Monday, November 30, 2009

தினமணியின் நம்பிக்கை துரோகம் தலையங்கமும் BJP யின் கொள்கையும்

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=160044&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

கட்டுரையாளர் இதிலே அதிகம் குறை சொல்லி இருப்பது என்னவோ திமுகவை தான். அவர்களால் தான் கோவில்கள் எல்லாம் அழிந்து வருவதாகவும். தமிழை அழிப்பதும் அவர்களே என்றும், மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களால் எப்படி கோவிலின் நிர்வாகத்தை சரிவர கவனிக்கமுடியும் என்றும் கேட்டு எழுதியுள்ளார்.

சரியாகத்தான் சொல்லியுள்ளார் என்று தோன்றுகிறது, இங்கே அவருக்கு தெரியாமலே இரு உண்மையை சொல்லி உள்ளார். ஆத்திகவாதியாக அவர் சொன்ன வாசகமே இப்போது அவருக்கு எதிராக அமைவதை அவர் கவனிக்கவில்லை போலும்.

அவர் சொன்ன இந்த கருத்துக்கு ஏகப்பட்ட பின்னூட்டங்கள், அவைகளில் ஆமாம் ஆமாம் அப்படி தான். அப்படி போடு, இப்படி போடு என்று வகை தொகை இல்லாமல் பின்னூடம் இட்டவர்கள் தான் அதிகம்.

இவர்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வியை கேட்போம். ஆத்திகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அரசாண்டால் கோவில்களையும் அதன் புனிதத்தையும், பண்பாட்டையும் காக்கமுடியாது என்று மிகவும் ஆணித்தனமாகவும் திடமாகவும் நம்பும் உங்களால், சமுதாய சமுத்துவத்தில் அணுஅளவும் நம்பிக்கை இல்லாத பசகவால் (BJP) மட்டும் எப்படி ஒரு ஒன்று பட்ட சமுதாயத்தை கட்டி எழுப்பமுடியும் என்று நம்புகிறீர்கள் என்று சொல்ல முடியுமா.

அல்லது பசக மறைமுகமாக எப்பொழுதும் சொல்வது போல் ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாகவாக இருக்கிறது என்று மேடைக்கு மேடை கேட்குமே. அதிலே ஒளிந்து இருக்கும் பதில் எல்லோருக்குமே ஐந்து விரல்கள் தானே இருக்கிறது என்ற உண்மையை முழு பூசனிகாயை சோற்றில் மறைப்பது போல் மறைக்குமே. அதில் எல்லாம் உங்கள் அனைவருக்கும் விருப்பம் தான் போலும். காந்தியும் நேருவும் கனவு கண்ட நாட்டை, கூறு போட்டு நார் நாராக பிரித்து நெருப்பில் போட்டு குளிர் காய நினைக்கும் கூட்டத்திற்கு வால் பிடிக்கும் உங்களையும் தான் அவர்கள் தீயில் இட நினைகிறார்கள். பாவம் இது புரியாமல் அடுத்தவன் தான் அழிகிறான் நமக்கு என்ன என்று நினைகிறீர்கள் போலும்......

0 comments: