Wednesday, March 31, 2010

பென்னாகரம் தேர்தல் முடிவுகள் -- அதிமுக அரசியல் அனாதையாக ஆக்கப்பட்டத்தின் அடையாளமா

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7064

அதிமுக மக்களிடம் இருந்து விலகி மெல்ல மெல்ல செல்லரித்த கட்சிகளின் பட்டியலில் இணைகிறது போலும்.

திருமங்கலம் இடைத்தேர்தலில் பேசிய வீர வசனங்கள் எங்கே, இப்போது இப்படி சதி செய்துவிட்டார்கள் என்று புலம்பும் நிலை எங்கே. என்ன ஆனது அதிமுகவிற்கு.

தேர்தல் வந்தால் கையில் கசப்பு மருந்துடன் ஐதிரபாத்திலிருந்தோ, கொடைக்கானலில் இருந்தோ, அல்லது அப்போது எங்கே ஓய்வில் இருக்கிறாரோ அந்த ஊரில் இருந்து வண்டியில் வந்து எங்கேயும் நிற்காமலும் மக்களை சந்திக்காமலும். ஓடும் இரயிலில் இருந்து கை காட்டிக்கொண்டு செல்வது போல் வந்து போவது எல்லாம் மக்களுக்கு பிடிக்கவில்லை போலும்.

இரண்டாவது முறை ஆட்சியில் 4 ஆண்டுகள் வண்டி வண்டியாக தமிழக மக்களுக்கு கசப்பு மருந்து கொடுத்ததையும். கசப்பு மருந்து மக்களுக்கு தான் தங்களுக்கோ எப்பவும் விருந்தும் கூத்தும் என்று பகட்டாய் இருட்ந்தவைகள் எல்லாம் மக்களுக்கு பிடிக்கவில்லை தான் போலும்.

இது எல்லாம் போக தினமலரில் சொல்லி இருப்பதை போல் தான் என்ன சொன்னாலும் மக்கள் மதிப்பார்கள் நம்புவார்கள் என்று நம்பி அளவில்லாமல் விட்ட கதைகளில் மக்களே வெறுத்து தான் இந்த படு தோல்வியை கொடுத்துள்ளார்கள் போலும்.

இதிலே இந்த முறை வாக்கு சேகரிப்பில் மோடி வித்தைகாரன் பேசுவது போல் எல்லா இடங்களிலும் ஒரே பேச்சு தான் பேசினாராம். இம்மியளவும் மாற்றம் இல்லாமல் பேசினாராம்.

நல்லவேளையாக இத்தமுறையும் மின்னியல் இந்திரத்தின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் பழி சுமத்தாமல் ஆளும் கட்சியின் மேலும் அதிமுக கட்சியினர் மீதும் பழியை போட்டுள்ளார்.

போகின்ற போக்கை பார்த்தால் அடுத்த பொது தேர்தலில் அதிமுகாவை பாசக கூட கூட்டு சேர்த்துக்க மாட்டாங்க போல் தெரிகின்றது. பொருத்து இருந்து பார்ப்போம் மண்ணார்குடியிலிருந்து என்ன கணைகள் வருகின்றது என்று பார்ப்போம்.

4 comments:

Anonymous said...

அதிமுக இனி மெல்ல சாகும்

Anonymous said...

அதிமுக இனி மெல்ல சாகும்

')) said...

It seems AIADMK unanimously declared indefinite strike in the party itself, including chief, 2nd level leader, 3rd level leaders and last level comrades.

')) said...

என்ன ஆனந்து வீட்டுக்கு ஆட்டோ வரும் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி எல்லாம் போட்டு குடுக்குறீங்க. பார்த்து இருந்துகோங்க...... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.