Friday, August 11, 2017

மோடி அமெரிக்காவிற்கு சென்று வந்தது சீனாவோடு சண்டைக்கு போகத்தானா

சூன் மாதம் அமெரிக்காவுக்கு சென்று வந்தன் இரகசியம் இது தானா. வட கொரியா கட்டுக்கு அடங்காம ஆடுது. அதை ஆதரிக்கவும் மேன் மேலும் தூண்டவுன் சீனா மும்முரமாக இருக்கிறது. உலக நாடுகளில் எதுவாலும் வட கொரியாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

சீனாவை இந்திய முனையில் இராணுவ தாக்குதலுக்கு உள்ளாக்கினால் இந்திய பெருங்கடலிலும் ஆசிய நிலப்பரப்பிலும் நிலை கொண்டு இருக்கும் சீனப்படை இந்தியா நோக்கி நகரும். மேலும் இந்த பலவீனத்தில் வட கொரியா அடக்கி வாசிக்கும் என்றது அமெரிக்க கணக்கு.

சரி அப்போ இந்தியாவின் நிலை என்னவாகும், அதான் அருண் சேட்லி சொல்கிறாரே, 1962ல் இருந்த நிலை வேறு இப்போது நாங்கள் அமெரிக்காவின் கை கூலிகளாக இருக்கும் நிலை வேறு என்று சொல்லாமல் சொல்கிறார்.

சீனாவும் வட கொரியாவும் இனி என்ன செய்கின்றது என்று பார்த்து அமெரிக்க இந்தியாவிம் மூலம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடும்.

அது வரையில் ஏற்படும் பொருளாதார நட்டம் முதல் இராணுவ நட்டம் வரை இந்தியர்களுக்கு பப்பர மிட்டாய் கொடுத்து ஏமாற்றவும் அமெரிக்கா திட்டத்துடன் உள்ளது.

இந்திய சீன போர் வெடிக்கும் கால், காசுமீரத்தை பாக்கிட்தானத்துடன் இழந்தது போல் வட கிழக்கு மா நிலங்களை சீனாவிடம் இழக்க நேரிடும்.

நாமும் பழைய இந்திய படத்தை வைத்துக்கொண்டு தலை இல்லாத இந்தியாவையோ அல்லது இடக்கை இல்லாத இந்தியாவையோ நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று வசனம் பேச வேண்டியது தான்.....

0 comments: