Thursday, November 16, 2017

குருடாகவும் செவிடாகவும் அறிவின்மையாகவும் இருந்த வருமான வரி துறை பாசகவால் புணர்சென்மம் எடுத்தது

2014ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவைகள் யாவும் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அறிந்து அவைகள் யாவும் தண்டனைக்குறிய குற்றமாக அறிவித்தது இந்திய நீதிமன்றம்.

2014, 2015, 2016 மற்றும் 2017 தற்பொழுது வரை அந்த தீப்பு கண்களில் தெரியாமலும் நீதியரசர் சொன்னவைகள் காதுகளில் கேட்க்காமலும் இப்படி எல்லாம் தீர்புகள் வந்தால் என்ன செய்வது என்றே தெரியாமலும் இருந்து வந்த இந்திய வருமான வரி துறைக்கு இன்றைக்கு தான் 150 வண்டிகளை ஒருங்கே கூட்டி ஒரே நேரத்தில் கூண்டோடு அமுக்கி விபரங்களை எல்லாம் கண்டுபிடித்து வழக்கு தொடுப்பதாக அறிவித்து இருக்கிறது.

தமிழிசை மற்ற பாசகவின் ஊது குழல்கள் யாவும் இதுவரையில் இந்திய வருமான வரி துறைக்கு எப்படி வருமான வரி சோதனை செய்வது என்றது மட்டும் இல்லை எப்படி எல்லாம் மக்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார்கள் என்று கண்டுபிடிக்கு உத்திகள் கூட தெரியவில்லை என்றும். பாசகவும் அதன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வெற்றியாலேயே இந்த கணக்குகளை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அளந்துவிடுகிறார்கள்.

இந்திய வருமான வரி துறை என்ன புதிதாக துவங்கப்பட்ட அரசியல் கட்சியா எது எப்படி என்று இது வரையில் தெரியாமல் புதிதாக வந்து இருக்கும் அரசு எப்படி என்ன என்ன செய்யவெண்டும் என்று சொன்னதும் அது படி செய்த்ததினால் பலன் கிடைத்து என்று சொல்லிக்கொள்ள.

உங்களின் சொந்தங்கள் யாரும் இந்திய வருமான வரி துறையில் பணிபுரிந்தால் அவர்களை உங்களுக்கு தெரியாது என்று இனி சொல்லிவிடுங்கள் இல்லையேல் அந்த கேணைபயல்களை போல் உங்களையும் கேணையன்களாக நினைத்து மக்கள் தூற்றுவார்கள்.

மைய அரசின் ஏவலாளியாக செயல்படும் அனைத்து துறைகளும் இப்படி தான் மக்களால் தூற்றப்படும்.

அந்த வெட்கம் கெட்ட துறையின் நல்லவர்கள் கூட இதுவரையில் இது ஒன்றும் பாசக கற்றுக்கொடுத்து எங்களுக்கு தெரிந்தவைகள் அல்ல என்ன எங்களை செயல்படவிடாமல் அரசில் இருப்பவர்கள் தடுக்கிறார்கள் என்று தைரியமாக மக்களுக்கு சொல்வார்களா.......

இன்னும் சில நாட்களில் இந்திய வருமான வரி துறையின் முக்கிய பொறுப்புக்கு வருவார் சிலர், அவர்கள் தான் இந்த திட்டமிடப்பட்ட துல்லிய தாக்குதல்களை வகுத்து குறிப்பிட்ட நபர்களை பழிதீர்த்துக்கொள்ள பயன்பட்டவர்கள் என்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

0 comments: