Thursday, November 30, 2017

மோடியை பார்க்கும் போது எச்சி ராசா தமிழிசை எல்லாம் சும்மா

தனக்கா இல்லை என்றாலும் தான் வகிக்கும் பதவியின் மதிப்புக்காக என்றாவது மக்கள் நாகரீகமாக நடந்துகொள்வதுண்டு.

இது பாசகவை பொருத்த அளவில் தேவையே இல்லாத ஒன்று போலும்.

மோடி உளரி கொட்டுவதை பார்த்தால் அவர் உண்மையிலேயே பிரதமரா இல்லை தேனீர் கடையில் அமர்ந்துகொண்டு வம்பு பேசுபவரா என்று தெரியாத அழகாக இருக்கிறது.

மக்களுக்கு நன்றாத தெரிந்த உண்மைகளையே இல்லை என்று வாய் மணக்க புளுகுவது, மீண்டும் மீண்டும் அந்த பொய்யையே பேசுவது. கொஞ்சம் கூட கூச்ச நாணமே இல்லாமல் பல்லிளித்துக்கொண்டு அவைகளையே சொல்லும் போது மிகவும் எரிச்சலாக இருக்கிறது.

அதோடு நிற்காமல் டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான் என்ற அளவிற்கு இருக்கிறது அவரது காங்கிரசு பற்றிய விமர்சனங்கள்.

கிட்டதட்ட ஒரு 3 அல்லது 4 வகுப்பு படிக்கும் குழந்தை கூட கொஞ்சம் கௌரவமாகமும் நாகரீகமாகவும் நடந்துகொள்ளும் அந்த அளவுக்கு கூட இல்லையே இந்த பாசக பிரதமர்.

சென்னை தேர்தலில் பணப்பட்டுவாடா இல்லை என்றால் பாசக வெற்றியை ஈட்டும் என்று வருமான வரி சோதனைகள் மூலம் பணத்தை எல்லாம் முடிக்கிவிட்டதாக எண்ணி மனப்பால் குடிக்கிறார்கள்.

தேர்தல் வந்தால் அல்லவா தெரியும் எங்கே இருந்து அந்த 2000 சலவை நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து வருகின்றது என்று........

0 comments: