Sunday, December 31, 2017

பாசகவின் அடுத்த இரகசிய திட்டம் - Plan C

பாசக இது வரையில் தமிழகத்திற்காக வகுத்த திட்டங்கள் முறையே

1) திட்டமிட்டு தாங்களே வெடி குண்டுகளை வெடிக்க வைத்து அவைக்கள் வெடித்தற்கு பாக்கிட்தானம் தான் காரணம், மேலும் அந்த குண்டுகள் தமிழகத்தில் வெடிக்க வேண்டும் என்றால் பாக்கிட்தானத்தின் கை தமிழகம் வரை நீள்கிறது பாரீர். ஆகவே அந்த கொட்டத்தை அடக்க பாசக வந்தால் தான் ஆச்சு என்று அத்வானி தமிழகம் வந்து சென்ற இடங்களில் எல்லாம் அவர் பாதுகாப்பான தூரம் சென்றதும் வெடித்து ஓலமிட்டு பார்த்தது. - Plan A

2) இந்த பிசக்கு ஆட்டத்தை பார்த்த அதிமுக தலைவி நீங்க என்ன மதம் சம்பந்தமாக செய்வது, அதைவிட சிறப்பாக நாங்களே செய்கின்றோம் என்று மதமாற்ற தடுப்பு சட்டம், கோவிலில் ஆடு கோழிகள் பலியிட தடை என்று அவரின் அறிவிப்புகள் நீண்டுக்கொண்டே போக அம்மையாரின் மறைவு வரை பாசக தைத்து வைத்திருந்த அந்த முண்டா சட்டையை ஆணியில் மாட்டிவிட்டு காத்துக்கொண்டு இருந்தது. அம்மையாரின் மறைவுக்கு பிறகு அதிமுகவை மிரட்டி பாசக - B அணியாக தமிழகத்தில் ஓராண்டுகள் நடத்தி இது வரையில் கையெழுத்து ஆகாமல் இருந்த ஒப்பந்தளில் எல்லாம் இரகசியமாக கையெழுத்து வாங்கி தமிழக இயற்கை வளங்களையும், மனித வளத்தையும், சிறு மற்றும் குறு விவசாயிகள் முதல் தொழில்கள் வரை அழித்து, இனி நாங்க தான். இப்படி தான் மத மற்றும் சாதி அடாவடி செய்வோம் என்று மிக தைரியமாக ஊடங்களில் உளரி கொட்டிய விதத்தை பார்த்த மக்கள் பாசகவை நோடாவிற்கும் கீழே தள்ளி வேடிக்கை பார்த்தார்கள்.

அப்படியே தமிழகம் முழுவதும் எடுத்த இரகசிய அறிக்கையில் தமிழிசையும், எச்ச சர்மாவும், பொன்ராவும் அளவுக்கு அதிகமாக பாசக தலைமையிடம் புளுகி பதவிகளையும் வசதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்று தெரியவர. இது வரையில் சுதந்திரமாக சுற்றி வந்த சசிகலாவை இன்றைக்கு தான் குற்றம் புரிந்தவர் என்று கண்டுபிடித்தது போல் சிறையில் தள்ளி தலையில்லா அதிமுக ஆட்டத்திலேயே இல்லை என்று ஆக்கி சென்னை இடை தேர்த்தலை சந்தித்து பார்த்தார்கள். மொத்தல் 2 மாணவர்கள் பயிலும் வகுப்பில் நான் 2வது மதிப்பெண் அல்லது 2ஆம் இடம் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று அந்த 3வரும் சொல்ல செயலாற்றி நோட்டாவிடம் குட்டு வாங்கி நின்றார்கள். - Plan B

3) இனி பட்டது எல்லாம் போதும் தமிழகத்தை பொறுத்த அளவில் ஆன்மீகம் கொண்டாடும் ஒரு தலைமையை தேடி அவருக்கு அந்த முண்டா சட்டையை சட்டைக்கு மேல் மாட்டிவிட்டு நோயாளி சால்வையையும் போர்த்திவிட்டு இவரும் வட நாட்டுகாரர், தேசிய நீரோட்டத்தில் தமிழகத்தை அழிக்க பிறந்தவர் ஆகவே இவரை தான் நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று காத்து இருந்தார்கள் இது வரையில். எப்படியாவது தமிழக பாசகவின் தலைமையாக பொறுப்பு ஏற்க வைத்துவிட்டோம் என்றால் அவரை காட்டி விற்காத சரக்கை எல்லாம் விற்று விடலாம் என்று எண்ணிகை இல்லாத அளவிற்கு தூது விட்டும் பார்த்தார்கள்.

