Thursday, December 17, 2015

Stupid Star சிம்புவுக்கு எதிரான வழக்கில் என்ன நடக்கும்

மகளீர் அணியினர் சிம்புவிற்கு எதிராக தொடுத்து இருக்கும் வழக்கில் இது தான் நடக்கும்.

 நீதிமன்றம்: பாட்டை நீ எழுதினாயா

சிம்பு: ஆமாம் நான் எழுதினேன்(அதுக்கு இப்ப என்னான்ர சிம்புவின் மன குரலில்)

 நீதிமன்றம்: பாட்டை பாடினாயா

சிம்பு: ஆமாம் பாடினேன் மற்றும் பாடல் பதிவும் செய்தேன்

 நீதிமன்றம்: பாடலை எல்லோரும் கேட்கட்டும் என்று நீயோ அல்லது உனது சார்பில் வெளியிட்டாயா

சிம்பு: இல்லை இல்லவே இல்லை, அந்த பாடலை வெளியிடவோ பொது வெளியில் பாடவோ முற்படவும் இல்லை. எப்படி கோபம் வந்தால் தனி இடத்தில் சத்தமாக திட்டுவோமோ அது போல் தான் இந்த பாடலை பாடி திட்டினேன் என்று சொல்வேன்.

 நீதிமன்றம்: அப்போ பொதுவாகவோ மற்றவர் கேட்கும் விதமாக பாடவும் இல்லை வெளியிடவும் இல்லை தீர்மானமாக சொல்

சிம்பு: இல்லை இல்லவே இல்லை, எனக்கு வேண்டாதவர் யாரோ திருட்டுதனமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் அதை பற்றி ஏற்கனவே காவல் துறையிடம் முறையிட்டுள்ளேன்

 நீதிமன்றம்: அப்படி எதுவும் புகார் வந்துள்ளதா

காவல் துறை: ஆமாம் வந்துள்ளது

 நீதிமன்றம்: அப்படியானால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்த புகார் அல்ல ஆகவே இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்கிறது.

வெளியில் வரும் சிம்பு, என்னையும் எனது புகழையும் அழிக்க நினைக்கும் கூட்டதிற்கு சரியான பாடம் புகட்டி இருக்கிறது நீதிமன்றம். நான் பெண்களை மதிப்பவன், விரும்புபவன். வேண்டும் என்றே எனக்கு எதிராக இப்படி எல்லாம் சதி செய்கிறார்கள் என்று சொல்லி விரல் வித்தைகள் செய்து சென்று மறைவார்.

கூடி நின்ற மகளீர் கூட்டம் Stupid Star சிம்பு ஒழிக என்று சொல்லிவிட்டு இதை இதோடு விடப்போவதில்லை உச்ச நீதிமன்றம் வரை சென்று ஞாயத்திற்காக போராடுவோம் என்று செல்வார்கள். அதோடு இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு வரும். அவ்வளவே......

2 comments:

Anonymous said...

'beep' star is the right title for him.

')) said...

அதை என்னவோ ஒரு தகுதி என்று நினைத்து அத்தனை மக்களும் பீப்பாடல் பாடுவது ஒரு இயல்லாக கொள்வார்கள். முட்டாள் என்று சொல்லுங்கள், இதை தானும் செய்தான் தன்னையும் முட்டாள் என்று சொல்வார்கள் என்று நிறுத்துவார்கள்.