங்களது பணத்தை எல்லாம் பிள்ளைகளுக்காகவே செலவிடுவோம் என்ற தியாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்றதாலும் இது சாத்தியம் என்று வைத்துக்கொண்டாலும்.

சீனர்கள் எப்படி அதுவும் ஒரு பொதுவுடமை கொள்கையில் வாழும் நாட்டில் தனியுடமைகள் ஏதும் கூடாது என்று இருக்கும் நாட்டில் ஏகாதிபத்திய அமெரிக்கா என்று மூச்சுக்கு மூச்சு சொல்லும் நாட்டில் இருந்து பட்டபடிப்பில் சேர பெற்றோர் சகிதமாக வந்து இறங்கி இருப்பதை நம்பவே முடியவில்லை.

0 comments: