Thursday, August 17, 2017

நீட் அவசர சட்டம் - தமிழகத்தின் அடுத்த இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாராம் தான் போல

 நீட் அவசர சட்டம் கொண்டு வாருங்கள் மைய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று 3 நாட்களுக்கு முன் சொன்னார் நிர்மலா, அடுத்த நாள் தமிழகத்தின் சட்ட பேரவையில் அவசர சட்டம் நிறைவேற்றப்படுகின்றது. அடுத்த நாள் மைய சட்ட அமைச்சகத்தில் ஒப்புதல் வழங்கப்படுகின்றது, இன்று 3வது நாளில் மனிதவள மற்றும் கல்வி துறையிலும் அங்கிகரிக்கப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் மக்கள் அறியப்படுவது, பாசக நினைத்தால் 3 நாளில் சல்லிக்கட்டு மீளக்கொண்டு வந்து இருக்கனும். ஆனால் 10 இலட்சம் மக்கள் மெரினாவில் கூடி தமிழக அரசை கழுவி ஊற்றியபிறகும், பீட்டாவின் தமிழக தலைவர் தமிழ் பெண்களை எல்லாம் பாலியல் சுகத்திற்கு அலைபவர்கள் என்று வக்கிரமாக பேட்டிக்கொடுத்த பிறகும், மெரினாவை சுற்றியுள்ள குப்பங்களை எல்லாம் காவலர்களே தீயிட்டு கொளுத்திய பின்பு தான் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் இல்லை.

இப்படி ஒரு விவகாரத்தை தீர்க்க வேண்டும் என்றால் கத்தி இன்றி இரத்தம் இன்றி 3 நாளிலே எல்லா விதமான ஒப்புதல்களை எல்லாம் பெறப்பெற்று முடிக்க முடியும் என்று காட்டியுள்ளார்.

மேலும் குட்டி குட்டி தலைவர்களான தலைவர்களான பொன்ரா தமிழிசை எச்சி இராசா எல்லாம் பேட்டி கொடுப்பதற்காக வேலை கொடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டும் தான் முடிவுகள் எடுப்பதும் செயல்படுத்துவது இந்த இரும்பு பெண்மணி நிர்மலா என்று தான் காட்டியுள்ளார்கள்.

முடவனுக்கு கொம்பு தேன் மேல் ஏன் ஆசை என்று இனி அந்த குட்டி குட்டி தலைவர்கள் மற்றும் விவாத தலைவர்களும் தங்களின் இரும்பு பெண்மணியின் பின் அணிவகுத்து செயல்படுவது தான் அவர்களுக்கு நல்லது என்றும் மைய பாசக தெளிவிபடுத்தி உள்ளதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

1 comments:

')) said...

நெனப்புதான் பொழப்பை கெடுக்குமாம்