ஒவ்வொறு முறையும் இந்த எச்ச சர்மா பேச்சும் பேச்சுக்களால் வரவிறுக்கும் தலைமைக்கும் அதற்கு பிறகு வரும் தலைவர்களையும் பாதிக்கும் வண்ணம் ஆபாசமாக நடந்தும் பேசவும் செய்தார். ஆகையால் நேரடியாக தலைமை ஏற்றால் கங்கை அமரனுக்கு நேர்ந்த கதிதான் தனக்கும் நேரும் என்று தெரிந்துகொண்டவர் இப்போது தனி கட்சி என்று ஓட்டு வாங்கி பிறகு நான் பாசகவோடு இணைத்து கொள்கின்றேன் என்று ஓர் இரவில் தமிழகத்தில் பாசகவின் அரசை கொண்டுவர பலிகடாவை தயார்படுத்திவிட்டார்கள் பாசகவினர். - Plan C

தனி கட்சி தொடங்கிய சிரன்சீவி கடைசியில் காங்கிரசில் கரைந்து இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. கட்சி துவங்கிய போது பேசிய வீர வசனக்கள் எல்லாம் மக்களும் அவரும் மறந்து போன பரிதாம் தான் நினைவுக்கு வருகின்றது. மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட விசயகாந்து சென்ற தேர்தலில் சந்தித்த பரிதாப தோல்வியும் அதற்கு அழகாய் வழிவகுத்து கொடுத்த அவரின் துணைவியாரின் நாகரீகமற்ற மேடைப்பேச்சும் நினைவுக்கு வந்து போகாமல் இல்லை.

கடைசியாக தமிழக்தில் பாசகவிற்கு முண்டா சட்டையை மாட்டிவிட ஆள் கிடைச்சாச்சு........

அப்போ முதல்வர் பதவியும் பாசகவின் முண்டா சட்டையும் இவருக்கு தான் என்றால் இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாமனும், நெடு நாட்களாக தன்னையும் முதல்வராக்கி விடுவார்கள் என்று சப்புக்கொட்டி கொண்டு இருந்த எச்ச சர்மா மற்றும் தமிழிசை எல்லாம் இனி என்ன செய்வார்கள். அவ்வளவு தானா இனி இந்த புது தலைவருக்கு நோயாளி சால்வை போர்த்திவிட்டு பின்னால் நின்றுக்கொண்டு டச்சப் பாயாக்க இருக்க தயாராகிவிட்டார்கள் போலும். வாழ்த்துக்கள் எச்ச சர்மா, தமிழிசை மற்றும் நிர்மலா சீத்தாராமன். மன்னிகனும் பொன்னார் இந்த போட்டியில் எல்லாம் எப்பவும் இருந்ததில்லை.

திருவாளர் துக்ளக் இம்சையரசர் 23ம் புலிக்கேசி மோடி 31 நள்ளிரவில் ஏதோ ஒரு அதிர்ச்சி இந்தியாவை பெற்று எடுக்க போவதாக முன்னவே சொல்லி இருந்தார். எந்த கருமத்தை செய்ய போகிறாரோ, ஏற்கனவே ஆதாரை வைத்து தில்லுமுல்லாடிய ஏர்டெல் நிறுவனம் 190 கோவரை சுருட்டிவிட்டு வழக்கு தொடர்ந்ததும் கொடுக்கிறேன் என்று பம்மாத்து காட்டுகிறது. 1771 கோடி ரூப்பாய் ஓர் ஆண்டில் குறைந்த வைப்பு தொகை இல்லமை மற்றும் மற்ற இந்தியாதிகளுக்காக ஏழை எளிய மக்களிடம் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட பணம் என்று மார்தட்டி சொல்கிறது எசுபிஐ வங்கி. இன்னும் என்ன என்ன கருமாந்திரத்தை எல்லாம் மீதம் இருக்கும் 1 1/2 ஆண்டில் சந்திக்க வேண்டி இருக்குமோ..............

0 comments: