Tuesday, April 20, 2010

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுப்பு - மீண்டும் உண்மை தமிழர்களின் போலி நாட்டுபற்று

பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே என்று உலக்குச் சொன்ன தமிழனின் நிலையை பார்த்தீர்களா.

இதிலே நல்லவேளை திருப்பி அனுப்பினார்கள் என்று ஒரு வயது முதியவர் எழுதுகிறார். நாட்டுக்கு இது தான் நல்லதாம் எந்த நாட்டுக்கு என்று தான் தெரியவில்லை.

தனக்கு கொடுக்கப்பட்ட 7 நிமிடங்களில் உலகின் பார்வையை இந்தியா மீதும் இந்து மதத்தின் மீதும் திருப்பினார் விவேகானந்தர்.

இனி வருட கணக்கில் பேசினால் கூட இந்தியாவையும் இந்து மதத்தையும் உலகில் ஒருவரும் திரும்பி பார்க்கப்போவது இல்லை.

இந்த இதயமில்லா நாட்டின் வஞ்சக வார்த்தைகளில் வெறும் அலங்காரமும் பகட்டும் தான் இருக்கிறது என்று உலகம் நன்கு அறிந்துள்ளது. அமெரிக்க பெண்மணிக்கு தெரிந்து இருக்கிறது ஈழத்தில் நடப்பது நடந்தது என்ன என்று. ஆனால் அங்கேயே அருக்கில் ஒரு 200 மைல் தொலைவில் வசிக்கும் உண்மை தமிழர்களுக்கு தெரியவில்லை பாவம்.

கீழே விழும் இலையை பார்த்து இன்றைக்கு வந்த இலை பார்த்து சிரித்ததாம். அது போல் இருக்கிறது இந்த முதியவரின் பேச்சு. நாளைக்கு உங்கள் காலம் வரும் போது இதே போல் இரு காரணம் சொல்வார்கள் பார்க்கலாம் அன்றைக்கு என்ன என்ன எல்லாம் சொல்கிறீர்கள் நீங்களும் உங்கள் கூட்டமும்.

இந்த வெட்கம் கெட்ட செயலுக்கு பாராட்டு பத்திரம் வேற. இந்து மதம் கற்றுக்கொடுத்த பாடம் போலும்.

நாளைக்கு உங்களது பிள்ளைகள் உங்களது கண்முன்னே இப்படி போகும் போது பார்த்து ஆனந்த படுங்கள் இதே போல் இறக்கம் அற்ற மனிதனே.

0 comments: