Tuesday, November 21, 2017

தமிழகத்தில் ஒரு கோத்ராவை நடத்த திட்டமிடும் பாசக - ஆளுனரின் கோவை ஆய்வு

திடமான ஆட்சி இல்லை என்றாலும் வலுவான மதவாதம் தலைதூக்கவில்லை என்றாலும், மதவாத ஆதரவு உள்ள இடங்களிலும் மனங்களிலும் ஒரு சின்ன தீயை பற்ற வைத்துவிட்டால் கோத்ராவை காரணம் காட்டி குசராத்து முழுவதும் கலவரத்தில் மூழ்கி முத்தெடுத்ததை போல் தமிழகத்திலும் ஒரு கோத்ராவை நடத்தி மீன் பிடிக்கும் திட்டத்தின் முன் வடிவம் தான் ஆளுனரின் கோவை ஆய்வு.

பாசக மக்கள் அனைவரும் நேராக கோவை செல்வதையும், கோவையிலேயே அனைத்து மதவாத நடவடிக்கைகளையும் துவக்குவதின் நோக்கமும் கோவையில் வெளிப்பட்ட எதிர்பும் முன்னாள் வன்முறை சம்பவங்களும் தான்.

இன்னமும் பத்தவைத்துவிட்டால் பற்றி எரியும் தன்மையுடன் அந்த இடம் இருப்பதாலும் அங்கே சென்று பத்தவைத்து தமிழகத்தை பாழாக்கலாம் என்று பாசக துடிக்கின்றது.

கடைசியாக அத்வானி கோவை சென்ற பிறகு பாசகவால் வெடிக்கப்பட்ட வெடிகுண்டுக்கு பிறகு இது வரையில் கோவையில் வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. எப்படியாவது மீண்டும் கோவையில் வெடிகுண்டுகள் வெடிக்க செய்யவேண்டும் என்று பாசக துடிக்கின்றது என்று அவர்களின் அளவுக்கு மீறிய கோவை பாசத்தில் தெரிந்துகொள்ளலாம். பாவம் கோவையில் எந்தெந்த பாசக மக்களின் அம்மா அப்பாகளை இந்த முறை உயிருடன் எரிக்க பாசக திட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றதோ, பாவம் அந்த வயதானவர்கள்.....

ஆளுனர் சட்டதின் உட்பட்டு நடத்தி இருக்கும் ஆய்வின் நோக்கமும் விளக்கமும் இந்த விபரீத வெடிகுண்டு ஆசையின் வெளிப்பாடே.

தமிழகத்தை ஆளும் தற்பொழுதைய பொம்மை அரசு தங்களிடம் உள்ள கொள்ளை காசுக்களை செல்லும் பணமாக மாற்றி பதுக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் கால் தமிழகத்தையே அழிக்க கூட தயங்காதவர்கள் என்று பலமுறை நிறுபித்தவர்கள் இந்த ஆட்சியர்கள்.

ஓநாயின் காவலில் ஆட்டுகுட்டிகளை விட்டது போல் இந்த ஓநாய் அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கொண்டு மக்கள் படும் அவதியை எப்படி தான் புரியவைப்பதோ......

GST மற்றும் Demonetization பிரச்சனையால் எங்களுக்கு எல்லாம் எந்த குறையும் இல்லை என்று 2000 ரூபாய் தாளில் வறுகடலையை தின்றுக்கொண்டு திமிராக பேட்டி கொடுத்த நடிகர்கள் எல்லாம் இப்போது முகமுடிகளில் மறைந்துக்கொண்டு அலைவதை கண்கூடாக காணமுடியும்.

கையில் இருக்கும் ஐந்து விரல்களும் வித்தியாசமாக தான் இருக்கும் ஆனால் அந்த ஐந்து விரல்களும் சேர்ந்தால் தான் கையில் வேலையை செய்யமுடியும் என்ற சாதாரண அறிவுக்கூட இல்லாத எச்சி ராசா போன்றோர்கள் மிகவும் நீளமான விரல் மட்டும் தான் உயர்ந்தது அந்த ஒன்று மட்டுமே இருந்துவிட்டால் உடலின் அத்தனை தேவைகளையும் எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்றிகொள்ளலாம் என்றும் வாதாடுகின்றார்கள்.

அது மட்டுமா, அந்த வேற்றுமைகளோடு எல்லாம் என்னால் வாழமுடியாது என்றும் கூறி அனைவரும் தன்னை போல் வேற்றுமைகளை போற்றி வளர்த்து வெறுப்பை கொட்டவேண்டும் என்றும் சொல் மக்கள் அவைகளை செய்யவேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார்.

பாவம் அவருக்கு தெரியாது இயற்கை அப்படி வேற்றுமைகளோடு தான் மனிதன் வாழவேண்டும் என்று ஆணுடன் எல்லா வேற்றுமைகளையும் கொண்ட பெண்ணோடு வாழ வைத்துள்ளார் என்று.

ஏன் நாளையில் இருந்து பாசகை சொல்ல சொல்லுங்களேன் நாங்கள் வேற்றுமையுடன் உள்ள பெண்களுடன் இனி குடும்பமாகவோ அல்லது அவர்களோடோ இல்லாமல் இனி தனியாத்தான் வாழுவோம் என்று.

அப்போ தமிழிசையார்கள் எல்லாம் என்ன சொல்வார்கள் ஆண்களோடோ அல்லது ஆண்களுடைய என்றவைகளோடோ எங்களு எந்த சம்பந்தமும் இல்லை என்று புரட்சி பேசுகிறார்களா என்று பார்ப்போம்............

0 comments: