Wednesday, August 30, 2017

நல்லவேளை பாசக நித்தி ஆணையம் குடும்பங்களை பற்றி எதுவும் ஆராயவில்லை

இந்த நித்தி ஆயோக்கின் ஆயோக்கியர்கள் அவ்வப்போது கிறுக்கு தனமாக பிதற்றுவார்கள் அப்படி பிதற்றியதின் உச்சம், அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்ற ஆலோசனை.

ஏன் அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுக்க வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையில் வீழ்ச்சி அடைந்து நலிவடைத்துள்ளது அதனால் தனியாரிடம் தரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏமாளி இந்தியர்கள் இருக்கும் வரையில் பிடுங்கி திண்பது என்று இருக்கிறார்கள் போலும் இந்த தனியார் நிறுவனத்தினர்கள்.

வருமானம் கூடிப்போச்சு அதனால் உங்களுக்கு பொதுவினியோகத்தில் பொருட்கள், சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவு செய் என்று சொல்லாமல் சொல்கிறாகள். மேலும் நாடெங்கிலும் உள்ள அரசு பள்ளியில் இலவச கல்வியை அடிப்படை உரிமையாக பெற்று வந்தார்கள். இப்போது பொருட்களுக்கு செலவழித்தது போக மீதம் இருக்கும் பணத்தை அடிப்படை கல்வியில் இருந்து செலவு செய் என்று சொல்கிறார்கள்.

இந்த நித்தி ஆயோக்கியர்களை குடும்ப நலம்பற்றி சொல்ல சொல்லி இருந்தால் எந்த மனைவிமார்களும் வசதியான ஒரு வாழ்க்கையை வாழவில்லை ஆகையால் இனி மேல் இவர்களுக்கு கணவன் தேவை இல்லை பதிலாக தனியார் வழங்கும் கணவன் சேயைதான் வாங்க வேண்டும் என்று உத்தரவிடுவார்கள் போலும்.

தலை இருந்தா தானே தலைவலி என்று சொல்வதை போல், நல்ல அரசு. இந்த அரசு தான் வேண்டும் என்று தவமிறுந்த இந்தியர்களே உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.......

0 comments: