Friday, September 29, 2017

தமிழக சின்ன பாசக அன்புமணி இராமதாசு

தமிழகத்தில் சாதிவாரியாக மக்களை பிளவுபடுத்தி அவர்களுக்குள் சண்டையை மூட்டி அடித்துகொள்ள வைத்து குளிர் காய்வது சங்கபரிவாரம். அந்த சங்கபரிவாரம் இதை ஆட்சியிலேயே உட்கார்ந்துக்கொண்டு செய்ய முடியாது என ஆட்சியில் அமர்பவர் பெயர் பாசக, ஆனால் அவர் நாங்கள் என்ன செய்கின்றோமோ அதையே தான் செய்வார் ஆனால் அவர் சங்கபரிவாரம் இல்லை, எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று மூச்சுக்கு 300 தடவை சொல்வார்கள்.

முதலில் சாதி சங்கம் என்றும் பின்னர் அதை பாசக என்ற பெயரில் அரசியல் கட்சி என்ற போர்வையில் வந்த அதே பாணியில் தான் பாமகவும் பயணிக்கின்றது. ஊருக்கு ஊர் சங்கமும் அந்த சங்கத்தின் பெயரால் இன தூய்மையை செய்வோம் என்று கடந்த சில ஆண்டுகளில் கௌரவ கொலைகளிலும் ஈடு பட்டது இந்த பாமக என்றது நினைவில் இருக்கலாம்.

திராவிட கட்சிகளும் அதன் வழித்தோன்றல்களினால் எந்த பலனும் தமிழகத்துக்கு விளையவில்லை என்றும் தன்னை முதல்வராக தேர்ந்து எடுத்தால் நல்ல ஆட்சியினை வழங்க முடியும் என்றும் சென்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது இந்த பாமக.

இன சுத்திகரிப்பு வேலைகளை சங்கபரிவார கும்பல்கள் செய்வதை விட கேவலமா எங்களாலும் செய்யமுடியும் என்று காட்டிவிட்டு வாக்குகளை கேட்டது இந்த பாமக.

சங்கபரிவாரம் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன தீமைகளை செய்து சமூகத்தை அழித்தொழிக்க முடியுமோ அத்தனையும் செய்யும் இந்த சாதிவெறி பாமக.

இதே அன்புமணியும் சரி இராமதாசும் சரி சங்கபரிவாரங்கள் செய்யும் எந்த ஒரு அட்டூழியங்களையும் தட்டிக்கேட்டதும் இல்லை கேட்க்கப்போவதும் இல்லை.

ஒரு வேளை தமிழக பாசகவிற்கு நிர்மலா சீத்தாராமன் முதல்வராக வருவது பிடிக்கவில்லை என்றால் குறைந்தது அன்புமணி இரமதாசு வரவேண்டும் என்று எதிர்காலத்தில் சொன்னாலும் சொல்லும் அளவிற்கு நடந்துகொள்கிறார்கள் தமிழக பாசகவினர்கள்.

பாசகவும் பாமகவும் ஒருவரை ஒருவர் இது வரையில் தாக்கி பேசிக்கொண்டது இல்லை என்றது மக்கள் ஓர்ந்து பார்க்கலாம்.

ஆக தமிழக்த்தில் பாமக இருக்கும் வரையில் இன்னும் ஒரு பாசக தேவை இருக்காது........

0 comments: