Wednesday, January 27, 2010

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - இறுதி பாகம்

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 4
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 3
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 2
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1

இன்றைய அமெரிக்க முதலாளியின் தேவைகள் எல்லாம் பணம், பணம், மற்றும் புகழ். பணத்திற்கு பிறகு புகழ் என்று இருந்தலும் பணமா புகழா என்று வந்தால் புகழ் போனாலும் பரவாயில்லை பணம் போகக்கூடாது என்று விழையும் முதலாளிகள் இவர்கள்.

அப்படி அமெரிக்காவில் இவர்களுக்கு எல்லாம் என்ன நெருக்கடி வந்தது என்று பார்த்தோமானால் ஒன்றும் இல்லை. அதே அளவிற்கு மக்களின் அலைபேசியின் பயன்பாடும் மற்ற செலவீனங்களும் உள்ளது. அப்படி இருக்கையில் பிறகு என்ன தான் வந்தது இப்படி கஞ்சதனம் செய்ய.

சிந்தித்து பார்த்ததில் ஒன்று தெளிவாகியது, அது இவர்களது செயல்களுக்கு விளக்கம், எரிகின்ற வீட்டில் பிடுங்கும் வரையில் இலாபம் என்ற செய்கை தான் அது.

அதாவது, இன்னமும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த வருமானம் எல்லாம் வரும் என்று தெரியவில்லை. ஆகவே இப்போதே எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டுவோம் பிறகு இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் போலும்.

இரண்டு மூன்று ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கா, இத்தனை ஆண்டு காலத்தில் இந்த கால கட்டத்தில் விடிவு பெறும் என்று யாராலுமே உறுதியாக சொல்ல முடியவில்லை.

ஒபாமா ஆட்சிக்கு வரும் போது இனிமேல் ஒரு 2 ஆண்டு காலத்தில் மூச்சாவது விட முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் ஓராண்டு முடிந்த தருவாயில், இன்னமும் 2 அல்லது 3 ஆண்டுகளாவது தேவைப்படும் என்ற பேச்சு அடிகொள்ள ஆரம்பித்துள்ளது.

மேலும் அதோடு நில்லாமல், எங்கே எல்லாம் ஒபாமா கட்சி வெற்றி பெற்றதோ அங்கே எல்லாம் மறுபடியும் எதிர்கட்சியினர் இடத்தை பிடிக்க துவங்கியுள்ளார்கள். எதிர்கட்சியினர்கள் வருவதை பற்றி ஒரே ஒரு வருத்தம் தான். ஒபாமா கட்சியினர், மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு எண்ணமாவது இருக்கிறது, எதிர்கட்சியினரின் ஒரே நோக்கம், பணத்தை முதலில் கொள்ளை அடிக்க வேண்டும், அதற்கு பிறகு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று 8 ஆண்டுகாலம் இருந்தது போல் இன்னமும் ஒரு 8 ஆண்டு காலம் நீடித்தால். அமெரிக்காவின் அத்தனை பணக்காரர்களும் இந்தியாவில் தங்கிக்கொண்டு தங்களது தொழிலை சீனாவில் நடத்துவார்கள்.

அமெரிக்க இன்றைய இங்கிலாந்து எப்படி அந்த கால கதையை பேசிக்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள திணறிக்கொண்டு இருக்கிறதோ அந்த நிலைக்கு அமெரிக்கவும் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இதில் வேடிக்கை என்ன என்றால், அமெரிக்க நன்றாக இருக்கும் போதும் நன்றாக இருப்பவர்களும் இந்த பணக்காரர்கள் தான், அமெரிக்கா நொடிந்து போன நிலையில் நன்றாக இருப்பவர்கள் இந்த பணக்காரர்கள் தான். நாடோடு சேர்ந்து துன்பம் அனுபவிப்பது நடுத்தர மற்றும் கீழ் நிலை மக்கள் தான்...... இந்தியாவை போல.......

இனி கடவுள் தான் காப்பாற்றனும் அமெரிக்கவையும் சரி உலகத்தையும் சரி.............

0 comments: