Friday, December 4, 2009

பிரியமான தோழியும் - விக்ரமனும்

கதையாசிரியர் ஆனாலும் சரி, திரைகதை ஆசிரியர் ஆனாலும் சரி, படிப்பவர்/பார்ப்பவர், மனம் கவர்வது தான் அவரது நோக்கமாக இருக்கும். அந்த வகையில் கவர்ந்தது கள்ளம் கபடம் இல்லாக் காவியம் "ப்ரியமான தோழி" இந்த இரு வார்த்தைகளுக்கு ஈடான வார்த்தைகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

யாரை எப்பொழுது விமர்சனம் செய்வது, எப்படி விமர்சனம் செய்வது என்று அலையும் காலத்தில் இப்படி விமர்சகம் செய்தால் பிடிபடுவார் என்று மனதுக்குள் தோன்றி காட்சிகள் அமைப்பது அனுபவம் இல்லா கர்பனையில் மட்டுமே சாத்தியமே. கர்பனையில் அன்றி அன்றாட வாழ்வில் அப்படி ஒரு தைரியம் வருமா என்ன.

பெண்ணே நீயும் பெண்ணா, பெண்ணாகிய ஓவியம், ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் கவியம்..............பின்னால் வரும் வார்த்தைகளை பற்றிய அக்கரை எல்லாம் எனக்கு இல்லை. காரணம் முதல் வரிதான், அந்த வரிகளுக்கு பிறகு எதையும் கவனிக்கும் எண்ணமோ, இல்லை நிலையிலோ நான் என்றும் இல்லை, .......................................

அந்த வரிகள் சொல்லும் காவியம் என்று சொன்னால் அது மிகையாது என்று சொல்லத்தான் வேண்டும் பிறகு என்ன தான் சொல்ல ..................................................

நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் கவித்துமாக பெண்ணை வருணித்து வந்த பாடல். பின்னால் வரும் வரிகள் அப்படி ஒன்றும் ஈர்ப்பாகவும் பொருளாகவும் இல்லை என்றாலும் முதல் வரிகள் அசத்தல், நல்ல இரசனை ஐயா உங்களுக்கு.

0 comments: