Saturday, December 5, 2009

இளையரசாவின் சாதனைகளை விளக்கும் பிபிசியின் சம்பத்குமார் - நன்றிகள் பல

இராசாவை பற்றிய அவரது சாதணைகளை பற்றிய அறிதல்கள் அரிதாகி வரும் சூழலில், அவரது சாதணைகளை விளக்கும் செவ்விகள் இங்கே. இதை கேட்கும் போது இராசாவின் மேல் இருக்கும் மதிப்புகள் மறு பதிவு செய்யப்படுவது நிச்சயம்.....................................

ஒன்று
http://www.youtube.com/watch?v=p5_WuymlhMs

இரண்டு
http://www.youtube.com/watch?v=BVkQ12b9O48&feature=related

மூன்று, வராளி என்ற இராகத்தை வைத்து மணிரத்தினம் இதியகோவிலில் படுத்திய பாட்டை இந்த பாடலில் வெளிபடுத்தும் இளையராசா, பார்த்தவிழி பார்த்த படி பார்த்து இருக்க....... என்ன அர்புதம் நீங்கே கேட்டு முடிவி செய்யுங்கள்....................................இந்த சிவனின் அசைவுகளையும் சிற்ப காட்சியினையும் காட்டி எழுத்தாளர் செயமோகனிடம் கேட்டோம், அதற்கு அவர் சொன்னார், அந்த காட்சியின் கோனத்தை பார்த்தீர்களா என்று. சிவனின் முடி எப்படி பறக்கிறது என்று கவனியுங்கள் என்று சொன்னார். அதி வேகமாக சுற்றும் ஒரு கோலத்தின் ஒரு வினாடியில் இலட்டச்சத்து ஒரு பங்கின் காட்சிதான் அந்த சிந்தம்பர நடராசரின் கோலம் என்று 4 மணி நேர நேர்காணலில் ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவித்த்தார்..........................
http://www.youtube.com/watch?v=bpgudIfVMAQ&feature=related

நான்கு
என்ன தான் இராசாவை குறை சொல்ல நினைத்தாலும் இன்றைக்கு ஒலிக்கும் இசையின் சூத்திரதாரி என்று சொல்லாமா அல்லது, இந்த பழக்கத்தை நமக்கு அறிமுகம் படுத்தியவர் என்று சொல்லலாமாஅ...இந்த இடத்தில் சாரு தோன்றுவது இயற்கையே அந்த விவாதத்திற்கு பிறகு வருவோம்...........................பீதோவானை மிஞ்சும் பாடல் என்று சுசாத்தாவால் பாராட்டபட்ட பாட்டக சம்பத்துகுமார் குறிப்பிடும் பாடல் இதோ..........வைரமுத்துவின் முதல் பாடலும் அதுதான்.................திரையிசையானாலும் சரி, அல்லது இயக்கம் ஆனாலும் சரி. அல்லது திரைகவியானும் சரி இப்படிதான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் அமைத்த பாடல் இது. இல்லை அது இல்லை இது தான் என்று எங்கே சாரு ஒரு உதாரணம் கூறுகிறாரா என்று பாருங்கள் மௌனமே பதிலாக மிஞ்சும் பாடலும் காட்சியும் இது............இது ஒரு பொன்மாலை பொழுது. சிலோன் வானொலு பொன்மாலை பொழுது என்று ஒரு நிகழ்சியே இந்த பெயரில் துவங்கியது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.................பொதுவாக சித்தாரை பாடலின் துவக்கத்திலே வாசித்தால் பாடல் கட்டாயம் பிரபலம் எனற கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கும் இராசாவை பாருங்கள்........... நதியை தேடும் கடல்........................கர்னாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் வித்தியாசமே இல்லை என்றது அதுவும் இராசாவின் இசையில் என்றது இவரது வல்லுனர் கோபாலின் கூற்று இது................ஆயிரம் தாமரை மொட்டுகளே ..இந்த பாடலுக்க சம்பத்து குமார் குடுக்கும் விளக்கமோ அபாரம். ஆனால் கேட்ட்கும் நமக்கோ வெகு சாதரணம..............ஒருவேளை இராசாவின் வெற்றியோ இது தானோ என்னவோ.............
http://www.youtube.com/watch?v=t3zLGvDSmNI&feature=related

ஐந்து, கண்மணியே காதல் என்பது கர்பனையோ, இந்த பாடலை இராசா குறிப்பிடும் போது கிட்டதட்ட 10 அண்டுகளுக்கு பிறகு கேளடி கண்மணி என்னும் படத்தில் பாலு மூச்சுவிடாமல் பாடும் பாடல் என்று குறிப்பிடும் போது..............அந்த பாடலை போலி 10 ஆண்டுகளுக்கு முன் எப்பொழுதோ பாலு பாடிவிட்டார் என்ற என்ற் உண்மை அனைவருக்கும் விளங்காமல் போனது என்னவோ இழப்பே...........இராசாவும் தேவாரமும் இங்கே...........இத்திய வானோலி தடைவிதித்த பாடல் இவரது ஆரம்ப பாடல்.......ஏராளமான வாத்தியங்கே வேண்டும் என்று இருந்த இராசாவால் எளிமையாக இசையமத்த கண்ணதாசனின் கடைசி பாடலின் பெருமையும் இவருக்கே...........
http://www.youtube.com/watch?v=-TCx3-DKWBc&feature=related

ஆறு, இராசாவே பேசும் செவ்விகள் இவைகள், அனேகமாக இசையில் அவரது வீச்சு இருக்கும் அளவிற்கு அவரது பேச்சு இருக்காது, இது அனைவரும் அறிந்ததே..........இராசாவின் தளபதியை விளக்கும் அவரே இதோ..........
http://www.youtube.com/watch?v=EgkC-mG47G8&NR=1

ஏழு, 90களிலும் இராசாவின் இராசாங்கமே................. நீ என்ன செய்தாய் இதில் என்று கல்கத்தாவில் கேட்ட கேள்வி இவருக்கு உந்துதலா அதுவும் 20 வருடம் கட்ந்தும்.................
http://www.youtube.com/watch?v=VwBmlAhOvtg&feature=related

எட்டு, சுசாத்தா சொல்லும் சிம்பொனிக்கு பாடல் எழுதிய வைரமுத்து..........கெட்ட சுவரம் என்று ஒன்று உண்டா முதல் முதலில் கேட்கப்படும் கேள்வி இது. அனேகமாக எது தனக்கு வருமோ அது தான் சிறந்த இராகம் என்று சொல்லும் மக்களின் மத்தியில் இந்த கேவியை எழுப்பும் இராசா............
http://www.youtube.com/watch?v=U9UWshVmJqw&feature=related

ஒன்பது, இரசாவின் குரலுக்கு என்று இருக்கும் ஒரு தனி கவர்ச்சி, அதை எப்படி எல்லாமோ குறிப்பிடலாம், ஆனால் எளிமையாக கவர்ச்சி என்றே சொன்னால் போதும் என்று நினைக்கின்றேன்......... நிங்களே கேட்டு கொள்ளுங்கள் நானாக சொல்ல ஏதும் இல்லை.........
http://www.youtube.com/watch?v=YHCnN746Mbg&feature=related

2 comments:

')) said...

பகிர்வுக்கு மிக்க நன்றி...இசை தெய்வத்தை பற்றி நிறைய விஷயம் வைத்திருக்கிங்க. ஒன்னுன்னாக படிச்சிட்டு வரேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))

')) said...

கோபி, இராசாவை பற்றி நமக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.