Thursday, December 14, 2017

மோடி - வரபோகிற ரபேல் விமான ஊழல் விசாரணைக்கு முட்டு கொடுப்பதா இந்த வாரா கடன் விளக்கம்

மோடி திருவாய் மலர்ந்தாலே பொய்யும் புரட்டும் தான் வரும் போல. அதுவும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதில் வல்லவர்கள் இந்த மோடியும் அவரின் அடிபொடிகளும்.

இன்றைக்கு செய்திகளில் வங்கியின் வாராக்கடன்களுக்கு காரணம் சென்ற முறை ஆட்சியில் இருந்த காங்கிரசு ஆட்சி தான் காரணமாம். அதுவும் பாசக அரசின் அனைத்து திட்டங்களையும் அதானிக்கும் அம்பானிக்கு மட்டுமே கொடுப்பதை போல் காங்கிரசு அரசு வங்கியின் வாரா கடன்களை ஒரு குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் கொடுக்கும் படி நிர்பந்திக்கப்பட்டார்களாம், அதாவது இப்போது மைய அரசு திட்டங்கள் அனைத்திற்கும் செலவாகும் பணம் அனைத்தும் அதானிக்கும் அம்பானிக்கும் கொடுக்கப்படுவதை போல் என்று சொல்கிறார்.

மேலும் இது வரையில் மூத்ரா திட்டத்தின் கீழ் 4 இலட்சம் கோடி வரை இளைஞர்களுக்கு கடன் கொடுத்துள்ளதாம் பாசக அரசு. அப்படி கொடுத்த 4 இலட்சம் கோடியும் திரும்பி வரபோவது இல்லை என்றதை தான் மோடி பாதிக்கப்படும் வங்கிகளை காக்க பொது மக்களை அடித்து உதைத்து கையில் இருக்கும் கடைசி காசு வரை வங்கியில் போடு இல்லை என்றால் கள்ளப்பணம் வைத்து இருக்கிறாய் என்று சிறையில் தள்ளுவோம் என்று மிரட்டி பிடுங்கிய கீரைகாரிகளின் பணமும், தயிர்காரிகளின் பணமும் மூத்ரா திட்டத்தில் கொடுத்த வாரா கடன்களுக்கு தாரைவார்க்கப்படும் என்று விளக்கம் அளிக்கிறார்.

இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வெளியிட மோடிக்கும் அவரது அடிபொடிகளுக்கும் 3 1/2 ஆண்டுகள் பிடித்தது போலும்.

இப்படி ஒரு அறிவிப்பை மோடி தற்பொழுது வெளியிட வேண்டிய கட்டாயம் பாசக அரசு தற்பொழுது வாங்கி இருக்கும் ரபேல் விமானங்கள் தான் காரணமாக இருக்கும்.

ஒரு விமானம் 100 கோடிக்கு வாங்க பேசிய ஒப்பந்தத்தை மீறி ஒரு விமானத்தை 500 கோடிக்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று இது வரையில் விளக்கம் சொல்லாத மோடி. இனி வரும் காலங்களில் ரபேல் விமான ஊழல் பற்றி விசாரிக்க வந்தால் காங்கிரசு ஆட்சியில் நடந்த பொபோர்சு ஊழலால் தான் நாங்கள் வாங்கிய ரபேல் விமான கொள்முதலில் ஊழல் வந்து என்று ஒரு வரியில் சொல்லி திசை திருப்பும் முன்னோட்டம் தான் இந்த வாரா கடன் பற்றிய வியாக்கியாஞம்.

இந்த அளவிற்கு வெளிப்படையாகவே புளுக்கும் ஒரு தேசிய பிரதமரை உலகம் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார் என்று பாசகவும் அதன் சிங்கிகளும் சொல்லி சொல்லு பெருமிதம் அடைந்துகொள்ளலாம்.

இப்படி பட்ட மகா கேவலமான மனிதரையும் அவரை சார்ந்த கூட்டத்தையும் நம்பி தான் இந்தியர்கள் ஊழல் ஒழியும் இந்தியா மிலிரும் என்று நம்பியும் அதை விட அந்த மனிதர் தேர்தல் நேரத்தில் சொன்ன ஒவொரு இந்தியரின் பெயரிலும் 15 இலட்ச ரூபாயை செந்தன் திட்டதின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம், மேலும் வீட்டில் ஒருவருக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையும் கொடுப்போம் என்று ஆசை வார்த்தை பேசியதில் மயங்கி ஓட்டளித்த மக்கள் எல்லாம் இன்றைக்கு இந்த இம்சையரசர் 23ம் புலிகேசி மற்றும் துக்ளக் மன்னரின் பொன்னான ஆட்சியை பார்த்து பூரித்து வரும் காலங்களில் இந்திய வரலாறில் இரண்டாம் துக்ளக் மற்றும் இரண்டாம் இம்சையரசர் 23ம் புலிக்கேசியின் வரலாறு என்று என்ன என்ன எல்லாம் வரும் என்று வேதனையுடம் கூடைய நமட்டு சிரிப்பு சிரிப்பது கண்கூடாக காணமுடிகின்றது இந்தியா முழுவதும்.

மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடியும் போது அனேகமாக இந்தியா சொமாலியாவின் பொருளாதார நிலைக்கு வந்துவிடும் போல......வாழ்க இந்தியா பாரத்து மாத்தா கீ சே............

0 comments: