Thursday, August 27, 2015

பூனை குட்டி வெளியே வந்துவிட்டது - குசராத்து கலவரமும் - விசுவ இந்து பரிச்சித்து அறிக்கையும்

என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தோம், இன்றைக்கு விசுவ இந்து பரிச்சித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. குசராத்து கலவரத்தை காரணம் காட்டி நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீட்டை முழுவதுமாக ஒழித்து, பழையபடி மக்கள், வரும் வருமானத்தில் தீபாவளிக்கு ஒரு புத்தாடையும் பொங்களுக்கு ஒன்றும் என்றும் மற்றவைகள் எல்லாம் செலவழித்து அதே பழைய வாழ்க்கை முறைகு தள்ள துடிக்கின்றது போலும்.

இட ஒதுகீடு இல்லாத நிலையிலும், பொது நுழைவு தேர்வும் இல்லாத நிலையில் மக்களுக்கு தொழிற்படிப்புக்கான வாய்ப்புக்கள் என்ன என்ன விதமாக அர்ப்ப காரணங்களை காட்டி நிராகரிக்கபட்டது என்று எல்லாம் தனியாக எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை, அனைவரும் அறிந்த இரகசியம்....

இதிலே குசராத்தில் நடந்த கலவரம் மேலும் பெருவாரியாக மற்ற சில/பல மாநிலங்களிலும் பரவும் அபாயம் இருப்பதாக விஇப தெரிவிப்பதில் இருந்தே நீதிமன்றத்தில் இந்த வழக்கை எப்படி எடுத்துக்காட்டி தடைகளை பெற்றுவிடவும் திட்டம் இருக்கிறது என்று தெளிவாக தெரிகின்றது.

அதுவும் உச்ச நீதிமன்றதில் தடையை பெறவும் ஆயத்தம் ஆனதாகவும் தெரிகின்றது, அப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பெற்றால் குறைந்த காலத்தில் 20ரூ வருமானத்தில் ஒரு குடும்பமே நடத்தலாம் என்று திட்ட ஆணையம் வழங்கிய அறிக்கை போல் அல்லவா இந்த ஆணையத்தின் அறிக்கையும் இருக்கும்.

 நீதிமன்றத்தை பொருத்த அளவில் சாட்சிகளும் ஆவணங்களும் மட்டும் இருந்தால் போதும் மற்றபடி சரியா தவறா என்று எல்லாம் பார்க்கமாட்டார்கள், கொமாரசாமி விளக்கிய 20% போல்.

கல்வி வேலை வாய்ப்புகளை அழகாக அழித்திவிட்டு ஒரு பக்கம் எளிய மக்கள் மேலும் ஏழ்மைக்கு தள்ளிவிட்டு பணக்காரர்கள் மேலும் கல்லாகட்டும் காட்சி எல்லாம் பார்க்க இருக்கின்றோம்.

சுதந்திர இந்தியாவில் இது வரை கண்டுவந்த சமூக வளர்ச்சி இனி பாதாளம் நோக்கி பாயம் பேராபத்தில் இருக்கின்றோம். பாசக வந்தால் நாடு செழிக்கும் என்று சொன்னார்கள் நம்பினீர்கள் யாருக்கு செழிக்கும் என்று கேட்க்க தவறிவிட்டீர்களே........அனுபவி ராசா அனுபவி.................................

0 comments: