Tuesday, September 5, 2017

பாசக - நீட் தேர்வால் ஏழை மக்கள் எல்லாம் எவ்வளவு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்

நீட் தேர்வு வந்ததால் தகுதியான அறிவாய்ந்த மக்கள் மட்டுமே தான் இனி மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்றும் இது தமிழக்த்தின் ஏழை மாணவர்களையும் ஏழை சமூகத்தையும் மனதில் வைத்து தான் இந்த முடிவை பாசக அரசு எடுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு கள்ளப்பணம் வைத்து இருப்பவரை குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவு, இதனால் பலன் பெறப்போவது என்னவோ தமிழகத்தின் ஏழை எளிய மக்கள் தான்.

இந்த நீட் தேர்வு திணிப்பு முடிவை எடுப்பதற்கு முன் பாசகவின் தலைமை எத்தனை நாள் தூக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறது தெரியுமா. இந்த நீட் தேர்வின் பலன் இன்னும் 50 நாட்களில் தெரிய ஆரம்பித்துவிடும்.

 நீங்களும் படிக்கிறீர்கள் கள்ளப்பணம் வைத்து இருப்பவனும் படிக்கிறான் ஆனால் பாருங்கள் கடைசியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படிப்பை அவன் அந்த கள்ளப்பணம் வைத்து வாங்கிக்கொண்டுவிட்டு ஏழை எளியவர்களை மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் செய்து வந்தார்கள். இப்போது இந்த நீட் தேர்வு வந்ததால் இனி ஏழை எளிய மாணவர்கள் எல்லாம் இந்த ஆண்டு முதல் உலகத்திலே வேறு எங்குமே காணமுடியாத அதிசயமாக அதிக அளவில் மருத்துவம் படிக்க இருக்கிறார்கள்.

இந்த தமிழக ஏழை எளிய மக்கள் மருத்துவம் படிக்க வாப்பு கிடைத்தது என்ற பொறாமையில் கள்ளப்பணம் வைத்து இருப்பவர்கள் தான் போராட்டம் அது இது என்று ஆடுகிறார்கள். மற்றப்படி ஏழை எளிய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நண்பர்களும் உறவினர்களும் எவ்வளவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறார்கள் என்று தமிழகம் சென்று பார்க்கும் படி இந்தியாவின் மற்ற மாநில மக்களை பாசக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்ததில் திக்கு முக்காடி போய் தமிழகத்தின் ஏழை எளிய மக்கள் வீதிகளில் வந்து கண்ணில் கண்ட மக்களுக்கு எல்லாம் இலட்டு கொடுத்து கொண்டாடும் காட்சிகளை வீதி எங்கும் திருவிழாப்போல் தமிழகத்தில் பார்க்க முடிவதாக தமிழக பாசக தலைவர்கள் தொகாவிலும் செய்தி ஊடகங்களிலும் தெரிவித்து மகிழ்கிறார்கள்.

தமிழகத்தில் பாசக ஆட்சி இல்லாத போதே இவ்வளவு நல்லகாரியங்களை செய்யும் பாசக மட்டும் தமிழகத்தை ஆளும் மா நிலமாக வந்தால் நிலைமை எவ்வளவு மேம்படும் என்று குறிப்பிட்டு அகமகிழ்ந்தார்கள் என்று தினசரிகளை படித்தாலே தெரியும் என்றும், தமிழகத்தில் தாரமரை மலர்ந்தே தீரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

0 comments: