Tuesday, December 12, 2017

மோடியும் பாசகவும் இசுரேல் மொசாத்து அமைப்புடன் சேர்ந்து இந்தியாவின் அமைதியை குலைக்க சதி

இசுரேலின் மொசாத் அமைப்பை பற்றி புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. இந்தியாவின் ரா அமைப்பை போல் செயல்படும் ஒரு இரகசிய திரைமறைவு இயக்கம்.

இந்த அமைப்பு இசுரேலில் இசுலாமியர்களுக்கு எதிராக கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்ட தாக்குதல்களை வகை தொகையில்லாமல் தொடுத்து வருகின்றது. அதற்கு காரணமாக இசுரேல் சொன்னாலும், அந்த நாட்டில் வாழும் சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக ஆக்கி அழகு பார்க்கும் அரசுக்கு என்ன ஞாய தர்மங்கள் இருக்க முடியும்.

இலங்கையில் சிறுபான்மையினராக இருந்த தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் சிங்களவர்களை எந்த காரணமும் இல்லாமல் குடியேற்றி மெல்ல மெல்ல தமிழர்களின் இடத்திலேயே அவர்களை அகதிகளாக ஆக்கி கடைசியில் வதை முகாம்களில் வைத்து வருட கணக்கில் வதைத்துக்கொண்டு இருப்பது போல். இந்தியாவிலும் சிறுபான்மையாக இருக்கும் மக்களையும், பாசகவின் சிந்தாந்தங்களை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கும் மக்களையும் இதே போல் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்க மோடியும் பாசகவும் சதியில் ஈடுபட்டுள்ளது.

படிப்படியாக எப்படி துல்லிய தாக்குதலை தொடுப்பது, எங்கே இருந்துக்கொண்டு அடிப்பது என்ற கோணங்களை எல்லாம் மொசாத்து இயக்கம் திட்டமிட்டு வழங்கி அதை இந்தியாவிலே இரவில் மக்கள் அயர்ந்து இருக்கும் நேரம் நிகழ்த்திவிட்டு சுவடு தெரியாமல் காணாமல் போவார்கள் மொசாத்து இயக்கம்.

பிறகு என்ன கோத்ராவை காரணம் காட்டி குசராத்தை எரித்தவர்கள், தமிழகம், கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தை எரித்துவிட்டு அகதிகள் முகாமில் இவர்கள் எல்லாம் இனப்பெருக்கம் செய்த்துகொண்டு இருக்கிறார்கள் என்று மோடியும் பாசகவும் சொல்வார்கள்.

உங்கள் ஊரில் அடையாளம் தெரியாத மக்கள் யாரையாவது பார்த்தீர்களானால் கவனமாக இருங்கள். உங்களின் பாதுகாப்பு எல்லாம் இனி காற்றில் மறைந்த வாசனை அவ்வளவே......

நீங்கள் கேட்கலாம் அடிப்படையே இல்லாமல் எந்த ஆதாரத்தை வைத்து இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொல்கின்றாய் என்று கேட்பீர்கள்.

எந்த ஆதாரத்தை வைத்து மோடியும் பாசகவும் குசராத்து தேர்தலில் பாக்கிட்தானின் ஆட்சியர்களும் இராணுவத்தினர்களும் சதியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று சொன்னார்களோ அதே ஆதாரத்தை வைத்து தான் நாங்களும் சொல்கின்றோம்........

இந்த கிறுக்கு பிடித்த பைத்தியகார மனிதன் மோடி என்ன கூத்து எல்லாம் அடிக்க போகிறாரோ........

அவர் என்ன வேண்டும் என்றாலும் ஆகட்டும் ஆனால் அதனால் எங்களுக்கு துன்பம் வராமல் இருந்தால் சரி தான்.........

0 comments: