Tuesday, September 1, 2015

பட்டேல் பிரிவினர்கள் போராடுவது இதற்கு தான் வேறு எதுவும் இல்லை -- 1000 மடங்கு கூலி வயிற்றெரிச்சல்

தான் எவ்வளது தான் சம்பாதித்தாலும் அடுத்தவன் என்னைவிட எவ்வளவு பெற்றுள்ளான் என்று தான் உலகம் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்று தெளிவாக காட்டுகிறது பட்டேல்களின் போராட்டம்.

உள்விவகாரங்களுக்குள் செல்லும் முன் முதலில் பட்டேல்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியினையும் சொல்வோம், எதற்கு இதற்கு தான்.

இது நாள் வரை பிரம்மாவின் புணிதமான பகுதியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லியும் நம்பியும் மற்றவர்களையும் நம்பவேண்டும் என்றும் வற்புறுத்தியும் வந்தவர்கள் வரலாற்றிலே முதல் முறையாக அவர்களாகவே முன் வந்து நாங்கள் எல்லாம் அப்படி ஒன்றும் புண்ணிய பிறப்பு எல்லாம் இல்லை மற்றவர்கள் போல் சாதாரண மனிதர்கள் தான் என்று தைரியாமாக சொன்னதோடு இல்லாமல் எல்லா மாநிலத்தில் இருக்கும் பட்டேல்களையும் அப்படியே சொல்லவைப்போம் என்று சொன்னதற்கு தான் இந்த நன்றி. இவர்களை தொடர்ந்த அனைத்து மக்களும் தங்களது புணித வேடங்களை இவர்களை போல் துணிந்து களைவார்கள் என்று எதிர்பார்ப்போமாக.

 நமக்கு எல்லாம் நினைவில் இருக்கும் ஒரு 15 - 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ள வேலைக்காரியை வேலைக்கு அமைத்து இருப்பார்கள். காலை மாலை என்று இரண்டு வேளைகளும் அம்மா செய்யும் வேலைகளை அம்மாவுக்கு பதில் இவள் செய்து முடிப்பாள்.

இந்த வேலைகளுக்கு அந்த வேலைக்காரிக்கு மாதம் 25 அல்லது 40 ரூபாய்க்கள் கொடுப்பார்கள், அது இல்லாமல் காலையும் மாலையும் உணவுடன் காப்பி என்று சிலருக்கு கொடுப்பது உண்டு.

இன்றைக்கும் அதே வேலைக்காரிகள் கிடைக்கிறார்கள் ஆனால் மாதம் அவர்களுக்கு கொடுக்கும் தொகை எவ்வளவு 2000 முதல் 4000 வரை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதுமட்டும் இல்லாது, இந்த இந்த வேலைகள் மட்டும் தான் செய்வேன். இவ்வளவு நேரம் தான் செய்வேன். இது இது கொடுக்க வேண்டும் இல்லை என்றால் வர மாட்டேன் என்ற கட்டுபாடுகளை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறது.

20 ஆண்டுகளில் கிட்ட தட்ட வேலைகாரிகளின் சம்பாத்தியம் 1000 மடங்கு அதிகரித்துவிட்டது. அப்படி கொட்டி கொடுக்க அந்த வேலைக்காரி என்ன பட்டப்படிப்பு ஏதாவது படித்துவிட்டு இந்த வேலைக்கு வருகிறாளா என்ன எதற்கு இவ்வளவு கொட்டிக்கொடுக்கனும் என்ற கேள்வி பிறப்பது இயல்பு.

ஆள்கிடைப்பது இல்லை என்ற ஒரு பெரும் காரணம் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றது மட்டுமே உண்மை. அப்போ இந்த வேலை செய்தவர்கள் எல்லாம் என்ன தான் ஆனார்கள் என்ற கேள்வியும் பிறக்கும்.

20 ஆண்டுக்கு முன் வீட்டு வேலை பார்த்த அந்த வேலைகாரிகள் தங்களது பிள்ளைகளும் இந்த மாதிரி ஆகிவிடக்கூடாது என்று தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தார்கள். அவர்களும் படித்துவிட்டு இன்றைக்கு அலுவலகங்களில் வேலைகளில் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த வீட்டு வேலை தான் தெரியும் என்று இருந்த மக்கள் குறையவே அதிகவிலை கொடுத்து இருக்கும் மக்களை வேலைக்கு அமர்த்தும் செயல்கள் தொடங்கியது.

இப்போது பட்டேல் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேலைகாரிகள் அதே 25 - 40 ரூபாய்க்கு வேலைக்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் பட்டேல்கள் செய்யும் வர்த்தகம் மட்டும் வானலாவி நிற்க வேண்டும் மற்ற மக்கள் இன்னமும் அவர்களுக்கு எடுபிடியாக அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இங்கு அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வேலைகாரி என்று குறிப்பிடேனே தவிர கேவலபடுத்தும் எண்ணத்தோடு அல்ல, யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிகவும்.

இங்கு சொன்ன வேலைகாரி என்றதை, விவசாய கூலி, கூலி வண்டி, ரிக்சா வண்டி, மூட்டை தூக்கும் தொழிளாலி என்று அடிமட்டத்தில் இருக்கும் அத்தனை கடுமையான வேலைகளை செய்பவர்கள் என்று மாற்றிகொண்டாலும் ஒரே கருத்து வருவதை அவதானிக்கமுடியும்.

பட்டேல்களுக்கு இந்த சமூக மாற்றம் முன்னேற்றம் பிடிக்கவில்லை. இப்படியே போனால் என்னை பல்லாகில் எவர் தூக்கிக்கொண்டு செல்வார்கள் என்ற கவலை அவர்களுக்கு. பல்லாக்கு தூக்க இன்றைக்கும் ஆள் இருக்கிறார்கள் ஆனால் அதே பழைய 25 - 40 ரூபாய்களுக்கு இல்லை ஒரு 1000 மடங்கு கொடுங்கள் தூக்குவார்கள், இந்த 1000ம் தான் அவர்களுக்கு பிரச்சனை வேறு ஒன்றும் அல்ல.........

இந்த 1000 மடங்கு வயிற்றெரிச்சலில் தங்கள் கட்டிக்காத்த பிரம்மாவின் புணிதமான இடத்து பிறப்பு என்றதை கூட இல்லை என்று சொல்லும் அளவுக்கு சென்று இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அவர்களது வயிற்று எரிச்சல் எந்த அளவுக்கு இருக்கும் என்று................

இது வெறும் டிரைலர் மட்டும் தான் முழுப்படம் இனிமே தான் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும், பார்ப்போம் பாசக அரசு இன்னமும் என்ன என்ன கோமாளிதனமாக செயல்களில் ஈடுபடுகிறது என்று பார்ப்போம்.

அந்த பக்கம் ஊழல்களை வெளியிட்டால் சாதி வெறியை ஊற்றி நாட்டையே எரித்துவிட பார்க்கிறது ஆளும் பாசக. வேண்டும் உங்களுக்கு. இந்த அரசுதான் வேண்டும் என்று தேர்ந்து எடுத்தவர்கள் தாமே நீங்கள் எல்லாம் அனுபவி ராசா அனுபவி.....

0 comments: