Friday, December 25, 2015

பாசகவின் கள்ள ஆட்டம் பற்றி வானதி சீனிவாசன் கொடுத்து இருக்கும் வாக்குமூலம்


மேலே உள்ள விவாதத்தில் கடைசியில் வரும் 59:20 மணி துளிகளில் இருந்து கவனியுங்கள் வானதி பாசக எப்படி கள்ள ஆட்டம் ஆடுகிறது என்று விளக்குவார்.

உங்களுக்கு இது அவசியமா அப்படி என்றால் நாங்கள் அதை கொடுத்தால் பதிலுக்கு நீங்கள் இதை கொடுத்தால் செய்வோம் என்று ஒப்புக்கொள்கிறார்.

இப்போ உங்களுக்கு புரியுதா ஏன் வெள்ள நிவாரணம் கொடுக்க இந்த ஆத்து ஆதுறாங்கன்னு.  

மத்திய குழு வந்து எவ்வளவு அழிவு என்று கணக்கிட்டு சொன்னதுக்கு பிறகு தருவார்களாமா, நாமும் தெரியாமல் தான் கேட்போம் இலங்கை, நேப்பால் போன்ற நாடுகளில் நடந்த இயற்கை பேரழிகளை எந்த மத்திய அரசு குழு சென்று மதிப்பிட்டு கொடுத்தீர்கள்.

அதாணிக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் அடுத்த நாட்டு நிவாரணம் என்ற பெயரில் கணக்கே இல்லாமல் கொடுப்பார்கள்.

ஆனால் தமிழகத்தில் நிவாரணம் கேட்டால் மத்திய குழு மாநிலகுழு, கட்சி குழு என்று வெளியில் குழப்பிவிட்டு திரைமறைவில் நீ அதை செய் பணம் கொடுக்கிறேன் என்று வியாபாரம் பேசுவார்கள். 

பாராளுமன்ற தேர்தல் வரும் போதே இந்த குள்ள நரி கட்சியின் ஓநாய் வேலைகள் எப்படி இருக்கும் என்று தெரிவித்தோம். ஆனால் நாட்டின் வளர்சி என்று உங்களை எல்லாம் பேசி ஏமாற்றினார்கள். 

இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள், இல்லை என்றால் நடுதெருவிற்கு கொண்டு வந்துவிடுவார்கள்.

சர்க்கரை தடவிய நஞ்சை என்ன அழகாக ஊட்டுகிறார் வானதி................தொண்டரே இப்படினா தலைமை எப்படி இருக்கும் சிந்தியுங்கள்.  

மோடி தமிழகத்திற்கு நிவாரணம் தர தாமதப்படுத்துவது ஏன் 

0 comments: