Friday, October 9, 2015

உங்களிடம் பசு உள்ளதா - மாதம் ரூ25000 பராமரிப்பு தொகை கொடுக்க பாசக முடிவு

பசுவை வைத்து நடந்த அசம்பாவிதங்களை பார்த்து வருந்திய பாசக இனி பசு வைத்து இருப்போருக்கு பசு உயிருடன் இருக்கும் வரையில் மாதம் ரூ25,000 பணம் வீடு தேடி வந்து கொடுப்பதாக தீர்மானித்து இருக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாது பசு இறந்தபிறகும் பசு வைத்து இருந்தவர் இறக்கும் வரையில் மாதம் அந்த பசுவை வைத்து இருந்தர்காக ரூ20,000 கொடுப்பதாகவும் திட்டம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்களே என்று கேட்டதற்கு, பசுவை வைத்து அரசியல் செய்யும் எங்களிடம் பசுக்கள் இல்லை. மாறாக வறுமையின் காரணமாகவும், செலவின் காரணமாகவும் தான் பசுக்கள் விற்கப்படுகின்றது. ஆகவே பசுக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் இப்படி காப்பாற்றினால் தான் உண்டு என்றும் சொன்னார்கள்.

எப்போது இருந்து பணம் கிடைக்கும் என்று கேட்டதற்கு பொது மக்களிடம் பசுவின் புனிதமும் தேவையும் எடுத்து சொல்லி இப்போது தான் நிதி திரட்ட துவங்கியுள்ளோம். மேலும் பாசக கட்சியின் தயவோடு தொழிலில் கொழிக்கும் தொழில் நிறுவனங்கள் கணிசமான தொகையை வழங்கவும் உள்ளது என்று தெரிவித்தார்கள்.

பணம் கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டதற்கு, உங்கள் பகுதியில் உள்ள பாசக ஊழியர்களை அனுகி எங்கே எவ்வளவு பசுக்களை வைத்து இருக்கிறீர்கள் என்று தெரிவித்தால் போதும். மேலும் இது வரையில் எவ்வளவு பசுக்கள் உங்களிடம் இருந்து இருக்கின்றது என்ற கணக்கையும் கட்டாயம் தெரியபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றார்கள்.

இப்படி பணம் கொடுப்பதனால் நிறைய செலவு பிடிக்குமே என்று கேட்டதற்கு, யாருக்கு செய்கின்றோம், பசு எனது தாய். தாய்க்கு செய்வதற்கு என்ன கணக்கு இருக்கிறது என்று பெருமையாக சொன்னார்கள்.

இந்த திட்டம் தமிழகத்தில் மட்டுமா இல்லை அனைத்து இந்தியாவிலுமா என்று கேட்டதற்கு, தமிழகத்தில் துவங்கி அனைத்து இந்தியாவிலும் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்த துவங்கும் என்று தெரிவித்தார்கள்.

1 comments:

Anonymous said...

Very nice program. This should be done globally