Tuesday, October 3, 2017

என்ன சாதித்துவிட்டா காந்தி என்று இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

சங்கபரிவாரம் தனது ஆளைவிட்டு காந்தியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற போது இந்தியா தூய்மை அடைந்துவிட்டது என்று பரைசாற்றும் விதமாக தூய்மை இந்திய தினமாக காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் மாற்றப்பட்டு இருக்கின்றது இந்த சங்கபரிவார அரசால்.

அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்த காந்தி இவ்வளவு கொண்டாட....

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய போராட்டம் இந்தியாவில் தொடர சுதந்தர வேட்கையில் தவித்த மக்கள் கட்டுக்கு மீறி தனது பேச்சையும் கேட்க்காமல் வன்முறையில் இறங்க அதோடு தனது போராட்டங்களை நிறுத்துவதாக காந்தி அறிவித்தார்.

அதாவது நிலைமை கையை மீறி சென்றதும் இனி இப்படியே விட்டால் போராட்டம் அமைதியாகவும் அகிம்சையாகவும் இல்லாமல் போராகவும் உள் நாட்டு கலவரமாகவும் மாறிவிடும் என்று நிறுத்தினார்.

என்ன மனிதர் இந்த காந்தி அதுதான் சமயம் என்று தனக்கு பிடிக்காத தனது சிந்தாந்தங்களை ஏற்காத மக்களை அந்த கலவரம் கொண்டு கொன்று குவித்துவிட்டு, நாட்டு மக்களின் முன்னிலையில் கலவரத்தில் நடந்ததுக்கு நான் எப்படி பொருப்பாக முடியும் என்று நீலிக்கண்ணீர் வடிக்க தெரியாத மனிதர் இவருக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்.

ஒரு முறை அல்ல இரு முறை அல்ல 4 முறை இந்திய சுதந்திர போராட்டத்தை இதே போல் கைவிட்டு விட்டு பிறகு மக்கள் எல்லாம் திரண்டு நாங்கள் இனி ஒரு போதும் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என்று உறுதி கொடுத்த பின்பு கடைசியாக நடந்த போராட்டத்தில் தான் சுதந்திரம் கிடைத்தது.

இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமான காந்தி நாட்டின் மிக உயர்ந்த பதவியான பிரதமர் பதவியில் உட்கார்ந்துக்கொண்டு உலகம் பூராவும் சுற்றி வந்து தான் எப்படி இந்தியாவின் விடுதலைக்காக போராடினேன் என்றும் நான் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடாமல் போய்யிருந்தால் இன்னேரன் இந்தியா பாவ பூமியாக இருந்து இருக்கும் என்று நாடு நாடாக சென்று பேசி இருக்க வேண்டாமா. அதுவும் பாரீசுடர் பட்டம் பெற்றவர் என்ற பெருமை வேறு இந்தியில் இல்லை ஆங்கிலத்திலேயே அழகாகவும் சாமார்த்தியமாகவும் பேசி இருக்கலாம். செய்தாரா இந்த மனிதர்...... ஒரு 35 இலட்சம் பெருமானம் கொண்ட ஆடையை அணிவதற்கு பதில் பரதேசி கோலமாக இலண்டனுக்கு சென்ற துப்பு கெட்ட மனிதருக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்.

வங்காலத்தில் இந்து இசுலாமியர் மோதல்கள் வெடித்த போது அந்த நிகழ்வை காரணமாக காட்டி அங்கே இருக்கும் அத்தனை இசுலாமியர்களையும் அழித்து இருக்க வேண்டாமா அதை விடுத்து அவர்கள் கலவரத்தை விடும் வரை செத்தாலும் சரி என்று உண்ணா விரதம் இருந்து நிறுத்தியது எந்த வகையில் ஞாயமாகும். இந்த மனிதருக்கா இத்தனை கொண்டாட்டம்....

இப்படி பல நூறு காரணங்களை அடுக்கலாம் காந்தியின் பெயரையும் புகழையும் படத்தையும் அழிக்க சொல்லி மாளாதே என்று இதோடு நிறுத்திக்கொள்கின்றேன்.

போய் எல்லோரும் மாகாத்துமாவை அழித்து தூய்மை படுத்தபட்ட இந்தியாவின் தினமாக தூய்மை பாரதம் என்று கொண்டாடுங்கள் இல்லை என்றால் நீங்கள் எல்லாம் தேசதுரோகிகள். வந்தே மாதரம்.....

பிகு: இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் எல்லையில் இருக்கும் இராணுவ வீரரிடம் கேட்கவும்.

0 comments: