Wednesday, August 9, 2017

நடு இரவில் அந்த பெண்ணுக்கு அங்க என்ன வேலை -- சுடலைமாடன் வருகையில்

அந்த பெண் வர்னிகா ஏன் நடு இரவில் வெளியில் செல்ல வேண்டும். வடக்கில் இரவில் தனியாக இருக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டும் எப்படி இந்த பெண்ணுக்கு நடு இரவில் தனியாக பயணிக்கும் தைரியம் வந்தது.

ஆண்மகன் விகாசு பாரால அதுவும் உலகை ஆளும் பாசகவின் கட்சியை சேர்ந்த பெரும் புள்ளியின் மகன் இரவிலும் பகலிலும் உல்லாசமாகவும் சல்லாபமாகவும் வாழ சர்வ தகுதிகளையும் பெற்றவன் இரவில் நாடு நன்றாக உள்ளதா என நகர்வலம் வரும் வேளையிலா இந்த பெண் வர்னிகா தனியாக வெளியில் செல்வாள்.

நாடும் உலகும் இருக்கும் நிலையில் படித்து பெரிய பதவியில் இருக்கும் ஒரு ஆட்சியர் இப்படியா கொஞ்சம் கூட பொருப்பில்லாமல் வயசு பெண்ணை இரவில் ஊர் சுற்ற அனுப்புவது. என்ன ஒரு ஒழுக்கம் கெட்ட குடும்பம் இவர்களது குடும்பம்.

பெண் என்றால் வீட்டில் அந்த 4 சுவர்களுக்குள் முடங்கி கிடந்து வீட்டு ஆண்கள் வீட்டிற்கு வருவதற்குள் சமைத்து, துவைத்து கணவனின் வருகைக்காக காத்து இருக்காமல் இது என்ன திமிர்தனமா வண்டியை ஓட்டிக்கொண்டு அலைவது.

நிர்பயா ஒரு கற்பனையான பெயர் தான் ஆனால் அந்த பெண்ணிற்கு நடந்த கொடுமைகள் எல்லாம் உண்மை அந்த தகவல்கள் எல்லாம் தெரிந்தும் இப்படி இரவில் வர்னிகாவை வெளியில் வண்டியை எடுத்துக்கொண்டு அலைய வைத்த பெரும் தேவை தான் என்ன....

சுடலைமாடன் வருகையில் குறுக்கே வரும் மக்களின் உயிரை எல்லாம் குடித்துவிடும் என்று தெரியாதா தெரிந்தும் தன் பெண்ணை அனுப்பி நாடகம் ஆடி எங்களது கட்சிக்கும் குடும்பத்திற்கும் கெட்ட பெயரை உண்டாக்கிறார் என்று வர்னிகாவின் மீதும் அவரது பெற்றோர்களின் மீதும் வழக்கு தொடரவும் தண்டனையளிக்கவும் வேண்டும்.

எப்போது தான் இந்த புத்தி கெட்ட நிர்பயா பெண்கள் திருந்துவார்களோ ஆண்களை இப்படி பாடாய்படுத்துவதை நிறுத்துவார்களோ.......

0 comments: