Friday, October 9, 2015

குசராத்து கலவரத்தில் மோடி அரசின் பங்கு என்ன விளக்குகிறார் சித்தார்த்து நாத்து சிங்கு

குசராத்து கலவரங்களில் மோடியின் அரசு எவ்வளவு மெத்தனமாக இருந்தது
இந்த ஒரு கொலைக்கு சித்தார்த்து சொல்லும் அத்தனை காரணங்களும் அன்றைக்கு குசராத்து கலவரத்திற்கு பொருந்தும். 30 நிமிடங்களில் காவலர்கள் ஏன் வந்து அடக்கவில்லை என்று சொல்கிறார். ஆனால் 3 நாட்களுக்கு அன்றைக்கு காவலர்கள் வராமல இருந்ததே அதை பற்றி என்ன என்று சொல்வார்களா......

பசுவை வதைகிறதாக வந்ததின் புகாரின் பேரில் என்று சொல்கிறார், அப்போ பால் கறக்கும் கைகளை எல்லாம் வெட்ட போகிறார்களா இவர்க்கள்.

முதலில் இந்த பசு சம்பந்தமாக இருக்கும் சட்டத்தை முழுதும்மாக நீக்கவேண்டும், என்ன அசிங்கமான ஒரு போக்கிறகு வழி வகுத்துவிட்டது. ஒரு விலங்கிற்காக மனிதன் கொல்லப்படுவது என்ன ஞாயம் என்று தெரியவில்லை.

பசுக்கறி சாப்பிட பாக்கிட்தானத்திற்கு எல்லாம் போகவேண்டாம், கேரளா போதும். முடிந்தால் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.

இன்றைக்கு பூனாவில் இருக்கும் 5 நட்சத்திர உணவகங்களிலும், மற்றும் நாட்டில் இருக்கும் 5 நட்சத்திர விடுதிகளுலும் மாடு உண்ணும் வெளினாட்டினருக்கு என்று மாட்டுகறியை சமைத்து அதிகவில்லைக்கு விற்கிறார்கள். ஏன் அங்கே எல்லாம் சென்று இவர்களது வீரத்தை காட்டவேண்டியது தானே........

அடித்து கொன்றவர்கள் இந்து மத அடிப்படை வாதிகள் என்று சொல்லாமல் ஏதோ ஒரு பயங்கரவாத கும்பல் என்று சொல்கிறது அரசியல் கட்சிகள்........

வடமாநிலங்களில் படிப்பறிவு இல்லை என்றும், எவ்வளவு காட்டுமிராண்டி தனமாக இருக்கிறார்கள் என்றும் இந்த சம்பவம் காட்டுகிறது.