Monday, September 7, 2009

அணுஆயுத நாடாக போகும் இலங்கை -- இந்தியா என்ன செய்ய போகிறது.

பாக்கிட்த்தானம் அதிக அளவில் அணு ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றது என்ற செய்தியை மீண்டும் மீண்டும் அமெரிக்கா சொல்லிக்கொண்டே வருகிறது.

அது மட்டும் அல்லாது இன்றைய நாளேடுகளில் வந்திருக்கும் மற்றும் இரு செய்தி, முசாராப்பு தீவிர அரசியலில் குதிக்கிறார் என்ற செய்தி.

இந்த இரண்டு செய்திகளும் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்று முதலில் பார்ப்போம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இதே அமெரிக்க வெளியிட்ட அறிக்கையில் பாக்கிட்தானம் சுவாட்டு பள்ளதாக்கில் நடக்கும் வன்முறைகளை கையாள தெரியாமல் பாக்கிட்த்தானம் திணருவதாகவும். அதற்கு அமெரிக்கா சென்று தான் பொருள் மற்றும் இராணுவ உதவிகளையும் கொடுத்து பாக்கிட்த்தானத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் செய்திகளை வெளியிட்டு. அமெரிக்காவின் படைகளையும், பொருட்களையும் அனுப்பியது.

இன்றைக்கு அமெரிக்க சொல்வது போல் அணுகுண்டுகளை விளை கொடுத்து வாங்கும் வசதியில் பாக்கிட்த்தானம் இருக்கும் பட்சத்தில் இவ்வளவு பொருளை கொடுக்க அமெரிக்க பாராளுமன்றம் ஒத்துக்கொண்டது எப்படி என்று அமெரிக்க தெரியபடுத்துமா.

முசாரப்பு தீவிர அரசியலில் இறங்குகிறார் என்று சொன்னால், அந்த செய்தி யாருக்கு சொல்லும் செய்தியாக இருக்கும். உலகத்திலே பாக்கிட்த்தானத்தினால் பாதிக்கப்பட்ட ஒரே நாடான இந்தியாவுக்கு தான் இந்த செய்தி அது. அதுவும் எப்படி பட்ட நிலையில் இந்த செய்தியை வருகின்றது. அதிக அளவு அணுகுண்டுகளை பாக்கிட்தானம் குவித்துவைத்துள்ள இந்த நிலையில் இந்த செய்தி வருவது. இந்தியாவுக்கு கார்கிலை நினைவூட்டும் செயலாக இந்த செய்தியை இந்தியா எடுத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் பரப்ப பட்ட செய்தியாகத்தான் இது இருக்கும்.

இதோடு நிற்காமல் அழிக்கப்பட்ட ஈழ பூமியில் இதே பாக்கிட்த்தானம், தனது இராணுவ தளத்தை அமைத்து வருவதற்கு முன்னோடியாக இராணுவ பயிற்சி என்ற பெயரில் அங்கே அதிக அளவில் முகாம்மிட்டு இருப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில், பாக்கிட்த்தானம் அணு ஆயுதங்களை தயார்படுத்துகிறது என்றால். அது இரசியா பனிபோர் காலத்தில் கியூபாவில் கொண்டு வந்து நிறுத்தி வைத்துதிருந்த 50 ஏவுகணைகளை நினைவு கூறும் நிகழ்வாக இருக்கிறது.

பாக்கிட்த்தானத்திடம் இருக்கும் ஏவுகணைகளின் இலட்சணம் இந்தியாவுக்கு நன்றாக தெரியும். அப்படி எண்ணி இந்தியா திமிராக இருக்கும் என்ற எண்ணத்தில், இலங்கையில் கொண்டு வந்து தனது அணு ஆயுதங்களை தென்னிந்தியாவை தாக்கும் திட்டமாக பாக்கிட்த்தானம் இந்த முன்னகர்வை எடுத்து இருப்பது தெரிகின்றது. இதற்கு இந்திய எந்த கோணத்தில் தனது பதிலடியை தயார்படுத்திகொள்கிறது என்று உலகம் கவனித்துகொண்டு இருகிறது.

2012ல் சந்திராயணம் 2 என்ற திட்டபணிகளை நேற்று தான் அண்ணாதுறை தெரிவித்தார். 480 கோடி உரூபாய்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும். சந்திராயணம்-1 70 ஆயிரம் படங்களை எடுத்து அனுப்பியதோடு மட்டும் அல்லாது. தனது துணைகோளை அமெரிக்க துணை கோளோடு இணைத்து பணிபுரியும் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என்று அறிவித்த கையோடு இந்த அறிவிப்புகள் வெளிவருகின்றது என்றால். இந்த செய்திகளின் நம்பிக்கை தன்மை எப்படி இருக்கும் என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

பார்ப்பதற்கு தான் அமெரிக்க நல்லவனாக இருப்பான் போலும். வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்று முன்னேற்றம் கொள்ளும் போது அத முன்னேற்றத்தை தடுப்பதற்காக என்ன எல்லாம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்யும் போலும்.

0 comments: