Tuesday, October 24, 2017

மோடி பெற்றெடுத்த புதிய வெள்ளைப்பண இந்தியாவிலும் கந்து வட்டி கொடுமை

2016ல் நவம்பர் 8ல் கையில் இருக்கும் 1000 500 ரூபாய் தாள்கள் எல்லாம் செல்லாது, ஏன் என்றால் அவைகள் எல்லாம் கருப்பு பணம். ஆகையால் அந்த பணத்தை எல்லாம் வங்கிகளில் கொடுத்துவிட்டு நல்ல பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள், அடுத்த 50 நாட்களில் கள்ளப்பணமே இல்லாத இந்தியாவை உங்களுக்கு தருகின்றேன். அப்படி நான் சொல்வது நடக்காவிட்டால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள் என்று மக்களை பார்த்து சூளுரைத்தார் இந்தியாவின் பிரதமரான மோடி.

இன்னும் 3 வார காலத்தில் ஓராண்டு நிறை பெற போகின்றது அந்த பண மதிபிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு.

இதோ நேற்று அக்டோபர் 23 இந்த கொடூரம், கந்து வட்டி.

வாங்கிய பணத்தை போல் 2 மடங்கு பணம் செலுத்திய பின்னும் இன்னும் முதலே வந்து சேரவில்லை என்று மிரட்ட என்ன செய்வது என்றே தெரியாமல் குடும்பத்தோடு தற்கொலை. என்ன ஒரு கொடூரம், அரக்க தனம்.....

இப்படி கந்து வட்டிகாரர்களிடம் பணம் வாங்கும் மக்கள் எல்லா யார் யார், அன்றைய வியாபார தினத்தின் முதலுக்காக தண்டலில் பணம் வாங்குபவர்கள் முதல் அவசர மருத்துவ தேவை என வித விதமாக பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

கைக்கும் வாயிற்கும் சரியாக இருக்க மிச்சம் மீதி எதுவும் இல்லாமல் அன்றாடம் வாழ்கையை இப்படி அடகு வைத்து வாழும் ஏழை வியாபாரிகள் ஏறாளம்.

அன்றைக்கு ஏழைமக்கள் எல்லாம் வங்கிகளின் வாசலின் நின்று அவதியுறும் போதும், பிரதமர் மோடியும் அவரது கட்சியின் அடிபொடிகளும் இலட்டு கொடுத்து மக்களுக்கு உச்சாகம் அளித்ததின் திடம் இவ்வளவு தானா.........

இந்த தண்டல்கார்களும் கந்துவட்டிக்காரர்கள் எந்த வியாபார அடிப்படையில் நிதிவியாபாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு பணம் எப்படி வருகின்றது எப்படி கை மாறுகின்றது.

வெறும் 300 ரூபாய்க்கு தொலைபேசி சிம் வாங்க வேண்டும் என்றாலும் ஆதார் அட்டையும் கை ரேகையும் இல்லாமல் இல்லை என்று சொல்ல வைத்த அரசு இந்த கந்து வட்டி கொடுமைகளையும் தண்டல் கொடுமைகளையும் இன்னமும் உலவ விட்டு இருப்பது எப்படி.

சரி இப்படி அவசர தேவைக்கு அவர்கள் கந்து வட்டி வாங்கியது தவறு என்று சொல்லும் பட்சத்தில் அப்படி அவர்களிடம் வாங்காமல் வேறு எங்கே வாங்குவார்கள்.

அரசாங்க அலுவலங்கள்/அரசு வங்கிகள் என்று வைத்துக்கொண்டால், கந்துவட்டி காரனிடம் வெறும் வட்டி மட்டும் தான் கொடூரமாக இருக்கும். ஆனால் இந்த அரசு துறைகளில் நிதியை பெறுவது என்று இருந்தால் அந்த நிதி கையில் கிடைக்கும் போது வழி முழுக்க ஒழுகி கடைசியில் 10% பணம் அவர்களின் கைகளில் கிடைக்க குறைந்தது 3 முதல் 6 மாதமாகவாது ஆகும்.

இதை சரி செய்ய சொன்னால் அதை செய்யாமல் பெயருக்கு ஒரு திட்டமாக அறிவித்துவிட்டு, சம்பவம் நடந்து 2 நாட்கள் முடிகின்றது இருந்தும் இது வரையில் ஒரு பாசக கட்சியினர் கூட அதை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நீட்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ அல்லது அந்த வகையில் இது ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூட சொல்லாமல் மெர்சல் பட பிரச்சனையிலும், நடிகர் விச்சை கிருத்துவரா, இசுலாமியரா இல்லை ஆதியில் அவர்கள் இந்துக்களா என்ற ஆராச்சியில் மூழ்கி முத்து எடுத்துக்கொண்டு இருக்கிறது..........

மோடி பெற்று எடுத்த எத்தனையோ இந்தியாவில் வெள்ளைப்பண இந்தியாவும் ஒன்று அந்த வெள்ளைபண இந்தியா வெறும் காகித இந்தியா என்றும் இந்த நிகழ்வுகள் தெளிவாக காட்டுகின்றது. மேலும் மோடியும் பாசகவும் வெறும் அம்புலிமாமா கதைகளில் வரும் காகித கதா பாத்திரங்கள் மட்டுமே. உண்மையில் வெறும் வெற்று மனிதர்கள் என்று தான் பறை சாற்றுகின்றது................

2 comments:

Anonymous said...

சரிங்க
கந்து வட்டிக்கு கொடுக்காத ஒரே ஒரு திராவிட உள்ளூர் கட் சி தலைவர் அல்லது MLA , ஐ சொல்லுங்கள் பார்ப்போம்
( சுடாலின் , கருணாநிதி போன்ற பெருந்தலைவர்கள் தவிர்த்து )

')) said...

ஐயா அனானி அப்போ பணமதிபிழப்பு நடவடிக்கை ஒரு கண்துடைப்பு என்று அழகாக ஒத்துகொள்கிறீர்கள் அது தானே.......