Monday, August 14, 2017

நிர்மலா சீதாராம் தான் பாசகவின் தமிழக முதல்வர் வேட்பாளரா

தமிழகத்தில் எந்த அவசர சட்டமாக இருந்தாலும் சரி அல்லது முக்கிய பிரச்சனைகளாக இருந்தாலும் சரி நிர்மலா சீதாராம் தான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.

காளை மாடு மட்டும் காட்டு விலங்காக அறியப்பட்ட சதியின் பின்னணி, பின்னர் காளை மாட்டை காட்டு விலங்கு இல்லை வீட்டு விலங்கு தான் என்று வரலாற்று சான்றாக அறிவித்தால், அதன் அவசர சட்டம், தமிழகத்திற்கு நீட்டு தேர்வு அவசியாமா இல்லையா என்ற முடிவை அரசு சார்பாக அறிவித்தல், ரேசன் பொருட்கள் தமிழகத்திற்கு தேவையா இல்லையா என்று வரையறுப்பது, கூடங்குளத்தில் அணு மின்னிலையம் அமைப்பது தமிழகத்திற்கு நல்லதா தீயதா என்று ஆராய்சி முடிவுகளை வெளியிடுவதும் அதை பொருத்து அறிவிப்பதும், நெடுமங்கலம், கதிராமங்கலம் என்று தமிழகத்தை சீரழப்பதற்காக துடிக்கும் திட்டங்கள் தமிழகத்திற்கு வந்தே தீரும் என்று சொல்வதும் அறிவிப்பதும், அதிமுக அணி சேரவேண்டுமா இல்லையா, தமிழகத்து சட்டபேரவை சரியாக நடக்கின்றதா இல்லையா என்று அனைத்து விதமான அறிவிப்புக்கும் அதிகார பூர்வமாக நிர்மலா சீத்தாராம் தான் அறிவிக்கின்றார், பேசுகின்றார்.

பாசகவின் மற்ற குட்டி குட்டி தலைவர்கள் தமிழைசை, பொன்னார், எச்சி ராசா போன்றோர்கள் போல் விவாதத்தில் கலந்து கொள்வது, விமான நிலையமுதல் தொகா விவாதங்களுக்கு பேட்டி அளிப்பது போன்ற வெட்டி வேலைகள் எல்லாம் இவருக்கு இல்லை.

வெங்கையா நாயிடுவும் இவரை போல் வெட்டிப்பேச்சுகள் எல்லாம் பேசுவது இல்லை ஆனால் ஊடகங்கள் எல்லாம் தமிழகத்தின் உண்மையான முதல்வர் வெங்கையாவா என்று எழுதி தீர்த்தார்கள், ஆனால் அவரை துணை குடியர்சு தலைவராக அறிவித்தது பாசக, இந்த நிலையில் தமிழகத்தின் பாசக முதல்வராக வரப்போகின்றவர் நிர்மலா சீத்தாராம் தான் என்று தெளிவாககின்றது.

சொல்ல முடியாது நாளையே இவரை அதிமுகவின் தலைவராக பாசக ஆக்கினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை தான். அடுத்த அதிமுகவின் முதல்வராகக் கூட வர வாய்ப்பு இருக்கின்றது.

பாசகவின் மற்ற குட்டி குட்டி தலைவர்களான பொன்னார், தமிழிசை, எச்சி ராசா எல்லாம் பப்பர முட்டாயை வாங்கிக்கொண்டு மற்ற தமிழர்கள் போல் வந்தே மாதரம் என்று கொடியை குத்திக்கொண்டு அன்னாந்து வானத்தை பார்க்கவேண்டியது தான் போலும்.........

0 comments: